திரை விமர்சனம் - Inside Out (2015) Animated Movie

Wednesday, January 20, 2016 Anisha Yunus 0 Comments

முதன் முதலாக சத்தியமார்க்கம் தளத்தில் என்னுடைய பதிவு.....
===================
ரிலீ மட்டுமல்ல... நம் வீட்டுக்குழந்தைகளும் இன்றைய சூழலில், தொட்டதெற்கெல்லாம் அபாயகரமான முடிவுகளையே எடுக்கின்றனர். ஒவ்வொரு சிறு இடறலுக்கும் வாழ்வையே பணயம் வைக்கத் துணிந்து விடுகின்றனர். அதே துணிவை ஏன் வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்காக வைக்கக்கூடாது? இது குழந்தைகளுக்கான படமே எனினும், எல்லாப் பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கட்டாயம் காண வேண்டிய படம் இது.
======================


விமர்சனக் கட்டுரையை முழுதும் படிக்க - http://www.satyamargam.com/news/news-and-views/2603-inside-out-movie-review.html

வாசித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ்... 2015இல் வெளியான Inside Out அனிமேடட் திரைப்படத்திற்கான விமர்சனமே இது. வெளியிட்ட சத்தியமார்க்கம் குழுவினருக்கு மிக்க நன்றியுடன்....

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா?

Sunday, January 17, 2016 Anisha Yunus 0 Comments

புதுச்சேரியில் மட்டுமல்ல, சட்டீஸ்கர் மாநிலமும் அதே வழியைத்தான் பின்பற்றுகின்றது. 2001இலிருந்து 2010 வரை கிட்டத்தட்ட 14,000க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2010லிருந்து 2013 வரை ஒரு விவசாயியும் அந்த வழியில் செல்லவில்லை என்கிறது அரசாங்கம். எப்படி உருவானது இந்த திடீர் ஞானோதயம்?? ஞானோதயம் ஏற்பட்டது, விவசாயிகளுக்கா அல்லது மாநில அரசுக்கா??
வருடத்தில் 951 விவசாயிகளின் உயிருக்கு உலை வைத்த மேற்கு வங்கம் ஆகட்டும், 558 பேரின் உயிர் குடித்த ஆந்திரா, மத்திய பிரதேசம் (82), கர்நாடகா (472)வாகட்டும், தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை சடாரென பூஜ்ஜியத்திற்கு வந்ததன் பின்னணி என்ன??? 

சூழலியலாளர் திரு பி சாய்நாத்தின் முழு கட்டுரையையும் தமிழில் வாசிக்க தூது இணையதளத்திற்குச் செல்லுங்கள் -- http://www.thoothuonline.com/archives/75648

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஹிரோஷிமாவின் வானம்பாடி (Hiroshima No Pika)

Sunday, January 17, 2016 Anisha Yunus 0 Comments

சென்ற வருடம் இந்தப் புத்தகத்தினைப் பற்றிப் படித்த போதிலிருந்தே இந்த வருட புத்தக விழாவில் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நேற்று பொங்கல்-புத்தகத் திழுவிழா(!!)வில் வாங்கினேன். மிகச் சிறிய புத்தகம்தான். 45 ஒரு பக்கத்தாள்களில் முடிந்து விடுகின்றது. 1945, ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டால், சாமானியக் குடும்பம் ஒன்றில் சிறு பிள்ளையாக வளரும் 7 வயது மாயி-சான் அடுத்தடுத்த தினங்களில் காணும் காட்சிகளையும், வருடங்கள் கழிந்தும் அதன் தாக்கத்தை தன்னிலிருந்தும் பிறருடனும் காணும் அவலத்தைப் பதிவு செய்துள்ளது இந்த சிறு கதை.

தோசி மாருகியின் ஆழமான எழுத்தை, தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார் சகோதரர் கொ.மா.கோ.இளங்கோ. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

கதை முழுதும் ஒரு அமைதியான நடையில் எழுதப்பட்டுள்ளது. மூர்க்கத்தனமோ, வெறியோ, அடங்காமல் வெடித்துச் சிதறும் சொற்களோ இல்லை. வீசப்பட்ட குண்டின் அராஜகத்தின் முன் அமைதியாய் எழுத்துக்கள் மட்டுமே நிமிர்ந்து நிற்கின்றன. இதுவே
 அதன் அளவிலா துயரத்தின் சாரமாக அமைகிறது.

ஒரு ஏழு வயதுப் பிள்ளையின் கண் முன் ஊரே உடலில் துணியற்று திக்கெங்கும் ஓடினால்.... கைக்குழந்தையின் சடலத்தை ஏந்தியவாறு தாயும் கண்ணீருடன் தண்ணீரில் மூழ்கினால்....பெண் குழந்தைகளின் முதல் வீரனாக வாழும் தந்தையின் உடல் முழுதும் கொப்புளங்களால் சூழப்பட்டு அதே நிலையில் மரணத்தையும் எய்தினால்....சூரியக் கதிர்கள் பட்டு பொங்கிக் களித்த நீர்நிலைகள் நீல நிறம் வற்றிப்போய் கருத்த மேனியுடனும் அடர்த்தியான இறுக்கத்துடனும் தாங்கொணா துயரத்தில் ஓடுவதைக் காண நேர்ந்தால்... அந்தப் பிஞ்சின் மனதில் எப்படியான வலிகள்... எப்படியான எண்ணங்கள் பதியப்படும் என்பதை கிரகிக்கவே இயலவில்லை.

ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்டது என்பதைப் படிக்கிறோம். ஆனால், அதன் தாக்கம் ஒரு குழந்தையின் மீது படியும்போது நிகழும் உளவியல் வன்முறையை இந்தப் புத்தகம் காட்சிப்படுத்துகின்றது. குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்தப் புத்தகம் வெளிவந்திருந்தாலும், இது பேசும் துயரத்தை அறியும் சிட்டுக்கள், இனி வரும் வாழ்வின் மீது நம்பிக்கை வைப்பார்களா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.

ஆற்றமுடியாத அவலத்தின் கண்ணீர், பேனா மையாய்க் கசிந்துள்ளது..... ஆங்கிலத்தில் இணையம் மூலமாக படித்திட -http://bit.ly/1OpDJob.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

அம்மாக்கள் அலுவலகம் போகத்தான் வேண்டுமா/??

Thursday, January 14, 2016 Anisha Yunus 0 Comments

//விக்கிக்கு மட்டும் எல்லாம் புரிகிற வயதாக இருந்தால், நாங்கள் வேலைக்குப் போகாவிட்டால் உன்னுடைய எதிர்காலத்துக்கு எப்படிச் செலவு செய்ய முடியும்/? என்று கேட்க முடியும் என்று பேசி ஆறுதல் அடைவோம். ஆனால் ஆழ் மனதில் ஏதோ செய்யக்கூடாததைச் செய்வதைப் போல ஒரு கூற்றவுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கிறது. என்னுடைய மகனுடன் நான் அன்றாடம் செலவிடும் நேரத்தையும், என்னுடைய மாமியார் அல்லது என் அம்மா செலவிடும் நேரத்தையும் கணக்கிட்டுப் பார்ப்பேன்.//

பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டுமா என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை தமிழில் இன்று வந்துள்ளது. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒன்று.

பெண்கள் உழைப்பாளிகளாக, தொழிலதிபர்களாக, விஞ்ஞானிகளாக, ஆசிரியர்களாக, கல்பனா சாவ்லாவாக, பி.டி. உஷாக்களாக, பர்கா தத்தாக, அருந்ததி ராயாக , சாவித்ரி பாய் புலேவாக உருவாவதை முழு மனதார வரவேற்கும் அதே நேரத்தில் கிளார்க் வேலைகளுக்கு பலவித பெயர் சூட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளும் கவர்ச்சி விளம்பரங்களோடு கடை விரித்துள்ள இந்த 24*7 கணிணி வேலைகளுக்கு எதிர்க்கின்றேன்.

ஆண் பெண் என அனைவரையும் உடலால், மனதால், உணர்ச்சிகளால் உளைச்சலுக்கு ஆளாக்கும், இந்த மண்ணின் கலாச்சாரத்திற்கு பொருந்தாத வேலை நேர/செயல்பாட்டு விதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும் கூலி வேலைகளுக்கு என் எதிர்ப்பு உண்டு. பெரும் பெரும் நிறுவனங்களில் வாய்ப்பு கிடைத்தும் இந்த உளைச்சலாலேயே வேலைகளை உதறித் தள்ளிய அனுபவத்தால் இந்த என் கருத்தை பதிக்கின்றேன். நவீன குமாஸ்தா வேலைகள் பெண்களுக்கு உகந்ததல்ல. குடும்பத்தைச் சீரழிக்கும் இந்த வேலைகளை உதறித் தள்ளி, சுயமாக ஒரு அடையாளத்தை நிறுவ சிந்தியுங்கள்.

கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு. தக்கவோர் முடிவை ஆசிரியர் பதிக்காவிட்டாலும், கட்டுரையெங்கும் நிரம்பியிருக்கும் வலியே ஒரு பதிலாக உள்ளது. ஆங்கிலத்தில் இணையத்தில் உள்ளது. ( http://bit.ly/1Ztr1YH ). 



0 comments:

உங்கள் கருத்துக்கள்...

வியர்க்காத மனம்...

Wednesday, January 13, 2016 Anisha Yunus 0 Comments


.
கனவுகளற்ற விடியல்
இரவுகளற்ற இருட்டு

பசிக்காத உடல்
வியர்க்காத மனம்

தகிக்காத சொல்
குளிராத அண்மை

முடிவுறா முற்றுப்புள்ளிகள்
தொடர்கின்ற பயணம்

யாசிக்காத யாசகம்
நிரம்பிடாத கையோடு

இன்னும்
தேடலற்ற தொலைதலையும்
தொலையாத தூரங்களையும்

நேசித்துக்கொண்டே
நடக்கின்றேன்....

பெயரற்ற பூக்கள்
பூத்திடும் கிளைகளில்

வெப்பக்காற்றையும்
வேர் பிடிக்கக் கொஞ்சம்
பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....

#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை - ஆவணப்படம்

Tuesday, January 12, 2016 Anisha Yunus 0 Comments

சில தினங்களுக்கு முன் ஒரு பள்ளி முதல்வரைப் பார்த்து நான் கேட்ட கேள்விதான் இந்த ஆவணப்படத்திலும் கேட்கப்படுகிறது. வெள்ளையனை வெளியேற்றியபின் இந்தியாவின் ஒவ்வொரு தெருக்கோடியிலும் ஒரு பள்ளிக்கூடம் ஒரு பொறியியற்கல்லூரி, ஒரு கலைக்கல்லூரி என கொடி கட்டிப்பறக்கும் நாம், இந்த நொடி வரையிலும் ஏன் இன்னொரு ராமானுஜத்தையோ, சர் சி.வி இராமனையோ, ஹோமி ஜஹாங்கீர் பாபாவையோ உருவாக்க முடியவில்லை??? எத்தனை கடினம் மேற்கொண்டு, எத்தனை எத்தனை சொத்துக்களை விற்றுப் படிக்க வைத்தும் ஏன் வீட்டுக்கொரு அப்துல் கலாம், நாராயண மூர்த்தி, சுந்தர் பிச்சை உருவாக இயலவில்லை…. எங்கே தவறு?…. புட்டுப் புட்டு வைக்கின்றது இந்த ஆவணப்படம்.
உலகமே கொண்டாடும் கணித மேதை இராமானுஜம் கூட தன்னுடைய பள்ளிப்படிப்பு முதல் இளங்கலை வரை மற்ற எல்லா படிப்புக்களிலும் தோல்வியை மட்டுமே கண்டவர். இதனைப் படிக்கும்போது இன்றைக்கு ஆங்கில வழிக்கல்வி போல, அன்றைக்கிருந்த தெலுங்கு வழிக்கல்விதான் இதற்குக் காரணமாக இருந்திருக்குமோ என்னும் கேள்வி எழாமல் இல்லை. கேம்பிரிட்ஜில் ஆய்வுக்கல்வியின் போதும் ஜி.எச்.ஹார்டி அவருக்கு நண்பனாக இருந்ததை விட ஆசானாக அமைந்ததே ராமானுஜத்தை மெருகேற்ற உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கவனித்துப் பாருங்கள், ஜி.எச்.ஹார்டிக்கு எந்த வயதிலும் தாய்மொழிவழி கற்பதில் தடை இருந்ததில்லை. நம் தாய்மொழியைப் பற்றிய நம் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதையும் அலசிப் பாருங்கள்.
ஆங்கிலவழிக்கல்வி சாதகமானதா பாதகமானதா எனப் பல கோணங்களில் ஆராயும் இந்த ஆவணம், ஒரு பக்கத்தையும் புரட்டாமல் விடவில்லை. உதாரணத்திற்கு, 1947இல் சுதந்திர இந்தியாவின் கல்வித்தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட தாராசந்த் குழுவின் பரிந்துரையும் சரி, 1948இல் பல்கலைக்கழக கல்வியை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டாக்டர் இராதாகிருஷ்ணனின் குழுவின் பரிந்துரையும் சரி உடனடியாக இந்தியாவில் கல்வியனைத்தும் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்தின, அதன் பின் கடந்த 2005 ...
-- பதிவை முழுதும் படித்திட தூது ஆன்லைனிற்கு செல்லவும். முதன் முறையாக என், இந்தப் பதிவு, இணையத்தில்வந்துள்ளது. நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...