கடலும், சுவரும்....

Friday, December 19, 2014 Anisha Yunus 0 Comments

.
கடல் அரித்துக் கொண்டேயிருந்தது. சுனாமிக்குப் பிறகு ஏற்றியிருந்த கரைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து விட்டிருந்தன. மனங்களின் ஈரம் வறண்டது போல. ஏன் கடலுக்கும் கவிதைக்கும் இத்தனை ஆழமான உறவு.... ஏன்..
.
.
---------
போலாம்மாம்மா???
இருடா... இப்பத்தானே வந்தோம். கொஞ்சம் விளையாடேன். அப்புறமா போகலாம்.
.
.
-----------
போலாம்மா....
ஏன் போனும் போனும்ன்றே???? வீட்டில யார் இருக்கா.
இங்கயும் யாருமில்லயில்லம்மா....
.
.
------------
உடைகளைக் கவ்வியிருந்த மண்ணை உதறியபடியே எழுந்து நின்றேன். உற்சாகத்துடன் பொங்கி வந்த அலைகளை இன்னொருமுறை பார்த்துக் கொண்டேன்.
அலைகள் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் வந்தது போல் தெரிந்தன எனக்கு.
மௌன சுவர்கள், கம்பீரமும், திடமும் வாய்ந்த தந்தை போல் தெரிந்திருக்குமோ அவனுக்கு... தெரியவில்லை.
.
.
எதுவோ புரிந்தது.
எதுவும் புரியவில்லை.
நகர ஆரம்பித்தோம்.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...