டாக்டர் இஸ்ரார் அஹ்மத் என்னும் ஆளுமை -1

Saturday, June 27, 2015 Anisha Yunus 0 Comments

பொதுவாகவே ரமழானில் என் வாசிப்பு வெகுவாக குறைந்து போய் விடும். மற்ற நாட்களில் விடுபட்ட இபாதத்துக்களையும், இன்னும் செய்ய விரும்பும், அடைய விரும்பும் இலக்குகளுக்காகவும் இபாதத்துக்களுக்காக மட்டுமே என இந்த மாதத்தினை தேர்வு செய்வது வழக்கம். எனினும் இந்த வருடம், ஒவ்வொரு முறையும் தொலைபேசும்போது இன்று என்ன வாசித்தீர்கள் என்னும் Lafees Shaheed இன் கேள்விக்கு பதில் சொல்லாமல் கடத்துவது மிக அசௌகரியமாக இருந்ததால், வேறு வழியே இன்றி  இந்த மாதத்திலும் வாசிப்பிற்கென கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கிறேன்.

தய்யிப்.

 எனக்கு டாக்டர் இஸ்ரார் அஹ்மத் என்னும் ஆளுமையின் பரிச்சயம் 2008க்களில் ஆரம்பித்தது. அப்பொழுது அதிக அளவு பாகிஸ்தானி நட்பு வட்டம் இருந்தது ஒரு காரணம், ICNA Sisters wingஇல் இருந்த ஈடுபாடு இன்னொரு காரணம். இதனால் டாக்டர் இஸ்ராரின் குர்’ஆன் விளக்க உரைகள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என் கணிணியில். அவருடைய பின்புலம்

அறிவியலும், மருத்துவமும் என்பதால், ஆங்கிலமும் தூய உருதூவும் கலந்து அவர் தரும் வியாக்கியானங்கள், விளக்கங்கள் அனைத்தும், மறுத்து கேள்வி எழுப்ப முடியாதவையாய் இருக்கும். செய்து கொண்டிருக்கும் வேலையை போட்டு விட்டு சில சமயம் அதனை கவனமாக செவிமடுக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் சரிபார்க்கவே நேரம் போய்விடும்.


அன்னாரின் target, elite and educated families of Pakisthan என்றிருந்ததாலோ என்னவோ, அவரின் உரைகள் எல்லாம் தகவல் சார்ந்த அடித்தளத்தை விடவும், மனித, சமூக உளவியல், சார்ந்த அடித்தளத்தை ஒற்றியே அமைந்திருக்கும். அவரின் குரலும், உடல்மொழியும், எடுத்து வைக்கும் வாதங்களும் என எல்லாமே அவரை ஓர் கர்ஜிக்கும் ஆளுமையாகத்தான் மக்களுக்குக் காட்டியது. அதிக அளவு விமர்சனத்துக்கும் உள்ளான உரைகள் அவருடையது.
அவரின் அதீத வேகம், விவேகம், பல்துறைப் புலமை இவற்றின் காரணமாகவே இந்த சமூகத்தின் பெரும்பிணியான ‘புறக்கணிப்பு’ என்னும் அங்கீகாரம் இவருக்கும் தரப்பட்டதோ என எண்ண வைக்கும். ஆம், பின்னே உர்தூவில் அவர் எழுதிய 64 நூற்களில் 10 புத்தகங்கள் கூட பிறமொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது??? 9 புத்தகங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் உள்ளன. அதில் ஒன்று, ‘The responsibilities muslim owe to the quran'. அதனின் தமிழாக்கமே இந்தப் பதிவின் நோக்கம்.
க்ஹைர், புத்தகத்திற்குப் போகும் முன் இன்னும் கொஞ்சம் பேச வேண்டும் டாக்டர் இஸ்ரார் அவர்களைப் பற்றி. எனக்குத் தெரிந்து அன்னாரைப் பற்றி இன்னும் தமிழில் ஒரு சிறு அறிமுகப் புத்தகம் கூட இல்லை. அவர் இறந்து ஐந்து வருடங்கள்தானே ஆகிறது அதற்குள்ளாக கிடைக்குமா என்கிறீர்களா.... அதுவும் சரிதான்.
=====================
டாக்டர் இஸ்ரார் இன்றைய இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஹிஸார் என்னும் சிற்றூரில் 1932இல் பிறந்தார். வளர்ந்ததே இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்காலத்தில் எனும்போது அதன் தாக்கம், அந்தக் காலத்தில் ஜின்னாவால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் லீக்கின் தாக்கம் என எல்லாமே மிக அதிகமாகவே அவரை பாதித்திருந்தது, பிற்காலத்தில் ஒரு இராணுவ கட்டமைப்பில் தன்ஸீமே இஸ்லாமினை உருவாக்கும் வரையிலும் கூட.
அடிப்படையில் ஆங்கில மருத்துவராக பட்டம் பெற்றிருப்பினும், 1965இல் லாஹூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இஸ்லாமியக் கல்வியில் பட்டம் பெற்றார். மௌலானா அபுல் அலா மௌதூதியின் குர்’ஆன் விளக்கவுரைகளே இஸ்லாமியப் பணியில் டாக்டர் இஸ்ரார் காலடி எடுத்து வைக்கக் காரணமாயிருந்தது என்றால் அது மிகையல்ல. ஒரு மாணவராக டாக்டர் இஸ்ரார் அவர்கள் யாரிடமுமே முறையான மார்க்கக் கல்வி கற்கவில்லை எனினும், அல்லாமா இக்பால், டாக்டர் முஹம்மத் ரஃபியுத்தீன், மௌலானா ஹமீதுத்தீன் ஃபராஹி, மௌலானா அமீன் அஹ்ஸான் இஸ்லாஹி என மிக நீளமான பட்டியல் உண்டு, இவருக்குள் பாரிய தாக்கங்களை ஏற்படுத்திய ஆளுமைகள் என. மௌலானா அபுல் கலாம் ஆஸாதும், முஹம்மத் அலி ஜின்னாஹ்வும் அவர்களில் அடக்கமே.

மௌலானா மௌதூதியை தன்னுடைய மானசீக குருவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரகடனப்படுத்திய அதே வேளையில் அவரின் எல்லா கருத்துக்களுடனும், மார்க்க நிலைப்பாடுகளுடனும் டாக்டர் இஸ்ரார் ஒத்துப் போகவில்லை என்பதும் மிக உண்மை. மௌலானா மௌதூதியால் ஆரம்பிக்கப்பட்ட ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்துக்கும், டாக்டர் இஸ்ரார் அஹ்மதால் ஆரம்பிக்கப்பட்ட தன்ஸீமே இஸ்லாமிக்கும் இடையில் உள்ள செயல்பாடு ரீதியான, கொள்கை ரீதியான, கட்டமைப்பு ரீதியான வித்தியாசங்களே போதுமானவை அவர்களின் இருவரின் கோணங்களையும் அறிய.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், முஸ்லிம் உம்மத்தின் சீரமைப்பிற்கும், புனர் நிர்மாணத்திற்கும் அரசியல் அங்கீகாரமும், பொது அரசியலில் பங்களிப்பும் அவசியம் என்பது மௌலானா மௌதூதியின் வாதம். முஸ்லிம் சமூகம் தான் இழந்த அங்கீகாரத்தை, அதிகாரத்தை திரும்பப் பெற, ஒவ்வொரு தனி மனிதனின் ஈமானையும் மீளாய்வு செய்வதும், தனி மனித இஸ்லாத்தில் பூரணம் பெற விழைவதுமே அவசியம் என்பது டாக்டர் இஸ்ராரின் வாதம். ஆனால் மாணவப்பருவத்தில் டாக்டர் இஸ்ராரும் ‘இஸ்லாமிய தேசியம்’ என்றொரு கொள்கையைத் தாங்கிப் பிடித்திருந்தார் என்பதையும், வயது/காலம்/சூழல் போன்ற காரணிகளின் பக்குவத்தினால் அரசியலில் கால் வைக்கும் முன் சுயசீர்திருத்தமே முக்கியம் என்னும் கொள்கைக்கு மாறிவிட்டிருந்தார் என்பதையும் கவனம் கொள்ளவேண்டும். இந்த மாற்றங்களைப் பற்றியும் உள்ளதை உள்ளபடி டாக்டர் இஸ்ரார் அவர்கள் பல கேள்வி-பதில் பேட்டிகளிலும் கூறியதுண்டு. (Please correct me here, if am wrong.)

இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் வகிபாகத்தை வைத்தும், பெண்களைப் பற்றிய மார்க்கப் பார்வையிலும் மிகப் பழைமைவாத கருத்துக்களே டாக்டர் இஸ்ரார் அஹ்மதுடையது. ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் தன்ஸீமே இஸ்லாமி வெறுமனே ஆண்களுக்கான அமைப்பாக இருந்தது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. (இப்போ இருக்கும் எல்லா இஸ்லாமிய அமைப்புக்களிலும் மட்டும், முஸ்லிம்களாலான அரசியல் கட்சிகளிலும் மட்டும் பெண்களுக்கான அங்கீகாரம் என்னவாய் இருக்கின்றது என ஆரும் குறுக்குக் கேள்வி கேட்கக்கூடாது..... சொல்லிட்டேன்!!!) எனினும் எங்கும் எப்போதும் தன்னுடைய இஸ்லாமிய அறிவுத்தேடலுக்கு விதை மௌலானா மௌதூதியின் எழுத்துக்களே என்பதை அங்கீகரிக்க டாக்டர் இஸ்ரார் அவர்கள் எப்போதும் தவறியதில்லை.

சமூக ரீதியாக, தப்லீக் ஜமா’அத்தின் அங்கத்தினராகத்தான் அவரின் பணி ஆரம்பித்தது என்றாலுங்கூட பிற்பாடு ஜமா’அத்தே இஸ்லாமி ஹிந்தில் இருந்து கருத்து மோதலின் காரணமாய் பிரிந்து தன்ஸீமே இஸ்லாமி என்னும் அமைப்பை நிறுவியது. அதே காரணத்தை முன் வைத்து கிலாஃபத்தினை மீட்டெடுப்போம் என தஹ்ரீக்கே கிலாஃபத் என இன்னுமோர் அமைப்பை உருவாக்கியது என டாக்டர் சாஹிபின் சமூகப் பங்களிப்புக்கள் அளப்பரியது. Controversyக்களும்..!!

வானொலியையும், தொலைக்காட்சியையும் இஸ்லாமிய விளக்கவுரைகளுக்கான ஒரு சாதனைக் களமாய் மாற்றிய பெருமையும் டாக்டர் இஸ்ரார் அஹ்மதிற்கே உண்டு. பல்வேறு ஒலி/ஒளித் தொடர்கள் மட்டுமன்றி புகழ் வாய்ந்த ஆங்கில, உர்தூ பத்திரிக்கைக்களிலும், நாளிதழ்களிலும் பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகளும் எழுதிய பின் சொந்தமாய் பத்திரிக்கையும் நடத்தியுள்ளார். மார்க்கத்தை எத்தி வைக்கவும், சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், கடைசி காலத்தில் குர்;ஆனுடன் தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய பாலத்தினை சரி வரக்கட்ட வேண்டிய அவசியத்தை, வழிமுறையை எத்தி வைப்பதற்காகவும், உறங்கிக்கொண்டிருக்கும் உம்மத்தை எழுப்பி விடவும் என டாக்டர் இஸ்ரார் அஹ்மத்தின் கால்கள் பாயாத இடமே இல்லை எனலாம். Kinda, You name it, and he is there already. எனினும் ஏற்கனவே பல ஆளுமைகளின் வாழ்வைப் படித்தபோது மனக்கண்ணில் தோன்றியதுதான், அன்னாரின் விடயத்திலும் தோன்றியது, in this community, gifted minds are pure show stoppers; it is cursed to be a brainchild in this Ummah. Nothing else. Period. Subhanallaah.

Anyways, கிட்டத்தட்ட அறுபது வருடத்திற்கும் மேலான பொது, சமூக, மார்க்கச் சேவைகள் புரிந்த பின் ஏப்ரல் மாதம் 2010இல் டாக்டர் இஸ்ரார் அவர்கள் இறைகட்டளையை ஏற்று அவன்புறம் திரும்பிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன். இன்னமும் அவரின் நூல்களில் கால் பங்கு கூட முழு சமுதாயத்திடமும் போய்ச் சேரவில்லை. சேர்ந்திருக்கும் நூற்களிலிலிருந்து வாசிக்கக்கிடைத்த ஒரு நூலின் விமர்சனத்தை, அடுத்த பதிவில் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
வஸ் ஸலாம்.

( குறிப்பு - டாக்டர் இஸ்ராரின் அறிமுகம் பெரும்பாலும் இணைய தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. தவறிருப்பின் சுட்டிக்காட்டவும். மிக்க நன்றி. )

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

வாழ்வென்னும் நதி....

Thursday, June 25, 2015 Anisha Yunus 0 Comments


கூழாங்கற்களைத் துழாவிச் செல்லும்
நதி போல் நகர்கிறது வாழ்வு;

இறந்த காலத்தையும்
இறந்து கொண்டிருக்கும் காலத்தையும்
தழுவித் தழுவி
மெய் மறந்தவாறே...

நீள் வானத்தின்
நீலத்தை போர்த்தியவாறு
உறங்கிப் போகின்றன
நதியின் மீன்கள்;

கல் விழும் சப்தமும்
எழாமலே உறங்கும்
கனமான நிசப்தத்துடன்
கை கோர்த்தவாறே....

இக்கரையில்
நின்று கொண்டுள்ளேன் நான்,
சிப்பிகளையும் முத்துக்களையும்
மணலோடு மணலாக்கி விட்டு
உடைந்து போன ஓடுகளையும்
செல்லரித்துப் போன
சங்குகளையும்
காற்சட்டையின் பாக்கெட்டில்
நிரப்பியவாறும்
பனி விலகும் முன்
பறித்த இளம்புல்லைப்
போல் மிளிரும்
புன்னகையோடும்;
பட்டாம்பூச்சிகளை
கண்களில்
சிறைபிடித்தவாறு...

எந்நேரமும் வரக்கூடும்
அந்தப் படகோட்டி;
நேற்றைய தினம் போல
அந்தி சாயும் வரை
தரிசனம் தராமலே
போபவனல்ல அவன்;
அதற்கும் முந்தைய தினம் போல
இருள் கவியும் வரை
என்னுடன் கண்ணாமூச்சி
ஆடுபவனும் அல்ல;
எந்நேரமும் வரக்கூடும்,

கிழிந்த சட்டையிலிருந்து
சிதறிக்கொண்டிருக்கும்
ஒரு புன்னகையை
சிநேகத்துடன் எனக்காகவும்
கொண்டு வந்துகொண்டிருக்கக்கூடும்;

இன்னும் காத்திருக்கிறேன்...
அவனுக்குத் தெரியும்
நான்
தினமும் காத்திருப்பது;

நிலவிலும் பகலிலும்
கசகசவென ஈரம் ஒட்டிக்கொள்ளும்
வியர்வையிலும்
குளிரிலும்
என்னுடைய தவம் கலையாமலே
காத்திருப்பேன்
எனப் புரிந்தவன் அவன்;

உன்னைச் சந்திப்பதில்
என்னை விடவும்
ஆனந்தம் கொள்வது
அவனாகத்தான் இருக்கக்கூடும்;
என்றேனும் கேட்கக்கூடும்,
அவனும்
உன் பெயரை,
உன் இருப்பிடத்தை,
உன் இருப்பைப் பற்றி;

எனினும்
பழங்களைப் பறிக்காமலே
தோட்டக்காரனிடம் சிக்கிக்கொண்ட
ஊமை போல்
கரை கடந்து
அதிர்கிறது
என் மௌனம்;

அத்துவானக் காட்டில்
நனைந்த இறக்கைகளை
உதறும் குருவி போல்
நடுங்குகின்றது
என் மனம்;

உன்னைப் பற்றிய
எல்லாமும்
என்னுள் நிறைந்து
போயுள்ளது;
நீயாகிப் போயுள்ளேன்
நான்;

உன்னைச் சந்திப்பதை விடவும்
உன்னைப் பாதுகாப்பது
அதி முக்கியமாகிப் போகின்றது எனக்கு;
என்றைக்கும் போல
இன்றைக்கும்
விரைந்து
வீடு திரும்புகின்றேன்;

அலைகளில்
மோதியவாறே
உரக்கப் பாடி வரும்
படகோட்டியின் பாடல்
நெஞ்சை வருடுகின்றது;

#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

வலிகள் இன்னும் பாக்கியுள்ளது...

Wednesday, June 10, 2015 Anisha Yunus 0 Comments


மயானத்தைக் கடந்து
வந்திருக்கின்றேன்....

நான்
மரணித்த வாசனை
இன்னும்
மிச்சமிருக்கின்றது காற்றில்....

மனித வாசனையை
விடவும்
மரித்த வாசனையே
மிகப்
பழகிப்போன ஒன்று....
=========================
தேடும்போதெல்லாம்
தென்படாத
அமைதி,

அலையிலா
ஆழ்கடலாய்
என்னைச் சூழ்ந்துள்ளது
என்
மரணத்தின் பின்....
==========================
வாருங்கள்
யாரேனும்....

இன்னும்
அத்தியாயங்கள்
பாக்கியிருக்கின்றது
வலிகளை
மையிலிட்டு நிரப்ப...
#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

எதையுமே..... எதையுமே...

Monday, June 08, 2015 Anisha Yunus 0 Comments



எதையுமே எண்ணாத...
எதையுமே எதிர்பாராத...

எதையுமே ஏற்காத...
எதையுமே மறுக்காத...

எதையுமே வெறுக்காத...
எதையுமே விரும்பாத...

எதையுமே தேடாத...
எதையுமே தொலைக்காத...

எதையுமே தூண்டாத...
எதையுமே தீண்டாத...

எதையுமே அண்மிக்காத...
எதையுமே அகற்றாத...

எதையுமே உள்வாங்காத...
எதையுமே வெளிக்காட்டாத...

இருப்பு ஒன்றைத் தேடுகிறேன்,
அய்யன்மீர்...

கண்டெடுத்தால்
கூப்பிட்டுச் சொல்லுங்கள்
எனக்கு.

எல்லோரிடமும்,
எல்லாவிடமும்,
எப்பொழுதும்
நேசம் கொள்ளும்
பாழாய்ப்போன மனதை
சற்றே
ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கின்றது
அதுவரை,
காயங்களோடும்,
பாவங்களோடும்,
வாழப்பிறந்தவள்
நீ என!

#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

அறபுகளின் நாயகி -- புத்தக விமர்சனம்.

Thursday, June 04, 2015 Anisha Yunus 0 Comments





ஐடி துறையில் ஏறத்தாழ 8 வருட அளவில் அனுபவம் இருந்தபோது பல்வேறுபட்ட வலைதளங்களையும் பார்வையிட வேண்டியிருந்தாலும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு வகையறா, mini / micro marketing websites மட்டுமே. அதாவது ஒரு பொருளை விற்பதற்காகவே தயாராகும் வலைதளம் அது. அதில் அந்த பொருளைப் பற்றி பத்தி பத்தியாக நீங்கள் யூகிக்கும் ஐகான்ஸிலிருந்து பொதுமக்கள் வரை அனைவரும் பேசியிருப்பர். அதன் தரம், குணம், விலை என எல்லாவற்றைப் பற்றியும் ஏறத்தாழ இரு பக்கத்துக்கு அந்தப் பொருளை விற்பனை செய்யும் எல்லா அம்சங்களும் இருக்கும். ஆயினும் அந்தப் பொருளின் நம்பகத்தன்மையை மட்டும் அதில் காண இயலாது. $100, $200 பணம் கட்டினால் அந்தப் பொருள் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும். அப்படி ஒரு வலைதளத்தைப் பார்த்த அயற்சிதான் ஏற்பட்டது, சகோதரர் ஃபயாஸ் அவர்களின் ‘அறபுகளின் நாயகி’ புத்தகத்தைப் வாசிக்கும்போது. 75 பக்க புத்தகத்தில் முதல் 15 பக்கங்களுக்கு வெறுமனே Testimonials, Testimonials, Testimonials.... Please guyz, grow up!

உண்மையில் பயணத்தில் படிக்க விரும்பி எடுத்துச் சென்ற இரு புத்தகங்களில் ஒன்று, அறபுகளின் நாயகியும், இன்னொன்று ஆயிஷா அன்னையாரின் வாழ்க்கைக்குறிப்பு பற்றிய ஷேக் சுலைமான் நத்வியின் நூலை இதாரா பதிப்பகத்தார் பதிப்பித்திருந்த ஆங்கில மொழியாக்கம் ஒன்றும். அறபுகளின் நாயகி நூலில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை சுருக்கமாகவும் செறிவாகவும் உம்மஹாத்துல் மு’மினீன் என்னும் ஆங்கில மொழியாக்க நூலில் இரு பக்கத்திற்குள்ளாறேயே முடித்திருந்தது தனிச்சிறப்பு. tongue emoticon tongue emoticon tongue emoticon

புத்தகத்தின் மையக் கருத்தோடு நிச்சயம் ஒத்துப் போகிறேன். ஆம், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நிக்காஹ் நடக்கும்போதுஅன்னையவர்கள் பால்மணம் மாறா குழந்தையல்ல. அதற்கென நூலாசிரியர் காட்டும் எல்லா ஆதாரங்களோடும் ஒத்துப் போகிறேன். எனினும், இது புதிய விடயமல்ல. நிச்சயமாக அல்ல. ஏற்கனவே பல நூலாசிரியர்களும், ஆய்வாளர்களும் இதை விளக்கத்தோடு உம்மத்தின் முன் சமர்ப்பித்த விடயமே. எனவே இந்தப் பதிவின் பேசுபொருளும் புத்தகத்தின் மையக்கருத்தல்ல. அதற்கான தரம், தகுதி மற்ற நூற்களுக்கு நிச்சயம் உண்டு. Let us analyse only the way, the stage being set for this book. smile emoticon

========================
#மொழியியல் - புத்தகத்தின் பல இடங்களிலும், நேர்மறையான வாக்கிய அமைப்பில் எதிர்மறை சிந்தனைகள் விஷமாய் பரவி நிற்பது கண்டனத்துக்குரியது. உதாரணமாக, அந்த முழு நிலவைப் பற்றிக் கற்பனை செய்ய வேண்டாம் என்றால் முதலில் நம் மூளையில் பதிவது முழு நிலவின் வடிவமே. அதுபோலவே ஒரு கேள்விக்குறியின் கீழ் பல வாக்கியங்களும் வருவது யதேச்சையாகவா அல்லது திட்டமிட்டு நோக்கத்துடனேயே பதியப்பட்ட வாக்கியங்களா எனக் குடைகின்றது. (Pg: 24, 25, 35, 39..)


#பக்கச்சார்பு - பக்கம் 39இல் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹூவையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஒப்பீடு செய்திருப்பது... சுப்ஹானல்லாஹ்... உங்களின் ideologyயை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து புத்தகம் எழுதுங்கள். அபூ பக்கரின் அளவுக்குக்குட அறிவில்லையா என்பது போல் நீங்கள் எழுதியிருக்கும் பத்தி, நிச்சயம் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை போட்டுடைத்து விட்டது. Total Bull@%#$%$#. இது போன்ற எண்ணற்ற வாக்கியங்கள் உங்களின் நோக்கம், இலக்கு என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் இந்த ஒரு பாரா மட்டுமே தங்களின் இருப்பை வெட்டவெளிக்கு நகர்த்தி விட்டது. Purely poisonous.

#தற்பெருமை - உஸ்தாத் மன்சூர் பற்றிய பாராவாகட்டும். எண்ணற்ற உலமாக்களை, மௌலானாக்களை பெயரின்றி குறிப்பிட்டு, உண்மையை எத்தி வைத்தால் இஸ்லாத்திற்கு இழுக்கு வந்துவிடும் என பொய்யையே அவர்கள் பரப்பிவிடுவது போல ஆலிம்களின் மேல் தோற்றம் எழுப்பி அவர்களை வாசகனின் பார்வைக்கு கேலிக்கூத்தாக்கியதாகட்டும், அவர்களைக் கீழிறக்கிக் காட்டுவதும் தன் புகழை ஆரம்ப பக்கங்களிலேயே பதிந்து கொள்வது என்பதும் the cheapest tactic. #MLM கூட #Better.

இன்னும் உஸ்தாத் மன்சூரின் விடைகளைப் பற்றிய ஆய்வறிக்கையில்(!!!!) நீங்கள் கூறுவது போல, முதல் பாயிண்ட்டில் உஸ்தாத் அவர்கள் ஆறுவயது என வரையறுத்து முடிவு செய்வது பிழையானது என உறுதி கூறியுள்ளார். இரண்டாம் பாயிண்ட்டிலும் அன்னை ஆயிஷா அவர்கள் திருமண வயதை அடைந்த பினனரே திருமணம் நடைபெற்றது என்பதனையும் விளக்கியுள்ளார். மீதம் உள்ள பாயிண்ட்களில், உஸ்தாத் அவர்கள், எப்படி அந்த திருமணத்தை நோக்க வேண்டும் என்பதையும், அதன் மேலான சட்டங்கள் எப்படி வரையறுக்கப்பட்டுள்ளன என்பதனையும் இன்னும் தெளிவாக விளக்கவே முயன்றிருக்கிறாரே ஒழிய, he is not contradicting himself. NO. ஆனால், உஸ்தாதின் பதிலின் இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள // பதில் தந்தவர் உஸ்தாத் மன்சூர்// என்னும் ஒற்றை வாக்கியம் உஸ்தாதின் பதிலை மீளாய்வு செய்யும் நிலைக்கும் தங்கள் கோணல் பார்வையிலிருந்து படிக்குமாறும் வாசகனை தூண்டிவிடுகின்றது. இவ்வாறான இடங்களில் தஸ்லீமா நஸ்ரீனின் Obsessive writing நினைவிற்கு வருவது தவிர்க்க இயலவில்லை. Sorry to say this.

இன்னும் என் பெருமதிப்பிற்கும், அளவிலா நேசிப்பிற்குமுரிய இமாம் அன்வர் அவ்லகி அவர்களின் அன்னை ஆயிஷா பற்றிய உரையிலும் சரி, இமாமவர்கள் முக்கியமாக விளக்க முன்வருவது, முதலில் நம்புங்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் உங்களின் கற்றறிவைக் கொண்டு பகுத்தாய முயற்சிக்காதீர்கள் என்பதுதான். அபூ பக்கரைப் போல நம்பிக்கை கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதுதான் முதல் பாடம். அதனால் மட்டுமே அவர்களெல்லோரும் பொய்க்கு அணி சேர்கிறார்கள், என்னைப் போல உண்மையை ஆராய முன்வரவில்லை, நான் மட்டுமே முதன்முதலாக அன்னையின் கண்ணியத்தைக் காக்க அவதரித்துள்ளேன் எனக் கூவுவது ___!!!! ___!!!! ___!!!! (Please fill in the blanks).

#முனாஃபீக்குத்தனம் - உமர் ரலியல்லாஹு அன்ஹூ சம்பந்தமான, அப்பட்டமாக வலிந்து திணிக்கப்பட்ட episode. ஒவ்வொரு வாக்கியமும், அது கூறும் பொருளும் மிக மிக மிக வன்மையான கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு வரியிலும் அஹ்லுல் பைத்தினர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்வர மாட்டார்கள் என்பதை அழுத்தமாக குறிப்பிடும் அதே வேளையில் உமர் அல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹூவைப் பற்றி, எனக்குப் பிறகு ஒரு நபி இருந்தால் அது இன்னாராகத்தான் இருக்கும் என நபியவர்கள் அங்கீகரித்த உத்தமர் பற்றி, பெண்களின் கண்ணியத்தை காக்க இறைவன் அனுப்பிய பல சட்டங்களுக்கும் மூலக்காரணமாக விளங்கிய சத்தியசீலர் பற்றி கள்ள மௌனம் சாதித்தது உங்களின் Utter Hypocrisyயைப் பறை சாற்றுகின்றது. Ridiculous approach. எழுத்தாணியைக் கொண்டு சத்தியத்தைப் பரப்புங்கள், விஷத்தை அல்ல.

#நடுநிலைமை - இத்தனை காரமாக எந்த புத்தக விமர்சனமும் நான் முன்வைத்ததில்லை இதுவரை. "It is a fault, that this book was given a platform, which it din't deserve." PERIOD.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...