இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய
இலக்கிய
மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப்
பார்த்தவுடன் அதிர்ச்சி. என்னோடு அந்த அமர்வில் பேச இருந்தவர்களில் ஒருவர்
இந்துத்துவ மேடைகளில் பேசித் திரிபவரும், அவர்களால் "நெய்தல் நெருப்பு" (!)
என்றெல்லாம் காவடி
தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப்
பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து
விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர்
கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
மேடையில்
அந்த நபர் குருஸ் உட்கார்ந்திருந்த பக்கம் கூட நான் திரும்பவில்லை. எனக்கு
முன்பாக அவர் பேச அழைக்கப்பட்டார். அங்கு திரளாகக் கூடி இருந்த
முஸ்லிம்களைப் பார்த்து "சாச்சாமார்களே, சாச்சிமார்களே.." என விளித்து அவர்
பேசத் தொடங்கினார். அவர்கள் ஊரில் முஸ்லிம்களை அப்படித்தான் உறவு முறை
சொல்லிக்
கூப்பிடுவார்களாம். அதிகம் பேசவில்லை. ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துவிட்டு அமர்ந்தார்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில்
வேலை
செய்து கொண்டிருந்த அவர் ஒரு சூட் கேஸ்நிறைய பணத்தைச் சுமந்து கொண்டு
மும்பையில் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தாராம்.அவர் போய்த்தான்
ஊழியர்களுக்கு ஊதியம் பிரித்து அளிக்கப்பட இருந்ததாம். அப்போது முஸ்லிம்கள்
அதிகம்
வசிக்கும் அந்தப் பகுதியில் அவர்களைத் தாக்கிக் கொல்ல ஆயுதங்களுடன் வந்த
இந்துத்துவசிவசேனைக் கும்பல் ஒன்று குரூசை நோக்கி ஓடி வந்ததாம். மொழி
தெரியாத இவர் அஞ்சி ஓடி ஒரு பெரிய சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து எழ
முடியாமல் கிடந்துள்ளார். அந்த வீதியில்முஸ்லிம் ஆண்கள் யாரும் இல்லை.
கலவரக்காரர்களைக் கண்டு பயந்தோடி இருப்பார்கள் போல.அநேகமாக குரூஸ்
விவரித்த அந்தக் கலவரம் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் நடந்த
வன்முறையாக இருக்கலாம்.
வன்முறையாளர்கள் அடுத்த இலக்கைத்
தேடிப் போனபின் அங்கிருந்தமுஸ்லிம் பெண்கள் குரூசைத் தூக்கிக்
காப்பாற்றியுள்ளனர். தண்னீர்ப் பற்றாக்குறை மிக்கஅப்பகுதியில் எல்லோர்
வீட்டிலிருந்தும் குடங்களில் தண்னீரைக் கொண்டுவந்து ஊற்றி அவர்மீது
படிந்திருந்த மலத்தை எல்லாம் கழுவி இருகிறார்கள். அன்று இரவு அவருக்குப்
பாதுகாப்பும்
அளித்து காலையில் அவர் கொண்டு வந்திருந்த பணப் பெட்டியையும் கொடுத்து பத்திரமாக அனுப்பியுள்ளனர்அந்த முஸ்லிம் சாச்சிமார்கள்.
இதைச்
சொல்லிவிட்டு அவர் இறங்கியபோது, என்ன இருந்தாலும் ஒருஎழுத்தாளன்,
கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும். இந்துத்துவ மேடைகளில் தோன்றுவதாலேயே இவரை
இந்துத்துவவாதி
எனக் கொள்ள வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டேன். அவர் மேடையை
விட்டுஇறங்கும்போது ஒரு புன்முறுவலையும் பகிர்ந்து கொண்டேன்.
இன்று இந்த நபர் ஏன் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என எழுதியுள்ள
கட்டுரையைப்
படித்தபோதுதான் அன்று சாச்சிமார்கள் இவர் மீது ஊற்றிய தண்ணீர் அவரது
புறஉடல்மீதிருந்த அசிங்கங்களை மட்டுமே கழுவியுள்ளது என நினைத்துக்
கொண்டேன்.
மோடி
அடித்தளத்திலிருந்து வளர்ந்தவராம். வளர்ச்சியின்
நாயகராம்.தீர்க்கதரிசியாம். "A revolutionary, bold and committed
visionary ..."... அடப் பாவி.. அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ்
காரர்கள்இனி உம்மை "நெய்தலின் நெருப்பு" என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்,
"சிங்கம்,புலி, கரடி..." என்றெல்லாமும் கொண்டாடலாம்.
கன்னட
முது பெரும் எழுத்தாளர், நவ்யா இயக்கத்தைத்தோற்றுவித்தவர், ஞானபீட விருது
மட்டுமின்றி பத்ம பூஷன் விருதையும் பெற்றவர், கேரள மகாத்மாகாந்தி பல்கலைக்
கழகத் துணை வேந்தராக இருந்த யு.ஆர், அனந்தமூர்த்தி அவர்கள்,"மோடி
பிரதமரானால் நான் இந்த நாட்டில் வாழ மாட்டேன்" என அறிவித்துள்ளார்.அவர்,
கிரிஷ் கர்னாட் மற்றும் பல கன்னட எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக இன்று
பிரச்சாரம்செய்து கொண்டுள்ளனர்.

ஒரு
150 அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மோடியின் தலைமையில் வரும்
பாசிசக் கும்பலுக்கு வாக்களிக்காதீர்கள் என வெளியிட்ட அறிக்கையை இரண்டு
நாட்களுக்கு முன் நான் இங்கு பகிர்ந்ததைப் பார்த்திருப்பீர்கள்.
இந்திய
வரலாற்றில் வேறெப்போதும் இப்படி ஒருஅரசியல்வாதிக்கு எதிராக எழுத்தாளர்கள்,
கலைஞர்கள் களம் இறங்கியது கிடையாது. இன்று ஏன்இந்த மாற்றம்? மோடி என்கிற
நபர் ஒரு வெறும் அரசியல்வாதி அல்ல. மோடி எனும் உருவில் இந்தியபாசிசம் இன்று
முழுமை அடைகிறது. பெரு முதலாளியமும் பாசிசமும் பிரிக்க இயலாதவை
என்பதுமுசோலினி அளித்த வாக்குமூலம். இது நாள் வரை இந்துத்துவம்
எத்தனையோகொலைகளையும் வன்முறைகளையும்விதைத்திருந்தபோதும், வெறுப்பைக்
கட்டமைத்தபோதும் அப்போதெல்லாம் பெரு முதலாளியம் அத்துடன் ஊடு பாவாய்க்
கலந்ததில்லை. சற்று விலகியே இருந்திருக்கிறது. இன்று அந்த இணைவு
ஏற்பட்டுள்ளது. மோடி என்னும் வடிவில் அது நிகழ்துள்ளது.
எழுத்தாளநெஞ்சங்கள் வெறுப்பை வெறுப்பவை. எனவேதான் இந்த எதிர்ப்பு.
இரண்டாயிரம்
பேர் கொல்லப்பட்டு, ஆண்டுகள் பன்னிரண்டாகியும் இன்னும் 50,000க்கும்
மேற்பட்டோர் தம் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலை இருந்தும்ஒரு
அடையாளமாகவேனும் வருத்தம் தெரிவிக்காத ஒரு நெஞ்சையும், இத்தனைக்குப்
பின்னும் முஸ்லிம்கள்அளித்த விருந்தொன்றில் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம்
குல்லாயை அணிய மறுத்த மனத்தையும்மோடியைத் தவிர நீங்கள் வேறு யாரிடம் காண
முடியும்?
மரணதண்டனை குறித்து ஜெயமோகன் கக்கி
இருந்தவிஷத்தைக் குறித்த என் பதிவைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார்: "ஒரு
விரிவான பதிலைநீங்க ஜெயமோகனுக்கு எழுதுங்கள் சார்" என்னால் அது
சாத்தியமில்லை எனச் சொன்னேன்.
ஜெயமோகனுக்கோ அல்லது ஜோ டி
குருசுக்கோ என்னால்பதில் எழுத முடியாது. அவர்கள் எதையும் புதிதாகச்
சொல்வதில்லை. எற்கனவே பலமுறை பதில்சொல்லப்பட்ட, விளக்கப்பட்ட
பிரச்சினைகளைப் புதிது போலச் சொல்லும் பாசிச உத்தியைக்
கடைபிடிப்பவர்கள்அவர்கள். குருசின் இந்தக் கட்டுரையைத் தான் (கீழே உள்ள
பதிவில் உள்ளது) எடுத்துக் கொள்ளுங்களேன். என்ன அவர் புதிதாய்ச்
சொல்லிவிட்டார்?மோடியை வளர்ச்சியின் நாயகர் என்பதற்கு இதுவரை London School
of Economics பேராசிரியர்கள்முதல் நம் ஊர் பொருளாதாரவாதிகள்,
அரசியல்வாதிகள் எல்லோருந்தான் பதில் சொல்லி விட்டனர்.முக நூலில்தான் எத்தனை
கட்டுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்? இதற்கு மேல் நான்
என்னசொல்லிவிடப் போகிறேன்? இதற்கு பதில் சொல்வதை விட ஒரு காமெடி பீசாகிற
வேலை வேறென்ன இருக்கஇயலும்?
ஜெயமோகனின் மரணதண்டனைக்
கட்டுரையை எடுத்து,அதில் மரண தண்டனைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும்
கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள். அப்போது தெரியும். இது எதுவும் புதிதல்ல
என்பது. இந்தக் கேள்விகளைக் கேட்பவன் ஒன்று படு முட்டாளாகஇருக்கவேண்டும்
அல்லது பாசிஸ்டாக இருக்க வேண்டும். மரணதண்டனை இருந்தால் குற்றங்கள்குறைந்து
விடும், தீவிரவாதம் ஒழிந்துவிடும் எனச் சொல்கிற மண்டைகளுடன் யார்
முட்டிக்கொள்ள முடியும்?
ஜெயமோகன் ஜோ டி குருஸ் இவர்களுக்கு முன்னுதாரணம் தமிழில்
இல்லை. இவர்கள் ஒரு புதிய பரிணாமம் ஒரு நோயின் அறிகுறி. இவர்கள் இலக்கிய மோடிகள்.
0 comments:
உங்கள் கருத்துக்கள்...