அல்ப்ஸ் மலைக்காற்று வந்து என்னைச் சுற்றுதே.... (2)

Friday, September 28, 2012 Anisha Yunus 15 Comments


அல்பைன் துந்த்ரா (தந்த்ரா???) என்பது மலை உச்சி... கிட்டத்தட்ட 12,000 அடி உயரத்தில் இருக்கும். ஆனால் கொலராடோவின் இந்த மலையில் உள்ள மௌண்ட் இவான்ஸ் ரோடு (அது முடியும் இடமே அல்பைன் துந்த்ரா-- அல்ப்ஸ்) கடலிலிருந்து 14,260 அடி.

குளிரும்போது போலார் துருவத்தில் இருப்பது போல்தான் இருக்கும்.  இத்தனை உயரத்தில் இருப்பதால் இங்கே மரம், செடி, கொடி வகைகள் வளர்வது கடினம். எனினும் சில கோரைப் புற்களும், சின்ன சின்ன புதர்களும் அங்கங்கே இருக்கும். அதை உணவாக்கிக் கொள்ள அணில் போன்ற விலங்குகளும், காட்டு ஆடுகளும், முயலெலிகளும் வருமாம். நாங்கள் பார்க்கும்போது கலைமான்கள்தான் இருந்தன. (அந்த வகையை சேர்ந்தவை....ஆனால் அவையேதானா தெரியவில்லை.) கலைமான்களை சில தூரம் வரை துரத்திக் கொண்டும், பயந்து கொண்டும் இருந்த ஒமர், சிறிது நேரத்தில் அவை தூரப்போய்விட்டன என்றதும் எங்களிடம் புகாரிட்டான்...."I want that.... I want to eat that"....சிங்கம்லா!!!


குளிரில் நடுங்கிக் கொண்டே அந்த துந்த்ராவின் அழகை தரிசித்தோம். அங்கங்க காலம் காலமாக உறைந்திருந்த பனிக்கட்டிகளும் கொஞ்சம் நடுக்கத்தையே தந்தது. எனக்கும் உயரத்துக்கும் ரொம்ப தூரம்..... பாராபெட் உயரம் கூட ஆகவே செய்யாது. (அக்ரோஃபோபியா????) இருந்தாலும் நாமாச்சு, நம்ம மனசாச்சு... முயன்று பார்த்துரலாம்னு ஒரு பள்ளத்தாக்கு பக்கமா போயி ஃபோட்டோ எடுக்க நின்னா நிக்கவே முடியாம கால் சரியுது.

 

நம் மனதில் ஒன்று நிலை பெற்று விட்டால் அதை உடலால் வெல்வது கடினம்னு எங்கேயோ படித்த நினைவு. ரெண்டு தடவை முயற்சித்தும், ரெண்டு தடவையும் சரியுது.... சரி இதுக்கும் மேல முயற்சித்தா அப்புறம் ஒரு துண்டு சதை கூட யாருக்கும் கிடைக்காம நாம போயிடுவோம்னு விட்டுட்டு வந்துட்டேன்.... ஆனா ஃபோபியாவை என்ன செய்யறதுன்னுதான் தெரியல...!!! ம்ம்.....

அந்த மலையிலிருந்து திரும்பி வரும் முன் சில வாழ்நாள் சாதனைகள் நிகழ்ந்தன.

1. அவ்ளோஓஓஓஓஓஓ உயர மலையில் இதுதான் முதல் முறை சென்று தொழுதது.

2. திரும்பும்போது மணி 8 இரவு. இறங்கும்போது நான் ஓட்டுவேன் என்று சொல்லியிருந்ததால் 14,260 அடி உயரத்திலிருந்து முதல் தடவையாக வண்டி ஓட்டுகிறேன்.... அதுவும் எப்பவும்போல் என் கணவரும் குழந்தைகளும் பின் சீட்டில்... :)))))

3. ஆட்டோமேட்டிக் கியர் வண்டிதான் என்றாலும் பக்கத்து ஜன்னல் வழியாய் பள்ளத்தாக்கை பார்க்கும்போதெல்லாம் ஒரு செகண்டிற்கு இதயத்துடிப்பு மிஸ்ஸாகும் :(( இருந்தாலும் தைரியப்படுத்திகிட்டு வண்டி ஓட்டியாச்சு.

4. இரவில் வண்டி மேக்ஸிமம் ஓட்ட மாட்டேன். இரவில் அனுமானம் செய்வது கடினம் என்பதால்.... ஆனால் இந்த சுற்றுலாவில் இண்டர்ஸ்டேட்டிலும் (தேசிய நெடுஞ்சாலை), மலையிலும், இரண்டிலுமே இரவில் ஓட்டினேன்.

5. இதெல்லாம் விட பெரிய சாதனை, மூன்றாவது குழந்தை பிறந்து முப்பத்தி ஏழே நாளில் இந்த த்ரில் :))) என்பதே என் மிகப்பெரிய சாதனை... ஆம்... முஜாஹிதும் எங்களுடனேயே பயணம் செய்தார்.

அதன் பின் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது மலையிலிருந்து இறங்கி வீடு வந்து சேர. வீட்டிற்கு வந்ததும் ஒரியாக்காரரிடம் சொன்னேன்...  
தேன்க்ஸ் ஜீ...
ஏன்??
ஏன்னா தலைகீழா நின்னாலும் என் அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ என் கையில வண்டிய, இந்த இரவுல, இப்படி 40 நாட்களுக்குள்ள (இஸ்லாமிய ரீதியில் இல்லை.... ரெஸ்ட் எடுக்கும் பொருட்டு) இவ்ளோ உயர மலையிலிருந்து வண்டி ஓட்ட.... நோஓஓஓஓஓஓஓஓஓ சான்ஸ்.... நீங்கதான் என்னை நம்பி தந்தீங்க.....
குட்...:))

அங்கே அந்த உறவினர் வீட்டின் தோழர் ஒருத்தர் இந்தியா போயிருந்தாங்க. அவங்களுக்கு நாங்கள் வருவது தெரியும் என்பதால் எங்களுக்கு தங்கிக்க இடம் உபயோகப்படுத்திக்க சொன்னாங்க. பயங்கர அசதியால இரவு உணவை முடிச்சிட்டு அந்த வீட்டுல போயி தூங்கியாச்சு.

அடுத்த நாள் காலைல மறுபடியும் போணுமே... எல்லாரும் பயங்கர அசதி. அடுத்த நாள் நாங்க போனது கீஸ்டோன் (KeyStone, CO) எனும் ஊர். அங்கே அழகழகாய் இருந்த ரிசார்ட்ஸே போதும் மனதை கொள்ளை கொள்ள.

முதலில் திட்டமிட்டது Hanging Lake எனும் ஒரு இடத்திற்கு போக வேண்டிதான். ஆனால் நடுவில் எங்கள் ஜீப் சிறிது பழுதடைந்த காரணத்தால அந்த ப்ளான் டிராப் ஆகி கீஸ்டோன் ப்ளான் வந்துடுச்சு. ஒரு மணி நேரம் ஹைவேயில் நின்னு செக் செய்தபின்தான் தெரியன்வந்தது, ஜீப்பில் பழுதில்லை..... நாங்க சமதளமுன்னு நினைச்சிட்டிருந்த ரோடு கிட்டத்தட்ட 70% சாய்வா இருந்திருக்கு.... என்னதான் ஆக்ஸிலேட்டரை அழுத்தினாலும் 4500 rpmக்கு மேல டயர் போகவே மாட்டேங்குது...நாங்கதேன் கலவரப்பட்டு போயிருந்தோம்...அதன் பின் விவரம் புரிந்ததும் மீண்டும் ஸ்டார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..... :)

ஆனால் கீஸ்டோனும் அழகிய ஊர்தான். பனிக்காலத்தில் வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.... அங்கே கேபிள் காரில் இன்னுமோர் மலை உச்சிக்கு பயணித்தோம்...

ஒமருக்கு நீண்ட தொலைவு பயணம் செய்தாலே ஆகாது.... காலையில் கிளம்பியதிலிருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். இது தெரிந்தே நான் ziploc கவர்கள் வாங்கி வைத்திருந்தேன். தேசிய நெடுஞ்சாலையிலோ மலையிலோ பயணிக்கும்போது காரை நிறுத்துவது, மற்றவர்களுக்கும் சேர்த்து அசவுகரியம் மட்டுமல்ல.... ஆபத்தானதும் கூட. அதனால் வாமிட் எடுக்கும்போதெல்லாம் ziploc உபயோகித்து அவனை அட்ஜஸ்ட் செய்தோம். அங்கே போயி சேர்ந்ததுமே இன்னும் அவன் சோர்ந்து விட்டான்... பின் சில நேரம் தூக்கிக் கொண்டும், சில நேரம் சமாதானப்படுத்தி கூடவே நடக்க வைத்தும் என கொஞ்சம் சிரமப்பட்டே பயணித்தோம்.

பின் கீஸ்டோனிலிருந்து திரும்பவே இரவாகி விட்டது. மீண்டும் நல்ல சாப்பாடு, நிம்மதியான தூக்கம். அல்ஹம்துலில்லாஹ்.

மறுநாள் ஒமரை அங்கே உறவினர் வீட்டிலேயே விட்டுவிட்டு இப்றாஹீம், முஜாஹிதுடன் கிளம்பினோம்... ராயல் கார்ஜ் பாலத்திற்கு :))


.

15 comments:

உங்கள் கருத்துக்கள்...

எப்படி பதில் தந்திருக்க வேண்டும்?

Tuesday, September 18, 2012 Anisha Yunus 7 Comments

ஹெலோ சகோஸ்,

மறுபடியும் தனது கோர முகத்தை காட்டியுள்ள அறிவீனத்திற்கு ஒரு பதில் பதிவுதான் இது. எங்கே? எப்படி? என்பவர்களுக்கு, ஒரே டைட்டில்தான் பதில். ‘The Innocence of muslims'.

படத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு: Simply bullshit. All it has is mendacity and the movie itself is nothing more than a sophomoric trifle...and for your thoughts to provoke everyone to follow your suit....better luck!! Not this alone, but even a thousand better films even can never ever change the 1.5 billion (and counting)  muslims following Prophet Muhammad in their daily life, bit by bit, minute by minute. Islam = Bliss !!

முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் அமைப்புக்களுக்கும்:
1. இதற்காக அப்பாவி மக்களை கொன்றது மிகப்பெரிய தவறு. என் கண்டங்களை பதிவு செய்கிறேன்.

இதற்கென அறவழியில் போராட்டம் செய்வதோடு மட்டுமல்லாமல்,

2. நம்மிடம் உள்ள ஆற்றலைக் கொண்டு இன்னொரு வீடியோ / மீடியா மூலமாக இன்னும் சிறப்பான விதத்தில் எடுக்கப்பட்ட, தகவலைக் கொண்ட உயர்ந்ததொரு படத்தை தந்திருக்கலாம்.

3. The Message போன்ற படங்களை தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து, அந்தப் படம் வந்த அதே நேரத்தில் அதே வலைதளத்தில் அப்லோடு செய்திருக்கலாம்....Make hay while the sun shines...!!

4. இஸ்லாமிய டாக்குமெண்டரிகளை  / திரைப்படங்களை தத்தம் லோக்கல் கேபிள் சேனல்களில் (அதான் ஊரெங்கும், உலகெங்கும் இப்போதுள்ளதே...) ஒளிபரப்பியிருக்கலாம்.

5. அந்த வீடியோவின் லின்க்கை பரவ விடாமல் அதிக ஹிட்ஸ் கிடைக்க விடாமல் தவிர்த்திருக்கலாம்.

6. இஸ்லாத்தில் இணைந்த / பிறந்து வளர்ந்த பெண் மேதைகளையும், சாதனையாளர்களையும், முக்கியமாக மேலை நாட்டில் பிறந்து வளர்ந்து இஸ்லாத்தில் இணைந்த பெண்களையும் இணைத்து அவர்களின் பார்வையிலிருந்து இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய அவர்தம் பார்வையைப் பற்றியும் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம்.

7. இதை விட எல்லாம் பெரிய ஆயுதமான து’ஆவை பள்ளிகளிலும் ஜமா’அத்தாக கூடும் இடங்களிலும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் தஹஜ்ஜுத்தில் மறவாது து’ஆ கேட்குமாறு அழைத்திருக்கலாம்.

8. இப்படி ஒரு படம் வெளியாக இருக்கிறது என்று தெரிந்த போதிருந்தே இத்தகைய யோசனைகளை இஸ்லாமிய அழைப்புக்களும், இஸ்லாமிய அரசுகளும் முன்னமே சிந்தித்து ஏதேனும் ஒரு வகையிலாவது செயல்பட்டிருக்கலாம்.

இன்னும் எத்தனை பெரிய அறீவீனங்களுக்கும் துளியும் தளராது இஸ்லாம். ஆனால் எல்லா நேரத்திலும் வெற்று அறிக்கைகள் விட்டு, இதற்கெல்லாம் உணர்ச்சி வயப்படக்கூடாது என வாய்வார்த்தைகளை மட்டும் ஆதரவாக்கிவிட்டு இன்னும் பல கோழைத்தனமான செயல்களால் மட்டுமே பதில் சொல்லும் நம்மால், நம் அரசுகளால், நம் அமைப்புக்களால்.... இஸ்லாம் .....?????????????????

மேலும் படிக்க:

 

7 comments:

உங்கள் கருத்துக்கள்...

மரணத்திற்குப் பிறகு வாழ்வா?? -- இறுதி பாகம்

Friday, September 14, 2012 Anisha Yunus 3 Comments

முந்தைய பதிவுகள்

மரணத்திற்குப் பிறகு வாழ்வா??

சகோஸ், ஒவ்வொரு உடைமைக்கு பின்னாலும் ஒரு பொறுப்புடைமை உள்ளது. நீங்கள் சொந்தம் கொள்ளும் ஒவ்வொரு பொருளிற்கும் உயிருக்கும் கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பு, கட்டாயம் உள்ளது. ஒரு தொழிலாளி தன்னுடைய எஜமானிடத்தில் தன் வேலைகளைப் பற்றி கணக்கு காட்ட வேண்டியிருப்பதைப் போல, இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் யாரேனும் ஒருவருக்கு கணக்கு காட்ட வேண்டிய பொறுப்பை சுமந்தே உள்ளனர். வாழ்வின் அடிநாதம் இது. இதே போல்தான் நம்மைப் படைத்த உண்மையான, உயர்ந்த, மூலாதார எஜமானான நம் இறைவனுக்கு நாம், நம் வாழ்க்கையைப் பற்றி கணக்கு காட்ட வேண்டியுள்ளது. கணக்கு காட்டும் பொறுப்பே இல்லாவிடில், நீதிக்கும், நியாயத்திற்கும் இடமே இல்லாமல் போய் விடும். இல்லையா??

இந்த உலகமானது ஒரு நாள் அழிந்தே தீரும் என்றுதான் குர்’ஆன் நமக்கு போதிக்கின்றது. ஆதி மனிதன் முதல் இறுதி மனிதன் வரை அனைவரும் நியாயத்தீர்ப்பு நாளில் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு அவரவர் செயல்களைப் பற்றி விசாரிக்கப்படுவர். யாரெல்லாம் இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதன் படி தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டாரோ அவர்களுக்கெல்லாம் நற்கூலியும், யாரெல்லாம் இதற்கு மாறாக இறைவனை அஞ்சாமல் வழிகேட்டில் வாழ்ந்தாரோ அவர்களுக்கெல்லாம் தக்க தண்டனையும் அளிக்கப்படும்; சுவர்க்கம் நற்கூலியாகவும், நரகம் தண்டிக்கும் இடமாகவும். சுவர்க்கத்திலோ, நரகத்திலோ பின் அது அமரவாழ்வாகிவிடும், முடிவே இல்லாத ஒன்றாக.


மரணத்திற்குப்பின் உயிர்ப்பித்தல் சாத்தியமா?

முதல்முறையாக நமக்கு யார் உயிர் தந்தாரோ அதே இறைவன், நம் மரணத்திற்குப் பின் மீண்டும் இரண்டாம் முறையாக உயிர் தருவான் என்று குர்’ஆன் கூறுகிறது. ஒரு பொருளை புதிதாய் முதன்முதலாக உருவாக்குவது என்பதுதான் கடினம். ஆனால் அதே பொருளை மீண்டும் இன்னொருமுறை உருவாக்குவது என்பது கடினமல்ல, மாறாக மிக சுலபமானது.

ஆனால் சகோஸ், நம்மை முதன்முறை படைப்பதே இறைவனுக்கு கடினமற்ற செயல் எனும்போது மீண்டும் நம்மை (மரணத்திற்குப் பின்) படைப்பது எவ்வாறு சிரமமாகக்கூடும்? இறப்புக்கு பின் நம்மை உயிர்ப்பிப்பது என்பது இறைவனுக்கு இன்னும் எளிதானதே. யோசியுங்கள்.?

அல்லாஹ், தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்,
“முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (திருக் குர்’ஆன் 36:79)

நியாயத்தீர்ப்பு நாளும், உயிர்ப்பிப்பதும் கட்டாயம் நமக்கு தேவையா?
ஒவ்வொரு மனிதனும் நீதி தழைத்தோங்குவதை விரும்புகிறான் சகோஸ், மற்றவருக்காக இல்லை என்றாகிலும் தனக்காகவாவது கட்டாயம் நீதி ஓங்கி ஒலிக்க வேண்டும் என ஏங்குகிறான்.

சமூக அந்தஸ்தினாலோ, பொருளாதார பின்னடைவினாலோ அநீதி இழைக்கப்படும் ஒவ்வொருவரும் அநீதியை தழைக்க வைக்கும் கொடியவர்களை எப்படியாயினும் தண்டித்திட விரும்புகிறார்கள். கற்பழிப்பு, திருட்டு போன்ற மாபாதகங்களை செய்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படவேண்டும் என ஒவ்வொரு சாமான்யனின் எண்ணமும் இருக்கிறது.  இவ்வுலகில் தண்டனைகள் கொடுப்பதன் மூலம் மட்டுமே அப்பழுக்கில்லாத நீதியை நிலை நாட்ட முடியுமா சகோஸ்?? யோசியுங்கள்...

ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின்போது எண்ணிலடங்கா யூதர்களை கொன்றொழித்தான். (இன்று யூதர்கள் அவனைவிட கொடிய பாதகங்களை நிகழ்த்திக் கொண்டுள்ளனர் என்பது வேறு விஷயம்..!!) ஹிட்லரின் காலத்தில் காவல்துறை அவனை கைது செய்தது என்றே வைத்துக் கொள்வோம். என்ன தண்டனை கொடுத்திருக்க முடியும் அவனுக்கு? அவன் செய்தது போலவே ஒரு அறையிலிட்டு விஷவாயுவை செலுத்தியிருக்கக் கூடும். அதனால் நீதி நிலைநாட்டப்பட்டு விடுமா? காரணமின்றி கொலை செய்யப்பட்ட ஒரே ஒரு யூத உயிருக்கு வேண்டுமானால் அது சமமாகும். மற்ற அத்தனை உயிர்களுக்கு?????????????????????????????

சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 100 வருடம் அல்லது அதற்கு மேல் கூட போகக்கூடிய தீர்ப்புகளைப் பார்க்கிறோம். அந்த குற்றவாளி எத்தனை பாதகங்கள் செய்தானோ அத்தனை பாதகங்களுக்கும் சேர்த்து அந்தளவு வருடங்கள் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு குற்றவாளியும் அத்தனை வருடங்கள் உயிரோடாவது இருப்பானா? எத்தனை பேர் அப்படி அத்தனை வருடங்களையும் தண்டனையில் கழிக்கின்றனர்.

அது மட்டுமல்ல. தூய்மையான, அப்பழுக்கற்ற நியாயத்தீர்ப்பு என்பது, பாதிக்கப்பட்டோரையும் கவனத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும். இதோ மாயாபென்னை 28 வருடங்களுக்காக சிறையில் அனுப்பியிருக்கிறார்கள். இன்றோ நாளையோ அவர் பெயிலில் வெளிவரக்கூடும் என்பது தனி விஷயம். ஆனால் அவர் கண்காணிப்பில் நடந்த கற்பழிப்புக்களுக்கும், கொலைகளுக்கும் அது துளியாவது ஈடாகுமா??

யோசித்துப் பாருங்கள் சகோஸ், ஹிட்லர் போன்ற ஆட்களால் கொல்லப்பட்ட மாசற்ற உயிர்களுக்கு என்ன ஈடு தர முடியும்?? எவ்வளவு முயன்றாலும் காரணமின்றி கொல்லப்பட்ட ஒரு உயிருக்குக் கூட நம்மால் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாது. இதுதான் உண்மை சகோஸ்...!!

நேர்மையாளர்களாக வாழ்ந்த மக்களையுமே கொடுமை பல செய்தும் கொன்றும் இவ்வுலகம் வந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட அந்த நேர்மையாளர்களின் நேர்மைக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும்??

பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால்தான் சகோஸ் இது புரியும். இறப்பிற்கு முன் ஒவ்வொருவரும் செய்த நியாய/அநியாய செயல்களுக்கு ஈடான கூலியைத் தர, இறப்பிற்கு பின் உள்ள வாழ்வினால் மட்டுமே முடியும். தண்டனையோ, தக்க கூலியோ தரப்படாமல் ஒரு ஜீவனும் அழிந்திடாதபடி இறைவன் ஒருவன் மட்டுமே தீர்ப்பு வழங்க முடியும்.

யோசித்துப் பாருங்கள். முடிவே இல்லாத வாழ்வாக நரகமும் சுவர்க்கமும் அமைக்கப்ப்ட்டிருப்பதால்தான் ஹிட்லரும் அவனைப் போன்ற கொடுஞ்செயல்கள் செய்வோரும் ஆறு மில்லியன் தடவை என்ன அதற்கு மேல் கூட தீயில் வாட்டப்படுவார்கள். அதேபோல் அவர்களின் கையினால் அழிந்த மாசற்றோருக்கு இறைவன் எத்தனை விரும்புவானோ அத்தனை நற்கூலிகளையும் தர இயலும்.

எனவே அணுவளவு நல்லறம் புரிந்தோருக்கான கூலியைத் தரவும், இப்படி எந்த வித மாபாதக செயலும் புரிந்தவர்களுக்கு தக்க தண்டனையும் இறைவனிடம் மட்டுமே உள்ளது. இவ்வாறாக இறைவன் எல்லா செயல்களையும் தண்டிப்பவனாகவும், தன் செயலுக்கு வருந்தி நல்வழியில் செல்வோருக்கு மன்னிப்பையும் தருபவனாக இருக்கிறான். ஆனால்...

இறைவன் மன்னிக்கவே மாட்டாத ஒரு பாவம் எது??

ஷிர்க்.
ஷிர்க் செய்யும் மக்களை மட்டும் இறைவன் மன்னிக்கவே மாட்டான் என திருக் குர்’ஆன் கூறுகிறது. ஷிர்க் என்றால் இறைவனுக்கு இணை கற்பிப்பது, இறைவனையற்ற மற்றெதையும் வணங்குவது, இறைவனுக்கு இணையாக சமர்ப்பிப்பது என்று அர்த்தம். அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.” (திருக் குர்’ஆன் 4:116)

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் என்றால் முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்படாமல் போவதும் அவனுக்கு அடி பணியாததுமாகும். கீழ்க்கண்டவை யாவும் அதில் அடங்கும்:
1. காற்று, நீர், நிலம், நெருப்பு, தீ போன்ற இயற்கையான படைப்புக்களை வணங்குவதும், அவற்றுக்கு தலை வணங்குவதும், அதீத அன்பில் அவற்றுக்கு முதன்மைத்தன்மை அளிப்பதும் இன்னும் பிற மனிதனின் கைகளாலான பொருட்களுக்கு, உருவச்சிலை, உரவப்படம், வரைபடம், கல்லறை போன்றவற்றுக்கு மரியாதை அளிப்பதுவும்.
2. இறைவனின் இருப்பை மறுத்தல் (குஃப்ர்)
3. இறைவனின் திருமறையாம் திருக்குர்’ஆனின் கட்டளைகளுக்கு மாறாக மனிதனின் கட்டளைகளுக்கு அடங்கி அஞ்சி நடப்பது.
4. பிறப்பும் இறப்பும் கொண்ட மனிதர்களுக்கு இறைவனின் மகன் என்றோ, மகள் என்றோ, மனைவி என்றோ இணை கற்பிப்பதும், அவர்களுக்கும் தெய்வீக ஆற்றல் உண்டு என நம்பிக்கை கொள்வதும்.
5. மலக்குமார்களையோ / தேவதைகளையோ அல்லது இறைவனின் சேவை செய்யும் பஞ்ச பூதங்களையோ வணங்குவதும். (இவைகளெல்லாம் தன் சொந்த விருப்பு வெறுப்புக்கள் இல்லாமல் ஒரே சிந்தனையில் இறைவனை வணங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவை என்பதையும் நினைவில் வையுங்கள்.)

இறைவனுக்கு இணை கற்பிப்பது அத்தனை பெரிய குற்றமா???

சகோஸ்.... கொஞ்சம் உங்களைச் சுற்றியுள்ள உலகை உற்று நோக்குங்கள், அழகிய வண்ணத்துப்பூச்சிகளும், கறையற்ற போர்வை போல நீல வானமும், மனம் மயக்கும் சூர்யோதயமும், வண்ணச்சோலைகளும் அதில் கொள்ளை கொள்ளும் அழகில் சுற்றும் பறவைகளும், விலங்குகளுமாய் எத்தனை எத்தனை வண்ணங்களையும் இனிமையையும் கலந்து இந்த உலகை இறைவன் படைத்துள்ளார்??

நம்மையே எடுத்துக்கொள்வோமே.... படபக்கும் கண்களும், பல்வேறு ஒலிகளை சுவைக்க வைக்கும் செவிகளும், இவற்றையெல்லாம் நொடி விடாமல் சீராக பாதுகாக்கும் உள்ளுறுப்புக்களும் என எவ்வாறெல்லாம் கவனமாக படைக்கப்பட்டுள்ளோம். நாம் பிறந்தது முதல் இந்த நொடி வரை உடலில் உள்ள எதுவும் நிற்காமல் இயங்கிக் கொண்டுள்ளது. இதில் ஏதேனும் ஒன்றையாவது இறைவனிடம் நாம் கேட்டு வாங்கினோமா? அல்லது நாம் தினமும் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, பருகும் நீர் என எதற்காவது அனுதினமும் இறைவனிடம் இறைஞ்ச வேண்டியுள்ளதா? இல்லையே..... ஆனால் அனைத்து ஜீவராசிகளும் இத்தகைய அருட்செல்வங்களையும், அன்பளிப்புக்களையும் அனுபவித்துக் கொண்டேதான் உள்ளன. ஒரு மைக்ரோ நொடியில் இதயம் தன் வேலையை நிறுத்தினால் கூட நம் இருப்பு, இறப்பாகிவிடும். அளவற்ற அருளாளனும் நிக்ரற்ற அன்புடையோனுமாக அவன் இருப்பதனால்தான் நாம் கவலையற்று ஜீவித்திருக்கிறோம்.

சகோஸ், இவ்வாறெல்லாம் நம்மைப் படைத்தும் பரிபாலித்தும் இருக்கும் இறைவனுக்கு நாம் என்ன செய்கிறோம்??? எப்படி அவனைத் தவிர்த்து வேறெதற்கேனும் தெய்வீகத்தன்மையை அளிக்க முன்னேறிவிடுகிறோம்?? எத்தனை எளிதாக அவனின் ஒப்பற்ற தன்மையை அழுக்காக்கிவிடுகிறோம்?? இதெல்லாம் அவனின்  எல்லையற்ற அன்பிற்கும் அருளிற்கும் நாம் புரியும் அநீதியாக இல்லையா?? இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தும் அலட்சியப்படுத்தியும் வாழும் நாம், நம்மை நாமே இறையடியார் என எப்படி கூறிக்கொள்ள முடியும்?? இறைவனுக்கும் அவனின் தெய்வீகத்தன்மைக்கும் தகாத செயல்களை நாம் செய்வதன் மூலம் எந்த விதத்தில் நாம் நம்மை வெளிக்காட்டுகிறோம் சொல்லுங்கள்...??

எனினும் இறைவன் நம்முடைய புகழுக்கோ, நன்றி கூறலுக்கோ தேவையுடையவனாக இல்லை... இதையே இறைவன் தன் மாமறையில் அறிவிக்கிறான், “நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் தேவையற்றவன்;” (திருக் குர்’ஆன் 39:7) சொல்லப்போனால் மனிதன், தன்னுடைய தேவைகளுக்காகவே இறைவனை வழிபடுபவனாக இருக்கிறான்.

ஏக இறைவன் என்னும் மதக் கோட்பாட்டில் கீறல் விழுந்ததுதான் போலி சாமியார்களும், நிறம், ஜாதி, இனத்தைக் கொண்டான வகுப்புக்கோட்பாடுகளும் உருவாக காரணமும்.  இதே காரணத்தினால்தான் சமூகம், ஊழல், சீர்கேடு என இன்னும் எல்லா வித அனாச்சாரங்களிலும் ஊறிப்போயிருக்கிறது. இதே காரணத்தினால்தான் மனிதன் கற்களின் முன்னும், மரக்கட்டைகளின் முன்னும் தலைகுனிந்து நிற்கிறான். இறுதியில் அவன் தன் கைகளால் செய்தவற்றை தானே வணங்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். தன் இச்சைகளுக்கு அடி பணிந்து எல்லா தீய காரியங்களிலும் ஈடுபட்டுள்ளான்.

இறைவனை அஞ்சாமை என்பது தற்போது ஒரு ஃபேஷனாக, சமகால சமூக நியதியாக போற்றப்படுகிறது. இதனால் இறைவனின் கட்டளைகளை கீழே தள்ளி மனிதனின் சட்டங்கள் உலகாளும் நிலைக்கு முன் தள்ளப்பட்டுள்ளது. இதே கோட்பாடுகளில் ஊறித்திளைத்து வளர்ந்த மக்கள் தலைவர்களாக மாறி மக்களை இன்னும் வழிகேட்டில் கொண்டு சென்றுகொண்டுள்ளனர். சமூக அமைதி சீர்குலைந்து போனது. மனிதர்கள் இறுதியில் இனத்தின் பேராலும், நாட்டின் பேராலும், வம்சத்தின் பேராலும் போர்புரியும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்று வரையிலும் இந்த பேரிடியிலிருந்து மீண்டு வர முடியாமல் நம் சமூகம் தத்தளித்துக் கொண்டுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் தன் திருமறையாம் குர்’ஆனில் கூறுகிறான், “...நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்...”(திருக்குர்’ஆன் 31:13).

இத்தனை விதமான சமூக / தனி மனித சீர்கேடுகளையும் சீராக்கும் ஒரே வழி, மனிதன் தன்னைப் படைத்த இறைவனை அங்கீகரித்து, தன்னை படைத்து, பரிபாலித்து, உணவளிப்பவன் என்னும் உண்மையை மனதார ஏற்று, இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப தன் வாழ்வை நடத்திச் செல்ல வேண்டும்.

இது மட்டுமே, ஏக இறைவனை அங்கீகரித்து, அவன் வழி நடப்பது மட்டுமே உலகின் தலையாய தேவையான அமைதியையும், நீதியையும் நிலை நாட்டும். மற்றும் இது மட்டுமே மனிதனுக்கு, மரணத்திற்கு பின் உண்டான வாழ்வில் என்ன காத்திருக்கிறதோ அதற்கு வழி காட்டும். எனவே அல்லாஹ் தன் திருமறை மூலம் மக்களுக்கு நன்மாராயம் கூறுகிறான்,
“எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.” (திருக்குர்’ஆன் 95:6)

முடிவுரை:

இந்த தொடர் நம்முடைய எந்த சகோதர சகோதரிகளையும் காயப்படுத்துவதற்காகவோ, யாருக்கும் தீங்கிழைப்பதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக இறைவனின் நற்செய்தியை அறிவிப்பதற்கும், இதனைப் படிப்பவர் மனதில் வாழ்வின் தேவையை உணரச்செய்யவும், அவர்தம் வாழ்வை இறைவனின் கட்டளைகளுக்கு ஏற்ப கொண்டு செல்லவும் அறிவுறுத்துவதே இந்தத் தொடரின் குறிக்கோளாகும்.

ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்கி, வாழ்க்கையை அவன் கட்டளைகளுட்பட்டு கொண்டு செல்வதே உலகை வாழத்தகுந்ததாகவும், வாழச்சிறந்ததாகவும் மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை. இந்த தொடர் உங்களின் வாழ்வின் பொருள் தேடியும் மற்றும் இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளும் ஆவலையும், அதன் மூலம் இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவிலான உறவையும் புரிந்து கொள்ளும் பேராவலை உண்டாக்கி இருக்கும் என்றே எண்ணுகிறேன்.

அல்லாஹ், தன் திருமறை குர்’ஆனில் வழிகாட்டுகிறான், 
“நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்;” (திருக் குர்’ஆன் 41:53)

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

புதிய வானம்...... புதிய பூமி.... ①

Tuesday, September 11, 2012 Anisha Yunus 8 Comments


ராக்கி(ஸாரி நீங்க நினைக்கிற ராக்கிக் கயிறு இல்லை!!) மவுண்டெயின் நேஷனல் பார்க், அல்லது செந்தமிழில் ( லெட் மீ ட்ரை:)) ) கூறினால், ‘பாறைகள் நிறைந்ததொரு மலையின் (மீதுள்ள) தேசிய பூங்கா’ அல்லது ‘வட அமெரிக்க மலைத்தொடர் - தேசிய பூங்கா’ எப்படி வேணுமின்னாலும் சொல்லிக்குங்க..... 



“அழகோ அழகு....” அப்படின்னு பாடத் தோணும் ஒவ்வொரு அடியிலும்.... அந்தளவுக்கு மலைகளின் அரசியோ இல்லையோ.... அழகின் அரசி....“சும்மா அதிருதில்ல” டைப் அழகு. 

சும்மா அதிருதில்ல :)))

எப்பவும் போல ஜுஜ்ஜூ Vs அஜ்ஜூ வுடன் கொஞ்சிக் குலாவும் ஒரு வெள்ளிக்கிழமை காலைல ஒரியாக்காரர் என்னிடம் கேட்கிறார், "ஹனீஃபா பாய் குடும்பம் கொலராடோ போகுதாமே, நாம போலியா???” (என்னவோ வெத்தல பாக்கு வெச்சு அவங்க அழைக்காததுதாங் குறைங்கிறமாதிரி... ஹி ஹி ஹி..). நானும் பதில் சொல்லறேன், ”ஏங்க ஜீ, அவங்கதான் அவங்க சச்சா வூடு டென்வர்ல இருக்குன்னு போறாங்க.... நாம எப்படி அவங்க உறவுக்காரங்க வீட்டுக்கு போறது???” என்னுடைய பதில் முடியறதுக்கு முன்னாடி ஒரியாக்காரர், அந்த பாய்க்கு ஃபோன் போட்டு கன்ஃபேர்மே செஞ்சாசு!! கூடவே... “நீயும் அவங்க வீட்டுல சொல்லிடு, நாமளும் வாறோமின்னு”...???????

அதுக்கப்புறம் என்ன.... யாதும் ஊரே யாவரும் கேளிர்னு அவங்க உறவுக்காரங்க வீட்டுக்கு அவங்க புறப்பட, நாங்களும் தொத்திகிட்டோம்.... எங்களோட கூட்டு சேர இன்னொரு ஃபேமிலியையும் கூப்பிட்டு ”வாங்கப்பா போலாம்... அதான் எண்டெர்பிரைஸ்ல வண்டி போட்டாச்சில்ல, ஒரு டைலெனால் போட்டுட்டு ரெடியாகுங்க”ன்னு தலைவலின்னு முடியாம இருந்த அவங்களையும் இணைச்சுகிட்டோம்... (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..... வாழ்க வாழ்க :)) ).


“ஏன்ப்பா... லாங் டிஸ்டன்ஸு, ஷார்ட் ட்ரிப்பு, பச்சைக்குழந்தைங்களை வெச்சுட்டு... யோசிச்சுப்பாருங்க”ன்னு ரிப்பீட்டிங்கா சொல்லி சொல்லியே இன்னொரு ஃபேமிலி எங்க பயணத்தை கேன்சல் செய்ய பார்த்துச்சு.... ஹஹ்.... கோயமுத்தூரா கொக்கான்னு சொல்லி, அதை அப்படியே காத்தாட விட்டுட்டு போயிட்டோம்.... ஹி ஹி ஹி....

புதிய வானம்...... புதிய பூமி....


8 மணி நேரம் பயணம் செய்தால் வரும் நகரம், வெள்ளி காலைல போயி ஞாயிறு மாலை திரும்பணும்னு முடிவு, மூணு குடும்பத்திலயுமே ரெண்டு வயசுக்கு குறைஞ்ச குழந்தைங்க உண்டு, அம்மாக்கள் அனைவருமே சிசேரியன் செய்து இன்னும் ரெண்டு வருஷம் கூட நிரம்பாதவர்கள். (சாதனைப் பெண்மணிகள் :)) )

ஹெ ஹெ... எது எப்படியோ...அரை மணி நேரத்துல முடிவு செஞ்சு மதியத்துக்கு ரெடி ஆயாச்சு. எல்லாரும் புறப்படலாம்னு எங்களுக்காக வெயிட்டிங். உங்ககிட்டதான் முன்னாடியே சொல்லியிருக்கேனே... நாங்க லேட் லதீஃப் ஃபேமிலின்னு.... அதை காப்பாத்த வேண்டி ஒரியாக்காரர் எல்லாரும் இங்க வெயிட்டிங்ல இருக்க... அவர் இன்னொரு ஃபேர்வெல் பார்ட்டிக்கு போயிட்டு 4 மணிக்கு புறப்படலாம்னு சொன்னவர் 7 மணிக்குதான் வர்றார். குலப்பெருமையை காத்தவரை நொந்துக்கலாமான்னு நானே மனசை தேத்திகிட்டு கார்சீட்டோட குழந்தைகளையும் ஏத்தி ஜீப்புல போட்டாச்சு.
தலை இடிச்சிரக்கூடாதுன்னு ‘தல’ கவனமா எட்டிப் பார்க்கிறார் :))


கார் ஓட்ட ஆரம்பிக்கறதுக்கு முந்திய காலத்திலிருந்தே சில வாகனங்கள் மேல ஒரு பெரிய கண் இருந்தது. Beetles, Range Rover, Mustang, Jeep, Town and country  அப்படின்னு பட்டியல் நீளும். லைசென்ஸ் வாங்கி தினமும் ஓட்டற வண்டி டயோட்டா கொரொலாதான்... இருந்தாலும் இந்த மாதிரி வாடகை வண்டி ஓட்டறப்பதானே மத்த வண்டிகளை ஒரு கை பார்க்க முடியும்... அதனால இந்தப் பயணத்தின் ‘பிஸ்மில்லாஹ்’ -- என் கையில் ஜீப். Jeep Liberty Model.

ஆனா ஒன்னுங்க.... ஜீப் மேல இருந்த ஆர்வம், கைல வண்டி வந்ததும், ஊத்திகிச்சு. வண்டிதான் ரஃப் அண்ட் டஃப்ஃபே ஒழிய, மற்றபடி அதிக வசதிகள் இல்லாதது. முக்கியமா சார்ஜிங் செய்ய ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்தான்.... அதுவும் வேலை செய்யலை. பிரச்சினை என்னன்னா... அந்த பிளக் பாயிண்ட்டை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பித்தேன் ஜி.பி.எஸ்ஸும், ஜி.பி.எஸ்ஸை நம்பி நாங்களும்.... ஜி.பி.எஸ் மட்டுமல்ல, மொபைலையும் அதை உபயோகித்துதான் சார்ஜ் செய்யணும். சொல்லி வச்ச மாதிரி... கொஞ்ச நேரம் ஆனதும் மொபைலும் டெட். ஆனால் முக்கால்வாசி தூரமும் ஒரே ரோடுதான் என்பதால் பிரச்சினை இல்லாமல் போக முடிந்தது. 


கொலராடோ பக்கம் வர வர அதிகாலை ஆயிடுச்சு. ஒரியாக்காரருக்கு தூக்கம் முழிக்கவே வராது. ஒரு மணி வரை முழிப்பதே பெரிய விஷயம். அதனால ஒரு மணிக்கு அப்புறம் நான் கொஞ்சம் வண்டி ஓட்டினேன். அதன் பின் மறுபடியும் கொஞ்சம் தூங்கி எழுந்து அவர் ஓட்டினார். அவர் ஓட்டுறப்ப நான் தூங்கினாலும் அப்பப்ப முழிச்சு அவர் தூங்கறாரா ஓட்டுராறான்னு பார்த்துக்குவேன்... நான் ஓட்டினால் குழந்தைகளோட குழந்தையா அவரும் நிம்மதியா தூங்கிட்டிருப்பார்.... ஒரு பேச்சுக்கு கூட எனக்கு தூக்கம் வருதா, இல்லை ஸ்டெடியா இருக்கேனான்னு யோசிக்கக் கூடமாட்டார்...(இங்கே எந்த ஸ்மைலி போடறது??)

இப்படியே எல்லாரும் ஒவ்வொரு பேக்கிரவுண்டை வெச்சுகிட்டு கொலராடோ போனோம். ஊருக்கு பக்கத்துல போகிறப்ப எங்க ரெண்டு பேர் மொபைலுமே அவுட்டு. மத்த ரெண்டு குடும்பமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம். என்ன செய்யறதுன்னு அங்கங்க நிப்பாட்டி ஃபோன் சார்ஜ் போட்டு ஆளுங்க எங்கே இருக்காங்கன்னு தேடி கண்டுபிடிச்சு போயி சேர்ந்தோம்.... எங்களை காணோமின்னு போஸ்டர் அடிக்காத குறையா எல்லாரும் தேடிகிட்டு வேற இருந்தாங்க.... அப்புறம் என்ன.... இதோ குளிச்சிட்டு ரெடியாயிடலாம்னு சொல்லிட்டு போன ஆளுங்க எல்லாம் ‘மோஸ்ட் வாண்டெட்’ ஆக மாறிட்டாங்க....

பெண்களெல்லாம் மட்டும் தூக்கம் இல்லைன்னாலும் ரெடியாகி, குழந்தைகளை ரெடியாக்கி, கட்டு சோறுக்கு பதிலா சிப்ஸும் ஜூஸுமா வெயிட் செய்யறோம்....செய்யறோம்.... ஆளுங்க வர்ற மாதிரியே காணோம்...

பொறவு மதியானம் ரெண்டு மணிக்குதான் வர்றாங்க....“ஹெ ஹெ ஹெ... நீங்கெல்லாம் தூங்கலையா... நாங்க அசந்து தூங்கிட்டோம்னு....”

அப்புறமா நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டுதான் பயணத்தையே தொடங்கினோம்.... பிரச்சினை என்னன்னா.... நகரத்துக்கும், டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்க்கும் கிட்டத்தட்ட 4, 5 மணி நேரமாவது ஆகுது....ஒன் வே மட்டும்...!!!

அதிலும் லீவுன்னா கேட்கவே வேண்டாம். நம்மூர்ல முதல் அமைச்சர் ஹெலிகாப்டர்ல போறப்ப நம்மளை கீழே நிறுத்தி வெப்பாங்களே... அந்த மாதிரி வெயிட் பண்ணனும். கார் பானெட்லயே ஆம்லெட் போட்டு சாப்பிடும் அளவுக்கு சூடு வேற. :( அப்படியும் வெயிட் செய்து எப்படியோ போய் சேர்ந்தோம். முதல்ல நாங்க போனது, Bears Lake. 
ஆனா ஒரு கரடி கூட கண்ணுல மாட்டவே இல்லை :( No bear lake :)
மலையின் மேல ஏரியான்னு ஆச்சரியப்படாதீங்க... இது கொஞ்சம் சிறிய ஏரிதான்...இதை விடப் பெரிதும், சிறியதுமான ஏரிகளும் உண்டு. ஆனால் அதை நின்னு / நடந்து பார்க்கும் நேரம் இல்லை.... அதனால் சில படங்கள் மட்டும் எடுத்துட்டு நடையை கட்டியாச்சு.

Alpine Tundra 12,500 ft elevation :)
அதன்பின் போனது ‘துந்த்ரா’....

கீழே பூமியும் மேலே தொட்டு விடும் தூரத்தில் மேகங்களும், 90 டிகிர் வெயில்ல காய்ச்சி எடுக்கும் நகரத்திலிருந்து குளிரில் உறைய வைக்கும் மலை உச்சி.... புதிய வானம்.... புதிய பூமி.... எங்கும் அழகு மழை பொழிகிறது..... (பாடாதது மட்டும்தேன் பாக்கி :))



(இருங்க இன்னும் பார்க்கலாம்... :)
.

8 comments:

உங்கள் கருத்துக்கள்...

நபிமார்கள் என்றால் யார்?

Friday, September 07, 2012 Anisha Yunus 4 Comments

  முந்தைய பதிவுகள்

 

 

ஒரு மனிதன், இறைவனுக்கு அஞ்சி, வழிபட்டு நடக்க வேண்டுமெனில், இறைவன் தன்னிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை அறியவேண்டும். நம்மை வெறுமனே படைத்து வழிகாட்டாமல் இறைவன் விட்டுவிடவில்லை... மாறாக மனிதர்களிடையே சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தன்னுடைய ’தூதர்’களாக ஆக்கினான். இந்த தூதர்களும் மனிதர்களே அன்றி தெய்வாம்சம் பொருந்திய எந்த தனித்துவமும் இல்லாதவர்கள். சம்ஸ்கிருதத்தில் இவர்களையே நாம் ‘ரிஷிமார்கள்’ என்கிறோம். ஏனைய மனிதர்களுக்கு அவர்கள் சிறந்த முன்மாதிரியாகவும், தலைவர்களாகவும் உயர்ந்து நிற்கிறார்கள்.

இந்த உலகில் வாழ்ந்த / வாழும் ஒவ்வொரும் சமுதாயத்திற்கும் ‘இறைத்தூதர்’ அனுப்பப்பட்டுள்ளார். சில உதாரணங்கள், நூஹ்(நோவா), இப்றாஹீம்(ஆபிரகாம்), தாவூத்(டேவிட்), சுலைமான்(சாலமன்), மூஸா(மோஸெஸ்), ஈஸா(இயேசு) -- அனைவரின் மேலும் இறைவனின் சாந்தி உண்டாவதாக. இந்த வரிசையில் கடைசியாகவும், உலகிற்கு இறுதித்தூதராகவும் இறைவனால் அனுப்பப்பட்டவர், நபிகள் நாயகம் (இறைவனின் சாந்தி அவர்மீது உண்டாவதாக). அவருக்கு முன் அனுப்பப்பட்ட மற்ற இறைத்தூதர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் மட்டுமே அனுப்பப்பட்டனர். ஆனால் நபிகள் நாயகம் முஹம்மது (இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) அவர்கள், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கு, உலகின் இறுதி வரைக்கும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளார்.

நபிகள் நாயகம்(இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாவதாக) எந்த ஒரு புதிய செய்தியையும் கொண்டு வரவில்லை. மாறாக முந்தைய இறைத்தூதர்கள் என்ன செய்தியை கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் மீண்டும் தழைக்கச்செய்தார்.

தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்,

 “(நபியே!) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதே(உபதேசமே)யன்றி உமக்குக் கூறப்படவில்லை; நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிப்போனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.” (திருக் குர்ஆ’ன் 41:43)

ஏன் மனிதர்கள் இறைத்தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்?

ஒரு சாதாரண துணி துவைக்கும் எந்திரத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்... அதை எப்படி உபயோகிப்பது என்பதை ‘துணி துவைக்கும் எந்திரத்தை’ வைத்து நாம் கற்றுத் தருவோமா அல்லது ‘அடுப்பை’ வைத்து நாம் கற்றுத் தருவோமா?? அதுபோல மனிதர்கள் எப்படி வாழ வேண்டுமென மனிதர்களையே வைத்து கற்றுக்கொடுப்பதுதானே சிறந்தது? எனவே இறைவன் மனிதர்களையே மனிதர்களுக்கான முன்மாதிரிகளாக அனுப்பினான்.

இறைவேதமாம் திருக்குர்ஆ’னில் அல்லாஹு சுப்ஹானஹு வத ஆலா கூறுகிறான்,
“(நபியே!) நீர் கூறும்: “பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” என்று..” (திருக் குர்ஆ’ன் 17:95)

ஏன் இறைவன் அவதாரம் எடுக்க மாட்டான்??

இறைவன் என்பவன் மனிதர்களை விட மிக மிக உயர்ந்தவன். இறைவன் ஒரு மனிதனாக முடியுமெனில், பின் அவன் இறைவனாக இருக்கவே முடியாது. ஏன்? சிந்தனை செய்யுங்களேன், இறைவனுக்கு இறப்பு கிடையாது. மனிதன் மரிக்கக்கூடியவன். இறைவன் காலத்திற்கும் வெளிக்கும் கட்டுப்பட்டவனல்லன். மனிதனோ இவற்றுக்கு கட்டுப்பட்டவன். இதையெல்லாம் விட மனிதனுக்கு சில வரையறைகள் உள்ளன. உதாரணமாக ஒரு நாய்க்கு இருக்கும் செவியேற்கும் திறன் மனிதனுக்கு இல்லை... நாய் செவியேற்கும் அத்தனை ஒலிகளும் அவன் செவியேற்க முடியாது. ஒரு ஈயோ அல்லது ஆந்தையோ காண்பவற்றை மனிதனின் கண்களால் காண இயலாது. இப்படி வரையறைகளுக்குட்பட்ட மனிதன் போல் இறைவனும் ஆவானானால் இறைவன், இறைவனுக்கேற்ற குணங்கள் அற்றவன் ஆவான். பின்????

சிலர் கூறலாம், [போன பதிவில் சகோ.ஜெயதேவதாஸ் கூறியது போல :)], இறைவனால் எதுவும் சாத்தியம் எனில் ஏன் அவன் மனிதனாகவும் இறைவனாகவும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது?? மேற்கூறிய வாக்கியத்தை சற்றே அலசுவோமே... இறைவனால் எல்லாமே முடியும் எனில், இறைவன் பொய்கூறுபவனாக இருக்க முடியுமா? அல்லது அநீதி இழைப்பவனாக இருக்க முடியுமா?? இறைவனால் எல்லாம் முடியும் எனில், இவைகளும் முடியும்.... ஆனால் இறைவன் இவ்வாறு இயலமாட்டான். காரணம்: பொய் கூறுவதும், அநீதி இழைப்பதும் இறை குணங்களுக்கு பொருந்துவதன்று. எனவே இறைவன், தன் தகுதிக்கும் தெய்வத்தன்மைக்கும் பொருந்தும் இயல்புகள் எவையோ அவற்றை மட்டுமே வெளிப்படுத்துவானேயொழிய பொருந்தா இயல்புகளுடன் பொருந்த மாட்டான். இதுவே நம் முடிவு. உங்கள் முடிவு? சிந்தித்துப் பாருங்கள் சகோஸ்...?

இறைத்தூதர்கள் கற்றுத்தந்ததுதான் என்ன?

இறைத்தூதர்கள் அனைவருடனும் அனுப்பப்பட்ட செய்தியின் நுட்பமான பொருளை ஒரே வரியில் கூறுவதானால்
1. நம்மைப் படைத்த இறைவனை மட்டும், அவனுக்கு மட்டுமே சமரப்பணம் செய், கட்டுப்படு மற்றும் வழிபடு. (படைத்தவனை வணங்கு, படைக்கப்பட்டவற்றை அல்ல). எந்த ஒரு உயிரினத்தையோ அல்லது பொருளையோ இறைவனின் அந்தஸ்துக்கு உயர்த்தாதே, இறைவனை மறுக்கவும் செய்யாதே. ஏக இறைவனான அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,

”மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.” (திருக் குர்ஆ’ன் 16:36)

2. இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனிடத்தில் நாம் பதிலளிப்பவர்களாக உள்ளோம். திருக் குர்ஆ’னில் அல்லாஹ் கூறுகிறான், 
“நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.” (திருக் குர்ஆ’ன் 88:25-26)
இன்னும், அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
“எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.” (திருக் குர்ஆ’ன் 99:7-8)




 இனி, மரணத்திற்குப் பின் வாழ்வா????
.

4 comments:

உங்கள் கருத்துக்கள்...