ஒரு கொலைகாரனின் பேட்டி - 2 (உண்மைச் சம்பவம்)

Friday, April 15, 2011 Anisha Yunus 6 Comments

“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.

“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”

...

...

“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்... 
...எனக்கு ஒரு அண்ணன் இருந்தார். நானும் என் அண்ணனும் சிறு வயது முதல் மிகுந்த அன்புடன் வாழ்ந்து வந்தோம். இருவரும் சேர்ந்தே அத்தனை மாபாதகங்களையும் செய்வோம் என்றாலும் எங்களின் பாசப்பிணைப்புக்கு இணையே இல்லாமல் வாழ்ந்திருந்தோம். இருவருக்கும் திருமணம் ஆகியது. எனக்கு இன்று வரை குழந்தை இல்லை. ஆனால் என் அண்ணனுக்கோ இரண்டு மகள்களும் இரு மகன்களுமுண்டு. அவரின் மூத்த பெண்ணின் பெயரே ஹீறா (வைரம்).

ஹீறா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாய் இருந்தாள். எவ்வளவு சீக்கிரம் யாரையும் நேசிக்க ஆரம்பிப்பாளோ அதே நேரம் சில மணித்துளிகளில் எதையும் விட்டுவிடவும் தயங்கமாட்டாள். அவளின் இத்தகைய குணத்தால் நாங்கள் கலவரப்பட்டு அவளை மனோதத்துவ டாக்டர்களிடமும், மாந்திரீகவாதிகளிடமும் கொண்டு செல்லாத நாட்களில்லை. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டோம் என தெரிந்திருந்தும் அவள் 8வது முடித்ததும் மீண்டும் அதற்கு மேல் படிக்க பள்ளியில் விண்ணப்பம் தந்து வந்து விட்டாள். நாங்களெல்லாம் மிகவும் கோபம் செய்ததும், எங்களின் வயலில் வேலை செய்து படிப்பு செலவை சமாளிப்பேன் என கூறிவிட்டாள்.

பள்ளி ஆரம்பமானதும் அருகிலுள்ள ஒரு அக்ரஹாரத்தில் தெரிந்த ஒரு பிராமணர் வீட்டில் அவர் மகளிடம் டியூஷன் படிக்க ஆரம்பித்தாள். அந்த பிராமணரின் மகன் ஒரு கொடியவன். அவன் அவளின் மனதை மயக்கி வீட்டை விட்டு ஓடி வரச்செய்து பரோட்டுக்கு அருகிலுள்ள காட்டில் கொண்டு சென்று விட்டான். அங்கே அவனின் கூட்டாளிகளும் இருந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகள். அங்கே போன பின் ஹீறாவுக்கு தான் தவறு செய்தது புரிந்தது. குடும்பத்தின் மானத்தை கெடுத்து விட்டோமே என்று பரிதவித்தாள். தன் கற்பை காத்துக் கொள்ளவும் சிரத்தையுடன் இருந்தாள். இதன் காரணமாக சதா அழுதுகொண்டிருந்தாள். அந்த குழுவில் இத்ரீஸ்பூரிலிருந்து ஒரு முஸ்லிம் பையனும் இருந்தான். அவளின் அழுகையைக் கண்ட அவன், காரணத்தை கேட்டறிந்தான். அவனிடம் அனைத்து உண்மையையும் அவள் கூறினாள். அவளின் இடைவிடா அழுகையை கண்ட அவனும், தானொரு முஸ்லிமாதலால், ஹீறாவை தங்கையாக ஏற்று அவளையும் அவளின் கற்பையும் காப்பாற்றுவதாக வாக்களித்தான். அவளை அந்த கும்பலிலிருந்து காப்பாற்றுவதாகவும் உறுதி கூறினான்.

பின் அந்த குழுவினரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவன், ஹீறா நிறைய அறிவுடையவள் என்றும் அவளை ஆண்களின் உடையை அணிய வைத்து அவளுக்கும் பயிற்சி தரவேண்டும் என்று கூறினான். பகலில் ஆண் போல முழுக்கை சட்டையும் பேண்ட்டும் அணிந்ததால் பாதுகாப்பாகவும் இருந்தது. இரவினில் அவள் தூங்குமிடத்திற்கு யாரும் வராமலும் பார்த்துக் கொண்டான். சிறிது நாட்களிலேயே குழுவில் அவளின் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் போனது. இரண்டொரு நாட்களில் அவன் குழுவினரிடம் ஹீறாவை இத்ரீஸ்பூரிலிருந்து சில தகவல்கள் பெறவும், சில பொருட்களுக்காகவும் அனுப்பி வைக்கலாம் என்று கூறி திட்டமிட்டு அவளை தன் தம்பியுடன் அனுப்பி வைத்தான். போகும் முன் தன் தம்பியை அழைத்து ஹீறாவை போலீஸிடம் தனியே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டு, பின் திரும்பி வந்து குழுவினரிடம், ஹீறாவின் நடத்தையில் சந்தேகம் வந்து கிராம மக்கள் அவளை போலீஸிடம் தந்துவிட்டதாக கூற சொன்னான். அவனின் தம்பியும் அவ்வாறே செய்தான். ஹீறாவைப் பற்றி ஏற்கனவே எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு எஃப்.ஐ.ஆர் இருந்ததால் ஹீறாவை ஒரு பெண் போலீஸுடன் புதானாவிலுள்ள எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எங்கள் வீட்டிற்கு அவள் வந்துவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிப்போனவளை எப்படி வீட்டினுள் சேர்ப்பது, அவள் சோடை போயிருப்பாளே என்றே தவித்துக் கொண்டிருந்தோம். ஹீறா இதை அறிந்து கொண்டவளாய் எங்களிடம் வந்து, தான் வீட்டை விட்டு ஓடிப்போனது உண்மைதான் எனினும் தன் கற்பு பறி போகவில்லை என்றே சாதித்தாள். மேற்படிப்பு படித்திருந்த எங்களுடைய உறவினர் ஒருவர், அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க யோசனை கூறினார். போகும்போதே, இவள் தூய்மையானவள் என்று தெரிந்தால் வீட்டிற்கு கூட்டி வரலாமென்றும், இல்லையென்றால் எங்கேயாவது வெட்டி வீசிவிட்டு வந்து விடலாம் என்றும் நானும் என் அண்ணனும் முடிவெடுத்துக் கொண்டோம். டாக்டர் அவளை தூய்மையான பெண் என்று கூறியதும் அவளை மீண்டும் வீட்டிற்கே கூட்டி வந்தோம்.

வீட்டிற்கு வந்த பின் தினம் தினம் அவள் அந்த முஸ்லிம் பையனைப்பற்றி பேசுவதும், முஸ்லிம்களை போற்றுவதுமாக இருந்த அவளின் குணம் எங்கள் எல்லோருக்கும் கோபத்தை வரவழைத்தது. அடியும், மிதியுமாக நாட்கள் சென்றது. ஒரு நாள் எங்கள் தெருவினருகில் குடியிருந்த சில முஸ்லிம்களின் புத்தகங்கள் எங்கள் வீட்டினில் இருக்கக்கண்டு எனக்கு ஆத்திரம் பன் மடங்காக உயர்ந்தது. அவளை என் பலம் கொண்ட மட்டும் அடித்து உதைத்து, இனிமேல் இத்தகைய புத்தகங்களை கண்டால் அவளை உயிரோடேயே விட்டு வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் நாங்களறியா வண்ணம் அவளோ முஸ்லிம்களின் புத்தகத்தை படிப்பதையும், அதை ஆராய்வதுமாக இருந்துள்ளாள். நாங்களெல்லாம் அவளுக்கு யாரோ மாந்திரீகம் செய்து விட்டதாகவே எண்ணியிருந்தோம். அவளோ தன்னுடைய பள்ளிக்கூட ஸ்னேகிதியின் மூலம் எங்கள் கிராம மௌலானாவிடம் (மசூதியின் இமாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் இல்லாத நேரம் வீட்டினில் தொழுகையும் செய்து வந்துள்ளாள். அதன்பின் அவளின் செய்கைகளில் நிறைய மாற்றம் வந்துவிட்டிருந்தது. சோகமே வடிவாக சில நாட்கள் இருந்தவள், பின் யாரிடமும் சொல்லாமல் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஃபுலாட்டிலுள்ள ஒரு மௌலானா வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கே சில காலம் இருந்தவள் பின் அஹம்து பாய், பின் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள்
.”

”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???

(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)

" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."

(மீண்டும் அழுகிறார்...)

“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????

அஹ்மது பாய்....

6 comments:

  1. அழகாக செல்கிரது எழுத்து நடை அதை முழுவதும் உள் வாங்கிக்கொள்கிரது மனம் god bless you.

    ReplyDelete
  2. குடும்பம் ,குழந்தைகள் வீட்டு வேலை என்ற busy schedule நடுவே இவ்வளவு
    அழகாக எழுதுவதற்கு big applause .
    ஹீரா அக்கா எங்கே ? ..சீக்கிரம் சொல்லுங்க .
    தொடர்கிறேன்

    ReplyDelete
  3. Salaams 2 u sister Annu.

    How do you put red signal in exact places of episodes while the readers are r(ea)iding at top gear..!?

    //வேறென்ன முடிவெடுத்தார் என்பதை பொறுத்திருந்து காணுங்கள்.//----oh..!?!?!?!

    I pray Almighty to bless you more sister..!

    ReplyDelete
  4. @ராஜவம்சம் பாய்,
    வாழ்த்துக்கு நன்றி. அதில் சொல்லப்பட்ட படியே மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன். அவ்வளவுதான்.
    நன்றி :)

    @ஏஞ்சலின்,
    வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா :)
    ஹீறா அக்காவைப் பற்றி அடுத்த பகுதியில் கண்டிப்பாக தெரிந்துவிடும். தொடருங்கள்...
    நன்றி :)

    @முஹம்மது ஆஷிக் பாய்,
    Wa alaikum as Salam wa rahmathullaah,
    No Bhai. I justify a part on the basis of it's length. Even an interesting novel would be boring if it dint have the proper pause. I just try to keep the attention, so that the message would be taken in depth :)

    Jazakumullaahu Khayr for your du'as brother.
    was Salam,
    நன்றி :)

    ReplyDelete
  5. பகிர்வுக்கு ரொம்ப நன்றி..முதல் பகுதியினை 2வது பகுதி படித்த பிறகு தான் படித்தேன்..நல்லா எழுது இருக்கின்றிங்க அன்னு...

    எங்களுக்காக எழுது இருப்பது ரொம்ப நன்றி...

    ReplyDelete
  6. thanks for sharing,annu continue..very interesting..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...