37 - அடையாளம் பதிப்பகம் | எம்.ஜி.சுரேஷ் | நாவல் விமர்சனம்

Saturday, July 25, 2015 Anisha Yunus 2 Comments




வாசிப்பவனுக்கு மிக அதீத விளக்கம் தரும், தரப்படும், எந்த ஒரு படைப்பும் கதையோ, கவிதையோ... தன்னை நிலைநிறுத்தத் தவறுகின்றது. அத்தனை பாத்திரங்களுக்கும் பெயர்கள், அதற்கான காரணிகள், துல்லிய விலாசம், நேரம், பொழுது, நிறம், அதன் விருப்பு/வெறுப்புக்கள்... இது போல கதையின் கருவுக்கு சம்பந்தமில்லாத (தேவையானவை தவிர்த்து) இன்ன பிற அம்சங்கள் விஸ்தரிக்கப்படும்போது, அந்தப் படைப்பு மெல்லச் சாகின்றது. அதே நிலைதான் 37, நாவலிலும்.

ஒவ்வொரு பாத்திரத்தையும், வாசகனின் மனநிலைக்குள்ள்ளும் கற்பனைக்குள்ளும் வலிந்து ஒரு துல்லிய பிம்பத்தையே நிறுவ வேண்டும் என்னும் அதீத ஆர்வத்தில், அதிகபட்சமான இடைச்செறுகல்கள் முழு புதினத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டன என்பது அதன் தொய்வுக்கு ஒரு காரணம் என்றால், அறிவியல் புனைவு எனப் பெயர் வைத்ததே இதற்கு சரியான தெரிவா எனக் குழம்பச் செய்வதும் இன்னொரு காரணி. விக்கிரமாதித்தன் கதைகளுக்கும், வாய் வழிக் கதைகளுக்கும், தரப்பட்டிருக்கும் முக்கியத்துவம், இதில் அறிவியலுக்கு தரப்படவில்லை என்பதே நிஜம்.

ஆங்காங்கே, பாத்திரத்தின் இருத்தலுக்கும், அறிவியலின் வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிடுவதற்கும் தொடர்பு அறுந்து விழுகிறது. திடீரென வாசகனை அம்போவென ஒரு தெருவில் விட்டுவிட்டு அடுத்த தெருவிற்கு தாவி விடுகிறார் மனிதர். Episode அல்லது Speaking person நடுவே இருக்கும் வித்தியாசத்தைக் குறிப்பிடவில்லை நான். Talking about the missing links. சில இடங்களில், இயந்திரன்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஆசிரியரே கொன்று விட்டாரோ எனக் கேள்வி முளைக்கிறது. இன்னும் சில இடங்களில், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ரேஞ்சுக்கு கள வர்ணனை நடந்து கொண்டிருக்கும்போதே இராமநாராயணன் ரேஞ்சுக்கு மேஜிக் வித்தைகளும் நிகழ்கின்றன. :


அறிவியல் பெயர்கள் அதிகம் புழங்கியிருக்கும் அதே நேரம், அதன் பிரம்மாண்டத்தைப் பற்றிய ஒரு சிறு வியப்பைக் கூட வாசகனுக்குத் தராமல் தடை போட்டு நாவல் முன்னேறுகின்றது. வாசகன் ஒருவன் மெல்ல அசை போட்டு, அறிவியலின் வேகத்தையும், வளர்ச்சியையும் உள்வாங்கி அதிசயித்து, ஆஹா இத்தனையும் சாத்தியமா என ஆச்சரியப்பட வைக்கவேண்டிய ஒரு படைப்பு.... அடுத்த பக்கத்தோடு புதினம் முடிந்து விடுமா என யோசிக்க வைப்பது வேதனையே! ஆனால், ஆசிரியர் தான் படித்த, விரும்பிய, விரும்பும் இலக்கியவாதிகள், அவர்களின் படைப்புக்கள் என எல்லாவற்றையும் ஒன்று விடாது இதில் பதிவு செய்துவிட்டதை எண்ணும்போது............. :'( :'(  .. ஆனந்தக் கண்ணீர். :P

சுஜாதாவின் பாணியே இன்றி, சுஜாதாவின் சாதனையை முறியடிக்க ஆசிரியர் அதீதப் பிரயத்தனப்பட்டிருக்கிறாரோ என்றும் கூட நினைவு வராமல் இருக்கவில்லை. ஆனால், அட் த லீஸ்ட், ஜீனோ-வின் Flowவை, மொழியை, ஏக காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை, அறிவியல் வளர்ச்சிகளை எப்படி தன் கதையின் போக்கோடு பிணைத்தாரோ, அந்த டெக்னிக்கை, ஒரு முறைக்கு இரு முறை படித்து அதன் பின் முயற்சித்திருக்கலாம். இதுவே சுஜாதாவின் புனைவுகளை இது சாத்தியமா என்னும் கேள்வியிலிருந்து, நடக்கத்தான் போகிறது என்னும் உறுதிக்குக் கொண்டு வந்தது, வாசகர்களை. ஆனால், இந்தப் புதினத்தில், That is missing. அடையாளம் பதிப்பகத்தாரின் படைப்புக்களுக்கு ஒரு பெரும் மதிப்பு உண்டு என்னுள். But, இது பெருந்தோல்வி. :(

இந்த நாவலைப் பற்றி சகோதரர் Manazir இடம் ஏற்கனவே பேசியிருந்ததால், பாதி படிக்கும்போதே தோன்றியது, ஒரே ஒரு வரியுடன் விமர்சனம் எழுதி முடித்து விடலாம்... // இந்தப் புக்கை பத்தி மட்டும் எழுதச் சொல்லிடாதீங்க மனாசிர்....... :'( :'( :'(  // என. விதி வலியது. hi..hi.. இந்தப் பதிவை எழுதியே ஓய்ந்தேன்.

இதே ஆசிரியருடைய ‘பின்நவீனத்துவம் என்றால் என்ன?’ எனும் நூலைப் பற்றி Manazirஉம், Lafees Shaheedஉம் ஏற்கனவே நல்ல அபிப்பிராயம் கொடுத்து விட்டதால், அதைத் தேட ஆரம்பித்துள்ளேன். இன் ஷா அல்லாஹ், வாசிப்போம்.....

2 comments:

  1. '37' என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் சிறிது விளக்கியிருக்கலாம்...


    !

    ReplyDelete
  2. 37 என்பதற்கான விளக்கமும் நாவலில் இறுதியில் ஆசிரியரே தந்துள்ளார் சகோ. பெரிய பிரயத்தனமான விஷயமல்ல. காப்பியடித்த உத்தி என அவரே சொல்கிறார். :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...