ரயில் பெட்டி - 002 (007 மாதிரி ஒரு ரேஞ்சுக்கு போகும்னுதேன் :)

Thursday, March 01, 2012 Anisha Yunus 7 Comments



தினம் தினம் சமைக்க ஒன்னு இந்தியாவுக்கு அரை மணி நேரம் ஃபோன் போட்டு குறிப்பு எழுதறது இல்லைன்னா எல்லார் ப்லாகையும் தோண்டி துருவி சமைக்கிறதுன்னு முக்காவாசிப்பேர் (சரிப்பா... நானும்தேன்.... அதுக்கு ஏன் கோவிச்சுக்கிறீங்???) இருக்கிற காலத்துல, வேலைக்கும் போயிட்டு, கிட்டத்தட்ட 4 ப்லாக் எழுதி, ஃபோட்டொ புடிச்சு போட்டு, அதுக்கு அலங்கரிக்க, பரபரப்பான நேரத்திலும் குறிப்பு எழுதி வைக்கன்னு மெனக்கெட்ட, மெனக்கெடும் எல்லோருக்கும் என் வயிறார்ந்த (ஹி ஹி ஹி அனுபவம்!!) வாழ்த்துக்கள். அதிலும், ஆல் இந்தியா லெவலில் ஒரிஜினலாய் குறிப்பு குடுத்து முதல் இரண்டு பரிசையும் பெற்றிருக்கும் என் அன்பார்ந்த ஜலீலாக்காவுக்கு வாழ்த்தோ வாழ்த்து.... அண்மையில் அதிகம் சந்தோஷப்பட்ட விஷயம் இதுதான்க்கா.... பக்கத்தில இருந்திருந்தால் அதற்கும் ஒரு பார்ட்டி குடுங்கன்னு கதவை தட்டியிருக்கலாம்... ஹ்ம்ம்... கொடுப்பினை இல்லை :(

அதே நேரம் நீண்ண்ண்ண்ண்ட நெடுங்காலமாக இல்லாவிட்டாலும் சிறிது காலமாகவே நட்பில் ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஹுஸைனம்மா அக்காவை.................யக்க்க்க்க்க்க்க்காஆஆஆஆ.... இவ்ளோ நாள் பழகியும் ஒரு சமையல் குறிப்பு கூட குடுக்காமல் ஏமாற்றியதால் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.

(ஏனுங்.... ஷார்ஜாவிலிருந்து கரண்டி வீசுனா அமெரிக்கா வரை வருமோ???)

--------------------------------------

காலைல 5 மணிக்கு (ஹி ஹி, அதோட ஒன்றரை மணி நேரம் சேர்த்துக்குங்க...) எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சாலும், இரவு 11 மணிக்குள் தூங்க முடிவதில்லை.... கார்ப்பரேட் வேலை பளு, வீட்டு வேலை பளு, என்னை தூக்கிக்கோ என மாலை வந்ததும் கால்கள் பின்னேயே சுற்றும் இரண்டு சுட்டிகளின் பளு என எல்லாம் சேர்ந்து பதிவுலகம் பக்கம் வர விடாமலெ செய்கின்றன. இப்பவும். மதிய லஞ்சில் உட்கார்ந்து வேஃபில் இரண்டு சாப்பிட்டுக் கொண்டே எழுதுகின்றேன். அதுவுமன்றி அண்மைக்காலமாக புதிது புதிதாய் உடல்நலனில் குறைகளின் பேரை சொல்லி கிட்டத்தட்ட தினம் தினம் ஊசி போட வேண்டிய நிலைக்கு போய் இப்பொழுதுதான் மீண்டு வந்து கொண்டுள்ளேன் அதுவும் தாமத பதிவுக்கு காரணம். (ஸ்ஸ்ஸ்ஸ்.... சோடா எங்கப்பா???)

---------------------------------------------

உடல் சோர்வு, அதிக தூக்கம், எதிலும் பிடிப்பில்லாமை (இப்படி ஒரு வார்த்தை இருக்கா??) அடிக்கடி காய்ச்சல், உடல் தளர்வு எல்லாம் இருந்தால், உங்கள் வீட்டு பெண்ணை முதலில் தைராய்டு / விடமின் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். தைராய்டு குறையை கண்டுக்காம விட்டா குழந்தைப்பேறின்மை முதற்கொண்டு, கோமா ஸ்டேஜில் போட்டுத் தள்ளும் நிலை வரை வரலாம். நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்க Google நாடாம டாக்டரை நாடுங்க சகோக்களே...

#காலம் கடந்த ஞானம் (அமெரிக்காவுல எங்கயுமே போதி மரம் ஒன்னு காணமே....)
------------------------------

இந்தியர்களின் வீட்டை குறி வைத்து, திருடுவதைப் பற்றி ஹுஸைனம்மாக்கா எழுதியிருந்தாங்க. உண்மைதான். இங்கே எஃப்.பி.ஐ யிலிருந்து கசிந்த ஒரு உண்மை என்னவெனில், இந்த அலங்காரங்கள் எதுவுமில்லாவிட்டாலும், 22 கேரட் இருப்பதை கண்டுபிடிக்கும் கையடக்க ரேடார்கள் இங்கு கிடைப்பதும் ஒரு காரணம். என்ன செய்ய, தொழில்நுட்பத்தை சரியாக உபயோகிக்க ஒரு க்ரூப்பாவது இருக்கோணுமில்லை. (இது நான் இதுவரை விசாரிக்காத விஷயமே.... யாருக்காவது விஷயம் தெரிஞ்சா சொல்லுங்க....)

---------------------------------------

அங்கங்க கரண்ட் கட் பத்தி தீவிரமா புயல் பறக்க பதிவுகள் இருந்தாலும், அப்பிடி எழுதறவங்க வீட்டுல கரண்ட் இருந்தா இரவு 11 மணிக்கு உட்கார்ந்து முகப்புத்தகத்துல (மரண மொக்கை!!!) கவித எழுதறாங்கப்பா.... அப்ப என்ன அர்த்தம்??? 

#ஆமி, சரிதானே??? ...........ஹி ஹி .....  :))

--------------------------------

ஜுஜ்ஜூ சில சமயம் கூப்பிட்டால் கூட திரும்பாம ஏதேனும் விளையாண்டு கொண்டிருந்தால், அவனிடம் கோபமாய் ஏன்டா திரும்பலை என்பேன். அவனும், சாரி அம்மீ.... எதுக்கு கூப்பிட்டீங்க என்பான், எனக்கிருக்கும் கோபத்தில், ம்ம்ம்ம்.... பருப்பில உப்பிலைன்னு சொன்னேன் என்பேன்..... அதன் எஃபெக்ட்டாக இப்பவெல்லாம் அவன் நான் கூப்பிடும்போதெல்லாம் பருப்புக்கு உப்பில்லையா என கேட்கிறான்......

#That doesn't mean I am an Angry Bird................!!!!!!!!!!!!!
--------------------------------------------------

அண்மையில் வாழ்வின் இரண்டாவது தடவையாய் பாலகுமாரனின் நாவல் ஒன்று படித்தேன். அதில் மனிதர் அப்பட்டமாய் (ஆண்/பெண் பற்றிய‌)  உண்மைகளை போட்டுடைக்கிறார். சில சமயம் சர்கஸ்டிக்காக தோன்றினாலும், பல சமயம் ஆமாம் போட வைக்கிறது. அதில் ஒன்று.

//பெண்ணொருத்திக்கு...தன் துக்கம் பற்றி, முகவாயில் கை வைத்து வாசல் பக்கம் நின்று பக்கத்து வீட்டுப் பெண் விசாரிப்புக்கு நொந்து கொண்டு பதில் சொல்வதே பெரிய விடுதலை. அப்படி யாரும் கேட்கவில்லையெனில் இதைக் கேட்கக்கூட நாதியத்துப் போயிட்டேனே என தானே புலம்பிக்கொள்வது சிறிய விடுதலை.//

ஹி ஹி ஹி.... எப்படி சார்??????
------------------------------------------------

அடுத்த பதிவு எப்ப்போன்னு எல்லாரும் அழுவக்கூடாது.... ஆமா....  அதெல்லாம் தானா வர்ற விஷயம்... என்ன நான் சொல்றது :))

:))


.

7 comments:

உங்கள் கருத்துக்கள்...