வலிகள் இன்னும் பாக்கியுள்ளது...

Wednesday, June 10, 2015 Anisha Yunus 0 Comments


மயானத்தைக் கடந்து
வந்திருக்கின்றேன்....

நான்
மரணித்த வாசனை
இன்னும்
மிச்சமிருக்கின்றது காற்றில்....

மனித வாசனையை
விடவும்
மரித்த வாசனையே
மிகப்
பழகிப்போன ஒன்று....
=========================
தேடும்போதெல்லாம்
தென்படாத
அமைதி,

அலையிலா
ஆழ்கடலாய்
என்னைச் சூழ்ந்துள்ளது
என்
மரணத்தின் பின்....
==========================
வாருங்கள்
யாரேனும்....

இன்னும்
அத்தியாயங்கள்
பாக்கியிருக்கின்றது
வலிகளை
மையிலிட்டு நிரப்ப...
#Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...