என்ன நடக்கிறது எகிப்தில்?

Saturday, March 29, 2014 Anisha Yunus 1 Comments


529 முஸ்லிம் சகோதரர்களுக்கு, ஒரு போலீஸ் ஆஃபீசரை கொன்ற காரணம் காட்டி எகிப்தின் மின்யாவிலுள்ள கட்டப்பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்று
தூக்கு தண்டனையை உத்தரவிட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஜனத்திரளை ஒன்றாக கொலை செய்யும் உத்தரவு இது என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.

அதையும் விட கவனிக்கத்தக்கது, வழக்கு நடந்த விதம், ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில், 529 பேருக்காகவும் வாதாடவோ, எதிர்கருத்து வைக்கவோ யாரையும் நியமிக்காமலும், எந்த வித விசாரணையோ, கள ஆய்வோ செய்யாமலும் தீர்ப்பு கூறப்பட்ட விதம்.

இந்த 529 பேரில் பாதிப்பேர் அந்த சம்பவம் நடக்கும்போது ஜெயிலில் இருந்தனர் என்பதும், மீதிப்பேர் எகிப்திலேயே அப்போது இல்லை என்பது எத்தனை சுடும் நிஜமோ அத்தனையே நிஜம், கொல்லப்பட்ட போலீஸ் ஆஃபிசரின் மனைவி அரசு அலுவலகங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் ஃபோன், மெயில் என எல்லா விதத்திலும் தகவல் பரிமாற்றம் செய்து, என் கணவரைக் கொன்றவர்களை எனக்கு நன்றாகத் தெரியும், இந்த 529 பேரில் அவர்களில் ஒருவரும் இல்லை எனப் போராடியது.
பாவம், நீதிதேவதையின் கண்கள் மட்டுமல்ல, காதுகளும் அடைக்கப்பட்டிருந்ததுதான் கொடுமை!

இதில் உச்சகட்ட கொடுமை, 529 பேரில் இருவர் 17 வயதிற்கும் கீழானவர்கள். 17 வயதிற்கும் கீழானவர்களுக்கு செல்லுபடியாகும், சீர்திருத்தப் பள்ளியின் விதி இவர்களுக்கு அமுலாகவில்லை. அது சரி, சிறிய குற்றமா செய்துள்ளார்கள்???? ஆயுதம் தாங்கிய ஒரு போலீஸ் ஆஃபீசரை அனைவரின் கண்களுக்கும் முன் 529 பேரும் சுற்றி வளைத்து கொலை செய்வது என்பது எத்தனை பெரிய அராஜகம்...! இல்லையா???

ஏற்கனவே மிலிட்டரி ஆட்சி ஆரம்பித்த தினத்திலிருந்து 575 சிறுவர்களையும், சிறுமிகளையும் எகிப்து காரணமில்லாமல் கைது செய்துள்ளதும் இன்னும் பலரை கொன்றே ஒழித்ததும் இன்னும் சிலர் “காணாமல் போயிருப்பதும்” எகிப்தில் நடக்கும் ஜனநாயக் ஆட்சிக்கு!!!! ஒரு முன்மாதிரியாகும்.

இன் ஷா அல்லாஹ், இந்த 529 பேரின் மரண தண்டனையை தடுத்து நிறுத்த எகிப்தின் மேதகு முஃப்தி அல்லாம் அவர்களிடம் 10 நாட்கள் கெடு இருக்கின்றது. உலகநாடுகளும், அனைத்து நாடுகளின் முஸ்லிம் உலமாக்களும் இந்தக் கொடுமையான தண்டனைக்கு எதிர்ப்பு காட்டியிருக்கும் இவ்வேளையில் உங்களின் கருத்தும் மிக முக்கியமானது. இந்தத் தளத்தில் உள்ள “பெட்டிஷன்” வசதியைப் பயன்படுத்தியும், பகிர்ந்தும் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.

எதிராளிகளைக் கொன்றே ஆட்சியை நிலை நிறுத்தப் பார்ப்பதும், குர்’ஆன் - நபியவர்களின் வழியில் இஸ்லாமிய ஆட்சியை 60 வருடங்களுக்குப் பின்
சுவாசிக்க ஆரம்பித்த எகிப்தில் மீண்டும் இராணுவ அராஜக ஆட்சி நீடிக்காமல் இருக்க கை கொடுங்கள்.

அராஜகம் செய்பவர்களை விடவும், அராஜகமும், அநிதியும் வெற்றிக்கொடி நாட்டும்போது மௌனமாக இருப்பது ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்படாதது. உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள் இன் ஷா அல்லாஹ்.
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய லின்க் : http://bit.ly/P9RLQE


விரிவாகப் படிக்க:

  • https://www.middleeastmonitor.com/news/africa/10556-systematic-torture-of-children-in-egypt
  • https://www.middleeastmonitor.com/news/africa/10551-former-judge-slams-al-sisi-presidency-bid
  • http://www.nytimes.com/2014/03/28/opinion/529-reasons-to-doubt-egyptian-justice.html?partner=rssnyt&emc=rss&utm_medium=facebook&_r=0
  • http://www.reuters.com/article/2014/03/25/us-egypt-brotherhood-courts-un-idUSBREA2O0NO20140325

1 comment:

  1. அந்த தளத்தில் ஏற்கனவே நான் உறுப்பினர் ..உடனே pettition sign செஞ்சுட்டேன்.

    Angelin

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...