Showing posts with label முகநூல் பதிவுகள். Show all posts

வியர்க்காத மனம்...


.
கனவுகளற்ற விடியல்
இரவுகளற்ற இருட்டு

பசிக்காத உடல்
வியர்க்காத மனம்

தகிக்காத சொல்
குளிராத அண்மை

முடிவுறா முற்றுப்புள்ளிகள்
தொடர்கின்ற பயணம்

யாசிக்காத யாசகம்
நிரம்பிடாத கையோடு

இன்னும்
தேடலற்ற தொலைதலையும்
தொலையாத தூரங்களையும்

நேசித்துக்கொண்டே
நடக்கின்றேன்....

பெயரற்ற பூக்கள்
பூத்திடும் கிளைகளில்

வேர் பிடிக்கக் கொஞ்சம்
வெப்பக்காற்றையும்
பகிர்ந்து கொண்டே கடக்கின்றேன்....

#Deepதீ

எனது சொற்கள் - மஹ்மூத் தர்வீஷ்

சங்கீதம் 3
============
எனது சொற்கள்
மண்ணின் சொற்களாய் இருந்த நாளில்
நான் கோதுமைத்தாள்களின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
சினத்தின் சொற்களாய் இருந்த நாளில்
நான் சங்கிலிகளின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
கிளர்ச்சியின் சொற்களாய் இருந்த நாளில்
நான் பூமி அதிர்ச்சியின் நண்பனாய் இருந்தேன்.

எனது சொற்கள்
தேனாய் மாறியபோதோ
ஈக்கள்
என் இதழ்களை மூடின.

| மஹ்மூத் தர்வீஷ்
| பலஸ்தீனக் கவிதைகள்
| அடையாளம் பதிப்பகம்

ஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை நூல் - என் பார்வையில்..



முகநூலில் ஒரு சகோதரியின் பதிவிலிருந்த கவிதையை உடனே பகிர்ந்து கொண்டப்போதிலிருந்து துவங்கியது கவிஞர்.சல்மாவின் எழுத்துக்களுடனான பயணம். இது வரை வாசித்தேயிராததால் ( எல்லா புத்தகங்களுக்கும் இப்படித்தான் சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம்... உண்மையிலும் உண்மை அதுதானே...) க்ஹைர்.... அவரின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். அதற்கும் முன் இந்தக் கவிதைத் தொகுப்பை முடித்துவிட்டேன். சிறிய தொகுப்புதான் எனினும் அபாரமான சொல்வளமும், விரிந்த கற்பனைத்திறனும் கொண்டவர். அழகிய கவிதைகள் மனதை ஈரமாக்கிக் கொண்டேயுள்ளது வாழ்த்துக்கள் சகோதரி...!

சொல்லப்போனால் அந்த ஒரே ஒரு கவிதைக்காகத்தான் வாங்கியதே இந்தப் புத்தகம்.பெண்ணின் உடலை, தனக்கான ஒரு மதுக்கோப்பையாய் மட்டுமே ரசிக்கத்தெரிந்த ஆணுக்கு, அந்தக் கோப்பையின் மேலுள்ள விரிசல்களும், கறைகளும், கீறல்களும் உறுத்துவது மிகப்பெரும் துரோகம். பெண்ணின் மீதான ஆணின் பார்வையின் துரோகம். வக்கிரம். பெரும்பாலான ஆண்களின் எல்லாப்போர்வைகளிலும் ஒளிந்துள்ள எண்ணத்தையே இந்தக் கவிதை சுட்டிக்காட்டியது. ஆயிரமாயிரம் புரட்சிக் கவிதைகள் வாசிக்கும், உணர்ச்சிக்கனல்கள் பொங்கும் உரைகளை நிகழ்த்தும் அனைவரிடமும் அதே போன்ற போர்வைகள் இருக்கத்தான் செய்கின்றன. தவிர்க்க இயலாத, மறுக்க இயலாத, போட்டுடைக்கும் இந்த ஓர் கவிதைக்காகவே கொண்டாடுகின்றேன் கவிஞரை.

எனினும் இயற்கை, இயல்பு என்பது இழப்புக்களையும், இறப்பையும் உள்ளடக்கியது. அந்த இழப்புக்களை அடைந்ததற்காக எப்படி ஒரு ஆண், ஒரு பெண்ணின் மீது பழி சுமத்த இயலாதோ, அதே போலத்தான் பெண்ணும் அந்தப் பழியினை இயற்கையின் மீது போடுவதும் தவறாகின்றது. //உன்னைக்காட்டிலும் மிக மோசமான துரோகத்தை புரிந்திருக்கிறது இயற்கை எனக்கு// எனும்போது தப்பிக்கும் மனோபாவமே வெளிப்படுகின்றது. இதுதான் இயற்கை இதை நீ செரித்தே தீரவேண்டும் எனும் பேரொலிக்குள், எனக்கேன் இப்படி நடந்தது என்னும் ஓர் விசும்பலும் அடங்கியுள்ளது.

முதல் கவிதையே மனித உளவியலை அழகாய்த் தொட்டுச்செல்லும் விதமாய் அமைந்துள்ளது மிக இனிமை. அதே போன்ற இனிமை, இறுதிக் கவிதையிலும் ஒரு திடத்துடன் கூடி வெளிப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஆக்கங்களிலெல்லாம் திடமும், இயலாமையும், மென்சோகமும், தாழ்மையும், துயரமும், எப்போதாவது ஒரு சிறிய சிரிப்பும் கூடியதாய் வண்ணக்கலவைதான் இந்தத் தொகுப்பு. ஆனால், ஒரு கவிதையிலும் கூட ரௌத்ரமோ, கோபக்குமுறலோ தென்படவில்லை. மிக மெல்லிய குரலுடன் ஒலிக்கும் சோக இழைகளே முழுதும் நெய்துள்ளன இந்தத் தொகுப்பை. இது கவிஞரின் பிரதிபலிப்பாகவே எடுத்துக்கொள்ள முடிகிறது. மென்மையான பாதம்தான் எனினும் அழுந்தப் பதித்துவிட்டே செல்வேன் என்னும் வைராக்கியம் பாராட்டத் தக்கது.

தாம்பத்தியம் அல்லது திருமண பந்தம் -- இதை ஏன் ஒரு குற்றப்பார்வையிலேயே பார்க்கிறார் என்பது வியப்பாக உள்ளது. ஓரிடத்தில் //காட்சியை விரிக்கும்போது ஒட்ட இயலா மனம் தப்பியோடும் தன் விசித்திர சுயக் காட்சிகளுக்கு// என்பது திருமண உறவு பற்றிய கவிதைகளிலெல்லாம் வாசகனையும் துரத்துகிறது. ஆசுவாசமே அற்ற, அதிகாரம் நிறைந்த, சுவாசிக்கும் நெருக்கடியை உள்ளடக்கிய ஒரு காடு போலவே தாம்பத்திய உறவு எல்லாக் கவிதைகளிலும் உருவகப்படுத்தப்படுகின்றது. இருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மட்டுமே உண்மை ஆகுமா என்பதுதான் சிக்கலான கேள்வி. சமீபத்தில் கடக்க வேண்டிய நிர்ப்பந்த்திற்குள்ளான சில வாழ்க்கை முறைகள் // சுமுகமான தாம்பத்தியங்களுடன் தன் இரைகளோடு மட்டும் ஜீவித்து சுகித்திருக்கும் உயிரினங்கள் இருக்கக்கூடும் இப்பிரபஞ்சத்தில்// எனும் வரிகளை மெய்ப்படுத்துகிறது. அப்படியான உயிரினங்கள் இருக்குமோ என்னும் கேள்வியை விடவும்... இருக்கலாம். இருக்க வேண்டும்... நம்பிக்கையுடன் கடந்து செல்வோம் என வாழ்வை முன் நகர்த்துகின்றது. கவிஞரின் பின்னணி, அல்லது வாழ்வு, அவரின் சிந்தனைப்போக்கு இப்படி எதுவுமே தெரியாமல் வாசிப்பதால் இது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. ஆனாலும் புத்தக, வாசிப்பே அயர்வைத் தரும்போது புத்தக ஆசிரியரைப் பற்றியும் தேடித் தேடி வாசிக்க இன்னொருவர் யாரிடமாவது மணித்தியாலங்கள் சில கடன் வாங்கினால் சிறப்பென நினைக்கிறேன். நடக்கக்கூடியதா??

பல கவிதைகளிலும் கொடுந்தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும் இழையோடுகின்றன. வண்ணாத்திப்பூச்சிகளிடமும், உயரச் சுழலும் மின்விசிறியிடமும், சுவரில் மாட்டியிருக்கும் படத்திடமும் பேச முயலும் வெறுமையை புத்தகமெங்கும் காண இயல்வது ஒரு துக்கத்தைக் கடப்பது போல் பெருமூச்சைத் தருகின்றது. கனம் மிகுந்த வரிகள். சில கவிதைகளில், தன் உணர்வுகள், தன் விருப்பு வெறுப்புக்கள், தன் தேவைகள், தன்னுலகம் என எல்லாமே முக்கியத்துவம் பெறுவதென்பது இயற்கையாகப் படவில்லை. அதே போல்தான் //இயலாமை// எனும் கவிதை அதிர வைக்கின்றது. தன் வாழ்வைக் கொன்ற ஒரு பேரிடிக்காக வேர் பிடிக்க முயலும் சிறு கொடியை இரக்கமற்றுக்கடப்பது செமிக்க இயலாமல் போகிறது... சில இடங்களில் முற்றுப்பெறா வாக்கியங்களைப் போல.. சொற்றொடர்களைப் போல.. அந்தரத்தில் ஊஞ்சலாடும் உரையாய் தத்தளிக்கின்றது.

முடிவாய் இரு கவிதைகள் கவிஞரின் அலைவரிசையை முன்னெடுத்து வைப்பதாய் யூகிக்கின்றேன்.. //இந்த மண் என்னை மூடும்பொழுது// என்னும் கவிதை. தான் எதிர்கொள்ளும் காற்றை உள்ளபடி உள்ளவாறே எதிர்கொள்பவனே கவிஞனாகின்றான். ஆனால் கவிதைக்குரிய மிகைப்படுத்துதலும் மிகையாகிப் போகும்போது கவிஞனின் இடத்திலிருந்து வெளியேறி ஒரு பக்கச்சார்பு கொண்டவராய், ஓர் அமைப்பை / கொள்கையை சார்ந்தவராகிறார். அதுவே இந்தக் கவிதைகளிலும் நடந்துள்ளது என்பது கசக்கும் உண்மை. // உன் கனவுகள் மணல்துகள்களாய் உதிர நானும் என் பயணத்தின் தடைக்கல்லாக நீயும் எப்போதுமே இருந்திருக்கிறோம்// எனும் வரிகளில் நட்பாய் இருக்க வேண்டிய உறவு நீர்த்துப் போனது வெளிச்சம் பெறுகின்றது. புரிதல்களும், விட்டுக்கொடுத்தல்களும், மிக முக்கியமாய் துரோகங்கள் இல்லாமல் இருத்தலும் மணவாழ்வின் அத்தியாவசியங்கள். அவை காணாமல் போகும்போது வலிகளும், நிராதரவும், எவர் மீதும் நம்பிக்கையின்மையும் மிகைகின்றன. பின் வலி மிகுந்த கவிதைகளாய் பதியப்படுகின்றன. இதுவே இந்நூலின் அடித்தளமாவும் அமைந்துள்ளது என்பதே என் சிற்றறிவிற்கு எட்டியது.

இது குறித்த ஒரு கலந்துரையாடலை மிகவும் எதிர்பார்க்கிறேன். எனக்கும் நேரம் கிடைக்கவேண்டுமென்று. புரிதல்கள் பரவலாக்கப்பட வேண்டிய, பகிரப்படவேண்டிய நிர்ப்பந்தங்களில் வாழ்கிறோம். வாழுதலின் துயரமல்ல, இனிமை இது.

மீண்டும், வாழ்த்துக்கள் சகோதரி!

இரண்டாம் ஜாமத்துக் கதை | கவிஞர் சல்மா

.
குழந்தைகளைப் பெற்றதற்குப்
பிந்தைய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
 

என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான்
அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான் 
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்" கவிதைத்தொகுப்பு

-முகநூலில் படித்தது.

எனக்காக நீங்கள் பேசுவீர்கள்தானே??

இது டீஸ்டாவிற்காக -- ஸலீல் த்ரிபாதியிடமிருந்து
-------------------------------------------------------------------------------------------
டீஸ்டாவிற்கும்,
இந்தியாவை இந்தியாவாக
நிலைபெறச் செய்ய அரும்பாடு படும்
ஆன்மாக்களுக்காகவும்...
===========================


.
முதலில் அவர்கள் சஞ்சீவ்பட்டின் பின் சென்றார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் போலீஸ் அல்லவே.


பின் ஆஸாராம் வழக்கின் சாட்சிகள்
ஒவ்வொருவராய் மாண்டு போனார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் எந்த துறவியின் சீடனும் அல்லவே.

பின் வியாபம் வழக்கின் சாட்சிகளும்
காணாமல் போக ஆரம்பித்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
நான் மத்தியப் பிரதேசத்திலா வசிக்கின்றேன்??

பின்னர் அவர்கள் மாயா கோத்னானியை
பெயிலில் விட்டார்கள்,
நான் எதுவும் கூறவில்லை..
அந்தப் பெண்மணி என்னை எதுவும் செய்ததில்லையே.

பின்னர் வெடிகுண்டு வழக்குகளில் சிக்கியிருந்த
ஒவ்வொரு ஹிந்துவின் கோப்பும் பின்வாங்க ஆரம்பித்தது...
நான் எதுவும் கூறவில்லை..
ஹிந்துக்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லரே,
பின் அவர்கள் ஏன் தூக்கில் தொங்க வேண்டும்??

பின் அவர்கள் மாநிலத்தில் மாட்டுக்கறியை தடை செய்தார்கள்...
நான் எதுவும் கூறவில்லை..
சிவப்பிறைச்சி உடலுக்கு உகந்ததல்ல.... தெரியும்தானே??

பின்னர் அவர்கள் ‘வீடு திரும்புதல்’ என கூச்சலிட்டார்கள்...
பிரதமர் அவ்வப்போது இந்தியாவிற்கே திரும்பி வருவதைத்தான்
அப்படிக் கொண்டாடுகிறார்கள் என நினைத்துக்கொண்டேன்..

பின்னர் அவர்கள் க்ரீன்பீஸின் வங்கிக்கணக்குகளை
உறையச் செய்தார்கள்...
நான் நினைத்துக்கொண்டேன்....
இந்தியா வளர வேண்டியுள்ளது அல்லவா,
க்ரீன்பீஸினால் இந்திய வளர்ச்சி
தடைபட அல்லவா செய்கின்றது??

பின்னர் அவர்கள் பிரியா பிள்ளை
விமானமேறுவதிலிருந்தும் தடுத்தார்கள்...
நான் நினைத்தேன்...
அஹ்... கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்
இந்தியாவிற்கு எதிராகப் பேச அவள்
ஏன் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்குச் செல்லவேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டா செடல்வாதை
கைது செய்ய முனைந்தார்கள்...
நான் அதைக் கண்காணாது இருந்து விட்டேன்...
உயர் நீதி மன்றமே, அவருக்கு ஒன்றும் ஆகாது எனக் கூறிவிட்டதுதானே...
பின் நாம் ஏன் வருந்த வேண்டும்??

பின்னர் அவர்கள் டீஸ்டாவின் வீட்டை ரெய்டு செய்தார்கள்...
நிச்சயம் அவளிடம் மறைப்பதற்கான
ஏதோ ஒன்று இருக்கின்றது...
இல்லையென்றால் ஏன் அவள்
எல்லாவற்றையும் வெளிப்படுத்தவில்லை?????

என்றேனும் ஓர் நாள்,
அவர்கள் எனக்காகவும் வரக்கூடும்,
அவர்கள் சொல்கிறார்கள்....

ஹ ஹா..
அவர்கள் சொல்வது
நகைப்புக்குரியது;
இந்தியா,
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் அல்லவா...
இதொன்றும் ஆதிக்க சக்திகளின்
கைப்பாவைக் குடியரசா என்ன??

நான் தவறாது வரி
கட்டுகிறேன்...
ஆதார் அட்டையும்
என்னிடம் உண்டு...
நாள் தவறாமல்
யோகாவும்
செய்பவன்.

ஆனாலும்,
அவர்கள் வந்தால்,
எனக்காக நீங்கள்
பேசுவீர்கள்தானே??
.
 8/2/2015

This is a translation of an English poem dedicated to Teesta Setelvad. 

37 - அடையாளம் பதிப்பகம் | எம்.ஜி.சுரேஷ் | நாவல் விமர்சனம்




வாசிப்பவனுக்கு மிக அதீத விளக்கம் தரும், தரப்படும், எந்த ஒரு படைப்பும் கதையோ, கவிதையோ... தன்னை நிலைநிறுத்தத் தவறுகின்றது. அத்தனை பாத்திரங்களுக்கும் பெயர்கள், அதற்கான காரணிகள், துல்லிய விலாசம், நேரம், பொழுது, நிறம், அதன் விருப்பு/வெறுப்புக்கள்... இது போல கதையின் கருவுக்கு சம்பந்தமில்லாத (தேவையானவை தவிர்த்து) இன்ன பிற அம்சங்கள் விஸ்தரிக்கப்படும்போது, அந்தப் படைப்பு மெல்லச் சாகின்றது. அதே நிலைதான் 37, நாவலிலும்.

ஒவ்வொரு பாத்திரத்தையும், வாசகனின் மனநிலைக்குள்ள்ளும் கற்பனைக்குள்ளும் வலிந்து ஒரு துல்லிய பிம்பத்தையே நிறுவ வேண்டும் என்னும் அதீத ஆர்வத்தில், அதிகபட்சமான இடைச்செறுகல்கள் முழு புதினத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டன என்பது அதன் தொய்வுக்கு ஒரு காரணம் என்றால், அறிவியல் புனைவு எனப் பெயர் வைத்ததே இதற்கு சரியான தெரிவா எனக் குழம்பச் செய்வதும் இன்னொரு காரணி. விக்கிரமாதித்தன் கதைகளுக்கும், வாய் வழிக் கதைகளுக்கும், தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், இதில் அறிவியலுக்கு தரப்படவில்லை என்பதே நிஜம்.

ஆங்காங்கே, பாத்திரத்தின் இருத்தலுக்கும், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கும் தொடர்பு அறுந்து விழுகிறது. திடீரென வாசகனை அம்போவென ஒரு தெருவில் விட்டுவிட்டு அடுத்த தெருவிற்கு தாவி விடுகிறார் மனிதர். Episode அல்லது Speaking person நடுவே இருக்கும் வித்தியாசத்தைக் குறிப்பிடவில்லை நான். Talking about the missing links. சில இடங்களில், இயந்திரன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஆசிரியரே கொன்று விட்டாரோ எனக் கேள்வி முளைக்கிறது. இன்னும் சில இடங்களில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு கள வர்ணனை நடந்து கொண்டிருக்கும்போதே இராமநாராயணன் ரேஞ்சுக்கு மேஜிக் வித்தைகளும் நிகழ்கின்றன. :


அறிவியல் பெயர்கள் அதிகம் புழங்கியிருக்கும் அதே நேரம், அதன் பிரம்மாண்டத்தைப் பற்றிய ஒரு சிறு வியப்பைக் கூட வாசகனுக்குத் தராமல் தடை போட்டு நாவல் முன்னேறுகின்றது. வாசகன் ஒருவன் மெல்ல அசை போட்டு, அறிவியலின் வேகத்தையும், வளர்ச்சியையும் உள்வாங்கி அதிசயித்து, ஆஹா இத்தனையும் சாத்தியமா என ஆச்சரியப்பட வைக்கவேண்டிய ஒரு படைப்பு.... அடுத்த பக்கத்தோடு புதினம் முடிந்து விடுமா என யோசிக்க வைப்பது வேதனையே! ஆனால், ஆசிரியர் தான் படித்த, விரும்பிய, விரும்பும் இலக்கியவாதிகள், அவர்களின் படைப்புக்கள் என எல்லாவற்றையும் ஒன்று விடாது இதில் பதிவு செய்துவிட்டதை எண்ணும்போது............. :'( :'(  .. ஆனந்தக் கண்ணீர். :P

சுஜாதாவின் பாணியே இன்றி, சுஜாதாவின் சாதனையை முறியடிக்க ஆசிரியர் அதீதப் பிரயத்தனப்பட்டிருக்கிறாரோ என்றும் கூட நினைவு வராமல் இருக்கவில்லை. ஆனால், அட் த லீஸ்ட், ஜீனோ-வின் Flowவை, மொழியை, ஏக காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை, அறிவியல் வளர்ச்சிகளை எப்படி தன் கதையின் போக்கோடு பிணைத்தாரோ, அந்த டெக்னிக்கை, ஒரு முறைக்கு இரு முறை படித்து அதன் பின் முயற்சித்திருக்கலாம். இதுவே சுஜாதாவின் புனைவுகளை இது சாத்தியமா என்னும் கேள்வியிலிருந்து, நடக்கத்தான் போகிறது என்னும் உறுதிக்குக் கொண்டு வந்தது, வாசகர்களை. ஆனால், இந்தப் புதினத்தில், That is missing. அடையாளம் பதிப்பகத்தாரின் படைப்புக்களுக்கு ஒரு பெரும் மதிப்பு உண்டு என்னுள். But, இது பெருந்தோல்வி. :(

இந்த நாவலைப் பற்றி சகோதரர் Manazir இடம் ஏற்கனவே பேசியிருந்ததால், பாதி படிக்கும்போதே தோன்றியது, ஒரே ஒரு வரியுடன் விமர்சனம் எழுதி முடித்து விடலாம்... // இந்தப் புக்கை பத்தி மட்டும் எழுதச் சொல்லிடாதீங்க மனாசிர்....... :'( :'( :'(  // என. விதி வலியது. hi..hi.. இந்தப் பதிவை எழுதியே ஓய்ந்தேன்.

இதே ஆசிரியருடைய ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ எனும் நூலைப் பற்றி Manazirஉம், Lafees Shaheedஉம் ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் கொடுத்து விட்டதால், அதைத் தேட ஆரம்பித்துள்ளேன். இன் ஷா அல்லாஹ், வாசிப்போம்.....

திருநங்கைகளும் நானும்...

நேற்று மாலை வாணியம்பாடியில் இருந்து சென்னை நோக்கிய ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போதுதான் அது நிகழ்ந்தது. வழக்கம் போல ரயிலில் பயணிக்கும் ஆண்களிடம் மிரட்டி, அருவருப்பாக பேசி, தொட்டு, கலவரப்படுத்தி பணம் வசூல் செய்யும் திருநங்கைகள் சிலர் நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியிலும் ஏறினார்கள். அதுவரையிலும் முஜாஹித் சீட்டின் ஓரத்தில் நின்று கொண்டு வருவோர் போவோரை எல்லாம் அடித்துக்கொண்டிருந்தான். (அந்த கொடுமைய ஏன் கேட்கறீங்க.... எப்போ எங்களை எல்லாம் நடுரோட்டுல கட்டி வெச்சு அடிக்கப்போறாங்கன்னுதான் தெரியல)



கடைசியாக வந்த திருநங்கை, முந்தைய வகுப்பில் அமர்ந்திருந்தவர்களிடம் பேசிவிட்டு வரும்போது முஜாஹித் அவரையும் அடித்தான். உடனே அவர் கடந்து செல்லாமல் முஜாஹிதின் சீட்டின் அருகிலேயே நின்று கொண்டார். முஜாஹிதும் வரிசையாக சில அடிகள் போட்டுவிட்டு, அவரின் கன்னத்தைக் கிள்ளி சிரித்துக்கொண்டிருந்தான். அந்தத் திருநங்கை முஜாஹிதிடம் பெயர் கேட்டதும், இவனும் ’முஜாயித்’ என்றான். பின் ‘என்னுடன் வந்து விடுகிறாயா’ என்றதும், விரைந்து தலையாட்டினான். (அடப்பாவி!!!!!) ‘மம்மியிடம் சொல்லிவிட்டு வா’ என்றதும், என்னை நோக்கி, ‘அம்மீ....டாட்டாஆ....’ என்றான். (வீட்டுக்கு போனப்புறம் இருக்கு உனக்கு....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....). பின்னர், அந்தத் திருநங்கை, வா, வர்றியா என்றதும், முடியாது என்று தலையாட்டிவிட்டு, அடுத்து நின்று கொண்டிருந்தவரை அடிக்க தயாரானான்.

அதன் பின் என்னைக் கடந்து வெளியேறினார், அந்தத் திருநங்கை. அதுவரையிலும் மனதில் ஏராளமான உணர்ச்சி அலைகள் முட்டி மோதின. அவரை அழைத்து ஒரு நிமிடமாவது பேச வேண்டும், இறைவன் தந்த கண்ணியமான் உடலை, இப்படி காட்சிப்பொருளாக ஆக்கி, கண்டவரும் தன் இச்சையைக் கண்கள் வழியே தீர்ப்பவர்களுக்கு உணவாக்கி, ஏன் உங்கள் சுய கௌரவத்தை, உங்களின் தன்மானத்தை பலியிடுகிறீர்கள் நீங்களே, இதுவும் ஒரு படைப்பினம் எனும்போது ஏன் பல திருநங்கைகளும் கௌரவமாக சுய சம்பாத்தியத்தில் அல்லது கண்ணியமான பணிகளில் ஈடுபடுவதைப் போல நீங்களும் ஈடுபடக்கூடாது, ஏன் உங்களின் மதிப்பை, கண்ணியத்தை நீங்களே விலை பேசுகிறீர்கள் என்றெல்லாம் பேச நினைத்தேன். எனினும், தனியே பயணிக்கும்போது இருக்கும் தைரியமும், செயல்வீச்சும், குழந்தைகளோடு பயணிக்கும்போது இருப்பதில்லை. அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமாகி விடுகின்றது. அந்தத் திருநங்கை அடுத்த பெட்டியில் போய்ச் சேர்ந்த பின் நினைத்துக்கொண்டேன், கடைசியில், நானும் ஒரு முகநூல் போராளி மட்டுமே என..... இந்த ஒரு சிறு போராட்டத்தில் கூட என் ஈமானை, என் தாவாஹ்வை செயலாற்ற முடியவில்லை எனும்போது, ஜிஹாதுன் நஃப்ஸின் (தன் ஆன்மாவுக்கான) போராட்டத்தில் தோற்றவளாகவே காட்சியளிக்கிறேன். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்.

படம் உதவி கூகுள்

நீ - நான் - மௌனம்.



வார்த்தைகள்
ஏதுமற்ற
அலங்காரங்களால்
நிறைந்து போகிறது
உன் மௌனம்.

தானல்லாத
தன்னை
எதிர்கொள்ள இயலாப்
பெருவெளியில்
தோல்வியுறுகின்றது
என் மௌனம்.

சுயமெனும்
கோரப்பிடியில்
மௌனத்தின்
ஆயுதங்களை
கூர் தீட்டிக்கொண்டிருக்கிறோம்
நாம்.

நேசம்,
காற்றோடு
காற்றாகின்றது...


#Deepதீ

படம் உதவி - கூகுள்

அறபுகளின் நாயகி -- புத்தக விமர்சனம்.





ஐடி துறையில் ஏறத்தாழ 8 வருட அளவில் அனுபவம் இருந்தபோது பல்வேறுபட்ட வலைதளங்களையும் பார்வையிட வேண்டியிருந்தாலும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு வகையறா, mini / micro marketing websites மட்டுமே. அதாவது ஒரு பொருளை விற்பதற்காகவே தயாராகும் வலைதளம் அது. அதில் அந்த பொருளைப் பற்றி பத்தி பத்தியாக நீங்கள் யூகிக்கும் ஐகான்ஸிலிருந்து பொதுமக்கள் வரை அனைவரும் பேசியிருப்பர். அதன் தரம், குணம், விலை என எல்லாவற்றைப் பற்றியும் ஏறத்தாழ இரு பக்கத்துக்கு அந்தப் பொருளை விற்பனை செய்யும் எல்லா அம்சங்களும் இருக்கும். ஆயினும் அந்தப் பொருளின் நம்பகத்தன்மையை மட்டும் அதில் காண இயலாது. $100, $200 பணம் கட்டினால் அந்தப் பொருள் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும். அப்படி ஒரு வலைதளத்தைப் பார்த்த அயற்சிதான் ஏற்பட்டது, சகோதரர் ஃபயாஸ் அவர்களின் ‘அறபுகளின் நாயகி’ புத்தகத்தைப் வாசிக்கும்போது. 75 பக்க புத்தகத்தில் முதல் 15 பக்கங்களுக்கு வெறுமனே Testimonials, Testimonials, Testimonials.... Please guyz, grow up!

உண்மையில் பயணத்தில் படிக்க விரும்பி எடுத்துச் சென்ற இரு புத்தகங்களில் ஒன்று, அறபுகளின் நாயகியும், இன்னொன்று ஆயிஷா அன்னையாரின் வாழ்க்கைக்குறிப்பு பற்றிய ஷேக் சுலைமான் நத்வியின் நூலை இதாரா பதிப்பகத்தார் பதிப்பித்திருந்த ஆங்கில மொழியாக்கம் ஒன்றும். அறபுகளின் நாயகி நூலில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை சுருக்கமாகவும் செறிவாகவும் உம்மஹாத்துல் மு’மினீன் என்னும் ஆங்கில மொழியாக்க நூலில் இரு பக்கத்திற்குள்ளாறேயே முடித்திருந்தது தனிச்சிறப்பு. tongue emoticon tongue emoticon tongue emoticon

புத்தகத்தின் மையக் கருத்தோடு நிச்சயம் ஒத்துப் போகிறேன். ஆம், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நிக்காஹ் நடக்கும்போதுஅன்னையவர்கள் பால்மணம் மாறா குழந்தையல்ல. அதற்கென நூலாசிரியர் காட்டும் எல்லா ஆதாரங்களோடும் ஒத்துப் போகிறேன். எனினும், இது புதிய விடயமல்ல. நிச்சயமாக அல்ல. ஏற்கனவே பல நூலாசிரியர்களும், ஆய்வாளர்களும் இதை விளக்கத்தோடு உம்மத்தின் முன் சமர்ப்பித்த விடயமே. எனவே இந்தப் பதிவின் பேசுபொருளும் புத்தகத்தின் மையக்கருத்தல்ல. அதற்கான தரம், தகுதி மற்ற நூற்களுக்கு நிச்சயம் உண்டு. Let us analyse only the way, the stage being set for this book. smile emoticon

========================
#மொழியியல் - புத்தகத்தின் பல இடங்களிலும், நேர்மறையான வாக்கிய அமைப்பில் எதிர்மறை சிந்தனைகள் விஷமாய் பரவி நிற்பது கண்டனத்துக்குரியது. உதாரணமாக, அந்த முழு நிலவைப் பற்றிக் கற்பனை செய்ய வேண்டாம் என்றால் முதலில் நம் மூளையில் பதிவது முழு நிலவின் வடிவமே. அதுபோலவே ஒரு கேள்விக்குறியின் கீழ் பல வாக்கியங்களும் வருவது யதேச்சையாகவா அல்லது திட்டமிட்டு நோக்கத்துடனேயே பதியப்பட்ட வாக்கியங்களா எனக் குடைகின்றது. (Pg: 24, 25, 35, 39..)


#பக்கச்சார்பு - பக்கம் 39இல் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹூவையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஒப்பீடு செய்திருப்பது... சுப்ஹானல்லாஹ்... உங்களின் ideologyயை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து புத்தகம் எழுதுங்கள். அபூ பக்கரின் அளவுக்குக்குட அறிவில்லையா என்பது போல் நீங்கள் எழுதியிருக்கும் பத்தி, நிச்சயம் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை போட்டுடைத்து விட்டது. Total Bull@%#$%$#. இது போன்ற எண்ணற்ற வாக்கியங்கள் உங்களின் நோக்கம், இலக்கு என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் இந்த ஒரு பாரா மட்டுமே தங்களின் இருப்பை வெட்டவெளிக்கு நகர்த்தி விட்டது. Purely poisonous.

#தற்பெருமை - உஸ்தாத் மன்சூர் பற்றிய பாராவாகட்டும். எண்ணற்ற உலமாக்களை, மௌலானாக்களை பெயரின்றி குறிப்பிட்டு, உண்மையை எத்தி வைத்தால் இஸ்லாத்திற்கு இழுக்கு வந்துவிடும் என பொய்யையே அவர்கள் பரப்பிவிடுவது போல ஆலிம்களின் மேல் தோற்றம் எழுப்பி அவர்களை வாசகனின் பார்வைக்கு கேலிக்கூத்தாக்கியதாகட்டும், அவர்களைக் கீழிறக்கிக் காட்டுவதும் தன் புகழை ஆரம்ப பக்கங்களிலேயே பதிந்து கொள்வது என்பதும் the cheapest tactic. #MLM கூட #Better.

இன்னும் உஸ்தாத் மன்சூரின் விடைகளைப் பற்றிய ஆய்வறிக்கையில்(!!!!) நீங்கள் கூறுவது போல, முதல் பாயிண்ட்டில் உஸ்தாத் அவர்கள் ஆறுவயது என வரையறுத்து முடிவு செய்வது பிழையானது என உறுதி கூறியுள்ளார். இரண்டாம் பாயிண்ட்டிலும் அன்னை ஆயிஷா அவர்கள் திருமண வயதை அடைந்த பினனரே திருமணம் நடைபெற்றது என்பதனையும் விளக்கியுள்ளார். மீதம் உள்ள பாயிண்ட்களில், உஸ்தாத் அவர்கள், எப்படி அந்த திருமணத்தை நோக்க வேண்டும் என்பதையும், அதன் மேலான சட்டங்கள் எப்படி வரையறுக்கப்பட்டுள்ளன என்பதனையும் இன்னும் தெளிவாக விளக்கவே முயன்றிருக்கிறாரே ஒழிய, he is not contradicting himself. NO. ஆனால், உஸ்தாதின் பதிலின் இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள // பதில் தந்தவர் உஸ்தாத் மன்சூர்// என்னும் ஒற்றை வாக்கியம் உஸ்தாதின் பதிலை மீளாய்வு செய்யும் நிலைக்கும் தங்கள் கோணல் பார்வையிலிருந்து படிக்குமாறும் வாசகனை தூண்டிவிடுகின்றது. இவ்வாறான இடங்களில் தஸ்லீமா நஸ்ரீனின் Obsessive writing நினைவிற்கு வருவது தவிர்க்க இயலவில்லை. Sorry to say this.

இன்னும் என் பெருமதிப்பிற்கும், அளவிலா நேசிப்பிற்குமுரிய இமாம் அன்வர் அவ்லகி அவர்களின் அன்னை ஆயிஷா பற்றிய உரையிலும் சரி, இமாமவர்கள் முக்கியமாக விளக்க முன்வருவது, முதலில் நம்புங்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் உங்களின் கற்றறிவைக் கொண்டு பகுத்தாய முயற்சிக்காதீர்கள் என்பதுதான். அபூ பக்கரைப் போல நம்பிக்கை கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதுதான் முதல் பாடம். அதனால் மட்டுமே அவர்களெல்லோரும் பொய்க்கு அணி சேர்கிறார்கள், என்னைப் போல உண்மையை ஆராய முன்வரவில்லை, நான் மட்டுமே முதன்முதலாக அன்னையின் கண்ணியத்தைக் காக்க அவதரித்துள்ளேன் எனக் கூவுவது ___!!!! ___!!!! ___!!!! (Please fill in the blanks).

#முனாஃபீக்குத்தனம் - உமர் ரலியல்லாஹு அன்ஹூ சம்பந்தமான, அப்பட்டமாக வலிந்து திணிக்கப்பட்ட episode. ஒவ்வொரு வாக்கியமும், அது கூறும் பொருளும் மிக மிக மிக வன்மையான கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு வரியிலும் அஹ்லுல் பைத்தினர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்வர மாட்டார்கள் என்பதை அழுத்தமாக குறிப்பிடும் அதே வேளையில் உமர் அல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹூவைப் பற்றி, எனக்குப் பிறகு ஒரு நபி இருந்தால் அது இன்னாராகத்தான் இருக்கும் என நபியவர்கள் அங்கீகரித்த உத்தமர் பற்றி, பெண்களின் கண்ணியத்தை காக்க இறைவன் அனுப்பிய பல சட்டங்களுக்கும் மூலக்காரணமாக விளங்கிய சத்தியசீலர் பற்றி கள்ள மௌனம் சாதித்தது உங்களின் Utter Hypocrisyயைப் பறை சாற்றுகின்றது. Ridiculous approach. எழுத்தாணியைக் கொண்டு சத்தியத்தைப் பரப்புங்கள், விஷத்தை அல்ல.

#நடுநிலைமை - இத்தனை காரமாக எந்த புத்தக விமர்சனமும் நான் முன்வைத்ததில்லை இதுவரை. "It is a fault, that this book was given a platform, which it din't deserve." PERIOD.