தமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..
அன்புள்ள சகோக்களே...
”நூல்களை வாசிப்பவன், அவனின் மரணத்திற்குள் ஓராயிரம் வாழ்க்கையை வாழ்கின்றான். வாசிப்பற்றவனோ ஒரே ஒரு முறைதான். ” என்கிறார் ஜார்ஜ் மார்ட்டின்.
அந்த ஓராயிரம் வாழ்க்கையில் ஒரு நூறு வாழ்க்கையையாவது வாழ்ந்துவிட வேண்டுமென்றே என் வாசிப்புப் பயணம் இன்றும் தொடர்கிறது.
எல்லோரையும் போல, #சிறுவர்மலர் - வெள்ளி இணைப்பு,#அம்புலிமாமா, #முத்துகாமிக்ஸ், #லயன்காமிக்ஸ், #ராணிகாமிக்ஸ், #கோகுலம், #தெனாலிராமன் கதைகள், #முல்லாகதைகள், #மாயாவி, #பிக்கிக்கா, #ராஜேஷ்குமார், #சுபா,#பட்டுக்கோட்டைபிரபாகர், #சிட்னிஷெல்டன், #அகதாகிறிஸ்டிஎன்றே வளர்ந்த என்னை, இன்றைக்கு #ஓரான்பாமுக், #தோப்பில்முஹம்மதுமீரான், #ஜாரெட்டயமண்ட், #ராமச்சந்திரகுஹா, #ஹசன்அல்பன்னா, #சய்யித்குதுப், இன்னும் பெயர்கள் விடுபட்ட பல இலக்கிய, இஸ்லாமிய ஜாம்பவான்கள் வரை கொண்டு வந்திருக்கிறதென்றால் வாசிப்பும், பரந்து பட்ட தேடலுமே காரணம். இன்றும் இந்தத் தேடல் முடிந்தபாடில்லை. முடியவும் மனம் விரும்பவில்லை.
என்னை ஆளாக்கியதும், ஒரு அடையாளம் பெற உதவியதும் இந்த வாசிப்பே தவிர வேறில்லை. விக்கிரமாதித்தன் கதைகளிலிருந்தும், சிறுவர் மலரின் ஓரத்தில் அச்சடிக்கப்பட்ட தத்துவங்களிலிருந்துமே என்னுடைய குணநலன்களை, ஆளுமையை மெருகூட்டியிருக்கின்றேன். அதே போல்தான் இன்றைக்கும் வாசிப்பு என்பது என்னை மாற்றிக்கொள்ள, என் பார்வைகளை மேம்படுத்த, என் கருத்துக்களை, கருதுகோள்களை சீர் தூக்கிப்பார்க்க, மெருகூட்ட உதவுகின்றது. அண்ட சராசரத்தைப் படைத்த இறைவன் நன்னீரையும், நன்னூல்களையும் மட்டுமே படைத்திருந்தால் போதுமானது என இன்னமும் யோசிப்பவள் நான். என்னுடைய வாசிப்பு உலகைப் பற்றியும், அதன் ஆரம்பம், இலக்கு, பயணம் என எல்லாத் திசையையும் அறிந்திட, உங்களுக்கும் ஓர் இனிய வாய்ப்பு... smile emoticon
எழுத்தாளர்கள் #நாகூர்ரூமி, #வி.எஸ்.அமீன், #யாழன்ஆதி என இன்னும் பலருடன், இன்னும் இவர்களின் நிழலைக்கூட எட்டாத என் போல் சாமான்ய வாசகியையும் இணைத்த ஒரு நேர்காணல் இறைவன் நாடினால், புதன்கிழமை 27/04/2016 முதல் 28/04/2016 வரை தமிழன் தொலைக்காட்சியில், வாசித்து வாழ்வோம் என்னும் தலைப்பில் ’மானுட வசந்தம் நிகழ்ச்சியில்’ ஒளி/ஒலிபரப்பப்படுகிறது. இதனை சாத்தியமாக்கிய அன்பு சகோதரர் அஹ்மத் ரிஸ்வானுக்கு, என்றைக்கும் போல் என் வாழ்த்துக்களும், து’ஆக்களும்... smile emoticon
தோழமைகளும், சகோதர சகோதரிகளும் இதனைக் கட்டாயம் காணவேண்டும், கண்டு தத்தம் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என மனம் விரும்பிக்கோருகின்றேன். மறந்தும் மறந்து விடாதீர்கள்... :)
1 comments:
உங்கள் கருத்துக்கள்...