அதாகப்பட்டதென்னவெனில்......

Thursday, August 27, 2015 Anisha Yunus 2 Comments

தமிழ்நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து எழுதப்பட்ட இரு நூல்களுக்கு தமிழக அரசு தடை போட்டுள்ளது. அதன் அசல், நகல், மூலாதாரங்கள் என எல்லாவற்றையும் அரசின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.
நூல் தலைப்புக்கள் ‘வேந்தர் குலத்தின் பிறப்பிடம் எது???’ மற்றும் ‘மதுரை வீரனின் உண்மை வரலாறு’ -- நூல்கள் பதிப்பிக்கப்பட்டால் சமூக நல்லிணக்கம் கெட்டுப்போய்விடுமாம்...
=========================
அரசியல் துறை சார்ந்த அத்தனை பாட வகுப்புக்களையும் சென்னை பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்ததோடல்லாமல் அந்த துறை சார்ந்த அத்தனை மாணவ மாணவிகளையும் கேம்பஸை விட்டு வெளியேறச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளது... வேற்று பிராந்திய, பிறநாடுகளிலிருந்து வந்துள்ள மாணாக்கர்கள் உட்பட.... அபயமில்லை... எங்கே செல்ல என்று தவிப்பவர்களிடம் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஒப்புதல் வாக்குமூலம் எழுதித் தரச்சொல்லி அடக்குமுறையை ஏவியுள்ளது. பேராசிரியர் மணிவண்ணன் மாணவர்களின் மதுவிலக்குப் போராட்டத்திற்கு ஆதரவு தந்ததுதான் பெரிய தவறாம்...
==========================
கழிப்பிட வசதிகள் மற்றும் சுகாதார ஆய்வில் தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிக்கூடங்கள் மிகவும் பின்னடைவில் இருக்கின்றன. 50 சதவிகிதத்திற்கும் மேல் இந்த அவலநிலை. கேந்திரிய வித்யாலயாக்கள், DAV பள்ளிக்கூடங்கள் உட்பட இதுதான் நிலையாம்...
========================
கோவை. பட்டப்பகலில் திருச்சி ரோடில் 8-10 குண்டர்கள், கத்தி, வாள், துப்பாக்கி சகிதம் சண்டை. ஒருவர் சாவு. இருவர் காயம். மீதி எஸ்கேப்பு. அத்தினி பேரும் பெயில்ல வெளில இருப்பவிங்களாம்....
=========================
‪#‎வெளங்கிடும்‬.
இதுக்குத்தான் நான் நியூஸ் பேப்பரே படிக்காம இருந்தேன் இவ்ளோ நாளு.... ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா....

2 comments:

  1. அடடா. ... நானும்தான் படிக்காமல் இருந்தேன்,
    இப்ப உங்க இந்த பதிவைப் படிச்சுத் தொலச்சிட்டேனே!!?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...