வியர்க்காத மனம்...

Wednesday, January 13, 2016 Anisha Yunus 0 Comments


.
கனவுகளற்ற விடியல்
இரவுகளற்ற இருட்டு

பசிக்காத உடல்
வியர்க்காத மனம்

தகிக்காத சொல்
குளிராத அண்மை

முடிவுறா முற்றுப்புள்ளிகள்
தொடர்கின்ற பயணம்

யாசிக்காத யாசகம்
நிரம்பிடாத கையோடு

இன்னும்
தேடலற்ற தொலைதலையும்
தொலையாத தூரங்களையும்

நேசித்துக்கொண்டே
நடக்கின்றேன்....

பெயரற்ற பூக்கள்
பூத்திடும் கிளைகளில்

வெப்பக்காற்றையும்
வேர் பிடிக்கக் கொஞ்சம்
பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....

#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...