கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை...


பழைய பதிவுல நம்மளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைன்னு பட்டம் தந்ததா சொன்னதும் ஒரே மயிலு மேல மயிலு (சரி...சரி....மேல மேல...) சரி, நம்மளை பத்தி இன்னும் சரியாத் தெரியலே, சரியா புரிய வெக்கணும்னுதான் இந்த பதிவு. சின்னதுலர்ந்தே தமிழ்னா ரெம்ப இஷ்டம். எங்க தாத்தா உயிரோட இருந்தவரை தமிழ்ல பேசினா அடிதான் விழும், அதனாலேயே என்னமோ தமிழ் மேல ஒருதலைக் காதல் வளர்ந்துட்டே போயிடுச்சு. அது இன்னமும் தீரலை. ஆனா எங்க வூட்டுக்காரருக்கு தமிழ்னாலே அலர்ஜி. அவர் ஒரியாக்காரர். ஆனா அவருக்கு தமிழ் தெரியாதுன்னு நினச்சு எல்லாம் எதும் பேச முடியாது. சரியான சமயத்துல தமிழ்லயே பதில் தந்து நம்மளை கவுத்திடுவார். அதனால ஜாக்கிரதையா இருக்கோணும். சரி, நம்ம பட்டத்தை பற்றி பேசலாம். அதான் சொன்னேனே சின்னதுலர்ந்தே தமிழ்மேல ஒரு 'இது'ன்னு. அதுல எங்க படிஅம்மி, அதாவது எங்க பெரியம்மா, அப்பாவோட சின்ன அண்ணன் வீட்டுக்கு போனா என்னையும் என் தமிழையும் கலாய்ச்சுகிட்டே இருப்பாங்க.

அப்படி ஒரு நாள் நான் அவங்க வீட்ல வெளாண்டுட்டு இருக்கறப்ப எங்க பெரியப்பா பையனும், பெரியம்மாவும் சேர்ந்து, "உனக்குதான் தமிழ் நல்லா வருதே, ஒரு கவிதை சொல்லு"ன்னாங்க ஏற்கனவே எங்க தாத்தாவால வீட்ல தமிழ் பேச முடியாத சுனாமில வருந்தி இருந்த மனசுக்கு அவங்க கேட்டதும் தெம்பா போச்சு. அப்ப நான் 4வது படிக்கறேன். அவங்க வீடு அப்போ செட்டிநாட்டு ஸ்டைல்ல தொட்டிவீடும்பாங்களே அப்படி இருந்தது. அங்க இருந்த தூணையெல்லாம் படத்துல காட்டற பனைமரமா எண்ணி, ஒரு சோலோ ஹீரோயின் ரேஞ்சுக்கு பாடினேன். அந்த பாட்டைப் பார்த்து அசந்து போயிதான் எங்கண்ணன் (பெரிம்மா பையன்) எனக்கு 'கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை'ன்னு பட்டம் கொடுத்தார். சரி, சரி அப்படி அது என்ன பாட்டுன்னு கேக்கற சத்தம் கேக்குது. இதோ உங்களுக்காக மறுபடியும் (பாடலை... எழுதறேன்)

இருண்ட காட்டுக்குள்
அடர்ந்த மரங்கள் நடுவே
தனியாய் திரிபவனே
நீ யார் நீ யார் நீ யார்


ஆனா இவ்வளவு புதிர் வெச்சு பாடியும் அது பேனைப் பத்திய பாட்டுதான்னு எங்கண்ணனுக்கு தெரிஞ்சு போச்சுன்னா பாருங்களேன். என்ன எல்லாரும் அசந்து போயிருப்பீங்களே...ஜில்லுன்னு கொஞ்சம் எளனீ குடிங்க. நெஞ்சு நனையும். அப்புறமா ஓட்டு போடுங்க. ஆனால், என் கவிதை எழுதற ஆர்வம் நிக்கவே இல்லை. தஞ்சாவூர்ல வல்லத்துல டிப்ளமா படிக்கறப்ப ஒரு கவிதை எழுதி நான் அனுப்ப அதுக்கு பரிசும் வந்துச்சு (இப்ப என்ன சொல்றீங்க...இப்ப என்ன சொல்றீங்க...) ஆனா பரிசு எவ்வளவுன்னு தெரியாமலே ட்ரீட் வெச்சு 300 ரூபா காலி பண்ணிட்டேன். ஆனா பரிசுன்னு மணி‍ஆர்டர்ல வந்தது வெறும் 10ரூபாய். ஹ்ம்ம்....வளரும் கவிஞர்களை மனசாற வாழ்த்த தெரியாத கஞ்சாம்பெட்டின்னு நினச்சு விட்டுட்டேன். ரொம்ப நாள் எங்க வீட்ல குடும்ப மலர்ல வந்த அந்த பக்கத்தை லேமினேட் பண்ணி வெச்சிருந்தாங்கன்னா பாத்துக்குங்களேன். அந்த கவிதையும் வேணுமா? ஆனாலும் பாசக்கார பயலுவ. என்னமா வரி விடாம படிச்சுகிட்டே வராங்கன்னா பாரேன். இதான் அந்த கவிதை.

அன்று யார் வைத்த
முற்றுப் புள்ளியோ
இன்று இவள் நெற்றியில் பொட்டில்லை.


எப்புடி? நான் டிப்ளமா படிக்க தஞ்சாவூர் போனப்புறம், எங்க வூட்டு லகடபாண்டி ஒன்னு இருக்கே, என்ற தம்பி, அது நான் எழுதின கவிதையெல்லாம் தான் எழுதியதா ஸ்கூல்ல காட்டி தன்னோட கௌரவத்தை மேல ஏத்திகிடுச்சு. நானும் சரி நம்ம வூட்டுக்குதானே பெருமைன்னு மனசை கட்டுபடுத்திகிட்டேன். இப்ப இந்த கொசுவத்தி சுத்தினது எல்லாம் எதுக்காகன்னு கேக்கறீங்களா, எல்லாம் ஒரு ப்ளான்தான். அடுத்த பட்டம் தர்றதுக்கு இந்த வலையுலகத்தை ரெடி பண்ணனுமே அதுக்காகத்தான். எப்புடி?

கடலும், சுவரும்....

.
கடல் அரித்துக் கொண்டேயிருந்தது. சுனாமிக்குப் பிறகு ஏற்றியிருந்த கரைகளும் கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து விட்டிருந்தன. மனங்களின் ஈரம் வறண்டது போல. ஏன் கடலுக்கும் கவிதைக்கும் இத்தனை ஆழமான உறவு.... ஏன்..
.
.
---------
போலாம்மாம்மா???
இருடா... இப்பத்தானே வந்தோம். கொஞ்சம் விளையாடேன். அப்புறமா போகலாம்.
.
.
-----------
போலாம்மா....
ஏன் போனும் போனும்ன்றே???? வீட்டில யார் இருக்கா.
இங்கயும் யாருமில்லயில்லம்மா....
.
.
------------
உடைகளைக் கவ்வியிருந்த மண்ணை உதறியபடியே எழுந்து நின்றேன். உற்சாகத்துடன் பொங்கி வந்த அலைகளை இன்னொருமுறை பார்த்துக் கொண்டேன்.
அலைகள் ஆயிரம் உயிர்கள் ஒன்றாய் வந்தது போல் தெரிந்தன எனக்கு.
மௌன சுவர்கள், கம்பீரமும், திடமும் வாய்ந்த தந்தை போல் தெரிந்திருக்குமோ அவனுக்கு... தெரியவில்லை.
.
.
எதுவோ புரிந்தது.
எதுவும் புரியவில்லை.
நகர ஆரம்பித்தோம்.

கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??


கேள்வி: ரமலான் என்றால் என்ன? எதற்காக இதனைக் கொண்டாடுகிறீர்கள்??

பதில்: ஒரு சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் இரண்டு மட்டுமே. உடற்பசி மற்றும் வயிற்றுப்பசி. இந்த இரண்டுமே பூர்த்தியாயிருக்கும் நிலையில் மனிதன் தன் நிலை மறந்தே வாழ்கிறான். சுற்றிலும் நிகழ்பவைகளோ, நிகழ்ந்தவைகளோ, நிகழக்கூடியவைகளோ, அவனின் கவனத்தை திசை திருப்புவதில்லை. இந்த இரண்டில் எது மட்டுப்பட்டாலும், மனிதனின் எதிர்வினைகள், மிகுந்த தாக்கத்தை அவனைச்சுற்றி எல்லா வகையிலும் ஏற்படுத்தக் கூடியவை. ஆனால், இரண்டுமே மட்டுப் படும்போது, மனிதன், தன் நிலையறிந்து, வரம்புகள் அறிந்து, எண்ணங்களையும், இச்சைகளையும் கட்டுப்படுத்தி ஒருமுகப்படுகிறான்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தக்வாவுடையோர்களாக ஆகலாம். (அல் குர்’ஆன்2:183)

என்கிறது குர்’ஆன். தக்வா என்றால்?? தக்வா என்றால் இறையச்சம்? இறையச்சம் என்பது எப்போது ஏற்படும், தன்னிலை அறிந்தவனுக்கு மட்டுமே இறையச்சமும், இறைத்திருப்தியைப் பெற வேண்டும் என்னும் வேட்கையும் ஏற்படும். அதைத்தான் மற்ற மார்க்கங்களும் மோட்சம் என்கின்றன. அதன் சூட்சுமம் என்ன, தன்னிலை அறிந்து, தன் வாழ்வின் பொருள் அறிந்து அதன் மேல் நற்செயல்கள் செய்ய முற்படல். அதுவே இறைவனை சென்றடையச் செய்யும்.

படைத்தவனுக்குத்தானே படைக்கப்பட்டவற்றின் பலமும், பலவீனமும் தெரியும்... அல்லவா?? எனவேதான் அல்லாஹ் ஒரு குறிப்பிட்ட தவணையில் மீண்டும் மீண்டும் மனிதனை தன் நிலையறிய வைக்க ஒரு ஒழுக்கநிலையை கட்டாயமாக்கினான். வருடத்திற்கோர் முறை, ஒரு மாதம் முழுக்க, பகலில் இந்த இரண்டுப் பசியையும் அனுபவியுங்கள், இரண்டையும் நிரப்ப வேண்டாம், என நோன்பு நோற்கச் சொல்கிறான். இந்த மாதம் மட்டுமன்றி, திருமணம் செய்து கொள்ள வசதியில்லாதவர்களையும் நபிமொழி, நோன்பு நோற்கச் சொல்கிறது. 

அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நானும் அல்கமா மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) சொன்னார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் "இளைஞர்களே! திருமணம் செய்துகொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று சொன்னார்கள்.


நோன்பு, மானம் காக்கும் கேடயம் என்கிறது. சொல்வதற்கு மிக எளிதாகத் தெரியும் இந்த கட்டளை, அனுபவிப்பதற்கு எளிதானதல்ல. ஏன்??

எப்படி வயிற்றுக்கும் உடலுக்கும் உணவு தடுக்கப்படுகிறதோ, அதே போல் சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும், இறைவன் வரம்புகளை (எல்லா நாட்களிலுமே அவை வரம்புகளே எனினும்) இப்பொழுது இன்னும் மிகைப்படுத்துகிறான்.

வயிற்றை நிரப்புவது போன்று வேறு வேறு எந்தப் பாத்திரத்தை நிரப்புவதும் அல்லாஹு தஆலாவுக்கு வெறுப்பானதாக இல்லை எனவும் ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை எனவும் நபிவழி கூறுகிறது. உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என்று இன்னுமோர் நபிமொழி கூறுகிறது.

சொல், செயல்களில் நிதானத்தையும், வரம்புகளையும் விழிப்புடன் கவனிக்கச் சொல்கிறான். சுற்றியிருக்கும் வறியவர்களை, வளம் / வலிமை குன்றியவர்களை கவனிக்கச் சொல்கிறான். இல்லாமை என்பதைப் புரியவைக்கிறான். இத்தகைய கட்டளைகளை ஏற்று செயல்படுத்துவது என்பது மிக மிகப் பெரும் பரீட்சையாகும். சுய விருப்பத்தின் பேரிலான இச்சைகளுக்கும், புலன்களுக்கும் Vs இறைவனின் கட்டளைக்கு அடிபணிவதற்குமிடையேயான பரீட்சை. இத்தகைய பரீட்சையை ஒரு மாதம் முழுக்க தன் விருப்பத்தின் பேரிலேயே முஸ்லிம் மக்கள் செய்கிறார்கள். இந்த மாதம்தான் ரமதான் மாதம்.

இதே மாதத்தில்தான், இவ்வுலகின் இறுதி மனிதன் வரை கடைப்பிடிக்கக்கூடிய தனிமனித ஒழுங்கு, இறைபொருத்தம் தேடும் வழிகள், பிற்கால சமுதாயங்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள், சமூக / குடும்ப / தனி மனித / அரசியல் சார்ந்த / பொருளாதார சட்டங்கள் என எல்லாத்திசையிலிருந்தும் மனிதனைப் பாதுகாக்கும் சட்டங்களையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கிய திருக் குர்’ஆனும் அருளப்பெற்றது.

எப்படி விரதம் இருப்பதாலும், நீராகாரம், பழங்கள் போன்ற பத்திய உணவுகளை மட்டுமே உட்கொள்வதாலும் உடலிலிருக்கும் அசுத்தங்கள் / toxins வெளியேறிவிடும் என்பது மருத்துவ உண்மையோ, அதே போல்... இவ்வகையிலான புலன்களின் மீதான நோன்பு, மனித மனதினை, எண்ணங்களைத் தூய்மைப்படுத்துகிறது.

ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

மாதம் முழுக்க பரீட்சை வைத்து, களைப்படைந்த மக்களுக்கு ரமதான் மாதம் முடிவுற்றதும், “ஈதுல் ஃபித்ர்” என்னும் பண்டிகை / ஓர் நாள் விழா / உற்சாகக்
கொண்டாட்டம் பரிந்துரைக்கப்படுகிறது... அதுவும், இறைவனைத் தொழுது நன்றி செலுத்தும் விதமாக.

உண்மையில், இந்தப் பரீட்சையை ஆழ்மனதிலிருந்து ஒரு உத்வேகத்துடன் செய்தவர்களுக்கு, இந்த விடை கூறல் - பெருநாள், மிகக் கனமானதாகவே இருக்கும். இல்லையா??

(இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள: http://www.satyamargam.com/islam/analysis/1018-1018.html)

.

'மோ' டி குரூஸ்... அ.மார்க்ஸ் :: மக்களே இந்தியாவை மீட்டெடுங்கள் ஃபாஸிச சக்திகளிடமிருந்து....

April 10, 2014 at 2:09am
இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய
இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்னோடு அந்த அமர்வில் பேச இருந்தவர்களில் ஒருவர் இந்துத்துவ மேடைகளில் பேசித் திரிபவரும், அவர்களால் "நெய்தல் நெருப்பு" (!) என்றெல்லாம் காவடி
தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர் கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

மேடையில் அந்த நபர் குருஸ் உட்கார்ந்திருந்த பக்கம் கூட நான் திரும்பவில்லை. எனக்கு முன்பாக அவர் பேச அழைக்கப்பட்டார். அங்கு திரளாகக் கூடி இருந்த முஸ்லிம்களைப் பார்த்து "சாச்சாமார்களே, சாச்சிமார்களே.." என விளித்து அவர் பேசத் தொடங்கினார். அவர்கள் ஊரில் முஸ்லிம்களை அப்படித்தான் உறவு முறை சொல்லிக்
கூப்பிடுவார்களாம். அதிகம் பேசவில்லை. ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துவிட்டு அமர்ந்தார்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில்
வேலை செய்து கொண்டிருந்த  அவர் ஒரு சூட் கேஸ்நிறைய பணத்தைச் சுமந்து கொண்டு மும்பையில் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தாராம்.அவர் போய்த்தான் ஊழியர்களுக்கு ஊதியம் பிரித்து அளிக்கப்பட இருந்ததாம். அப்போது முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் அவர்களைத் தாக்கிக் கொல்ல ஆயுதங்களுடன் வந்த இந்துத்துவசிவசேனைக் கும்பல் ஒன்று குரூசை நோக்கி ஓடி வந்ததாம். மொழி தெரியாத இவர் அஞ்சி ஓடி ஒரு பெரிய சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து எழ முடியாமல் கிடந்துள்ளார். அந்த வீதியில்முஸ்லிம் ஆண்கள் யாரும் இல்லை. கலவரக்காரர்களைக் கண்டு பயந்தோடி இருப்பார்கள் போல.அநேகமாக குரூஸ்  விவரித்த அந்தக் கலவரம் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் நடந்த வன்முறையாக இருக்கலாம்.

வன்முறையாளர்கள் அடுத்த இலக்கைத் தேடிப் போனபின் அங்கிருந்தமுஸ்லிம் பெண்கள் குரூசைத் தூக்கிக் காப்பாற்றியுள்ளனர். தண்னீர்ப் பற்றாக்குறை மிக்கஅப்பகுதியில் எல்லோர் வீட்டிலிருந்தும் குடங்களில் தண்னீரைக் கொண்டுவந்து ஊற்றி அவர்மீது படிந்திருந்த மலத்தை எல்லாம் கழுவி இருகிறார்கள். அன்று இரவு அவருக்குப் பாதுகாப்பும்
அளித்து காலையில் அவர் கொண்டு வந்திருந்த பணப் பெட்டியையும் கொடுத்து பத்திரமாக அனுப்பியுள்ளனர்அந்த முஸ்லிம் சாச்சிமார்கள்.

இதைச் சொல்லிவிட்டு அவர் இறங்கியபோது, என்ன இருந்தாலும் ஒருஎழுத்தாளன், கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும். இந்துத்துவ மேடைகளில் தோன்றுவதாலேயே இவரை
இந்துத்துவவாதி எனக் கொள்ள வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டேன். அவர் மேடையை விட்டுஇறங்கும்போது ஒரு புன்முறுவலையும் பகிர்ந்து கொண்டேன்.
இன்று இந்த நபர் ஏன் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என எழுதியுள்ள
கட்டுரையைப் படித்தபோதுதான் அன்று சாச்சிமார்கள் இவர் மீது ஊற்றிய தண்ணீர் அவரது புறஉடல்மீதிருந்த அசிங்கங்களை மட்டுமே கழுவியுள்ளது என நினைத்துக் கொண்டேன்.

மோடி அடித்தளத்திலிருந்து வளர்ந்தவராம். வளர்ச்சியின் நாயகராம்.தீர்க்கதரிசியாம். "A revolutionary, bold and committed visionary ..."... அடப் பாவி.. அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள்இனி உம்மை "நெய்தலின் நெருப்பு" என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், "சிங்கம்,புலி, கரடி..." என்றெல்லாமும் கொண்டாடலாம்.

கன்னட முது பெரும் எழுத்தாளர், நவ்யா இயக்கத்தைத்தோற்றுவித்தவர், ஞானபீட விருது மட்டுமின்றி பத்ம பூஷன் விருதையும் பெற்றவர், கேரள மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த யு.ஆர், அனந்தமூர்த்தி அவர்கள்,"மோடி பிரதமரானால் நான் இந்த நாட்டில் வாழ மாட்டேன்" என அறிவித்துள்ளார்.அவர், கிரிஷ் கர்னாட் மற்றும் பல கன்னட எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக இன்று பிரச்சாரம்செய்து கொண்டுள்ளனர்.
 
ஒரு 150 அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மோடியின் தலைமையில்  வரும் பாசிசக் கும்பலுக்கு  வாக்களிக்காதீர்கள் என வெளியிட்ட அறிக்கையை இரண்டு
நாட்களுக்கு முன் நான் இங்கு பகிர்ந்ததைப் பார்த்திருப்பீர்கள்.

இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இப்படி ஒருஅரசியல்வாதிக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் களம் இறங்கியது கிடையாது. இன்று ஏன்இந்த மாற்றம்? மோடி என்கிற நபர் ஒரு வெறும் அரசியல்வாதி அல்ல. மோடி எனும் உருவில் இந்தியபாசிசம் இன்று முழுமை அடைகிறது. பெரு முதலாளியமும் பாசிசமும் பிரிக்க இயலாதவை என்பதுமுசோலினி அளித்த வாக்குமூலம். இது நாள் வரை இந்துத்துவம் எத்தனையோகொலைகளையும் வன்முறைகளையும்விதைத்திருந்தபோதும், வெறுப்பைக் கட்டமைத்தபோதும் அப்போதெல்லாம் பெரு முதலாளியம் அத்துடன் ஊடு பாவாய்க் கலந்ததில்லை. சற்று விலகியே இருந்திருக்கிறது. இன்று அந்த இணைவு ஏற்பட்டுள்ளது.  மோடி என்னும் வடிவில் அது நிகழ்துள்ளது. எழுத்தாளநெஞ்சங்கள் வெறுப்பை வெறுப்பவை. எனவேதான் இந்த எதிர்ப்பு.

இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டு, ஆண்டுகள் பன்னிரண்டாகியும் இன்னும் 50,000க்கும் மேற்பட்டோர் தம் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலை இருந்தும்ஒரு அடையாளமாகவேனும் வருத்தம் தெரிவிக்காத ஒரு நெஞ்சையும், இத்தனைக்குப் பின்னும் முஸ்லிம்கள்அளித்த விருந்தொன்றில் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம் குல்லாயை அணிய மறுத்த மனத்தையும்மோடியைத் தவிர நீங்கள் வேறு யாரிடம் காண முடியும்?

மரணதண்டனை குறித்து ஜெயமோகன் கக்கி இருந்தவிஷத்தைக் குறித்த என் பதிவைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார்: "ஒரு விரிவான பதிலைநீங்க ஜெயமோகனுக்கு எழுதுங்கள் சார்" என்னால் அது சாத்தியமில்லை எனச் சொன்னேன்.

ஜெயமோகனுக்கோ அல்லது ஜோ டி குருசுக்கோ என்னால்பதில் எழுத முடியாது. அவர்கள் எதையும் புதிதாகச் சொல்வதில்லை. எற்கனவே பலமுறை பதில்சொல்லப்பட்ட, விளக்கப்பட்ட பிரச்சினைகளைப் புதிது போலச் சொல்லும் பாசிச உத்தியைக் கடைபிடிப்பவர்கள்அவர்கள். குருசின் இந்தக் கட்டுரையைத் தான் (கீழே உள்ள பதிவில் உள்ளது) எடுத்துக் கொள்ளுங்களேன். என்ன அவர் புதிதாய்ச் சொல்லிவிட்டார்?மோடியை வளர்ச்சியின் நாயகர் என்பதற்கு இதுவரை London School of Economics பேராசிரியர்கள்முதல் நம் ஊர் பொருளாதாரவாதிகள், அரசியல்வாதிகள் எல்லோருந்தான் பதில் சொல்லி விட்டனர்.முக நூலில்தான் எத்தனை கட்டுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்? இதற்கு மேல் நான் என்னசொல்லிவிடப் போகிறேன்? இதற்கு பதில் சொல்வதை விட ஒரு காமெடி பீசாகிற வேலை வேறென்ன இருக்கஇயலும்?

ஜெயமோகனின் மரணதண்டனைக் கட்டுரையை எடுத்து,அதில் மரண தண்டனைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள். அப்போது தெரியும். இது எதுவும் புதிதல்ல என்பது. இந்தக் கேள்விகளைக் கேட்பவன் ஒன்று படு முட்டாளாகஇருக்கவேண்டும் அல்லது பாசிஸ்டாக இருக்க வேண்டும். மரணதண்டனை இருந்தால் குற்றங்கள்குறைந்து விடும், தீவிரவாதம் ஒழிந்துவிடும் எனச் சொல்கிற மண்டைகளுடன் யார் முட்டிக்கொள்ள முடியும்?

ஜெயமோகன்   ஜோ டி குருஸ் இவர்களுக்கு முன்னுதாரணம் தமிழில்
இல்லை. இவர்கள் ஒரு புதிய பரிணாமம் ஒரு நோயின் அறிகுறி. இவர்கள் இலக்கிய மோடிகள்.