அறபுகளின் நாயகி -- புத்தக விமர்சனம்.

Thursday, June 04, 2015 Anisha Yunus 0 Comments





ஐடி துறையில் ஏறத்தாழ 8 வருட அளவில் அனுபவம் இருந்தபோது பல்வேறுபட்ட வலைதளங்களையும் பார்வையிட வேண்டியிருந்தாலும் மிகவும் எரிச்சலூட்டும் ஒரு வகையறா, mini / micro marketing websites மட்டுமே. அதாவது ஒரு பொருளை விற்பதற்காகவே தயாராகும் வலைதளம் அது. அதில் அந்த பொருளைப் பற்றி பத்தி பத்தியாக நீங்கள் யூகிக்கும் ஐகான்ஸிலிருந்து பொதுமக்கள் வரை அனைவரும் பேசியிருப்பர். அதன் தரம், குணம், விலை என எல்லாவற்றைப் பற்றியும் ஏறத்தாழ இரு பக்கத்துக்கு அந்தப் பொருளை விற்பனை செய்யும் எல்லா அம்சங்களும் இருக்கும். ஆயினும் அந்தப் பொருளின் நம்பகத்தன்மையை மட்டும் அதில் காண இயலாது. $100, $200 பணம் கட்டினால் அந்தப் பொருள் உங்கள் வீட்டிற்கே வந்து சேரும். அப்படி ஒரு வலைதளத்தைப் பார்த்த அயற்சிதான் ஏற்பட்டது, சகோதரர் ஃபயாஸ் அவர்களின் ‘அறபுகளின் நாயகி’ புத்தகத்தைப் வாசிக்கும்போது. 75 பக்க புத்தகத்தில் முதல் 15 பக்கங்களுக்கு வெறுமனே Testimonials, Testimonials, Testimonials.... Please guyz, grow up!

உண்மையில் பயணத்தில் படிக்க விரும்பி எடுத்துச் சென்ற இரு புத்தகங்களில் ஒன்று, அறபுகளின் நாயகியும், இன்னொன்று ஆயிஷா அன்னையாரின் வாழ்க்கைக்குறிப்பு பற்றிய ஷேக் சுலைமான் நத்வியின் நூலை இதாரா பதிப்பகத்தார் பதிப்பித்திருந்த ஆங்கில மொழியாக்கம் ஒன்றும். அறபுகளின் நாயகி நூலில் எழுதப்பட்டிருந்த விஷயங்களை சுருக்கமாகவும் செறிவாகவும் உம்மஹாத்துல் மு’மினீன் என்னும் ஆங்கில மொழியாக்க நூலில் இரு பக்கத்திற்குள்ளாறேயே முடித்திருந்தது தனிச்சிறப்பு. tongue emoticon tongue emoticon tongue emoticon

புத்தகத்தின் மையக் கருத்தோடு நிச்சயம் ஒத்துப் போகிறேன். ஆம், அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நிக்காஹ் நடக்கும்போதுஅன்னையவர்கள் பால்மணம் மாறா குழந்தையல்ல. அதற்கென நூலாசிரியர் காட்டும் எல்லா ஆதாரங்களோடும் ஒத்துப் போகிறேன். எனினும், இது புதிய விடயமல்ல. நிச்சயமாக அல்ல. ஏற்கனவே பல நூலாசிரியர்களும், ஆய்வாளர்களும் இதை விளக்கத்தோடு உம்மத்தின் முன் சமர்ப்பித்த விடயமே. எனவே இந்தப் பதிவின் பேசுபொருளும் புத்தகத்தின் மையக்கருத்தல்ல. அதற்கான தரம், தகுதி மற்ற நூற்களுக்கு நிச்சயம் உண்டு. Let us analyse only the way, the stage being set for this book. smile emoticon

========================
#மொழியியல் - புத்தகத்தின் பல இடங்களிலும், நேர்மறையான வாக்கிய அமைப்பில் எதிர்மறை சிந்தனைகள் விஷமாய் பரவி நிற்பது கண்டனத்துக்குரியது. உதாரணமாக, அந்த முழு நிலவைப் பற்றிக் கற்பனை செய்ய வேண்டாம் என்றால் முதலில் நம் மூளையில் பதிவது முழு நிலவின் வடிவமே. அதுபோலவே ஒரு கேள்விக்குறியின் கீழ் பல வாக்கியங்களும் வருவது யதேச்சையாகவா அல்லது திட்டமிட்டு நோக்கத்துடனேயே பதியப்பட்ட வாக்கியங்களா எனக் குடைகின்றது. (Pg: 24, 25, 35, 39..)


#பக்கச்சார்பு - பக்கம் 39இல் அபூ பக்கர் ரலியல்லாஹு அன்ஹூவையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஒப்பீடு செய்திருப்பது... சுப்ஹானல்லாஹ்... உங்களின் ideologyயை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வந்து புத்தகம் எழுதுங்கள். அபூ பக்கரின் அளவுக்குக்குட அறிவில்லையா என்பது போல் நீங்கள் எழுதியிருக்கும் பத்தி, நிச்சயம் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்ன என்பதை போட்டுடைத்து விட்டது. Total Bull@%#$%$#. இது போன்ற எண்ணற்ற வாக்கியங்கள் உங்களின் நோக்கம், இலக்கு என்ன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டினாலும் இந்த ஒரு பாரா மட்டுமே தங்களின் இருப்பை வெட்டவெளிக்கு நகர்த்தி விட்டது. Purely poisonous.

#தற்பெருமை - உஸ்தாத் மன்சூர் பற்றிய பாராவாகட்டும். எண்ணற்ற உலமாக்களை, மௌலானாக்களை பெயரின்றி குறிப்பிட்டு, உண்மையை எத்தி வைத்தால் இஸ்லாத்திற்கு இழுக்கு வந்துவிடும் என பொய்யையே அவர்கள் பரப்பிவிடுவது போல ஆலிம்களின் மேல் தோற்றம் எழுப்பி அவர்களை வாசகனின் பார்வைக்கு கேலிக்கூத்தாக்கியதாகட்டும், அவர்களைக் கீழிறக்கிக் காட்டுவதும் தன் புகழை ஆரம்ப பக்கங்களிலேயே பதிந்து கொள்வது என்பதும் the cheapest tactic. #MLM கூட #Better.

இன்னும் உஸ்தாத் மன்சூரின் விடைகளைப் பற்றிய ஆய்வறிக்கையில்(!!!!) நீங்கள் கூறுவது போல, முதல் பாயிண்ட்டில் உஸ்தாத் அவர்கள் ஆறுவயது என வரையறுத்து முடிவு செய்வது பிழையானது என உறுதி கூறியுள்ளார். இரண்டாம் பாயிண்ட்டிலும் அன்னை ஆயிஷா அவர்கள் திருமண வயதை அடைந்த பினனரே திருமணம் நடைபெற்றது என்பதனையும் விளக்கியுள்ளார். மீதம் உள்ள பாயிண்ட்களில், உஸ்தாத் அவர்கள், எப்படி அந்த திருமணத்தை நோக்க வேண்டும் என்பதையும், அதன் மேலான சட்டங்கள் எப்படி வரையறுக்கப்பட்டுள்ளன என்பதனையும் இன்னும் தெளிவாக விளக்கவே முயன்றிருக்கிறாரே ஒழிய, he is not contradicting himself. NO. ஆனால், உஸ்தாதின் பதிலின் இறுதியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள // பதில் தந்தவர் உஸ்தாத் மன்சூர்// என்னும் ஒற்றை வாக்கியம் உஸ்தாதின் பதிலை மீளாய்வு செய்யும் நிலைக்கும் தங்கள் கோணல் பார்வையிலிருந்து படிக்குமாறும் வாசகனை தூண்டிவிடுகின்றது. இவ்வாறான இடங்களில் தஸ்லீமா நஸ்ரீனின் Obsessive writing நினைவிற்கு வருவது தவிர்க்க இயலவில்லை. Sorry to say this.

இன்னும் என் பெருமதிப்பிற்கும், அளவிலா நேசிப்பிற்குமுரிய இமாம் அன்வர் அவ்லகி அவர்களின் அன்னை ஆயிஷா பற்றிய உரையிலும் சரி, இமாமவர்கள் முக்கியமாக விளக்க முன்வருவது, முதலில் நம்புங்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த எந்த ஒரு செயலையும் உங்களின் கற்றறிவைக் கொண்டு பகுத்தாய முயற்சிக்காதீர்கள் என்பதுதான். அபூ பக்கரைப் போல நம்பிக்கை கொள்ள முயற்சி செய்யுங்கள் என்பதுதான் முதல் பாடம். அதனால் மட்டுமே அவர்களெல்லோரும் பொய்க்கு அணி சேர்கிறார்கள், என்னைப் போல உண்மையை ஆராய முன்வரவில்லை, நான் மட்டுமே முதன்முதலாக அன்னையின் கண்ணியத்தைக் காக்க அவதரித்துள்ளேன் எனக் கூவுவது ___!!!! ___!!!! ___!!!! (Please fill in the blanks).

#முனாஃபீக்குத்தனம் - உமர் ரலியல்லாஹு அன்ஹூ சம்பந்தமான, அப்பட்டமாக வலிந்து திணிக்கப்பட்ட episode. ஒவ்வொரு வாக்கியமும், அது கூறும் பொருளும் மிக மிக மிக வன்மையான கண்டனத்துக்குரியது. ஒவ்வொரு வரியிலும் அஹ்லுல் பைத்தினர்கள் அவ்வாறு செய்வதற்கு முன்வர மாட்டார்கள் என்பதை அழுத்தமாக குறிப்பிடும் அதே வேளையில் உமர் அல் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹூவைப் பற்றி, எனக்குப் பிறகு ஒரு நபி இருந்தால் அது இன்னாராகத்தான் இருக்கும் என நபியவர்கள் அங்கீகரித்த உத்தமர் பற்றி, பெண்களின் கண்ணியத்தை காக்க இறைவன் அனுப்பிய பல சட்டங்களுக்கும் மூலக்காரணமாக விளங்கிய சத்தியசீலர் பற்றி கள்ள மௌனம் சாதித்தது உங்களின் Utter Hypocrisyயைப் பறை சாற்றுகின்றது. Ridiculous approach. எழுத்தாணியைக் கொண்டு சத்தியத்தைப் பரப்புங்கள், விஷத்தை அல்ல.

#நடுநிலைமை - இத்தனை காரமாக எந்த புத்தக விமர்சனமும் நான் முன்வைத்ததில்லை இதுவரை. "It is a fault, that this book was given a platform, which it din't deserve." PERIOD.

0 comments:

உங்கள் கருத்துக்கள்...