சாட்சிகள் எல்லாம் பேசும்...

Thursday, February 24, 2011 Anisha Yunus 31 Comments

பட்டப்பகலிலும் வெளிச்சத்தை
உமிழும் Tube light,

அவ்வப்போது முழுதாய்
நனைந்து போயிருக்கும்
Toilet Roll,

நிசப்த வேளைகளிலும்
மௌனமாய் கசிந்து கொண்டிருக்கும்
Tap Water,

வெகு நாட்களாய் சீண்டுவார்
யாருமில்லாமல் போன
Diaper Genie,

ஆங்காங்கே தரையெங்கும்
சிதறிக் கிடக்கும்
Hand Soap,

அவசரமாய் உள்நுழைகையில்
அமர்க்களமாய் வீற்றிருக்கும்
Potty Seat,

எல்லாம் பறைசாற்றுகின்றன
ஜுஜ்ஜூ தேறிவிட்டதை
Potty Trainingஇல்...


ஹி ஹி ஹி... யாருப்பா அது இதுக்கெல்லாம் கவிதையான்னு கேக்கறது. எல்லாம் அமெரிக்க / வளைகுடா வாழ் தாய்மார்களின் சார்பாக பொறுத்துக்கொள்ளுங்களேன்.. ஹெ ஹெ ...

31 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு காதல், ஒரு (தற்)கொலை...

Thursday, February 17, 2011 Anisha Yunus 32 Comments

பிப்ரவரி 14, இரவு 8:00 மணி

”செல்லம்...காலைல கண்டிப்பா வருவேல்ல?”

”ஏன், எம்மேல நம்பிக்கை இல்லையா?”

”அப்படி சொல்லலைடா, கடைசி நிமிஷத்துல குழந்தைங்க வேணும்னு நீ நினைச்சிட்டா?”

”இப்ப எதுக்கு அதெல்லாம்? நமக்குன்னு பொறக்காமலா போகும்?”

”சரி மா, ஆனா மறக்காம அந்த நகைகளையும்.... உனக்கே தெரியும்.. நம்ம நிலைமை எப்படின்னு... நான் கண்டிப்பா சம்பாதிச்சு உனக்கு அதைவிட பல மடங்காக்கி தருவேன்...ப்ச்..”

”ஏண்டா இப்படி பேசறே.. நானாகத்தானே தர்றேன்னு சொன்னேன். நீ ஏன் கவலைப்படறே... அப்ப நானும் நீயும் வேற வேறயா?”

”சாரிடா செல்லம், நான் இனிமே இப்படி பேச மாட்டேன்... அப்ப நாளைக்கு நாம மீட் செய்யலாம். லவ் யூ டால்.”

’டொக்’


பிப்ரவரி 15, காலை 7:00 மணி
..."ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா...போதும் போதுமென போதை தீரும் வரை வா”..

 ”சொல்லு மச்சி”

”டேய்.. எத்தன் நாள்தான் இந்த பாட்டே வச்சிருப்ப? ரிங் டோனை மாத்தேண்டா...”

“ஹெ நம்ம தொழிலுக்கு இதுதான் சரியா வர்கவுட் ஆகுது..ஹி ஹி”

“ஹ ஹ..சரிதான். சரி, மத்த விசயமெல்லாம் அப்புறம் பேசலாம், நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு”

”ஆஹா.. சீரியசா பேசறதை பாத்தா புது பட்சியா.. டேய் எப்படா விருந்து?”

“உனக்கில்லாமலா... நம்ம க்ரூப்புக்கெல்லாம் சொல்லிடு. ஒரு வாரம் கழிச்சு வந்தா போதும். செம பார்ட்டி, இன்னும் 6 மாசத்துக்கு வாழ்வுதாண்டா..”

”டேய் ஃபோட்டாவாவது அனுப்புடா மாப்ள..”

”பொறுடா... ஃபர்ஸ்ட் நைட்ல எடுத்தே அனுப்பறேன்...ஹ ஹ ஹா”

“உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...”

’டொக்’


பிப்ரவரி 15, காலை 10:00 மணி

"தீபு...தீபு...”

”ஏன்க்கா... யன்னா வேணூம்??”

“வா இங்கே... அம்மா இன்னும் கால் செண்டெர்ல இருந்து ஏன் வரலை??? அதும் நல்லதுதான், அம்மா வர்றதுக்கு முன்னாடி இந்த கலரிங் பேப்பர்ல கலர் செஞ்சு கிஃப்ட்டா தரலாம், என்ன?”

“நானுக்கு கிஃப்ட்டூ??”

“ஒனக்கும் தான். இந்தா இந்த பேப்பர்ல கலர் பண்ணு.”

“முமு வாணும்..”

”பால் வேணுமா.. இரு அப்பாட்ட சொல்லி தர சொல்றேன்.., அப்பா... அப்பா... அப்பா தீபுக்கு பால் வேணுமாம்...அப்பா...அப்பா”

...
...
...

”தீபூ...தீபூ அப்பாவை வந்து பாரேன். அழகா ஃபேன்ல ஊஞ்சலாடறார்...ஹேய்...”

”நானுக்கு...???”



பி.கு:
ஹுஸைனம்மாவின் இந்த பதிவை பார்த்ததில் தோன்றிய எண்ணம். எழுததான் நாள் கடந்து விட்டது. என் முதல் கதை ’கேரக்டர் காமினி’, அதன் பின் இதுதான் இரண்டாவது கதை. சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருக்கேன்னான்னும் தெரியலை. நிறை குறை நீங்கதேன் சொல்லணும். 



.

32 comments:

உங்கள் கருத்துக்கள்...

தாய்மை எனப்படுவது யாதெனில்... (இறுதி) + அவார்டு, யாருக்கு?

Saturday, February 12, 2011 Anisha Yunus 35 Comments


லிஃப்ட்டுல ஏறி 4வது மாடி போயாச்சு. போய் சேர்ந்த பின், ரிசப்ஷன்ல தேவையான தகவல்களை சொல்லிட்டு நர்ஸ் வந்தா ரெண்டு நிமிஷம் காத்திருக்க சொல்லுங்க, நான் தொழுதுக்கறேன்னு சொல்லி ரிசப்ஷன்லயே லொஹர் தொழுதாச்சு. அல்லாஹ்விடம் துஆ கேட்டு முடிக்கவும் என்னை பாத்துக்க வேண்டிய நர்ஸம்மா வந்து கூப்பிட்டு போனாங்க. போயி வழக்கம் போல ரத்தக் கொதிப்பு, எடை, சுவாசம் எல்லாம் டெஸ்ட் செஞ்சிட்டு ஆடைகளை மாற்றி ஹாஸ்பிடல் கவுன் தந்துட்டாங்க. அப்புறம் என்னையும் இன்னும் ரெண்டு மூணு மெசினையும் ஒன்னா வயர் வெச்சி பிணைச்சிட்டு போயிட்டாங்க. பசி வேற வயித்த கிள்ள ஆரம்பிச்சிடுச்சு. காலைல இருந்து எதுவும் ஆகாரம் இல்ல, மணி 2 ஆகப் போகுது. 2 மணிக்கு எல்லா நர்ஸும், டாக்டருக்கு படிக்கற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஆஜர். டாக்டர் ஸ்டான்சில் மட்டும் வரலை. விசாரிச்சப்ப அவரோட வண்டி டயர் பழுதானதால கொஞ்சம் கழிச்சு வருவாருன்னாங்க. அதுக்குள்ள ஜுஜ்ஜூவை ஹன்னாஹ் வீட்டுல விட்டுட்டு வந்துட்டார். அவரும் எதுவும் சாப்பிடலை. 2:10க்கு ஒரு டாக்டரம்மா வந்தாங்க. அவங்க இந்த ப்ரொசீஜரைப் பத்தி மறுபடியும் விளக்கிட்டு, எனக்கு இப்ப ஒரு ஊசி நரம்புல போடுவாங்கன்னும், அந்த மருந்து இதயத்தை பலமா ஓட வைக்கும்னும், அதனால பயப்பட வேண்டாம்னும் சொன்னாங்க.சரின்னு சொன்ன பின் வேண்டிய ஃபாரங்கள்ல கையெழுத்து வாங்கிட்டு நரம்புல ட்ரிப்ஸுக்கு ஏத்தற மாதிரி செட் பண்ணாங்க. முதல் தடவை ஒரு நர்ஸ் செய்யறப்ப தவறா போயிடுச்சு, எனக்கு பயங்கரமா வலிக்குதே ஒழிய சரியா மருந்து எறங்கலை. அப்புறம் மணிக்கட்டுல இன்னொரு எடம் பார்த்து இன்னொரு வயசான நர்ஸம்மா வந்து போட்டாங்க. போட்டு ரெண்டே நொடிதான், இதயம் வேக வேகமா துடிக்குது, எனக்கு மூச்சு விட சிரமமா இருக்கு. டாக்டரம்மா கிட்ட சொல்லலாம்னா அவங்க சர்வ சாதாரணமா மானிட்டரை பாத்துகிட்டு இருக்காங்க. எனக்கு பேசவும் முடியலை, இதயம் துடிக்கற வேகத்துக்கு மூச்சும் திணறுது. எப்படின்னா, தொட்டபெட்டா சிகரத்துல நின்னு பாத்துகிட்டிருக்கற உங்களுக்கு திடீர்னு கால் கொஞ்சம் ஸ்லிப்பானா எப்படி இதயம் துடிக்கும், அதை விட வேகமா..யப்பா..ரெம்ப கஷ்டமாவும் இருந்தது. அம்மியை ரெம்பவே மிஸ் பண்ண நிமிடங்கள் அது.

பின்ன 2:15க்கு டாக்டர் ஸ்டான்சில் வந்துட்டார். அவர் வந்தவுடன் மறுபடியும் ஒரு தடவை என்னவெல்லாம் செய்வாங்கன்னு சொல்லிட்டு, இப்போ வயித்து மேல(பாப்பா தலைப்பக்கம்) அவர் ஒரு கை, அடி வயித்துல(பாப்பா இடுப்பு பக்கம்) அந்த டாக்டரம்மா ஒரு கை வப்பாங்க, வச்சு தள்ள ஆரம்பிப்போம், எப்ப முடியலையோஅப்ப சொல்லுங்க நிறுத்திடறோம்னு சொன்னார். என்னுடைய ரெண்டு கையவும் கட்டிலுக்கு அடியில் ஒரு பிடிப்பு இருக்கு அதை பிடிச்சிக்குங்கன்னு சொல்லிட்டு ஒரியாக்காரரை என் தலைமாட்டுல நிக்க சொல்லிட்டார். அவ்ளோதான், இப்ப ஸ்டார்ட் செய்றோம்னு சொல்லிட்டு தள்ள ஆரம்பிச்சாங்க. அதுவரை வாழ்க்கைல அந்த பிட்ச்சுல நான் கத்தியது இல்ல. உள்ள இருக்கற  pancreas, kidney, liver  எல்லாத்தையும் எங்கெங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கற மாதிரி வயித்துல எல்லாமே உருளுது. என்னால நார்மலா சுவாசிக்கவும் முடியல, வலியவும் பொறுக்க முடியல, வலிங்கறதை விட, ஒரு அழுத்தம் /  Pressure,  அப்படின்னு சொல்லலாம். ரெண்டே நிமிஷம்தான். அந்த ரெண்டு நிமிஷத்துல வஸியத்தே நான் ரெடி செஞ்சிட்டேன். இதோ இப்ப உயிர் போயிடும்னு தோணிய நிமிஷம் அது. மலக்குல் மவ்த் சிரிச்ச முகத்தோட வருவாங்களா இல்ல... அப்படின்னு பயந்தும் போயிருந்த நிமிஷம் அது. சுப்ஹானல்லாஹ். நான் போதும், வேண்டாம்னு சொல்ல நினைக்கறப்ப அவங்களே நிறுத்திட்டாங்க. மானிட்டர்ல ஒரு 2 நிமிஷம் மறுபடியும் வெயிட் செஞ்சு பாத்தாங்க, இவன் சொல்பேச்சு கேக்கற பயலா இல்லையான்னு. ஹனீஃபா மறுபடி மேல வரலைன்னவுடனே, எல்லாம் சரியாகிடுச்சு, எதும் சாப்பிடறதுன்னா சாப்பிட்டுக்குங்க, நாம் எபிடோசின் குடுத்து வலியை ஆரம்பிக்கலாம், ஏன்னா ஏற்கனவே டெலிவரி டேட்டுக்கு மேல ரெண்டு நாள் ஆயிடுச்சு. இதுக்கு மேல வெயிட் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டார். டாக்டர் டேக் கேர்னு சொல்லிட்டு போனதுதான் தெரியும் மறுபடி மயக்கமா, இல்ல சோர்வால வந்த தூக்கமான்னு தெரியலை. ஒரு அஞ்சு நிமிஷம் ஒலகம் மறந்து கண் மூடியாச்சு. அந்த ப்ரொசீஜர் முடிஞ்சவுடனே என்னை வேற ரூமுக்கு மாத்தணும். ஆனா நான் தூங்கிட்டு இருக்கறதை பார்த்த நர்ஸ், சரி எழுந்ததும் கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. முழிச்ச பின் மறுபடியும் வேற ரூம்.

இன்னொரு நர்ஸம்மா, கொஞம் வயசானவங்க என்னை இப்ப வேற ரூமுக்கு கொண்டு போயி, கீழ இருக்கற கஃபேக்கு எப்படி ஃபோன் செய்யணும், எப்படி ஆர்டர் செய்யணும்னு எல்லாம் சொல்லிட்டு, ஐ.வி. கனெக்‌ஷன் குடுத்துட்டு போயிட்டாங்க. அதுலதேன் எபிடோசின் ஏத்துவாங்க. இவருக்கும் எனக்கும்  Mac n Cheese, Veg fried rice  சொல்லிட்டு அம்மாக்கு மறுபடியும் ஃபோன் செஞ்சு எல்லாம் நல்லபடியா நடந்ததுன்னு சொல்லிட்டு அவங்களுக்கும் ஆறுதலை தந்திட்டு கொஞ்சம் ரிலாக்ஸானோம். அதுவரை அம்மா அப்பாவும் தூங்காம இரவு வேர தொழுகை / தஹஜ்ஜத் தொழுது து’ஆ அழுதழுது கேட்டுட்டு இருந்திருக்காங்க. அம்மிதான் பக்கத்துல இருக்க முடியலையேன்னு அழுகை. அவங்களையும் சமாதானப்படுத்தியாச்சு. கொஞ்ச நேரத்துல சாப்பாடும் வந்தது, சாப்பிட்டபின் நர்ஸம்மா எபிடோசின்னையும் ஏத்திட்டாங்க. 4 மணிக்கு டாக்டர் ஸ்டான்சிலும் வந்து எல்லாம் நல்லபடியா போகுதா குழந்தை அதே பொசிஷன்ல இருக்கான்னு எல்லாம் பார்த்துட்டு போயிட்டார். அதன் பின் மறுபடியும் அஸ்ர், மக்ரிப், இஷா எல்லாம் 6:30 மணிக்கு முடிஞ்சிடுச்சு. இவரும் மசூதிக்கு போயிருந்தவர் வந்திட்டார். (இதெல்லாம் எழுதறப்ப, தோபி கட்ன்னு புதுசா வந்த படத்துல ஒரு முஸ்லிம் பொண்ணு அவங்க அண்ணனுக்கு வீடியோ ரெக்கார்டு செய்வாங்களே அந்த ஞாபகம் வருது!! :)

எட்டு மணி போல மறுபடியும் வந்த டாக்டர் ஸ்டான்சில், முன்னேற்றம் எதையும் காணம், எபிடோசின்னை அதிகமாக்குங்கன்னு போயிட்டார். அதிகமாக்கிய ஒடனே பயங்கர வலி, அதுவும் 2 நிமிசத்துக்கு ஒரு தடவை, நர்ஸம்மா டாக்டர்கிட்ட சொல்லவும், வேறெதோ மருந்தை சேர்த்தி அதை கொஞ்சம் கொறைச்சாங்க. மறுபடியும் கொஞ்சம் ரிலாக்ஸாச்சு. அம்மி, அப்பாவை ஸ்கைபில வர சொல்லி பாத்துகிட்டேன். அம்மியும் கொஞ்சம் என்னை பார்த்த பின் ரிலாக்ஸானாங்க. அப்போ அந்த நர்ஸம்மா முடிஞ்சு வேற ஒரு நர்ஸ் ஜெர்மின்னு பேரு. அந்த பொண்ணு வந்தாங்க. அவங்களும் சந்தோஷமா எங்க அப்பா அம்மாகிட்ட பேசினாங்க. 4 டாக்டரம்மா, 2 நர்ஸு, 2 மெடிக்கல் ஸ்டூடண்ட் எல்லாருமே 12 மணிக்குள்ள பேசிட்டு போயிட்டாங்க. அம்மி அப்பாவையும் போயிட்டு காலைல நெட்டுக்கு வாங்கன்னு சொல்லியாச்சு.

அதுவரை எல்லாம் சரியா போச்சு. 1 மணிக்கு வந்த டாக்டரம்மா ரெண்டு பேர் என்னை சோதிச்சிட்டு, முன்னேற்றம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. அதுவுமில்லாம குழந்தையோட இதய துடிப்பு திடீர்னு வெறும் 40ல போயிகிட்டு இருக்கு (150 கிட்ட இருக்கணும்!!), அதனால எபிடூரல் எடுத்துக்குங்கன்னு சொன்னாங்க. அதே நேரம் NICU (NeoNatal Intensive Care Unit)ல இருக்கற டாக்டர்ஸ்க்கும் தகவல் சொல்லி, ஒரு 10 பேர் வந்து பக்கத்து ரூமல் காத்திட்டிருக்காங்க. பிள்ளைக்கு மேற்கொண்டு எதும் ஆயிட்டா ஒடனே பாக்கறதுக்கு. எபிடூரல் எடுத்த பின் அல்ஹம்துலில்லாஹ் இதய துடிப்பு கொஞ்சம் சீராயிடுச்சு. ஆனால் தொப்புள் கொடி லைட்டா சுத்தி இருந்துச்சு. அது, திருப்பி விட்டதால வந்திருக்கலாம், பட் பயப்படற அளவு இல்லைன்னு சொல்லிட்டாங்க. எபிடூரல் எடுத்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் செஞ்சேன். 5 மணி வரை எல்லாம் சுபம், 5 மணிக்கு டாக்டர் ஸ்டான்சில் செக் பண்ண வந்தார். அப்ப ஹனீஃபாவோட இதய துடிப்பு 200ஐ தொட்டுகிட்டு இருக்கு. மேற்கொண்டு எதுவுமே பேசலை டாக்டர். மறுபடியும் ஃபாரம் எல்லாம் வந்தது. என்ன காரணம்னு தெரியலை. ஆனால் குழந்தையோட இதய துடிப்பு இப்படி மேல கீழ போறது நல்லதில்லை, உங்களுக்கு 8செமீ தான் டைலேட் ஆகியிருக்கு. இன்னும் 5 மணி நேரமாவது உங்களுக்கு ஆகும் இயற்கையா பிள்ளை பிறக்கணும்ன்னா ஆனா அப்படி பிறக்கற குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியிருக்காது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் குழந்தைக்கு இதய துடிப்பு தாறுமாறாகும். ஏன் இப்படின்னு ஆராய்ச்சி செய்ய நேரமில்ல, என்னை பொறுத்தவரை இன்னும் 5 நிமிஷத்துல குழந்தை வெளில வந்தாதான் நல்லதுன்னு சொல்லிட்டார். எனக்கு ஒலகமே இருண்டு போன  மாதிரி ஒரு ஃபீலிங். இந்த ஆபரேஷனை முதல்லயே நான் செஞ்சிருப்பேனே, எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்னெல்லாம் மனசுல தோணுது. இவரும் மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு நிக்கறார். டாக்டர் எல்லா ஸ்டாஃபுக்கு ஆபரேஷன் ரூமை ரெடி பண்ண சொல்லிட்டிருக்கார். எல்லாரும் என் கையெழுத்துக்கு மட்டும்தான் காத்துகிட்டிருக்காங்க. கண்ணுல தண்ணியோட கையெழுத்தும் போட்டாச்சு. வேற வழி?

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.( ஃபாத்திர்: 2)
அப்புறம் எபிடூரலை அதிகமாக்கிட்டே என் கால்களை அசைத்து பாக்க சொல்லிட்டிருந்தாங்க. ஆப்ரேஷன் தியேட்டர் வரை அப்படி அசைக்க முடிஞ்சது. அதன் பின் நாந்தான் அசைக்க நினைக்கறேனெ ஒழிய கால் நகர மாட்டேங்குது. பின் இங்க குத்துதா அங்க குத்துதான்னு மரத்துப்போன வயித்துமேல ஒரு நர்ஸம்மா என்னை ஊசியால குத்தி குத்தி பாத்துகிச்சு. பின்ன மருத்துவமனைல வர்ற ஸ்பிரிட் மாதிரி வாசனையிருக்கற எதையோ என் வயிறு முழுக்க தடவுனாங்க. ரெண்டு கைகளையும், கால்களையும் வெல்க்ரோ டேப் வெச்சு என்னை நகர முடியாம செஞ்சாங்க. என்னுடைய தலை மாட்டுகிட்ட ஒரு சேர் போட்டு இவருக்கு தந்திட்டாங்க. என்னுடைய நெஞ்சுக்கு நேரா ஒரு திரைச்சீலை போட்டு ஆபரேஷனை மறைச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்க பேசறேதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். விஜயகாந்த் படங்கள்ல  வர்ற மாதிரி சிசர்ஸ் குடு, அது குடு, இது குடுன்னு கேட்டுகிட்டிருந்தார் டாக்டர், நர்ஸெல்லாம் ஓடி ஓடி ஒழைச்சுகிட்டிருந்தாங்க. பின்ன ஒரு 2 நிமிஷம் கழிச்சு சள புள சள புளன்னு கொழம்பு கொதிக்கற மாதிரி சத்தம். நானே புரிஞ்சுகிட்டேன், சரி நம்மளை கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கன்னு. பின்ன கர கரன்னு சத்தம். பெரியண்ணன் பூமிக்கு வந்திட்டார். ஜெர்மி நர்ஸ் அது வரை என் தோள்களை ஆதரவா பிடிச்சிட்டிருந்தவங்க காதுல சொன்னாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, பிள்ளை வெளில வந்திட்டான்னு. அப்புறம் இவரை கூட்டிட்டு போயி அவர் முன்னாடியே குழந்தைய தண்ணி ஊத்தி, எடை போட்டு காமிச்சு, பாதுகாப்பு வளையங்களை மாட்டிவிட்டு எனக்கும் காட்ட கூப்பிட்டு வந்தாங்க. அப்புறம் அவர்கிட்ட சொல்லி பேரீச்சையை சப்பி அதை தடவி விடுங்கன்னு சொல்லிட்டு, தொழுகைக்கு குடுக்கற பாங்கையும் ஓதிட ஞாபகப்படுத்தினேன். அவரும் அதன் பின் நர்ஸரிக்கு போயிட்டார்.

பின்ன சில நிமிஷங்கள்ல ஸ்டேப்ளர் அடிக்கற சத்தம் கேட்டது, சரி தெச்சு முடிச்சிட்டாங்கன்னு நினச்சிட்டேன். பின் திரைச்சீலை எல்லாம் நகர்த்திட்டு டாக்டர் ஸ்டேன்சில் மறுபடியும் வந்து ஆறுதல் சொன்னாரு. என்னதான் நாம் ஒரு முடிவெடுத்தாலும், கடைசி நிமிடத்துல குழந்தைக்கு ஏதாவதுன்னா நாம் ஒடனே சில ஸ்டெப்ஸ் செய்ய வேண்டியிருக்கு, அதனால மனசை போட்டு குழப்பிக்காதீங்கன்னு போயிட்டார்.அதுக்கப்புறம் வந்துச்சு பாருங்க ஒரு குளிர், டெல்லில காலைல 5 மணிக்கு கூட அப்படி குளிராது. கைகளெல்லாம் வெட வெடன்னு நடுங்குது என்னால இழுக்க முடியல. என்ன ஆகுதுன்னு கேக்கற நர்ஸுக்கு சொல்ல முடியலை. கால்களும் இன்னும் டேப்லயே இருக்கு. குளிருதுன்னு சொல்றதுக்குள்ள நாக்கு குழறுது. நான் செத்தேன்னு நினச்சது ரெண்டே எடங்கள்லதான். ஒன்னு, அந்த ப்ரொசீஜரப்ப, இன்னொன்னு இந்த குளிரப்ப. இந்த மாதிரி நடப்பது சாதாரணம்ன்னு நினைக்கறேன். ஏன்னா குளினு சொன்னவுடனே நர்ஸ் ஜெர்மி, எங்கிருந்தோ சுட சுட, ஆவி பறக்கற பெட்ஷீட்டுக்கள் கொண்டு வராங்க. கிட்டத்தட்ட 10 பெட்ஷீட் போட்டாச்சு...எல்லாத்துல இருந்தும் ஆவி வெளியாகுது, இருந்தும் குளிர் அடங்கலை. டாக்டர் ஏதோ மாத்திரை போட சொன்னார். போட்டும் நிக்கலை. குளிர்ல இங்க நாங்க போடற கோட்டெல்லாம் அவர் கொண்டு வந்து போட்டுவிட்டார், எதுவுமே வேலைக்கு ஆவலை. குழந்தை 6:24க்கு பிறந்தான். 8:30 வரை இந்த கஷ்டத்தை சகிக்க முடியாம திணறி திணறி சகிக்க வேண்டியிருந்தது. 8 மணிக்கு நர்ஸ் ஜெர்மிக்கு ட்யூட்டி முடியறப்ப அவங்களோட ஏதோ ரெக்கார்டுல எழுதக்கூட நேரமில்லை. எங்ககிட்ட அவசர அவசரமா சொல்லிட்டு கிளம்ப வேண்டிய நிலமை. அந்தளவு என்னை பாக்க வேண்டியிருந்தது. பின் 8:30 மணிக்கு மெதுவா தூக்கம் வருது. அப்பதான் ஒரியாக்காரர் எங்கேன்னு கேட்டா பக்கத்து பெட்டுட தூங்கிட்டிருக்கார். பார்த்து, டாக்டர் யாரும் வந்து அவருக்கும் ஊசி போட்டுரப் போறாங்கன்னு சொல்லிட்டு தூங்கிட்டேன். பின் 10 மணிக்கு அம்மி ஃபோன் செய்யறப்பதான் நடந்த எல்லா விஷயமும் சொன்னோம். கேட்டவுடனே அவங்களுக்கு அங்க ஐவி ஏத்த வேண்டியதாயிடுச்சு. எங்க மாமிக்கு சொன்னவுடனே அவங்களும் அழுகை. ரெண்டு பேரும் தனியா இருந்துட்டு இவ்ளோ கஷ்டப்படணுமான்னு. பின்ன மூணு நாள் ஹாஸ்பிடல் வாசம், ஜுஜ்ஜூவுக்குதான் கஷ்டம். தினம் கொஞ்ச நேரம் வந்து பாத்திட்டு போறப்ப, போக மாட்டேன்னு அழுகை, அப்படி இப்படின்னு தேத்தி அவர் கொண்டு போயி விட்டாலும் காரிலிருந்து எறங்க மாட்டேன்னு அழுகை. ஹன்னாஹ் வீட்டிலும் ஒரு நாள் சாயந்திரம் முழுக்க யாருடனும் பேசாமல், விளையாடாமல் ஹன்னாஹ் வீட்டுக்காரர் மடியிலேயெ அழுதழுது தூங்கியிருக்கான். எப்படியோ இதெல்லாம் கழிஞ்சுது. அல்ஹம்துலில்லாஹ். இப்ப ரெண்டு மாசம் ஆகற ஹனீஃபா சிரிச்சு சிரிச்சு வலியெல்லாம் மறக்க வெச்சிட்டிருக்கார். :))


...
ஹனீஃபாவும், ஜுஜ்ஜூவும் :)
...
...

இருங்க இருங்க போயிடாதீங்க. இந்த இவ்வளவு கஷ்டமான வேளைகளிலும் அடிக்கடி எனக்கு மெயில் செஞ்சு, மெயில்ல கர்ப்பிணிப் பெண்களுக்கான டிப்ஸ், ரெசிபி எல்லாம் தந்து, சுகப்பிரசவம் ஆக ஆறுதலெல்லாம் தந்து, டெலிவரி ஆன பின்னும் ஒரு நாள் எனக்காக் நெடு நேரம் இரவு கண் முழிச்சு சாட்  Chat மூலமா ஆதரவு  தந்துன்னு...இன்னும் நிறைய நிறைய உதவிகள் செஞ்ச ஒருத்தங்களுக்கு ஒரு அவார்டு தரப்போறேன். நீங்களும் வாங்க. பக்கத்தில இருந்தால் உண்மையாகவே தந்திருப்பேன், அவங்க அன்புக்கு என் து’ஆக்களும், நன்றிகளும். தூரமா இருப்பதால், எப்ப முடியுதோ அப்ப இன்ஷா அல்லாஹ் நானும் உதவிட முயல்கிறேன். யாருன்னு யூகிச்சீங்களா???

..



..
வேற யாரு, நம்ம ஜலீலாக்காதான். அல்ஹம்துலில்லாஹ், அவர்களுடைய அன்பு, அள்விட முடியாதது. அக்கா, இந்த அவார்டு உங்களுக்காகவே. இப்போதைக்கு இதுதான் தர முடிந்தது :( இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு தக்க கூலி தருவானாக. :)






35 comments:

உங்கள் கருத்துக்கள்...

தாய்மை எனப்படுவது யாதெனில்... (4)

Wednesday, February 09, 2011 Anisha Yunus 20 Comments


ஹ்ம்ம்.. ப்ரீச் பேபின்னு தெரிஞ்சப்புறம் என்ன செய்ய, சில வலைப்பக்கங்களை பார்த்த பொறவுதேன் கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சது. இதுல மூணு வகை இருக்கே, இதுல முதல், மற்றும் ரெண்டாவது பொசிஷன் பரவாயில்லை(Complete and Frank position), செய்யற சில டாக்டர் இதை நார்மலா ஆப்ரேஷன் இல்லாமலே பிரசவத்தை இயற்கை முறைல அனுமதிப்பாங்க. (எல்லாரும் இப்படிப்பட்ட பிள்ளைகளை இயற்கைல பிரசவிக்க அனுமதிக்கறதில்லை. கண்டிப்பா உங்க டாக்டரிடம் முதலிலேயே கேட்டுக்கணும், இப்படி இருந்தால் அவங்க என்ன செய்வாங்கன்னு!!) அதாவது குழந்தையோட இடுப்பு பகுதியும் தலைப்பகுதியும் ஒரே சைஸா இருக்கறதால‌ (கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லை) வலி எடுத்து பிரசவத்துக்கு தயாரானா குழந்தையை அதே பொஸிஷன்ல வெளி வர விடுவாங்க. கொஞ்சமா தலை பெரிதா இருந்து மாட்டிகிட்டா அந்த வாசல்லே இடுக்கி- forceps போட்டு எடுப்பாங்க. ஆனா மூன்றாவது பொஸிஷன்ல (Incomplete Breach) 100க்கு 99 டாக்டர் ஆப்ரேஷந்தான் சொல்வாங்க. வெகு சிலர் அந்த நேரத்திலும் இயற்கையா செய்ய முன் வரலாம். இந்தியாவில் இதுக்கு எல்லாம் எவ்வளவு சான்ஸ்னு தெரியாது..!!

காலைல 8:30க்கே அப்பாயிண்ட்மென்ட்டுங்கிறதால சீக்கிரமே வீட்டுக்கு திரும்பியாச்சு. ஜுஜ்ஜூ வண்டியிலேயே தூங்கிட்டதால அவனை அப்படியே கொண்டு வந்து பெட்டுல போட்டாச்சு. இவரும் லொஹர் தொழுகை தொழறதுக்கு கிளம்பி போயிட்டார். எல்லா குழப்பங்களையும் இன்னும் குழப்பிட்டே நான் நெட்டுல இயற்கை வழிமுறைகள் என்னன்னு பாக்கறேன்.
நம்ம ஊர்ல எல்லாம் வருசங்களுக்கு முன்னாடி தாதின்னு ஒரு பழக்கம் இருந்தது. அந்த தாதிதேன் வந்து கர்ப்ப காலத்துல தாயை எல்லாம் நல்லா இருக்கான்னு பாப்பாங்க, பின்ன பிரசவமும் முடிச்சு வப்பாங்க, வீட்டுலயே. பொறவு ஹாஸ்பிடல் எல்லாம் வரப்போயி இந்த நிலமை மாறிடுச்சு. ஆனா அந்த வழக்கம் இன்னும் அமெரிக்காவுல இருக்கு. நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரு பயம் என்னன்னா, பிரவத்துலயோ, பிரசவம் முடிஞ்சோ சிக்கலாயிட்டா என்ன பண்ணறதுன்னு. அதனாலேயே, வெறுப்பா இருந்தாலும் டாக்டரம்மாக்களை பார்ப்பது. அந்த மாதிரி தாதிக்களை அப்படின்னு கூப்பிடுவாங்க. நான் இந்த குழந்தைய பத்தி internetல தேடறப்ப ஒரு எடத்துல ஒரு அம்மா, இப்படி ஒரு குழந்தை இருந்து அதை தாதி இயற்கையா பிரசவம் பார்த்ததை படிச்சேன். ஒடனே ஒரு நப்பாசை, அப்படி யார்கிட்டயாவது போயி பிரசவம் பாத்துக்கலாமான்னு. சரின்னு ஒமஹாவில் இருக்கற எல்லாரையும் நெட்டுல தேடி அவங்க பேரை போட்டு reviewsஉம் எப்படி இருக்குன்னு படிச்சு வச்சேன். ரெண்டு மூணு பேர் ரெம்ப நல்லவங்களா தெரிஞ்சாங்க. அவங்களுக்கு எல்லாம் மெயிலனுப்பி, ஃபோனும் செஞ்சேன்...என் சோக கதைய கேளு தாய்க்குலமேன்னு. அதுல ஒருத்தர் மட்டும் பதில் எழுதினாங்க. கேரி லாஃபிங் (Carrie Laughlin) அப்படின்னு பேர். அவங்க சொன்னாங்க, இதுல‌ ரொம்ப காலம் கழிஞ்சிருச்சு, இருந்தாலும் நான் என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன். கொஞ்சம் பொறுங்க, ஒரு வேலையை முடிச்சிட்டு செய்யறேன்னு. இன்னொருத்தங்க ஊர்ல இல்ல. சரின்னு அந்த மெயிலுக்கு பதில் சொல்லிட்டு மத்த டாக்டருங்களுக்கு ஃபோன் செய்யறேன், யாராவது என் கேஸை எடுத்துகிட்டு நார்மல் டெலிவரி செஞ்சு குடுங்கன்னு. ஜுஜ்ஜூவின் போது என்ன பிரச்சனையோ அதேதான் இப்பவும். டெலிவரி டேட் தாண்டியதால யாரும் எடுத்துக்கலை. நேரம் போயிட்டே இருக்கு, சாயங்காலம் 5 மணிக்குள்ள எதுவும் முடிவு தெரியலைன்னா பொறவு வேற வழியில்லை, அடுத்த நாள் ஆப்ரேஷந்தேன்.

3 மணி போல கேரி பதிலெழுதினாங்க. ஒமஹாவில 4 டாக்டர் மட்டும்தேன் இந்த மாதிரி பிள்ளைங்களை நார்மலா டெலிவர் செய்யறதாகவும், அவங்க நாலு பேருக்கு ஃபோன் செய்ங்கன்னும். கேரியோட ஃப்ரெண்டு ஒரு பொண்ணு கைரோப்ராக்டர், அது மூலமாகவும் சில சமயம் குழந்தை கீழே திரும்பும்னு அவங்க அட்ரஸும், இன்னொரு நபரின் பேரும் சொன்னாங்க. அது, ஹெதர் ராம்சே(Heather Ramsay). அவங்களும் ஒரு தாதிதேன். தனியா பக்கத்து ஊர்ல ஒரு கிளினிக்கே வச்சிருக்காங்க. (தாதிகள் கிளினிக் வைப்பது வழக்கம் கிடையாது. இவங்க ரெம்ப பிரசித்தம்!!) அவங்களுக்கு ஃபோன் செஞ்சு கேளுங்கன்னு சொன்னாங்க. அவங்களுக்கு ஃபோன் செஞ்சா அவங்களோட பி.ஏ எல்லாம் கேட்டுட்டு, நான் அவங்ககிட்ட சொல்றேன், அவங்க இந்த கேஸை எடுத்துப்பாங்களான்னு தெரியலை, எடுத்துகிட்டா உங்களுக்கு சொல்றோம்னு. சரின்னு சொல்லிட்டு நானும் ஒரியாக்காரர் வந்த ஒடனே அவர்கிட்ட இதையெல்லாம் விளக்கமா சொல்லிட்டு, சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன். மணி 4:45க்கு ஒரு ஃபோன். இவர்தான் எடுத்தார். இங்க அலுவலக ரீதியா யார்கிட்டயாவது பேசணும்னா அவங்க கணவர், மனைவிகிட்ட கூட அதை பேச மாட்டாங்க. சம்பந்தப்பட்ட ஆள்கிட்டதான் சொல்வாங்க. ஜுஜ்ஜூவின் போது எனக்கு கர்ப்பமா இருக்கறதை கன்ஃபர்ம் செஞ்ச அந்த நர்ஸம்மாவும் என்னை மட்டும் தனியா ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போயி ஒரு கவர்ல ரிசல்ட் எழுதி அதை சொன்னது இப்பவும் ஞாபகம் இருக்கு. நானும் பயந்திட்டே போறேன்...ஒரு வேளை இல்லைன்னு சொல்லிடுவாங்களோ..இல்லைன்னா ஏதும் பிரச்சினை இருக்குன்னு சொல்வாங்களோன்னு...அவங்க இதெல்லாம் எதுவும் இல்லாம நீங்க தாயாகப் போறீங்கன்னு சொன்ன மறு நிமிஷம் அழுதிட்டேன். இப்ப மாதிரி வலைப்பூவில எழுதிட்டிருந்திருந்தா, அடங்கொய்யால... இதுக்குதேன் இந்த பில்டப்பான்னு வந்திருப்பேன்... அப்ப சந்தோஷம் மட்டும்தேன் இருந்தது...!! :))

அது மாதிரி, இவர் ஃபோன் எடுத்தவர், என்னிடம் ஃபோன் குடுத்தார், உன்கிட்டதான் பேசணுமாமான்னு. நான் ஃபோனை வாங்கினால், பேசறது ஹெதர் ராம்சே, என்கிட்ட அவங்களுக்கு தந்த தகவல் எல்லாம் சரியான்னு கேட்டுட்டு, என்னை பொறுமையா கேக்க சொல்லி இந்த மாதிரி பிரசவங்களை பத்தி சொன்னாங்க. அதுல கேரி சொன்ன நாலு டாக்டர்ல ரெண்டு பேர்ஊர்ல இல்லைன்னும், இன்னொருத்தர் ஆப்ரேஷந்தேன் செய்யறாதாகவும், இன்னுமொருத்தர் நார்மலா பாப்பார்ன்னும். அவர்கிட்ட நான் போகலாம், அவர் எந்த நிலையிலும் கேஸை எடுத்துப்பான்னு. இதை அவங்க சொல்றப்பவே மணி 5 ஆயிடுச்சு. இங்கே எல்லாம் 9 மணியில இருந்து 5 மணி வரைதேன் கிளினிக்கும். அதன் பின் உங்களுக்கு என்ன ஆனாலும் ஹாஸ்பிடல்ல எமெர்ஜென்சிக்குதேன் போகணும். உங்களால முடிஞ்சா அடுத்த நாள் வரை உயிரையும் வலியையும் தாங்கலாம். நானும் மணி 5 ஆயிடுச்சே எப்படி அடுத்த நாள் அப்பயிண்ட்மெண்ட் போடறது, நாம போகறதுன்னு நினைக்கற‌ப்ப அந்தம்மா எனக்காக அந்த டாக்டர்கிட்ட பேசிட்டதாகவும், அடுத்த நாள் 11 மணிக்கு அப்பயிண்ட்மெண்ட் தந்திட்டதாகவும் சொன்னாங்க. எனக்கு கூரையை பிச்சிட்டு மழை கொட்டாத கொறைதான். ஏன்னா, நார்மல் டாக்டருக்கே ஒரு வாரத்தில அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது. இதுல ஹை ப்ரொஃபைல் டாக்டரை எப்படி அதே நாள்ல பாக்க முடியும் சொல்லுங்க. எனக்கு ரெம்ப சந்தோஷமா போச்சு. ஒரு பத்து நிமிஷம் நன்றி மட்டுமே சொல்லிகிட்டிருந்தேன், அவங்களுக்கும், அவங்களையும் நம்மையும் படைச்ச இறைவனுக்கும். அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன். (மனித குலத்தையெல்லாம் படைத்த இறைவனுக்கே புகழனைத்தும்!!)

dr. marvin stancil
ஃபோன்ல பேசின பிறகு 7 மணிக்கு கேரி சொன்ன அந்த கைரோப்ராக்டரை போய் பாத்தோம். ஓமக்குச்சியாட்டம் இருந்துட்டு அந்த பொண்ணு நம்மளை அன்னேரத்துல இப்படி எக்ஸர்ஸைச் செய்யி, அப்படி செய்யின்னு. அதையும் செஞ்சேன். பொறவு வீட்டுக்கு போயி படியில(staircase) கையால எறங்கவும், எக்ஸர்ஸைஸ் பால்'ல உக்காந்து ஜம்ப் செய்யவும் சொல்லுச்சு. கைரோப்ராக்டர் கிட்டத்தட்ட நம்ம ஊரு கை வைத்தியம் மாதிரி, அக்கு பன்சர் மாதிரின்னு வச்சிக்குங்களேன். சரின்னு அது சொன்னதெல்லாமும் செஞ்சேன். அந்த இரவு அம்மாகிட்ட விஷயம் சொல்லியாச்சு. மாமிகிட்ட சொல்லலை. அந்தளவு செய்திகளை அவங்களால தாங்க முடியாது. அடுத்த நாள் காலைல எந்திரிச்சி, முன்னமே சொல்லி வச்சிருந்த ஃப்ரெண்டு ஹன்னாக்கு ஃபோன் செஞ்சு ஜுஜ்ஜூவை 10 மணிக்கு கொண்டு வந்து விடுவார்ன்னு சொல்லிட்டு, அவனுக்கு 2, 3 நாள் போடற ட்ரெஸ், தேவையானெ எல்லாம் பேக் செஞ்சாச்சு. டாக்டர்கிட்ட போன பொறவு எதுவும் ஆகலைன்னா திரும்பி வரலாம்ன்னு. இல்லைன்னா, அங்கயே தங்கும்படி ஆனா ஜுஜ்ஜூ ஹன்னாகிட்ட இருக்கட்டும்னு. கிளம்பவே லேட் ஆனதால் ஜுஜ்ஜூவையும் கூட்டிட்டே டாக்டரிடம் போயாச்சு. அவர் பெயர், மார்வின் ஸ்டான்சில் (Marvin Stancil).

போயி பத்து நிமிஷத்துல உள்ள கூப்பிட்டாங்க. டாக்டரை பாத்தவுடனே ஒரு நம்பிக்கை மனசுல, கண்டிப்பா அல்லாஹ் நமக்கு இவர் மூலமா ராஹத்தாக்கி குடுப்பான்னு. அவரும் வந்து பேசி, சகஜ நிலமைக்கு கொண்டு வந்த பின்ன மேல முதல் பாராவில் எழுதியிருக்கற சேதிய சொன்னாரு. அதுவரை இந்த பொசிஷன் பத்தியும் எதுவும் தெரியாது, கவலையும் இல்ல. இப்ப கவலை ஆரம்பிக்குது, எந்த பொசிஷன்ல இருப்பான்? ஸ்டான்சில் டாக்டர் என்னிடம் பொசிஷன் பத்தி கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். ஒடனே அவரு அல்ட்ராசவுண்டு கொண்டு வந்து அதே ரூம்ல வச்சு பாத்திட்டு குழந்தை மொத பொஸிஷன்ல இருக்கறதா சொன்னாரு. அப்புறம் பிரசவம் எப்படியெல்லாம் இயற்கையா கொண்டு வரலாம்னு சொல்லிட்டு, ஒரு வழிமுறைல இப்ப‌வும் குழந்தைய கீழ திருப்ப முடியும்ன்னாரு. அதுக்கு பேர் சுருக்கமா வெர்ஷன் ப்ரொசீஜர் (external version procedure). அதுல தாயோட வயிறு மேல கைய வச்சு குழந்தைய கீழ திருப்பி விடுவாங்க. அப்படி அந்த குழந்தைய திருப்ப முடிஞ்சா வெற்றி. ஆனால், பல சமயம் குழந்தை மறுபடியும் அதே பொசிஷனுக்கு வர சான்ஸ் இருக்கு. அதனால அவங்களுக்கு சான்ஸ் தராம நாம நினைச்ச மாதிரி நார்மலாக்கணும்னா அந்த ப்ரொசீஜருக்கு அப்புறம் எபிடோசின் போட்டு வலிய செயற்கையா ஆரம்பிச்சிடுவாங்க. அதே போல, இந்த ப்ரொசீஜராலயோ அல்லது ப்ரொசீஜர் இல்லாம குழந்தை அப்படியே பிறந்தாலோ, பிரச்சினை குழந்தைக்கு வர வாய்ப்பில்ல, எந்த சேதம் வந்தாலும் அது  தாய்க்குதான். இதையெல்லாம் நல்லா புரிஞ்சு சம்மதம்ன்னா நாம் மதியம் ரெண்டு மணிக்கு அந்த ப்ரொசீஜரை செய்யலாம்ன்னார். என்ன என்ன விளைவுகள்,

1. பனிக்குடம் ஒடையலாம். உடனே பிரசவ வலி ஏற்படலாம்.
2. கர்ப்பபைலயோ, அல்லது அதை சுத்தியிருக்கும் நாளங்களிலோ சிராய்ப்பு, வீக்கம் ஏற்படலாம்.
3. வேறேதும் உள்ளுறுப்பில் அடி பட்டோ/ குழந்தை இடி பட்டோ சாவு நிகழலாம் (மிக மிக மிக கம்மியான சான்ஸ்தேன். பயம் வேண்டாம்!!)

இதெல்லாம் யோசிச்சு, சரின்னு சொல்லி, மதியம் ரெண்டு மணிக்கு சரின்னு சொல்லிட்டு வெளில வர்றப்ப மணி 12. ஃபோன் செஞ்சு யார்கிட்ட சொன்னாலும் அதெல்லாம் வேண்டாம், பேசாம ஆப்ரேஷன் செஞ்சுக்கன்னு சொல்றாங்க. இன்னொரு தெரிஞ்ச டாக்டர், அந்த ப்ரொசீஜர் எல்லாம் உன்னால தாங்க முடியாது, அதுக்கு ஆபரேஷன் வலியே பொறுத்துக்கலாம்னு.எல்லாத்தையும் கேக்கறேனே ஒழிய மனசுல முடிவெடுத்தது எடுத்ததுதேன். ஒரியாக்காரர், ஜுஜ்ஜூவை ஹன்னாகிட்ட விட்டுட்டு வர போயிட்டார். (டாக்டரிடம் பேசி முடிக்கறதுக்குள்ள ரூமெல்லாம் தண்ணி ஊத்தி, ஜாலியா எஞ்சாய் பண்ணார். என் நிலமைய விட டாக்டருக்கு ஜுஜ்ஜூவை அந்த நேரத்துல ஹாஸ்பிடல் விட்டு வேறெங்கிலும் வெப்பீங்களானுதேன் கவலை!! :)

ப்ரொசீஜர் செய்யறதுக்கு முன்னாடி சாப்பிடக் கூடாதுன்னு சொன்னதால சாப்பிடற பிரச்சினையில்ல. ஒரியாக்காரரை மட்டும் வீட்டுல ஏதாவது சாப்பிட்டு வாங்கன்னு விட்டாச்சு. இங்கே ஃபோனை வாங்கி அப்பாவிடம் பேசறப்ப கட்டுப்படுத்த முடியாம அழுகறேன். காய்ச்சல் என்றாலும் என்னை விட்டு எங்கம்மாவோ அப்பாவோ நகரவே மாட்டாங்க. அப்படி இருந்தவ, இங்க தனியா இப்படிப்பட்ட சோதனை எல்லாம் பாக்க வேண்டி இருக்கேன்னு அழுகை. அப்பாவும் ஆறு
ல் சொல்லி, அங்கே இருந்தே து'ஆ செஞ்சு ஃபோன் மூலமாகவே ஊதினாங்க. இதெல்லாம் இன்னொரு சமயமா இருந்திருந்தா நானே கமெண்ட் செஞ்சிருப்பேன். நானிருந்த நிலைல, இன்னொரு முறை ஃபோன் பேசுவேனான்னே மனசுல தோணிடிச்சு. அம்மி அப்பாவும் அழுக, நானும் இங்கே அதே நிலைமை. சரி, ரெம்ப பேசினா நமக்குதானே கஷ்டம்னு வெச்சிட்டேன். பின்ன டாக்டர் சொன்ன 4வது மாடிக்கு லிஃப்ட்டுக்கு போறேன்....



.

20 comments:

உங்கள் கருத்துக்கள்...