சிம்பிள் தக்காளி சட்னி

Tuesday, September 27, 2011 Anisha Yunus 25 Comments

மக்களே.... பொறுத்துக்குங்க.... இந்த பதிவு ஸ்பெஷலாக என் தம்பிக்காக. பதிய சொன்னது என் அம்மா. அதனால் செய்முறையை விட விதிமுறைகள் அதிகமாக இருக்கும். அட்ஜஸ்ட் ப்ளீஸ்....ஆனா நல்ல ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. ஹி ஹி ஹி


--: தக்காளி சட்னி :--
1. மூன்று நடுத்தர அளவு தக்காளி, 3 அல்லது 4 சின்ன வெங்காயம் (அல்லது ஒரு பெரிய வெங்காயம்), ஒரு நடுத்தர அளவு பச்சை மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய், 4 -5 கருவேப்பிலை.

2. முதலில் வெங்காயத்தை உரிக்கவும். உரித்த வெங்காயத்துடன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.

4. அடுப்பை ஆன் செய்து, தண்ணீரில்லாமல் துடைத்த கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.

5. எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்..

6. தீயை கம்மியில் வைத்து வெங்காயத்தை போட்டு கிளறி விடவும்.

7. நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.

8. பின்னர் (1/4 மஞ்சள்பொடி தேவைப்பட்டால் சேர்த்தவும்). கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.

9. கம கம தக்காளி சட்டினி ரெடி.

10. தோசை அல்லது இட்லியுடன் சாப்பிடவும். சாப்பிட்ட பின் மீதியை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஹை.... மாமா எனக்கு??????

மீதி ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. ஹி ஹி ஹி..... செய்துட்டு சொல்லுங்க :)

.

25 comments:

உங்கள் கருத்துக்கள்...

இறைவனை அஞ்ச மாட்டீர்களா????

Monday, September 19, 2011 Anisha Yunus 5 Comments

மன்னிக்கவும்...........

இது நாள் வரை நீங்கள் பார்த்திருந்த பதிவுகளுக்கும் இந்த பதிவிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இந்த பதிவு மனம் வெந்து வேதனையுடன் நினைவுகூறப்படும் பதிவு. இதை இங்கே எழுதும் அளவிற்கு மனம் வேதனையுற வைத்த அம்-மாக்களுக்கு இந்த பதிவும், அதன் இறுதியில் உள்ள து’ஆவும் சமர்ப்பணம்...!!!!



இந்த புகைப்படத்தை பார்த்ததும், மீண்டும் ஒரு முறை இமாம் அன்வர் அவ்லகியின் வலைப்பூவில் ப்டித்த, அவருக்கு வந்திருந்த ஒரு கடிதம் நினைவுக்கு வந்தது. குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார்.

அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். கணவன் முக்கியமா, கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு.... ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர்.

அக்கம்பக்கம் சுற்றம் வெறுமனே வேடிக்கை பார்த்தது பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்ருயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடித்து விடாமல் காப்பதுமே பெரிய மனப்போர் என்று குமுறியிருந்தார்.

சுபஹானல்லாஹ். அந்த சகோதரரை எண்ணுகிறேன். இன்னும் எத்தனை பேரின் வாழ்வை இந்த அயோக்கியன் சீரழித்திருப்பான் என்றெண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான். எம் மக்களின் வாழ்வை சூறையாண்டவர்களின் கதி எதுவெனவும், அவனோடு இப்பொழுது கொஞ்சி குலவுகிற இந்த முனாஃபீக்குகளின் நிலை எதுவெனவும் அல்லாஹு த ஆலா நிச்சயம் இவ்வுலனகிருக்கும் காட்டுவான், மறுமையிலும் காட்டுவான். ஆமீன்.... ஆமீன்....அல்லாஹும்ம ஆமீன்.

ஹஸ்புனல்லாஹ் வ நி’அமல் வகீல். (இறைவன் போதுமானவன்)
.



5 comments:

உங்கள் கருத்துக்கள்...

தலைப்பில்லா கவிதை....

Tuesday, September 13, 2011 Anisha Yunus 7 Comments



உனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது,
வளைவுகளிலும் சுழிவுகளிலும் நீண்டு ஓடும் ஆற்றைப்போல...
சப்தத்தை விடவும் கடுமையான இரைச்சலோடு...

உனக்கென எழுதிய கடிதங்களை விடவும்
உறைக்குள் இடப்படாத எண்ணங்களே எங்கெங்கும் தெறித்துள்ளது....
தேடிப் பிடித்து புதைத்து விடப் பார்க்கிறேன்
கண்ணீர் வழியோடி மீண்டும் வெளியாகி விடுகிறது -- சட்டென உதிர்க்கும் வார்த்தைகளைப் போல...

அகண்ட வானமெங்கும் இருளாகவே...
மனவெளியாங்கும் தனியாகவே...
நேரம் போவதே தெரியாமலொரு பயணம்...
எல்லையும் தெரியாமல்....

இறந்தும் இறக்காத நினைவுகளை
தோண்டி தோண்டி பார்க்கிறேன்...
ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என....
ஈரமற்ற பாலையாகவே வறண்டு போயுள்ளன அவையும் - ஜன்னல் வெளி
வெறித்தே இருக்கும் என் பார்வையைப் போல...

கவலையெல்லாம் கவிதையாகுமெனில்
கணத்தில் எழுதி விடுவேன்
வடுக்களின் ஈரம் காகிதத்தை கிழித்து விடுமோ என்றே
அஞ்சுகிறேன்...

இலக்கணமற்ற இக் கவிதைக்கு
தலைப்பையும் தவிர்க்கிறேன்.... என்னை தொட
விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....




..................
..........................
.............................
.........................................



7 comments:

உங்கள் கருத்துக்கள்...

தலை வாரிப் பூச்சூடி உன்னை...

Tuesday, September 06, 2011 Anisha Yunus 8 Comments


ஒற்றை சைக்கிள் அது. அதில் ஆஜானுபாகுவாய் எங்கள் தலைமையாசிரியர் திரு ஜெகன்னாதன் அவர்கள் ஏறி அமர்ந்து உடுமலை - பாரதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து வீட்டிற்கோ, வீட்டிலிருந்து பள்ளிக்கோ போகையில் என் முகம் மட்டும் மலரும், அண்டை அயலாரின், ஏன், என்னுடைய உறவினர்களின் கிண்டல்களையும் எதிர்த்து சண்டை போடுவேன்.... ஏனெனில் என் தலைமையாசிரியர் அவர். அவரின் கம்பீரத்திற்கும், மேதைமைக்கும், கணீரென பள்ளி விழாக்களில் அவரின் பேச்சிற்கும், பாட்டிற்கும், ஆளுமைக்கும், இன்று வரையிலும் மாணவி மட்டுமல்ல, விசிறியும் கூட.


தலை வாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை.. (2)
சிலை போல ஏன் அங்கு நின்றாய்?????????/
நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்... (2)
மலைவாழை அல்லவோ கல்வி-மலை வாழை
அல்லவோ பெண் கல்வி.. நீயும் வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.... தலை வாரிப் பூச்சூடி உன்னை....   

(பாடலாசிரியர்: பாரதிதாசன்)
  
இன்று வரையிலும், இதற்கு மேலும் என்னை கற்கவும், கற்றுக் கொடுக்கவும், பயிலும்போது சோர்ந்திடாமலும் காப்பது என் தலைமையாசிரியரின் இந்த பாடலே (எழுதியது அவரல்ல.... எனினும்,அவர் குரலில் மட்டுமே இதை கேட்டுள்ளேன் நான்) 

என்னை உற்சாகமூட்டிய ஒரு குரல், ஒரு இதயம், ஒரு சுடர் விடும் தீபம்...

சார்.. திரு. D. ஜெகன்னாதன் சார்...எங்கிருந்தாலும் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் இறைவன் காத்தருள்வானாக. நேர் வழியில் வைப்பானாக.  ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.

இன்னும் என் நினைவில தங்காமல் போன அத்தனை டீச்சர்களுக்கும், என்றும் நினைவை விட்டு அழியாத எல்லா வகுப்பு + டிப்ளமா + காலேஜ் கணித வாத்தியாரம்மாக்களுக்கும், என் கல்வி ஞானத்திற்கு ஒரு துளி வியர்வையாவது சிந்திய அத்தனை பேருக்கும், இதற்கெல்லாம் முன்னோடியாய் எனக்கு ஞானத்தையும் உணவுடன் சேர்ந்தூட்டிய என் ‘அம்மீ’க்கும், பொருளாலும், மதியாலும், தன் வியர்வையாலும் என்னை எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல் கற்க வைத்த என் ‘அப்பா’ விற்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


.

8 comments:

உங்கள் கருத்துக்கள்...