பாபாசாகேப் அம்பேத்கர்

Wednesday, December 01, 2010 Anisha Yunus 13 Comments




“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.”
:- 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.


டாக்டர் அம்பேத்கரின் இந்த சொற்களுக்கு இன்றும் அர்த்தமோ, அதனடியில் இருக்கும் வலியோ கொஞ்சமும் மாறவில்லை. அன்றும் அவரின் பேச்சும், படமும் ஓட்டுக்களை எண்ண பயன்பட்டன. இன்றும் அவ்வாறே. அவரின் வாழ்க்கையை படமாக எடுத்தும் அது படும் பாட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, தனியாளாக நின்று போராடிய அவரின் முன் செல்வாக்கு பெற்று சுற்றமும் புறமும் சூழ வாழ்ந்த காந்தியடிகள் அவ்வளவு பெரிய தலைவராக தெரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை தத்தம் குடும்பங்களுக்கு மட்டுமே சொத்து சேர்க்க முற்படும் பிற  so called 'தலைவர்கள்’ முன் அம்பேத்கர் போற்றப்பட வேண்டியவர். இந்த பதிவு, வலையுலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் இந்த படத்திற்கு தரவேண்டிய விளம்பரத்திற்காகவே. வணிக ரீதியில் தயாராகும் படங்களுக்காக விமர்சனம் எழுதி ஆவலை தூண்டிய, தூண்டும் எல்லா சகோதர சகோதரிகளையும் அழைக்கிறேன், இந்த படத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்துடன் சென்று கண்டு களியுங்கள். இவரின் வாழ்க்கையை அருகிலிருந்து பாருங்கள், அனைவருக்கும் கூறுங்கள். செய்வீர்களா நண்பர்களே??

 

மேலதிக தகவல்களுக்கு : உண்மைத்தமிழனின் வலைப்பூ.



.

13 comments:

உங்கள் கருத்துக்கள்...

இன்னும் இந்த மௌனம் ஏன்??

Sunday, November 21, 2010 Anisha Yunus 12 Comments





ஒரு சின்ன இடைவெளிக்கு நான் தயாரான பின்னரும் இந்த காணொளியை பார்த்த பின் அதை பதிவிட முடியாமல் இருக்க முடியவில்லை. நாம் அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே. இத்தகைய அமைப்புகளுக்கு எப்படி இயன்ற வரை கை கொடுபப்து என்றும், நாம் வாழும் சமூகத்தில் இவர்களை ஒரு ‘ஐட்டமாய்’ எண்ணாமல் நம் ட்சகோதரிக்கு ஏற்பட்டால் எப்படி உடன் நிற்போமோ அதே போல் நிற்க முயல்வதுமே ஆகும். இனி, உங்கள் முடிவிற்கு.

அமைப்பை தொடர்பு கொள்ள: http://www.prajwalaindia.com/howucan-voluntarily.html

12 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!!

Tuesday, November 16, 2010 Anisha Yunus 10 Comments



எல்லோருக்கும் எங்களின் இதயம் கனிந்த ஈதுல் அதா பெருநாள் நல்வாழ்த்துக்கள். என் அம்மா அப்பாவும் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அவர்களின் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி விடுவர். இச்சமயம் நானும் ஒரு சிறு இடைவேளைக்கு தயாராகிறேன். இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்வோம், பதிவையும், பின்னூட்டங்களையும். :)



.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி மூன்று)

Wednesday, November 10, 2010 Anisha Yunus 10 Comments


3. உளவியல் குறைபாடுகள்

இந்த பதிவில் குழந்தைவதைகளுக்கு ஆளான, சிறுவயதிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் மாறுபாட்டினை பார்க்க இருக்கின்றோம்.

a. தனித்தன்மையில் தீவிரம்:
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் பாதிப்பின் பின் வெகுவாக மாறுபடுகிறது. அவர்களின் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த விஷய‌ங்களில் ஒரு தீவிரத்தன்மை காணப்படுவது ஒரு நெருக்கடி தரும் விஷயமாகும். இந்த மாற்றமானது சமூகம் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்விலும் நிறைய மாற்றங்களை தருகிறது. இப்படி அசாதாரண குணங்களை கொண்ட குழந்தைகள் எல்லாருமே பலாத்காரம் செய்யப்பட்டவர்களில்லை. அதே சமயம், பலாத்காரத்திற்கு ஆளான் குழந்தைகளால் சாதாரணமாய் வாழ்வை ரசிக்க முடியாது என்பதும் உண்மை, உதாரணமாக, அதிகமான சுத்தத்துடன் இருக்க பார்ப்பது, தன் முடிவையே அனைவரும் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பது, அல்லது எதை பற்றியுமே அக்கறையில்லாமல் இருப்பது, அதிகமாக, அடிக்கடி தன் யோசனைகளிலும், செயல்களிலும் மாறுபடுவது, இல்லையென்றால், தாய் அல்லது தந்தை போன்ற யாரிடமாவது சிறு குழந்தை போல மிகவும் டிபென்டென்ட் ஆக இருப்பது அல்லது மிக மிக அதிகமாக சுதந்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற செயல்களைக் கொண்டு அறியலாம். இதிலுள்ள எல்லாமே நாமும் செய்வதுதான் என்றாலும், இவர்கள் விஷயத்தில் ஒரு தீவிரமும், கடுமையும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களால் ஒரு உறவையும் பேணுவது மிக கடினமாகி விடும். ஒன்று, அவர்கள் எல்லாரையும் விட்டு தனித்திருக்கவே பிரியப்படுவார்கள், இல்லையென்றால் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதே அவர்களால் சில மணித்துளிகளுக்கு கூட முடியாது, இதனாலேயே, பல உறவுகளை தொலைத்தும் இருப்பார்கள்.

ஆன்மீக குடும்பத்தை சார்ந்தவராகவோ, அல்லது சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவோ இருந்தால் அதிலும் தீவிரத்தை காணலாம். ஒன்று ஆன்மீகத்தில் ஊறிப் போய் இருக்கலாம், இல்லையென்றால், எந்த குறிக்கோளும் இல்லாமலே, சரியான விளக்கம் இல்லாமலே நாத்திகவாதியும் ஆகலாம். இவை இரண்டிலும் உச்சத்திலுள்ளவர்கள் இப்படி அடிபட்டவர்களோ என எடுத்துக் கொள்ளக்கூடாது.

a.1) அவர்கள் நாடியபோது, தேடியபோது கிடைக்காத ஆறுதலால் இறைவனை குறை சொல்பவராக, மதிப்பில்லாமல் பேசக்கூடியவராக, மாறலாம். செயல்களின் மூலமும் இறைவன் மேல் தனக்கிருக்கும் கோபத்தை காட்ட முயற்சிக்கலாம். அவந‌ம்பிக்கை என்பதை கம்மியாகவும், வெறுப்பு என்பதை அதிகமாகவுமே காட்ட முயற்சிப்பர்.


a.2) இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆன்மீகத்தில் மிக மிக அதிகம் திளைப்பவராய், அதிலேயே மூழ்கியவராகவும் இருப்பார்கள்.

தேன்மொழி, அவளின் மாமாவால் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஆளானாள். அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் எனினும், இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பவள். இந்த கொடுஞ்செயலினால் அவள் தனக்கான பாதுகாப்பாய் தன் வாழ்வை மாற்றிக்கொண்டாள். எப்படி? ஆன்மீகத்தின் மூலம் தன்னுடைய உடம்பையே வருத்தி வருத்தி ஆறுதல் தேடுவது. அதிகமாக இரவு கண்விழித்து இறைவனை பிரார்த்தித்தல், தூக்கமில்லாமல் அவதிபட்டாலும் சரி. விரதம், நோன்பு, என அதிகமான நாட்கள் உண்ணாமலிருத்தல். இன்னும் சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும் வராமலே நாட்கணக்கில் இருத்தல், இதன் மூலம் தன்னுடலை வருத்திக்கொள்வதால் ஒரு சந்தோஷம், ஒரு நிம்மதி அவளுக்கு கிடைக்கிறது. எத்தனை கடுமையாக ஒரு செயலை செய்கிறாளோ அதன் பாதிப்பை அத்தனை அதிகமாகவே அவள் ரசிக்க ஆரம்பித்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்ததாக எண்ணினாள். அவள் குழந்தைகளிடத்திலும் அதே கண்டிப்புடன் வாழ்கிறாள். வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரம் சட்டங்களை போட்டு, ஒரு தாயாய் இல்லாமல் ஒரு சந்தேகத்தின் ஊற்றாய்..!! இப்பொழுது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சில வேளைகளில் அவளால் அவளையே தடுக்க முடியாமல் போகிறது!!

தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.

லிஷாவின் வாழ்வும் அபப்டியே. சிறு வயதில், ஒன்று இரண்டு என்றில்லாமல் பல முறை அவளின் சித்தப்பா மகனால் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள், கொடுமை என்னவெனில், அவர்களின் வீடு அருகருகே இருந்ததுதான். அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார். இதுவே அந்த 'அண்ணனி'ற்கு வசதியாய் போனது இன்னமும். இப்பொழுது லிஷாவிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அவளால் அந்த வடுக்களிலிருந்து மீள முடியவில்லை. இதன் பலனாய் சில சமயம் இறைவ‌னே கதி என்பது போல் கிட்டத்தட்ட துறவறம் பூண்டவள் போல் வாழ்ந்தால், இன்னும் சில சமயங்களில் குழந்தைகள் பசித்து அழுதாலும், தன‌க்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறாள். இன்னும் பலர் இப்படி வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் உள்ளனர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பல பேர் வாழ்வில் திருமணம் என்பது பெரும் கொடுமையாகவே மாறியுள்ளாது இதனால். இதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

கடத்தல், கொலை, என்கவுண்டர், நீதி...??

Tuesday, November 09, 2010 Anisha Yunus 6 Comments

இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)


தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.  இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!

இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???

நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.

6 comments:

உங்கள் கருத்துக்கள்...

மீண்டும் குழந்தைவதை...

Monday, November 01, 2010 Anisha Yunus 24 Comments


news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327

கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.


------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------


பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.

அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.

நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

2 குழந்தைகள் கொலை: கோவை சிறுவன் உடல் மீட்பு

பணம் பறிக்க குழந்தைகளை கடத்தி கொன்றேன்: வேன் டிரைவர் வாக்குமூலம்

கோவையில் கொடூரம்: ஜவுளி கடை அதிபர் மகன்-மகள் கடத்தி கொலை-வேன் ஓட்டுநர் கைது


 
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????




24 comments:

உங்கள் கருத்துக்கள்...

கேளேன்...நீ கேளேன், மச்சி கேளேன்....என் கவித...

Tuesday, October 26, 2010 Anisha Yunus 36 Comments



இரவினில்தான் கவிதை வரும் என்று
ஜன்னலருகில் அமர்ந்தபோதுதான்
தெரிந்தது, வானத்தின் இருள்.
அமாவாசையா நீ?

க‌ன்னே, மனியே
என்றெல்லாம் கவிதை
எளுதலாம் என்றால்
கனவிலும் வந்து கரெக்சன் செய்கிறார் - உன்
தமிழாசிரியத் தந்தை

சைட்டடிக்க சைக்கிளே என்று
எட்டி மிதிக்கும் வேளையில்
நினைவில் வந்து நின்றது - உன்
அண்ணனின் பூத உடல்

கொலுசின் சத்தத்தில்
என்னை உணர்வாய் என்று
வாங்கிட விளைகையில்
எனக்கு முன் கியூவில்
உஷா உதூப்பாய் உன் தாய்

தூது செல் செல்லக்கிளியே
என்று உன் தங்கையை தேடினால்
கலர் கலராய் பெல்ட்டை காட்டுகிறது கராத்தே

அடச்சே...
வந்து வாய்க்குது பார்
எனக்குன்னு!!


.

36 comments:

உங்கள் கருத்துக்கள்...

சி.என்.என்னின் பத்து ஹீரோக்கள்

Saturday, October 23, 2010 Anisha Yunus 10 Comments


ஒரு நல்லதை செய்யும் முன் ஆயிரம் விளம்பரங்கள் செய்யும் அரசியவாதிகளின் முன், செய்ததை மேடை போட்டு சொல்லி, அந்த உதவிகளைப் பெற்றவர்களை ஃப்ளாஷ் மழையில் வெட்கப்பட வைத்து ஆளுயர மாலைகள் போட்டுக்கொள்ளும் தலைவர்கள் முன், சிறு சிறு பொறிகளால் உந்தப்பட்டு, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நாலு பேருக்கு பயன் பட்டதாய் வாழும் ஒவ்வொருவரும் ஹீரோக்களே!! (ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் சேர்த்து!!)

ஊடகங்களை பெரும்பாலும் நான் மெச்சுவதோ, போற்றிப்புகழுவதோ கிடையாது எனினும், சி.என்.என்னின் இந்த பரிசளிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அரசியல், மதம், நிறம் போன்ற பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு உலகின் நிஜ ஹீரோக்களை உலகின் முன் கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவ்வாறே இந்த ஆண்டும் 10 சிறந்த ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரை முதன்மையாக்குவது.... நம் ஓட்டுக்கள். (கள்ள ஓட்டு போடற பார்ட்டிங்கெல்லாம் கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க...)

இனி இந்த 10 பேரை பற்றி கொஞ்சம் கதைக்கலாம்...

1. நாராயணன் கிருஷ்ணன்
நாராயணன் கிருஷ்ணன் ஒரு காலத்தில் ஸ்டார் ஹோட்டல் ஷெஃப். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவை பார்த்த அந்த சம்பவம், அவரின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், மனம் பிறழ்ந்த நிலையில் தன்னுடைய மலத்தையே தின்னும் அவலம். அன்று ஆரம்பித்த பொறி இன்று, வேராகி விருட்சமாகி, அக்ஷயா என்னும் டிரஸ்ட் மூலமாக ஒரு நாளைக்கு நானூரு பேருக்கு சாப்பாடு தருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்களுக்கு அன்னதானம் செய்துள்ள புண்ணிய ஆத்மா.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


2. சூஸன் பர்டன்
தானே ஒரு டிரக் அடிக்டாய் இருந்த காலத்தை மறந்து, தன்னைப்போன்றே இருட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெண்களை மீட்டு வெளிச்சப்பகலில் வாழ்க்கையை நடத்த கற்றுத் தருவதே இவரது இப்போதைய தொழில், மூச்சு, கடமை...எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது வரை 400 பெண்களுக்கும் மேலானவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
இவரின் வலை:


3. டே ல வேகா (ஃபர்ஸ்ட் நேம் எல்லாம் வாயிலயும் வரலை, டைப்படிக்கவும் வரலை)
நம் திரு நாடான இந்தியாவை போன்றதே மெக்ஸிகோவும். கொலை, கொள்ளை, வன்முறை, வெடிகுண்டு என்பது வாழ்க்கையில் காத்தாடி மாதிரி மிக பொதுவான பொருட்கள் ஆகி விட்டன. ஆனாலும், இப்படி ஒரு ஊரிலும் மக்களுக்கு முதலுதவி தரவும், நோயிலிருந்து மீட்டெடுக்கவும் ஒரு மருத்துவமனையை பல போராட்டங்களுக்கு பின் தொடங்கி, இன்னும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதை நடத்திக் கொண்டும் இருக்கிறார் இப்பெண்.  சேவை என்றொரு எண்ணம் தோன்றி விட்டால் தடை போட வயது ஏது? இவரின் வயதோ 74!!
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


4. லிண்டா ஃபோன்ட்றென்
தோசையும், மசால்வடையும், பதினோரு மணிக்கு டீயும் இல்லாமல் நாட்களை நகர்த்த முடியாத நம் போன்ற மக்களின் மத்தியில், சதை பெருத்து மலையானால் வரும் அபாயத்தை உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தி வரும் ஒரு பெண்.  இவர் வாழும் ஊரின் மூன்றில் ஒரு பகுதியினர் உடல்பளுவினால் ஆபத்திலுள்ள மக்கள்.  17 வாரங்கள், இவரை நம்பி ஒப்ப்டைத்ததில் கிட்டத்தட்ட 15,000 பவுண்டுகள் (ஒரே ஆளெல்லாம் இல்ல) குறைத்துள்ளனர். நல்ல விஷயம்தான்...ஃப்ரீயா யாராவது எங்க ஊர்லயும் செஞ்சா பரவாலல்லயே...
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


5. ஹார்மன் பார்க்கர்
1989ல் மத போதகராக கென்யாவில் அடியெடுத்து வைத்த பார்க்கரின் கண்களில் விழுந்த உமுதல் காட்சியே கடும் வெள்ளமும் அதை உபயோகித்து மக்களை வேட்டையாடும் (நான் அரசியல்வாதிங்களை சொல்லலை...இருந்தாலும், அவங்களையும் சேத்துக்குங்க..) பெரிய முதலைகளும் இன்னும் பல மலைவாழ் விலங்ககுகளுமே. அந்த சம்பவமே பார்க்கரின் வாழ்வை மாற்றியமைத்தது. ஒரு பாலம் மக்களின் வாழ்வையும் அவர்களின் சமூகத்தையும் மாற்றியமைக்கும் என்பதை புரிந்து கொண்ட பார்க்கர் இன்று வரை கிட்டத்தட்ட 45 பாலங்கள், கட்டி முடித்துள்ளார்...இன்னும் பல இருக்கின்றன இவரின் கை பட. இவரின் பாலங்களால், வெள்ளம் வந்தாலும் பாலத்தை கடந்து அத்தியாவசிய பொருட்களைப் பெற அந்த மக்களால் முடிகிறதென்பதே பெரிய சாதனை.
இவரின் வலை:

6. எவான்ஸ் வடொங்கொ
இருப்பதிலேயெ சிறிய வயதுடையவர் இவர்தான் போல. சிறிய வேலைதான் செய்வதும், ஆனால் அதன் தாக்கம் மிக மிக பெரிது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல. 23 வயதாகும் இவர் தயாரிப்பது சூரிய ஒளியில் செயல்படும் விளக்கு. விலை ஜீரோ. இதுவரை 10,000 விளக்குகளை இப்படி ஏழைகளுக்கு தந்துள்ளார். இதனால் என்ன பெரிய பயன் என்பவர்களுக்கு கிரசினும் அதன் புகையால் எழும் பாதகங்களையும் படிக்க ஆணையிடுகிறேன்...:)
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

7. அனுராதா கொய்ராலா (மனீஷாவோட அத்தையெல்லாம் இல்ல!!)
மைதி நேபாள் என்னும் அமைப்பின் நிறுவனர். இதற்கு முன் ஒரு சாதாரண ஆங்கில வாத்தியார்.   குழந்தைகள் பத்திரம் என்று ஒரு கட்டுரை ஓடுகிறதே அந்த கட்டுரையில் வரும் பெண்களைப்போல இளம் வயதிலேயே அந்த தாக்குதல்களுக்கு உள்ளான சிறுமிகளையும், உள்ளாக இருக்கும் சிறுமிகளையும் காப்பதே இவரின் தலையாய கடமையாய் உணர்கிறார், செயல்படுத்தியும் வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 12,000 பெண் பிள்ளைகளை கரை சேர்த்த புண்ணியம் இவரையே சாரும். இந்திய வரலாற்றில் இடம் பெற வேண்டிய பெண்.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

8. மேக்னஸ் மேக்ஃபேர்லேன் பேர்ரோ
இவரும் நாராயணனைப் போலவே. ஒரு நாளைக்கு இவரின் டிரஸ்ட்டால் கிட்டத்தட்ட 400,000 குழந்தைகளுக்கு (உலகம் முழுவதும்) சாப்பாடு அளிக்கப்படுகிறது. இதன் ஐடியா வந்த பிண்ணனி சுவாரசியமானாது. எப்பொழுது போல தண்ணியடிக்க ஒரு பாருக்கு சென்ற மேக்னஸ்ஸுக்கு, தண்ணியடித்த பின் ஒரு குரல் கேட்கிறது, இப்படி தண்ணியடித்துக் கொண்டிருந்தால் போஸ்னியாவின் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்? தண்ணியால் வந்த தெளிவு...வேலையை விட்டுவிட்டு முழு நேர தொழிலாய் மக்களுக்கு உதவ முன் வந்தார்,  மேரி'ஸ் மீல்ஸ் என்னும் இவரின் டிரஸ்ட் பள்ளி செல்லும் குழந்தைகளின் வயிற்றுப் பசியை போக்குகிறது.
இவரின் வலை:

9. அகி ரா
தான் விளைத்த கண்ணி வெடியை தன் கையை கொண்டே அகற்றுவது. சிறிய எண்ணம்தான்...சவால் பெரிது.  சாதனையும் பெரிது. இது வரை 50,000 கண்ணிவெடியை பூமியிலிருந்து அகற்றி, மக்களை உயிர் தப்ப வைத்திருக்கிறார்.  இவரைப் பற்றி யாராவது அமெரிக்கப் படைகளுக்கு வகுப்பெடுத்தால் நல்லது.!!  கம்போடியாவில் சிறு வயதில் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். ஒரு கத்தி, ஒரு லெதர்மேன், ஒரு குச்சி...இவற்றை கொண்டே முக்கால்வாசி குண்டுகளை பூமியிலிருந்து அகற்றியிருக்கிறார் என்றால்? வெல்டன்!
இவரைப் பற்றிய பேட்டி:

10.டேன் வால்ரத்
காயப்பட்ட போர் வீரர்களுக்கு பைசா செலவில்லாமல்(Only Mortgagae Free!!)  வீடுகள் (அமெரிக்காவில்0 கட்டித் தருவதே இவரின் வேலை. அதுவே இவரின் சாதனை. அதுவும், உடலின் ஊனத்தை பொறுத்து அதன்படி சொகுசா ப்ளான் அமைத்து தருகிறார். (வீல்சேரின் தேவைகள் போன்று) இதுவரை ஒன்பது வீரர்களுக்கு இத்தகைய பரிசு கிட்டியுள்ளது, இன்னும் 10 வீடுகள் ரெடியாகிக் கொண்டே உள்ளன. அமெரிக்காவில் வீடு இப்படி கட்டி தருவது உண்மையில் பெரிய விஷயம்தான்.
இவரின் பேட்டி:

  • இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க (கள்ள ஓட்டெல்லாம் வேண்டாம். ஒருவருக்கு மேலேயும் தேர்ந்தெடுக்கலாம்.
  •  சனி ஞாயிறு வேறென்ன வேலை, யாரை தேர்ந்தெடுக்கறதுன்னு கவனமா படிச்சு ஓட்டு போடுங்க.  
  • அதுவரை, டின் டின்டிடின் (பிரிட்டானியா பிரேக்)


.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி இரண்டு)

Thursday, October 21, 2010 Anisha Yunus 15 Comments

குழந்தைவதை செய்பவர்கள்

அ) யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள் ???

1.) குழந்தைவதை கொடுமைக்கு ஆளானவர்கள்
சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட வடுக்களை அழிக்க இயலாமலே வயதான பின் மற்ற குழந்தைகளை இப்படி பலாத்காரத்திற்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்றொரு சிந்தனை நம்மிடையே பொதுவாய் இருந்தாலும், நடந்துள்ள பல அறிவியல் ஆய்வுகளின்படி, அது உண்மையில்லை. சில சம்பவங்களில் உண்மையாகவே இருக்கலாம். ஆனால் எல்லா சம்பவங்களிலும் அது மெய்யல்ல. பல நேரங்களில் குழந்தைவதை செய்பவர்களுக்கு வேறெந்த காரணமும் தேவையில்ல, அவர்கள், அவர்களே. விளக்கத்திற்கு இந்த ஆராய்ச்சியை படிக்கவும்.

2) குடும்பமும், சினேகங்களும்
ஆராய்ந்து பார்த்தால் கிட்டத்தட்ட எல்லா சம்பவங்களிலும் குழந்தைவதை செய்பவன் அந்த குடும்பத்தை சேர்ந்தவனாகவோ அல்லது அந்த குடும்பத்திற்கு மிக நெருங்கிய வெளியாளாகவோதான் இருக்கிறான். கிட்டத்தட்ட நான் (மூல ஆசிரியர்)  சந்தித்த, வஞ்சகத்திற்கு ஆளான பல பேர் அவர்களின் நெருங்கிய உறவினர்களாலேயே (உதா: ஒன்று விட்ட அண்ணன் / மாமா / சித்தப்பா / இன்னும் சில சம்பவங்களில் சொந்த தாத்தாக்களே... ந'ஊதுபில்லாஹ்!!)

குழந்தைவதை செய்பவனுக்கு வேறெங்கும் வெளியிலிருந்து இரை தேடுவதைவிட சொந்தத்திலேயே இரை தேடுவது சுலபமானது. ஏனெனில் வருஷங்களாக அவன் மீது குடும்பத்தாரின் நம்பிக்கை இருக்கிறது, எனவே அவர்களின் மீது சந்தேகம் எழுவதோ, செய்யும்போது பிடிபடும் சந்தர்ப்பமோ அரிதிலும் அரிது. இன்னும் அவர்களின் இரையான சிறுவன் / சிறுமியை என்நேரமும் அடையவும் இயலும். என்னிடம்(மூல ஆசிரியர்)  இவ்வாறான கொடிய கதைகளைக் கூறிய பலர், அவர்களின் குடும்பத்திற்கு மிக நெருக்கமான, அதிகமாய் வருகை புரியும் ஆட்களாலேயே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பிள்ளைகள் அடிக்கடி வதைக்கு ஆளானதும், அதை சொல்லிட துணிந்தபோதும் யாரும் நம்பாமல் போனதும் இத்தகையவர்கள் சம்பாதித்து வைத்துள்ள நம்பிக்கை ஓட்டுக்களாலேயே...!!

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், குழந்தைவதை செய்பவன் எந்த குழந்தையை தேர்ந்தெடுக்கிறானோ அந்த குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடுவில் ஒரு திரை / ஒரு தடை இருக்கிறதா...அவர்கள் வெளிப்படையாக பேசவோ, பயமற்ற அன்பு நிரம்பிய உணர்வுகளோடு இருக்கிறார்களா என்பதையும் கவனித்து வைக்கிறான். (இந்த விஷயத்தை ‍ பெற்றோர் மற்றும் குழந்தை உறவினைப் பற்றி நேரமிருப்பின் இன்னும் விரிவாக பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்)


ஆ) எங்கிருந்து, எப்படி குழந்தைவதை செய்ய துணிகிறார்கள்??

1. தகுந்த நேரமும் இடமும்.
ஆம். அவர்களுக்கு நேரமோ, இடமோ தனியாக தேவையில்லை என்பதே மெய். கீழ் வரும் சம்பவத்தை பாருங்கள்:

மோனாவிற்கு ஆறு வயதாகும்போது அச்சம்பவம் நடந்தது. அவளுடைய தாய்மாமனாலேயே பலாத்காரத்திற்கு ஆளானாள். அதுவும் எங்கே? காரில்!! அந்த கொடியவன் மோனாவின் தாயை விட பல வயது பெரியவன். அதனாலேயே மிகவும் மரியாதையை சம்பாதித்து வைத்திருந்தான். அந்த நாளில் அவன் மோனாவையும் அவளின் தாயையும் ஷாப்பிங்குக்காக காரில் அழைத்துச் சென்றான். தாயை ஷாப்பிங் செய்துவிட்டு வருமாறு கூறிவிட்டு அவன் பார்க்கிங் லாட்டில் மோனாவையும் தன்னுடன் வைத்துக் கொண்டான். கார் சீட்டில் பின்னால் அமர்ந்திருந்த மோனாவை முன் சீட்டிற்கு வரச் சொன்னான். அந்தக் குழந்தையின் அறிவிற்கு ஏன் என்ற கேள்வி கூட எழாத வயது. அவன் மோனாவின் கழுத்திலிருந்து ஆரம்பித்து வருடிக்கொண்டே வந்தான், அதன் கீழ், அதன் கீழ் என்றவாறே...மோனாவிற்கு சில நிமிடங்களுக்கு பின்னரே அவன் செய்வது உறைக்க ஆரம்பித்தது. என்னவென்று புரிய வில்லையென்றாலும் மனதில் பயப்பட ஆரம்பித்த மோனா நிறுத்திவிடுமாறு எவ்வளவு மன்றாடியும் அவன் நிறுத்தவில்லை, அவனின் தாகம் அடங்கும்வரை. கிடைத்த சந்தர்ப்பத்தினை உபயோகித்து அழுதபடியே மோனா அவளின் தாயை நாடி ஷாப்பிங் கடையினுள் ஓட ஆரம்பித்தாள்...

இத்தகைய பாவிகள் நேரமோ இடமோ எதையும் கவனத்தில் கொள்வதில்லை. நாம் எதிர்பார்க்காத சமயத்தில்தான் தாக்க முற்படுகின்றனர். சந்தர்ப்பங்கள் இவ்வாறு அமையும் தருணங்களில் பாதிக்கப்பட்டவரை நம்ப ஒரு ஆத்மாவும் இருப்பதில்லை.

"உன்னை காரில் விட்டுவிட்டு வந்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை...அதற்குள் நீ சொல்லும் செயல்கள் எப்படி, அதுவும் பப்ளிக் பார்க்கிங் லாட்டில் நடக்கும்? என் அண்ணனைப் பற்றி ஏதுவும் சொல்வதை இன்றோடு நிறுத்திக் கொள், உனக்கு தேவை வெறும் அட்டென்ஷன்தான், ச்சே..."

தாயிடம் மோனா தேடிய பாதுகாப்பு இதுவா??

2) துரிதமானதாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடியதாக:
முன்னரே கூறியதுபோல் குழந்தைவதை செய்யும் மிருகங்களுக்கு அதற்கென தனி நேரமோ, இடமோ தேவையில்லை. பல சமயங்களில் பண்பாட்டை ஒட்டி நாம் செய்யும் / அனுமதிக்கும் சில காரியங்களே இதற்கு தீனி போட ஏதுவாகின்றன.

மோனாவின் தாய்மாமனுக்கு அவர்களின் குல வழக்கப்படி யாரேனும் சந்தித்துக் கொண்டால் நெற்றியில் முத்தமிடுவது சாதகமாகிப்போனது. மோனாவின் நெற்றியில் அவ்வாறே ஆரம்பிக்கும் முத்தம் பல சமயங்களில் அதோடு நிற்பதில்லை...யா அல்லாஹ். இதை தாயிடம் சொன்னாலும் அவள் சிரித்துவிட்டு வேறு வேலை பார்க்க போய்விடுவாள் என்பது மோனாவிற்கும் அதைவிட அதிகமாக அந்த மிருகத்திற்கும் தெரிந்தே இருந்தது.

அடுத்த பகுதியில்
1. பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் தாக்கங்கள் நிறைந்த வாழ்வும்



மீண்டும் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்...அதுவரை...குழந்தைகள் பத்திரம்!!!




.

15 comments:

உங்கள் கருத்துக்கள்...

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)

Wednesday, October 13, 2010 Anisha Yunus 23 Comments

 
முந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பலர் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள்.  அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.

  • ஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.
  • இரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.
  • மூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.

இன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.


கட்டுரை விதிகள்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍பெற்றோர்களுக்கான எச்சரிக்கை:
இந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.

வாசகர்களுக்கான எச்சரிக்கை:
சில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.

கமெண்ட்ஸ்:
தயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.
==========குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)============

மீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென.  காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.

குடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, "இது தவறு; இச்செய்கை சரியில்லை" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். நிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.

இது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.

ஏன் அவனால் முடியாது? அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்!!

இது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.

நடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. "அம்மா...", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.

அனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,"பொய் சொல்லாதே" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது? கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி?

இது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,

1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்?

என்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.

இந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.

23 comments:

உங்கள் கருத்துக்கள்...

குழந்தைகளின் பருவம் எங்கே போனது?

Wednesday, October 06, 2010 Anisha Yunus 29 Comments

நன்றி : உணர்வலைகள்

இந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது? அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர்றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்ப‌டியெல்லாம் செய்ய மனசு வருது? எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும்? இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா? இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு.

குழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான்? ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சுய கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது?

இன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது? மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும்? அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது?

இந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்:

1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமாக போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன.

2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்ல‌து அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது? உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள்.

இந்த பதிவின் நோக்கம்,

1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க? இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்?

2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண‌ மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது?

3. மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?

பதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

29 comments:

உங்கள் கருத்துக்கள்...

உண்மை வருத்தம்

Friday, October 01, 2010 Anisha Yunus 3 Comments

Thanks to Sathish Acharya..!

வந்துள்ள தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு சாதகமே ஒழிய இந்தியன் என்று மார்தட்டும் எந்த குடிமகனுக்கும் சாதகமாய் இல்லை என்பது உலகறிந்த செய்தி. ஒரு தடவை மீண்டும் என் தாய்த்திருநாட்டைப்பற்றி சிறு வயதில் என்னவெல்லாம் நினைதிருந்தேனோ அதெல்லாம் கனவு என்று ஆணித்தரமாய் என் நினைப்பினை தவிடு பொடியாக்கியுள்ளது!:)



.

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

விடை காண்போமா?

Sunday, September 19, 2010 Anisha Yunus 7 Comments

மருதன் சாரின் வலைப்பக்கத்தில் இந்த பதிவை படித்ததும் நெஞ்சை சுட்டது. அதை விட அதிகமான தாக்கத்துடன் ஒரு கேள்வி பிறந்தது. நாம் எந்த மொழியை பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், எந்த கொள்கையை கொண்டவர்களாக இருந்தாலும் பசி என்று வரும்போது எல்லாரும் ஒரே நிலைக்கு வந்து விடுகின்றோம். நம்மில் பாதி பேர் மண்டை நிறைய வேலை இருந்தாலும் வலைப்பூக்களை தவறாது பார்வையிடுகிறோம், வேடிக்கையையும் வேதனையயும் பகிர்ந்து கொள்கிறோம். ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு குழு ஏற்படுத்தி நம்மால் இயன்ற அளவு பசியை அணைக்க முயற்சிக்கக் கூடாது. ஆசை வேர் விட்டுக்கொண்டதே ஒழிய இன்னும் செயல்முறை திட்டங்கள் என்னிடம் இல்லை. விருப்பமிருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள், இறைவன் நாடினால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயல்வோம். அள்வில் கடுகே ஆனாலும் சரி. மருதன் சாரின் பதிவை இங்கு மீள் பதிவிட்டிருக்கின்றேன். பதிலுக்கு காத்திருக்கின்றேன்.

---------------------------------------------------------------------------------------------------------------

உணவு தயார். கொண்டு வந்து வீட்டுக்கு நடுவில் வைத்தாகிவிட்டது. ஆனால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் அதைப் பரிமாற முடியாது. எனவே, சில முடிவுகள் எடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு குறைவான அளவு போதும். தின்றுவிட்டு சுருண்டு படுத்து உறங்கிவிடுவார்கள். அல்லது, வெளியில் நண்பர்களுடன் ஓடிவிடுவார்கள். அவர்களுக்கு உணவு அளவு தெரியாது. பசி தெரியாது. பாதகமில்லை. வயதானவர்களுக்கு அதிக உணவு தேவைப்படாது. அவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. மெலிந்து, வாடி, வதங்கியிருக்கும் தேகம். கூடுதல் உணவு கொடுத்தாலும் பலனிருக்கப்போவதில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு உணவு தேவை. சமைப்பதும், துவைப்பதும், சுத்தப்படுத்துவதும் அவள்தான். எல்லோரும் உண்டபிறகு எஞ்சியிருக்கும் உணவில் ஒரு பகுதி அவளுக்கு. கடினமான வேலைதான் என்றாலும், வீட்டில்தான் கிடக்கப்போகிறாள். ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வேலைப்பளு இருந்தாலும், அவளால் பணம் திரட்டமுடியாது. ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அதிக உணவு கொடுத்தாகவேண்டும். காய், கறி, சோறு என்ன செய்தாலும் அவர்களுக்கு முதல் பங்கு. பெரிய பங்கு.

பசி என்பது உணவு குறித்து சிரமமான முடிவுகள் எடுப்பது.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (NREGA) அதிகாரிகளை எப்போதும் அவர்கள் ஈக்களைப் போல் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலருக்கு அறுபது வயதுக்கு மேலாகிறது. சிலருக்கு எழுபதுக்கும் மேல். ஒருமுறை, இருமுறை கேட்டால் கிடைத்துவிடாது என்பதால் அதிகாரிகளைக் கிட்டத்தட்ட துரத்துவார்கள். கெஞ்சுவார்கள். சூரியன் உச்சியில் கொளுத்திக்கொண்டிருக்கும் ஆந்திரா மாநிலம். ஐந்து, ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் வரவேண்டும். காலில் செருப்பில்லை. மேலுக்கு ஒரு துண்டு. தலையில் ஒரு கந்தல் துணி. 'ஐயா, எங்களுக்கும் வேலை கொடுங்கள்!' உன்னால செய்யமுடியுமா? இப்பவே இப்படி தள்ளாடுறியே? 'முடியும் ஐயா. என்னை நம்பி கொடுங்கள். பாறையைப் பிளந்த கைகள்.' கைகளை நீட்டி காண்பிக்கிறார். சில சமயம் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகள் கிடைக்கின்றன. அல்லது, மற்றவர்களுக்குக் கிடைக்கும் அதே கடினமான பணிகள். காட்டைத் திருத்துவது, மரம் பிளப்பது, சாலையமைப்பது, இன்னபிற. நடுங்கும் கை நடுங்கியபடி கிடக்கும். மூச்சு வாங்கும். உடல் தளர்ச்சியடைந்து துவளும். நிறுத்தாமல் பணியாற்றவேண்டும். நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படலாம். மறுநாள் வேலை கிடைக்காமல் போகலாம். வீட்டுக்குப் போகும்போது, கையில் 70, 80 ரூபாய் கிடைக்கும் என்னும் கனவு அவர்களை மயக்கத்தில் இருந்தும் நடு்க்கத்தில் இருந்தும் மீட்டெடுக்கும்.

பசி என்பது நடுக்கத்தை மறைத்துக்கொண்டு உழைப்பது.
அந்த மகாராஷ்டிர ஆதிவாசி குடும்பத்தின் வீட்டில் எட்டு பேர். சமைக்கப்பட்ட உணவை அந்த எட்டு பேருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், ஒருவருக்கும் வயிறு நிரம்பாது. எனவே, அவர்கள் ஓர் உபாயத்தைக் கண்டறிந்தார்கள். இருவருக்கு மட்டு்ம் வயிறு முட்டும் அளவுக்கு உணவு பரிமாறப்படும். மற்ற ஆறு பேர் வீட்டில் படுத்துக்கொள்வார்கள். அந்த இரண்டு பேரும் வெளியில் சென்று உற்சாகத்துடன் பணியாற்றி இரவு பணத்துடன் வருவார்கள். அடுத்த நாள் இன்னும் இரண்டு பேருக்குச் சாப்பாடு. அவர்கள் பணியாற்றவேண்டும். நேற்று வயிறு முழுக்கச் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் வேலைக்குப் போகவேண்டியிருக்காது என்பதால் அவர்கள் பட்டினி கிடப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

பசி என்பது சுழற்சி முறையில் உண்பது.
ராயல்சீமாவில் வீட்டுப் பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் கோரிக்கை, மாணவர்களுக்கான பள்ளி உணவு திங்களன்று அளவில் இரட்டிப்பாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள். 'வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, சனி, ஞாயிறு இரு தினங்களும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. திங்கள் மதியம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால்தான் அவர்களால் தாக்குப்பிடிக்கமுடியும்.' இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். 'எங்களால் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கமுடியவில்லை. நாங்கள் என்ன கத்தினாலும் அவர்களுக்கு எதுவும் ஏறப்போவதில்லை. பாதி மயக்கத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? திங்களன்னு கூடுதல் உணவு கொடுத்தால்தான், மதியத்துக்குப் பிறகாவது வகுப்பைத் தொடரமுடியும்.'

பசி என்பது ஏக்கத்துடன் காத்திருப்பது.
பேண்ட், சட்டை அணிந்து யார் வந்தாலும் மக்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர் யார் எங்கிருந்து வருகிறார் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. அடுக்கடுக்காகக் கேள்விகளால் துளைத்துவிடுவார்கள். எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? எங்களுக்கு உணவு கிடைக்குமா? எங்களுக்குக் கடன் தருவீர்களா? மேலதிகாரிகளிடம் சொல்லி சிபாரிசு செய்வீர்களா? எங்களுக்கு ஏதாவது சலுகைகள் அளித்திருக்கிறார்களா? எங்களுக்குக் கொடுக்க ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?

பசி் என்பது அர்த்தத்தை இழப்பது.
'முன்பு, அரிசி, கோதுமை என்று தானியங்கள் பயிரிட்டுக்கொண்டிருந்தோம். எப்படியாவது கஷ்டப்பட்டு விற்றுவிடுவோம். ஒருவேளை விற்க முடியாவிட்டால், பஞ்சம் வந்தால், நாங்கள் பயிரிட்டதை நாங்களே சாப்பிட்டுவிடுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் என்ன பயிரிடவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வதில்லை. என்ன விலையில் விற்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவுசெய்வதில்லை. எங்கே, எப்படிச் சந்தைப்படுத்தவேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. என்ன பூ்ச்சிமரு்ந்து பயன்படுத்தவேண்டும், எந்த அளவில் என்பதையெல்லாம் நாங்கள் யோசிப்பதில்லை. தரகர்கள் வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களே விதை தருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அதிகாரிகளுக்குக் கீழ்படிகிறோம். பிரச்னை என்னவென்றால், நாங்கள் உற்பத்தி செய்வதை அவர்கள் கொள்முதல் செய்யத் தவறும்போது, நாங்கள் நடுங்கிப்போகிறோம். தானியங்களாக இருந்தால் உண்டுவிடலாம். பஞ்சை உண்ணமுடியுமா? அது செரிக்குமா?' எனவே, அவர்கள் பூச்சிமருந்து உட்கொள்கிறார்கள்.

பசி் என்பது தவறான உணவை உட்கொள்வது. பசி என்பது இறந்துபோவது.
இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் இரு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் 17 குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி இறந்துபோகின்றன. அரசாங்கம், ஒவ்வொரு மணி நேரமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய 57 கோடி ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறது.

பசி் என்பது அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவது.
மும்பையில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் சேரிப்பகுதிகளில் வாழ்கிறார்கள். வீடு என்று அழைக்கப்படும் நிலையான இருப்பிடத்தில் வாழ்பவர்கள் 71 சதவீதம் பேர். ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட இந்த வீடுகளில்தான் குடும்பத்தினர் மொத்தமாக வசிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் முதியோர்களும் குழந்தைகளும். மும்பையின் தற்போதைய சுற்றுலா கவர்ச்சி, 2 பில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாளிகை. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடு இது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி திகழ்வார் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.

பசி என்பது ஏற்றத்தாழ்வுகளை ஜீரணம் செய்துகொள்வது.
தனித்தனியே நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரபூர்மான குழுக்கள் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்ளும் உண்மை இது. 'ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 836 மில்லியன் பேர். தலித் மற்றும் பழங்குடியின மக்களில் 86 சதவீதம் பேர் ஏழைகள். 85 சதவீத முஸ்லிம்கள் ஏழைகள். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர சம்பாத்தியம் 503 ரூபாய். இதில் 60 சதவீதம் உணவுக்காக செலவழிக்கப்படுகிறது.'

பசி என்பது உண்மை அறிவது.
பிரச்னையின் ஆணிவேர், விவசாயிகள் தற்கொலை அல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பிரச்னையின் விளைவு. நிஜமான பிரச்னை, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டது.


பசி் என்பது உண்மை அறிந்தும், செயலற்று இருப்பது.
Slumdogs Vs Millionaires: Farm Crisis and food crisis in the age of inequality என்றும் தலைப்பில் பி. சாய்நாத் நேற்று ஜெர்மன் ஹாலில் ஆற்றிய உரையின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் இது.

Slumdog Vs Millionaires : பி. சாய்நாத்தின் உரை
Globalizing Inequality : பி. சாய்நாத்தின் உரை
பி. சாய்நாத்தின் பங்களிப்பை அறிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். விக்கிப்பீடியா பக்கம் இங்கே.

தி ஹிந்து, ஃப்ரண்ட்லைன் ஆகிய இதழ்களில் சாய்நாத் எழுதும் கட்டுரைகள், இங்கே தொகுக்கப்படுகின்றன.

பி. சாய்நாத்தின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லவேண்டியது நம் கடமை.
 
நன்றி மருதன் சார்.

7 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

Thursday, September 09, 2010 Anisha Yunus 3 Comments

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

உண்மை நிலவரம்.

Thursday, August 26, 2010 Anisha Yunus 4 Comments

விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ரகசிய ஆவணங்களிலிருந்து ஓர் படம். Self Explainable. ஆஃப்கானிலும் பாகிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலவரம்.




மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.



.

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

அன்புள்ள சந்தனமுல்லை

Monday, May 17, 2010 Anisha Yunus 16 Comments

உங்கள் பதிவு அருமை. அதேபோல் மீடீயாவின் பின்னால் செல்லாமல் மற்றவர்களின் பதிலையும் தெரிஞ்சுக்க நினைத்தது மிக நேர்மை. நன்றி. என்னை கூப்பிடவில்லை என்றாலும் பதில் சொல்ல வேண்டிய சமூகத்தை சார்ந்திருக்கிறேன் என்பதால் பதில் அளிக்கிறேன்.

1. நமக்கு உண்மையில் ஃபத்வாவில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று தெரியாது. மீடீயாவில் அத்தனை எழுத்துக்களையும் போடுவது கிடையாது. அவரகளின் தேவைக்கு எற்ப ஒட்டி, வெட்டிதான் பயன்படுத்துவர். அதனால் உண்மையில் என்னவிதமான ஃபத்வா கொடுக்கப்பட்டது என்று தெரியாது. அதனால் இதன் மேல் தர்க்கம் புரிவது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல.

2. ஃபத்வாவை வார்த்தைகள் பிறழாமலே மீடீயா வெளியிட்டுள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அந்த லின்க்கில் படித்ததில், "ஆண்களுடன் சரளமாக, பர்தா / திரை இன்றி பேசி பழகும் அபாயம் இருப்பதால் அத்தகைய இடங்களில் பெண்கள் வேலை செய்ய ஷரீஅத்தில் இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலோட்டமாக இல்லாமல் நன்கு ஆராய்ந்து படித்தால், இத்தகைய இடங்களில் வேலை செய்வதையே அல்லது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக, கருத்தாக காத்து வளர்க்க வேண்டுமென சட்டமுள்ளது. பெண் குழந்தைகள் இருந்து அவர்களை நன்றாக பேணிப் பாதுகாத்தால் நானும் அவர்தம் பெற்றோரும் / காப்பாளரும் சொர்க்கத்தில் பெரு விரலும் சுட்டு விரலும் போல இணைந்திருப்போம் என நபி மொழி உண்டு.

இந்த ஃபத்வாவின் கூற்றுப்படி, பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலையைப் பற்றி பிரச்சனையில்லை. பிரச்சனை, சகஜமாய் பழகுகிறோம் பேர்வழி என பெண்களையும் ஆண்களையும் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை பற்றிதான். இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் எல்லா விதமான பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே போவதுதான் உண்மை. இந்த ஃபத்வாவை மீண்டும் படித்துப் பாருங்கள், பெண்கள் பெண்களுக்காக மட்டும் உள்ள பணியிடங்களில் வேலை பார்ப்பதையோ அல்லது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதையோ அல்லது இந்தியாவில் தற்சமயம் அதிகமாக காணப்படும் மகளிர் சுய உதவிக் குழு போன்றவற்றில் வேலை செய்வதையோ இந்த ஃபத்வா ஆட்சேபிக்கவில்லை. புரிகின்றதா?

இந்த ஃபத்வாவை மீடீயா அவல் போல் மெல்லவே வேறுவிதமான தலைப்பை கொடுத்துள்ளதை கவனிக்கவும். அந்த செய்தியிலேயே படித்தால் பெண்கள் கல்லூரியில் பணிபுரியும் ருக்ஸானா என்ற பெண்ணின் பதிலில் புரியும். மகளிர் கல்லூரியில் பணி புரிகின்றார். அதிகமாக பர்தா அணிந்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இராது. அதுவுமன்றி ஆண்களுடன் பழக வேண்டிய சூழ்நிலைகளும் குறைவு. இதில் பயன் யாருக்கு?

தலைப்பை மட்டும் பார்த்து இதனை குறை சொல்ல முடியாது. ஷரீஅத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணி புரியும் பட்சத்தில் பெண்கள் பணி புரிவதை எந்த அமைப்பும் குறை சொல்ல முடியாது, காரணம், அல்லாஹ் பெண்களை வேலை செய்வதை விட்டோ, சம்பாதிப்பதை விட்டோ தடை செய்யவில்லை. அல்லாஹ் தடை செய்யாததை, முஹம்மது நபி (ஸல்) தடை சொல்லாததை வேறு யாரும் தடை சொல்லமுடியாது. இங்கும் அப்படியே. சூழ்நிலைகள் பாதுகாப்பாக உள்ள பட்சத்தில் பெண்கள் வேலை செய்யலாம்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள ஷம்ஷாத் அக்கா முதற்கொண்டு ஆஃப்ரீனின் அம்மா வரை எவருக்குமே சூழ்நிலை பாதுகாப்பாக உள்ளவரை வேலை செய்வதற்கு அந்த அமைப்பும் சரி எந்த அமைப்பும் சரி ஆட்சேபணை விதிக்கவில்லை. பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத இடத்தில் வேலைக்கு அனுப்ப சாதி மத பேதமன்றி எந்த தாய்தந்தையும் அனுமதிக்க மாட்டார். அவர்கள் பர்தா அணிபவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும், பர்தா என்பது உடையோடு மட்டும் நில்லாது எண்ணங்களுக்கும் சேர்த்தே இறைவன் கூறியுள்ளான். அதனாலேயே ஆண் பெண் என இரு பாலருக்கும் ஹிஜாபை கட்டாயப்படுத்தியுள்ளான். அத்தகைய கட்டுப்பாடான மனம் உள்ளவரை, ஷரீஅத்தை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை இல்லாதவரை வேலை செய்ய தடையில்லை என்பதையே அந்த ஃபத்வாவும் கூறுகின்றது.


எனவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதே தவறு என்று ஃபத்வா கொடுத்திருப்பதாய் எண்ணவேண்டாம். மீண்டும் அந்த செய்தியைப் படித்துப் பார்த்தால் தலைப்பை எவ்வளவு யோசித்து வில்லங்கமாய் தந்திருக்கின்றார்கள் என புரியும். என்னால் இயன்ற அளவு பதில் சொல்வதில் தெளிவாய் இருக்க முயற்சித்து உள்ளேன். தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

பி.கு. சில காலங்களுக்கு முன் பெங்களூருவில் Oracle Inc - Software Engineer பணியில் இருந்தவள்தான் நானும். என்னுடைய வேலை இரண்டாம் மாடியில், சிற்றுண்டி சாப்பிட மேலே டெர்ர்ஸ்சிற்கு செல்ல வேண்டும். டெர்ரஸ்சில்தான் மது அருந்தும் இடமும் உள்ளது. தனியே இடங்களில்லை. நான் வேலை பார்த்த இடத்தில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆசை ஆசையாக விடாமல் முயற்சி செய்து வேலை வாங்கிய கம்பெனி அது. எனினும் மனதுக்கு ஒட்டாத சூழ்நிலை, பாதுகாப்பில்லாத உணர்வு. நானே வலிய வந்து ஐந்தே மாதத்தில் வேலையை விட்டுவிட்டேன். இப்போது அதே வேலை, வீட்டில் என் குட்டிப் பையனுடன் லூட்டி அடித்துக் கொண்டே Internet-Freelancing மூலமாக சம்பாதிக்கின்றேன். காலத்திற்கேட்ப நாம்தான் பத்திரமாக இருக்க வேணும் என்ன நான் சொல்வது?

ps2:-



16 comments:

உங்கள் கருத்துக்கள்...