தாருண் தேஜ்பால், நரேந்திர மோடி, நமது ஊடகங்கள்.....

Monday, January 20, 2014 Anisha Yunus 0 Comments

டெஹெல்கா இதழ் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான தாருண் தேஜ்பால் சக பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் அத்துமீறல் மேற்கொண்ட குற்றத்தின் மீது கோவா மாநில காவல்துறை நடவடிக்கை தொடர்ந்துள்ளதை வரவேற்போம்.

அதிகாரத்தில் இருப்பவர்களின் இத்தகைய அத்துமீறல்களை வெளிப்படுத்திக் கண்டிக்கும் நிலையிலும் விசாரித்துத் தண்டிக்கும் நிலையிலும் உள்ள பத்திரிகைத் துறையினரும், நீதித் துறையினரும் இப்படியான அத்துமீறல்கள் புரிவது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியுள்ளது

தான் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டதாகவும், தன் தவறை ஒப்புக் கொண்டு பாதிக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கோரிவிட்டதாகவும், எனினும் தன் மனம் புண்படுவதால் ஒரு ஆறு மாதங்களுக்கு டெஹெல்கா தலைமை ஆசிரியர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் தேஜ்பால் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த மனம் புண்படுதல், ஆறு மாதப் பதவி விலகல் எல்லாம் போதாது, செய்த குற்றத்திற்குரிய தண்டனை பெறவேண்டும் என்பது இப்பிரச்சினைகள் குறித்த அக்கறையுடையோரின் கருத்தாக இருக்கிறது. ஒரு வேளை இவரது மன்னிப்பை ஏற்று அந்தப் பெண் தன் புகாரை திரும்பப்பெற்றால் ஒழிய சட்டத்தின் முன் அவர் குற்ற நடவடிக்கையைச் சந்தித்துதான் ஆக வேண்டும்.

இந்தச் செய்தி இன்றைய நாளிதழ்களில் விரிவாக வந்துள்ளது. தினமணி 3 காலத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. மாவட்டப் பதிப்புகளில் முதல் பக்கத்திலேயே 'பேனர்' செய்தி எனச் சொல்லத் தக்க அளவிற்கு வெளிவந்துள்ளதாகவும் அறிகிறேன்.

சக பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான குற்றச்ச்சாட்டுகளைப் பிரசுரிப்பதில்லை என்கிற எழுதப்படாத 'பத்ரிகா தர்மத்தை' மீறி இச் செய்தியை நாளிதழ்கள் பலவும், தினமணி உட்பட முன்னுரிமை அளித்து வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது.

ஆனால் இங்குதான் "டாடி எனக்கு ஒரு டவுட்டு..."

ஏன் இந்தப் பத்திரிகைகள் இதே நேரத்தில் வெளியாகியுள்ள நரேந்திரமோடி சமபந்தப்பட்டுள்ள 'சாகேப்' ஒலி நாடாக்களுக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பதில்லை? சி.பி.ஐ விசாரணை கோரி பல்வேறு அமைப்புகள் சென்ற 18 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்திய ஆர்பாட்டச் செய்தியை முதல் பக்கத்தில்யைல்லாவிட்டாலும், கடைசிப்பக்கத்தில் கூட வெளியிடவில்லை? சித்தார்த் வரதராஜனுக்குப் பிந்திய 'இந்து' இதழ் கூட பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மோடிக்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்குத் தானே முதல் பக்கத்தில் இடம் கொடுத்தது?

டெஹெல்கா அது தொடங்கிய நாள் முதல் இந்துத்துவத்தைத் தோலுரித்த பாரம்பரியமுள்ள ஒரு நாளிதழ். மோடி 2002 வன்முறைகள் தொடர்பாக அது 'ஸ்டிங் ஆபரேஷன்' செய்து வெளியிட்ட பதிவுகள் உலகைக் குலுக்கியதை அவர்கள் மறந்துவிடத் தயாராக இல்லை.

இந்த உண்மையை நாம் பார்க்கத் தவறலாகாது.
 
Tehelka Links:
 

0 comments:

உங்கள் கருத்துக்கள்...