கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்படம்

Tuesday, January 12, 2016 Anisha Yunus 0 Comments

சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.
உலகமே கொண்டாடும் கணித மேதை இராமானுஜம் கூட தன்னுடைய பள்ளிப்படிப்பு முதல் இளங்கலை வரை மற்ற எல்லா படிப்புக்களிலும் தோல்வியை மட்டுமே கண்டவர். இதனைப் படிக்கும்போது இன்றைக்கு ஆங்கில வழிக்கல்வி போல, அன்றைக்கிருந்த தெலுங்கு வழிக்கல்விதான் இதற்குக் காரணமாக இருந்திருக்குமோ என்னும் கேள்வி எழாமல் இல்லை. கேம்பிரிட்ஜில் ஆய்வுக்கல்வியின் போதும் ஜி.எச்.ஹார்டி அவருக்கு நண்பனாக இருந்ததை விட ஆசானாக அமைந்ததே ராமானுஜத்தை மெருகேற்ற உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவனித்துப் பாருங்கள், ஜி.எச்.ஹார்டிக்கு எந்த வயதிலும் தாய்மொழிவழி கற்பதில் தடை இருந்ததில்லை. நம் தாய்மொழியைப் பற்றிய நம் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் அலசிப் பாருங்கள்.
ஆங்கிலவழிக்கல்வி சாதகமானதா பாதகமானதா எனப் பல கோணங்களில் ஆராயும் இந்த ஆவணம், ஒரு பக்கத்தையும் புரட்டாமல் விடவில்லை. உதாரணத்திற்கு, 1947இல் சுதந்திர இந்தியாவின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தாராசந்த் குழுவின் பரிந்துரையும் சரி, 1948இல் பல்கலைக்கழக கல்வியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணனின் குழுவின் பரிந்துரையும் சரி உடனடியாக இந்தியாவில் கல்வியனைத்தும் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தின, அதன் பின் கடந்த 2005 ...
-- பதிவை முழுதும் படித்திட தூது ஆன்லைனிற்கு செல்லவும். முதன் முறையாக என், இந்தப் பதிவு, இணையத்தில்வந்துள்ளது. நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...