இன்னும் இந்த மௌனம் ஏன்??

Sunday, November 21, 2010 Anisha Yunus 12 Comments





ஒரு சின்ன இடைவெளிக்கு நான் தயாரான பின்னரும் இந்த காணொளியை பார்த்த பின் அதை பதிவிட முடியாமல் இருக்க முடியவில்லை. நாம் அனைவரும் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று மட்டுமே. இத்தகைய அமைப்புகளுக்கு எப்படி இயன்ற வரை கை கொடுபப்து என்றும், நாம் வாழும் சமூகத்தில் இவர்களை ஒரு ‘ஐட்டமாய்’ எண்ணாமல் நம் ட்சகோதரிக்கு ஏற்பட்டால் எப்படி உடன் நிற்போமோ அதே போல் நிற்க முயல்வதுமே ஆகும். இனி, உங்கள் முடிவிற்கு.

அமைப்பை தொடர்பு கொள்ள: http://www.prajwalaindia.com/howucan-voluntarily.html

12 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்..!!

Tuesday, November 16, 2010 Anisha Yunus 10 Comments



எல்லோருக்கும் எங்களின் இதயம் கனிந்த ஈதுல் அதா பெருநாள் நல்வாழ்த்துக்கள். என் அம்மா அப்பாவும் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில தினங்களில் அவர்களின் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பி விடுவர். இச்சமயம் நானும் ஒரு சிறு இடைவேளைக்கு தயாராகிறேன். இடைவேளைக்கு பின் மீண்டும் தொடர்வோம், பதிவையும், பின்னூட்டங்களையும். :)



.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

குழந்தைகள் பத்திரம்!! (பகுதி மூன்று)

Wednesday, November 10, 2010 Anisha Yunus 10 Comments


3. உளவியல் குறைபாடுகள்

இந்த பதிவில் குழந்தைவதைகளுக்கு ஆளான, சிறுவயதிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் மாறுபாட்டினை பார்க்க இருக்கின்றோம்.

a. தனித்தன்மையில் தீவிரம்:
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் பாதிப்பின் பின் வெகுவாக மாறுபடுகிறது. அவர்களின் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த விஷய‌ங்களில் ஒரு தீவிரத்தன்மை காணப்படுவது ஒரு நெருக்கடி தரும் விஷயமாகும். இந்த மாற்றமானது சமூகம் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்விலும் நிறைய மாற்றங்களை தருகிறது. இப்படி அசாதாரண குணங்களை கொண்ட குழந்தைகள் எல்லாருமே பலாத்காரம் செய்யப்பட்டவர்களில்லை. அதே சமயம், பலாத்காரத்திற்கு ஆளான் குழந்தைகளால் சாதாரணமாய் வாழ்வை ரசிக்க முடியாது என்பதும் உண்மை, உதாரணமாக, அதிகமான சுத்தத்துடன் இருக்க பார்ப்பது, தன் முடிவையே அனைவரும் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பது, அல்லது எதை பற்றியுமே அக்கறையில்லாமல் இருப்பது, அதிகமாக, அடிக்கடி தன் யோசனைகளிலும், செயல்களிலும் மாறுபடுவது, இல்லையென்றால், தாய் அல்லது தந்தை போன்ற யாரிடமாவது சிறு குழந்தை போல மிகவும் டிபென்டென்ட் ஆக இருப்பது அல்லது மிக மிக அதிகமாக சுதந்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற செயல்களைக் கொண்டு அறியலாம். இதிலுள்ள எல்லாமே நாமும் செய்வதுதான் என்றாலும், இவர்கள் விஷயத்தில் ஒரு தீவிரமும், கடுமையும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களால் ஒரு உறவையும் பேணுவது மிக கடினமாகி விடும். ஒன்று, அவர்கள் எல்லாரையும் விட்டு தனித்திருக்கவே பிரியப்படுவார்கள், இல்லையென்றால் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதே அவர்களால் சில மணித்துளிகளுக்கு கூட முடியாது, இதனாலேயே, பல உறவுகளை தொலைத்தும் இருப்பார்கள்.

ஆன்மீக குடும்பத்தை சார்ந்தவராகவோ, அல்லது சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவோ இருந்தால் அதிலும் தீவிரத்தை காணலாம். ஒன்று ஆன்மீகத்தில் ஊறிப் போய் இருக்கலாம், இல்லையென்றால், எந்த குறிக்கோளும் இல்லாமலே, சரியான விளக்கம் இல்லாமலே நாத்திகவாதியும் ஆகலாம். இவை இரண்டிலும் உச்சத்திலுள்ளவர்கள் இப்படி அடிபட்டவர்களோ என எடுத்துக் கொள்ளக்கூடாது.

a.1) அவர்கள் நாடியபோது, தேடியபோது கிடைக்காத ஆறுதலால் இறைவனை குறை சொல்பவராக, மதிப்பில்லாமல் பேசக்கூடியவராக, மாறலாம். செயல்களின் மூலமும் இறைவன் மேல் தனக்கிருக்கும் கோபத்தை காட்ட முயற்சிக்கலாம். அவந‌ம்பிக்கை என்பதை கம்மியாகவும், வெறுப்பு என்பதை அதிகமாகவுமே காட்ட முயற்சிப்பர்.


a.2) இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆன்மீகத்தில் மிக மிக அதிகம் திளைப்பவராய், அதிலேயே மூழ்கியவராகவும் இருப்பார்கள்.

தேன்மொழி, அவளின் மாமாவால் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஆளானாள். அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் எனினும், இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பவள். இந்த கொடுஞ்செயலினால் அவள் தனக்கான பாதுகாப்பாய் தன் வாழ்வை மாற்றிக்கொண்டாள். எப்படி? ஆன்மீகத்தின் மூலம் தன்னுடைய உடம்பையே வருத்தி வருத்தி ஆறுதல் தேடுவது. அதிகமாக இரவு கண்விழித்து இறைவனை பிரார்த்தித்தல், தூக்கமில்லாமல் அவதிபட்டாலும் சரி. விரதம், நோன்பு, என அதிகமான நாட்கள் உண்ணாமலிருத்தல். இன்னும் சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும் வராமலே நாட்கணக்கில் இருத்தல், இதன் மூலம் தன்னுடலை வருத்திக்கொள்வதால் ஒரு சந்தோஷம், ஒரு நிம்மதி அவளுக்கு கிடைக்கிறது. எத்தனை கடுமையாக ஒரு செயலை செய்கிறாளோ அதன் பாதிப்பை அத்தனை அதிகமாகவே அவள் ரசிக்க ஆரம்பித்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்ததாக எண்ணினாள். அவள் குழந்தைகளிடத்திலும் அதே கண்டிப்புடன் வாழ்கிறாள். வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரம் சட்டங்களை போட்டு, ஒரு தாயாய் இல்லாமல் ஒரு சந்தேகத்தின் ஊற்றாய்..!! இப்பொழுது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சில வேளைகளில் அவளால் அவளையே தடுக்க முடியாமல் போகிறது!!

தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.

லிஷாவின் வாழ்வும் அபப்டியே. சிறு வயதில், ஒன்று இரண்டு என்றில்லாமல் பல முறை அவளின் சித்தப்பா மகனால் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள், கொடுமை என்னவெனில், அவர்களின் வீடு அருகருகே இருந்ததுதான். அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார். இதுவே அந்த 'அண்ணனி'ற்கு வசதியாய் போனது இன்னமும். இப்பொழுது லிஷாவிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அவளால் அந்த வடுக்களிலிருந்து மீள முடியவில்லை. இதன் பலனாய் சில சமயம் இறைவ‌னே கதி என்பது போல் கிட்டத்தட்ட துறவறம் பூண்டவள் போல் வாழ்ந்தால், இன்னும் சில சமயங்களில் குழந்தைகள் பசித்து அழுதாலும், தன‌க்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறாள். இன்னும் பலர் இப்படி வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் உள்ளனர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பல பேர் வாழ்வில் திருமணம் என்பது பெரும் கொடுமையாகவே மாறியுள்ளாது இதனால். இதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

கடத்தல், கொலை, என்கவுண்டர், நீதி...??

Tuesday, November 09, 2010 Anisha Yunus 6 Comments

இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)


தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம்.  இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!

இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???

நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.

6 comments:

உங்கள் கருத்துக்கள்...

மீண்டும் குழந்தைவதை...

Monday, November 01, 2010 Anisha Yunus 24 Comments


news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327

கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.


------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------


பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.

குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.

அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.

நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.

இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

2 குழந்தைகள் கொலை: கோவை சிறுவன் உடல் மீட்பு

பணம் பறிக்க குழந்தைகளை கடத்தி கொன்றேன்: வேன் டிரைவர் வாக்குமூலம்

கோவையில் கொடூரம்: ஜவுளி கடை அதிபர் மகன்-மகள் கடத்தி கொலை-வேன் ஓட்டுநர் கைது


 
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????




24 comments:

உங்கள் கருத்துக்கள்...