அம்மாக்கள் அலுவலகம் போகத்தான் வேண்டுமா/??

Thursday, January 14, 2016 Anisha Yunus 0 Comments

//விக்கிக்கு மட்டும் எல்லாம் புரிகிற வயதாக இருந்தால், நாங்கள் வேலைக்குப் போகாவிட்டால் உன்னுடைய எதிர்காலத்துக்கு எப்படிச் செலவு செய்ய முடியும்/? என்று கேட்க முடியும் என்று பேசி ஆறுதல் அடைவோம். ஆனால் ஆழ் மனதில் ஏதோ செய்யக்கூடாததைச் செய்வதைப் போல ஒரு கூற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. என்னுடைய மகனுடன் நான் அன்றாடம் செலவிடும் நேரத்தையும், என்னுடைய மாமியார் அல்லது என் அம்மா செலவிடும் நேரத்தையும் கணக்கிட்டுப் பார்ப்பேன்.//

பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமா என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை தமிழில் இன்று வந்துள்ளது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

பெண்கள் உழைப்பாளிகளாக, தொழிலதிபர்களாக, விஞ்ஞானிகளாக, ஆசிரியர்களாக, கல்பனா சாவ்லாவாக, பி.டி. உஷாக்களாக, பர்கா தத்தாக, அருந்ததி ராயாக , சாவித்ரி பாய் புலேவாக உருவாவதை முழு மனதார வரவேற்கும் அதே நேரத்தில் கிளார்க் வேலைகளுக்கு பலவித பெயர் சூட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளும் கவர்ச்சி விளம்பரங்களோடு கடை விரித்துள்ள இந்த 24*7 கணிணி வேலைகளுக்கு எதிர்க்கின்றேன்.

ஆண் பெண் என அனைவரையும் உடலால், மனதால், உணர்ச்சிகளால் உளைச்சலுக்கு ஆளாக்கும், இந்த மண்ணின் கலாச்சாரத்திற்கு பொருந்தாத வேலை நேர/செயல்பாட்டு விதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் கூலி வேலைகளுக்கு என் எதிர்ப்பு உண்டு. பெரும் பெரும் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்தும் இந்த உளைச்சலாலேயே வேலைகளை உதறித் தள்ளிய அனுபவத்தால் இந்த என் கருத்தை பதிக்கின்றேன். நவீன குமாஸ்தா வேலைகள் பெண்களுக்கு உகந்ததல்ல. குடும்பத்தைச் சீரழிக்கும் இந்த வேலைகளை உதறித் தள்ளி, சுயமாக ஒரு அடையாளத்தை நிறுவ சிந்தியுங்கள்.

கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு. தக்கவோர் முடிவை ஆசிரியர் பதிக்காவிட்டாலும், கட்டுரையெங்கும் நிரம்பியிருக்கும் வலியே ஒரு பதிலாக உள்ளது. ஆங்கிலத்தில் இணையத்தில் உள்ளது. ( http://bit.ly/1Ztr1YH ). 



0 comments:

உங்கள் கருத்துக்கள்...