Showing posts with label இஸ்லாத்தில் பெண்கள். Show all posts

எப்படி பதில் தந்திருக்க வேண்டும்?

ஹெலோ சகோஸ்,

மறுபடியும் தனது கோர முகத்தை காட்டியுள்ள அறிவீனத்திற்கு ஒரு பதில் பதிவுதான் இது. எங்கே? எப்படி? என்பவர்களுக்கு, ஒரே டைட்டில்தான் பதில். ‘The Innocence of muslims'.

படத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு: Simply bullshit. All it has is mendacity and the movie itself is nothing more than a sophomoric trifle...and for your thoughts to provoke everyone to follow your suit....better luck!! Not this alone, but even a thousand better films even can never ever change the 1.5 billion (and counting)  muslims following Prophet Muhammad in their daily life, bit by bit, minute by minute. Islam = Bliss !!

முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் அமைப்புக்களுக்கும்:
1. இதற்காக அப்பாவி மக்களை கொன்றது மிகப்பெரிய தவறு. என் கண்டங்களை பதிவு செய்கிறேன்.

இதற்கென அறவழியில் போராட்டம் செய்வதோடு மட்டுமல்லாமல்,

2. நம்மிடம் உள்ள ஆற்றலைக் கொண்டு இன்னொரு வீடியோ / மீடியா மூலமாக இன்னும் சிறப்பான விதத்தில் எடுக்கப்பட்ட, தகவலைக் கொண்ட உயர்ந்ததொரு படத்தை தந்திருக்கலாம்.

3. The Message போன்ற படங்களை தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து, அந்தப் படம் வந்த அதே நேரத்தில் அதே வலைதளத்தில் அப்லோடு செய்திருக்கலாம்....Make hay while the sun shines...!!

4. இஸ்லாமிய டாக்குமெண்டரிகளை  / திரைப்படங்களை தத்தம் லோக்கல் கேபிள் சேனல்களில் (அதான் ஊரெங்கும், உலகெங்கும் இப்போதுள்ளதே...) ஒளிபரப்பியிருக்கலாம்.

5. அந்த வீடியோவின் லின்க்கை பரவ விடாமல் அதிக ஹிட்ஸ் கிடைக்க விடாமல் தவிர்த்திருக்கலாம்.

6. இஸ்லாத்தில் இணைந்த / பிறந்து வளர்ந்த பெண் மேதைகளையும், சாதனையாளர்களையும், முக்கியமாக மேலை நாட்டில் பிறந்து வளர்ந்து இஸ்லாத்தில் இணைந்த பெண்களையும் இணைத்து அவர்களின் பார்வையிலிருந்து இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய அவர்தம் பார்வையைப் பற்றியும் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம்.

7. இதை விட எல்லாம் பெரிய ஆயுதமான து’ஆவை பள்ளிகளிலும் ஜமா’அத்தாக கூடும் இடங்களிலும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் தஹஜ்ஜுத்தில் மறவாது து’ஆ கேட்குமாறு அழைத்திருக்கலாம்.

8. இப்படி ஒரு படம் வெளியாக இருக்கிறது என்று தெரிந்த போதிருந்தே இத்தகைய யோசனைகளை இஸ்லாமிய அழைப்புக்களும், இஸ்லாமிய அரசுகளும் முன்னமே சிந்தித்து ஏதேனும் ஒரு வகையிலாவது செயல்பட்டிருக்கலாம்.

இன்னும் எத்தனை பெரிய அறீவீனங்களுக்கும் துளியும் தளராது இஸ்லாம். ஆனால் எல்லா நேரத்திலும் வெற்று அறிக்கைகள் விட்டு, இதற்கெல்லாம் உணர்ச்சி வயப்படக்கூடாது என வாய்வார்த்தைகளை மட்டும் ஆதரவாக்கிவிட்டு இன்னும் பல கோழைத்தனமான செயல்களால் மட்டுமே பதில் சொல்லும் நம்மால், நம் அரசுகளால், நம் அமைப்புக்களால்.... இஸ்லாம் .....?????????????????

மேலும் படிக்க:

 

பர்தா என்ன சாதிக்கவில்லை... சொல்லுங்க?

இங்கே இருக்கும் முஸ்லிம், முஸ்லிமல்லாத அத்தனை சகோக்களையும் பார்த்து நான் கேட்கிறேன், இந்தப் பதிவின் கடைசியில், இஸ்லாமிய பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டதென்று தெரியப்படுத்தவும். 


மேலும் வாசிக்க கீழே உள்ள தலைப்பில் சுட்டவும்.


பர்தா என்ன சாதிக்கவில்லை???

 

 

.

பெண் எழுத்து - தொடர் பதிவு

அழைத்த ஆஸியாக்காவிற்கு நன்றி............. :)

எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்க... இப்பத்தேன் நீ ஆரம்பிக்கிறியான்னு யாரும் என்னை குத்தம் சொல்லக்கூடாது. உருது பேசற முஸ்லிம்களிடத்தில் அடிக்கடி எந்த இடத்திற்கும் தாமதமாய் வருபவர்களுக்கு ‘லேட் லதீஃப்’ அப்படின்னு ஒரு பட்டப்பெயர் அமையும், அந்த விருது வழக்கமா என் கைலதேன் இருக்கு. பார்க்கலாம், வேற யாருக்கும் தரும் வேளை வருதான்னு. ஹி ஹி ஹி

யாரும் தப்பு கண்டு பிடிக்கக்கூடாது!! சொல்லிட்டேன்!!
பெண் எழுத்துன்னு சொன்னவுடனே கொசுவத்தி சுத்தினா முதல்ல வந்தது எங்கம்மாதேன். ஆறாம் வகுப்புடன் தன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டவர். ஆனால் அவரின் அறிவும், மேனேஜ்மெண்ட்டும் இன்றும் ஒரு கம்பெனியின் C.E.Oக்கு குறையாதது. (எல்லார் அம்மாவும் கிட்டத்தட்ட இப்படித்தான், இல்லையா??) நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் மட்டும் தினம் தினம் என்னுடைய நோட்டில் அன்றைய ஹோம்வர்க் என்னன்னு எழுதறது அவங்கதான். நான் ஹோம்வர்க் எழுதவே டிமிக்கி தர்ற ஆளு, இதுல ஹோம்வர்க் என்னன்னு வேற எழுத சொன்னா?? அதுவும் இல்லாம, நர்ஸரி போகறப்பா ஆங்கில ரைம்ஸ் எல்லாம் அப்பாகிட்ட சொல்லி தமிழ்ல எழுதி வச்சுக்குவாங்க. அப்புறம் அதை சொல்லிக் குடுப்பாங்க. இப்படி எங்களை வளர்க்க அவங்க எழுதி எழுதி கஷ்டப்பட்டு வளர்த்தாலும் இப்பவும் அவங்க தமிழை நான் கிண்டலடித்துக்கொண்டே இருப்பேன், எங்கே ‘துணைக்கால்’ போட வேண்டுமோ அது அங்கிருக்காது, குறில் இருக்க வேண்டிய இடத்தில் நெடிலும், நெடிலுக்கு பதில் குறிலும் இருக்கும். கடைக்கு எழுதும் சாமான் லிஸ்ட்டே போதும் அன்றைய பொழுதைப் போக்க. ஹெ ஹெ ஹே...

சகோதரி. யுவான் ரிட்லீ

அதன் பின் என்னை மிகவும் கவர்ந்த எழுத்துக்கள் சகோதரி. யுவான் ரிட்லியுடையது. தன்னை கடத்தியவர்களை உற்று நோக்கி, அவர்களின் குணங்களை அறிந்து, அதன் மூலம் இஸ்லாத்தை விரும்பி, இன்றளவும் இஸ்லாமிய ஆண்கள் சிலர் கூட வெளியே பகிரங்கமாக பேசிட அஞ்சும் விஷயங்களுக்காக தன்னை முன் நிறுத்துபவர். அது துனிசியாவின் விடுதலைக்காக ஆகட்டும் அல்லது எகிப்தின் மத தலைவர்களின் சாயங்களை வெளுப்பதாகட்டும். சுப்ஹானல்லாஹ். ”இன்னும் இவரைப்போன்ற பல சகோதர சகோதரிகளைத் தா அல்லாஹ்” என்றுதான் பிரார்த்திக்கிறேன்.

டாக்டர். ஃபர்ஹாத் ஹாஷ்மி

மீடியாவின் பின்னாலும், யூரோப்பிய நாகரீகம் என்னும் அசட்டுத்தனத்தின் பின்னாலும் இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் மிதமிஞ்சிதான் போயுள்ளது. அப்படிப்பட்ட நாட்டின் பெண்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வர சகோதரி. டாக்டர்.ஃபர்ஹத் ஹாஷிமியின் எழுத்துக்களும், வகுப்புக்களும் பெரிதளவில் உதவியுள்ளது என்றால் அது மிகையல்ல. கலாசார சீரழிவிலிருந்து பாகிஸ்தானிய பெண்களை பெருமளவில் காப்பாற்றி, இப்பொழுது வீட்டிலிருந்தே எளிய வழியில் மார்க்கத்தை கற்க வைத்திருப்பதும், அதன் மூலம் இன்னும் அவர்களின் உலகை விரித்ததும், இவரின் எழுத்துக்கள் மற்றும் வேர்வை முத்துக்களின் சாதனையே!! ஹாஃபிதஹுல்லாஹ் (அல்லாஹ் அவரை பாதுகாத்து வைப்பானாக). ஆமீன்.

இதை தாண்டினால் அதிகம் வாசிக்கும் பெண் எழுத்துக்கள் எல்லாம் குழந்தைகளை வீட்டிலிருந்தே படிக்க வைக்கும் தாய்களின் எழுத்துக்களைத்தான். அதில் ஒரு விஷயத்தை கற்றுத் தரத்தான் எத்தனை வழிகள், எத்தனை இலகு, எப்படிப்பட்ட் குழந்தையும் அதன் தாயிடம் எவ்வளவு சுலபத்தில் கற்றுக் கொண்டு விடுகிறார். எனக்கு பிடித்த சில Home Schooling Mom Writers இங்கே, இங்கே, மற்றும் இங்கே. :) ராயல் சல்யூட்!!

அதன்பின் பார்த்தால், எனக்கு தெரிஞ்ச பெண் எழுத்துக்கள்ன்னா, பெண் பதிவர்கள்தேன்!! (எல்லா பெண் பதிவர்களும் குலவை சத்தம் கேக்குதா!! ஹி ஹி ஹி...) அதனால அவங்க எழுத்துக்களில் எனக்கு பிடிச்ச எழுத்துக்களை இங்கே சமர்ப்பிக்கிறேன். (ஹெ ஹெ...தப்பிச்சிட்டேன்..!!!) எந்த துறையிலும் சில விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ல பெண்களை விட்டால் யாருமில்லை.... மனசிலாயோ??? ஓக்கே... லெட்ஸ் கோ டு தி பாயிண்ட்.

அமெரிக்காவின் அன் அஃபீஷியல் விக்கியாக அமெரிக்காவா, சித்ராக்காவிடம் கேளு என்பது போல், அமெரிக்காவைப் பற்றிய பல விஷயங்களை புட்டு புட்டு வைப்பதுவும், அதுவும் அவருக்கே உரிய நகைச்சுவை இழையில் பதிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. அதே போல பல விஷயங்களையும், பல்புகளையும் சர்வ சாதாரணமாக, தன்னையும், படிப்பவரையும் ஒரு சேர கலாய்க்கும் பாங்கு ஹுஸைனம்மாவிடம் உள்ளது. இருவரின் மொழியாளுமையும் என்னை திகைக்க வைக்கும் இன்னும்!!

சமையல் பற்றித்தான் எழுதுகிறார்கள் என்றாலும் ஒரு தாயன்போடு எழுதும் ஜலீலாக்கா, எப்படிப்பட்ட ரெசிபியையும் படம் போட்டு எளிதாக்கி விடும் ஆஸியாக்கா, படித்த துறைக்கும் இப்பொழுது எழுதும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாவிடினும் டயட் சமையலில் இவருக்கு போட்டி யாருமில்லை எனும் அளவிற்கு கீதாக்கா, சிறு குறிப்பு போல முத்தாக எழுதும் மேனகாக்கா, கமலாம்மா இவர்களின் எழுத்தும் எனக்கு பிடிக்கும். ஒரியாக்காரரிடம், பேர் சொல்லுங்க போதும், பலகாரம் ஆஜர் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல இவர்களின் வலைப்பூக்களே காரணம்... ஹி ஹி ஹி


இன்னும் எழுதலாம், ஆனால் நேரமின்மை. குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, சமையலும் செய்து, வீட்டின் மற்ற தேவைகளையும் கவனித்து, படித்தது பி.ஈ என்றாலும் இதற்கு மேலும் தேவையானபோது படித்து, ஆராய்ச்சி செய்து, எப்படி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து, திறம்பட எழுதிடும் என் எழுத்தும் எனக்கு பிடிக்கும்தான். ஹி ஹி ஹி... (DISCLAIMER: This passage is sponsored by the Company)


தொடர் பதிவுக்கு யாரை அழைத்தாலும் எழுத மாட்டேன் என்று போர்டு மாட்டாத குறைதான். எனவே இந்த முறை அழைக்கவில்லை. ஹெ ஹெ ஹெ... அறிவிப்பே செய்யறேன், யாரெல்லாம் எழுதறாங்கன்னு.

இவர்களின் எழுத்தும் புன்னகை வரவைக்கும் ஆயுதங்களே!!! :))

ஓக்கே...30 நாளைக்குள்ள எழுதலைன்னா அவ்ளோதேன்!!
நான் சைனிங் ஆஃப்!!


.

அன்புள்ள சந்தனமுல்லை

உங்கள் பதிவு அருமை. அதேபோல் மீடீயாவின் பின்னால் செல்லாமல் மற்றவர்களின் பதிலையும் தெரிஞ்சுக்க நினைத்தது மிக நேர்மை. நன்றி. என்னை கூப்பிடவில்லை என்றாலும் பதில் சொல்ல வேண்டிய சமூகத்தை சார்ந்திருக்கிறேன் என்பதால் பதில் அளிக்கிறேன்.

1. நமக்கு உண்மையில் ஃபத்வாவில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்று தெரியாது. மீடீயாவில் அத்தனை எழுத்துக்களையும் போடுவது கிடையாது. அவரகளின் தேவைக்கு எற்ப ஒட்டி, வெட்டிதான் பயன்படுத்துவர். அதனால் உண்மையில் என்னவிதமான ஃபத்வா கொடுக்கப்பட்டது என்று தெரியாது. அதனால் இதன் மேல் தர்க்கம் புரிவது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல.

2. ஃபத்வாவை வார்த்தைகள் பிறழாமலே மீடீயா வெளியிட்டுள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அந்த லின்க்கில் படித்ததில், "ஆண்களுடன் சரளமாக, பர்தா / திரை இன்றி பேசி பழகும் அபாயம் இருப்பதால் அத்தகைய இடங்களில் பெண்கள் வேலை செய்ய ஷரீஅத்தில் இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளனர். மேலோட்டமாக இல்லாமல் நன்கு ஆராய்ந்து படித்தால், இத்தகைய இடங்களில் வேலை செய்வதையே அல்லது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாத்தில் பெண்களை மிகவும் ஜாக்கிரதையாக, கருத்தாக காத்து வளர்க்க வேண்டுமென சட்டமுள்ளது. பெண் குழந்தைகள் இருந்து அவர்களை நன்றாக பேணிப் பாதுகாத்தால் நானும் அவர்தம் பெற்றோரும் / காப்பாளரும் சொர்க்கத்தில் பெரு விரலும் சுட்டு விரலும் போல இணைந்திருப்போம் என நபி மொழி உண்டு.

இந்த ஃபத்வாவின் கூற்றுப்படி, பெண்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலையைப் பற்றி பிரச்சனையில்லை. பிரச்சனை, சகஜமாய் பழகுகிறோம் பேர்வழி என பெண்களையும் ஆண்களையும் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் சூழ்நிலை பற்றிதான். இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் எல்லா விதமான பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகமாகிக்கொண்டே போவதுதான் உண்மை. இந்த ஃபத்வாவை மீண்டும் படித்துப் பாருங்கள், பெண்கள் பெண்களுக்காக மட்டும் உள்ள பணியிடங்களில் வேலை பார்ப்பதையோ அல்லது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதையோ அல்லது இந்தியாவில் தற்சமயம் அதிகமாக காணப்படும் மகளிர் சுய உதவிக் குழு போன்றவற்றில் வேலை செய்வதையோ இந்த ஃபத்வா ஆட்சேபிக்கவில்லை. புரிகின்றதா?

இந்த ஃபத்வாவை மீடீயா அவல் போல் மெல்லவே வேறுவிதமான தலைப்பை கொடுத்துள்ளதை கவனிக்கவும். அந்த செய்தியிலேயே படித்தால் பெண்கள் கல்லூரியில் பணிபுரியும் ருக்ஸானா என்ற பெண்ணின் பதிலில் புரியும். மகளிர் கல்லூரியில் பணி புரிகின்றார். அதிகமாக பர்தா அணிந்துகொண்டே இருக்க வேண்டிய அவசியம் இராது. அதுவுமன்றி ஆண்களுடன் பழக வேண்டிய சூழ்நிலைகளும் குறைவு. இதில் பயன் யாருக்கு?

தலைப்பை மட்டும் பார்த்து இதனை குறை சொல்ல முடியாது. ஷரீஅத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பணி புரியும் பட்சத்தில் பெண்கள் பணி புரிவதை எந்த அமைப்பும் குறை சொல்ல முடியாது, காரணம், அல்லாஹ் பெண்களை வேலை செய்வதை விட்டோ, சம்பாதிப்பதை விட்டோ தடை செய்யவில்லை. அல்லாஹ் தடை செய்யாததை, முஹம்மது நபி (ஸல்) தடை சொல்லாததை வேறு யாரும் தடை சொல்லமுடியாது. இங்கும் அப்படியே. சூழ்நிலைகள் பாதுகாப்பாக உள்ள பட்சத்தில் பெண்கள் வேலை செய்யலாம்.


நீங்கள் குறிப்பிட்டுள்ள ஷம்ஷாத் அக்கா முதற்கொண்டு ஆஃப்ரீனின் அம்மா வரை எவருக்குமே சூழ்நிலை பாதுகாப்பாக உள்ளவரை வேலை செய்வதற்கு அந்த அமைப்பும் சரி எந்த அமைப்பும் சரி ஆட்சேபணை விதிக்கவில்லை. பாதுகாப்பை உறுதி செய்ய இயலாத இடத்தில் வேலைக்கு அனுப்ப சாதி மத பேதமன்றி எந்த தாய்தந்தையும் அனுமதிக்க மாட்டார். அவர்கள் பர்தா அணிபவர்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மேலும், பர்தா என்பது உடையோடு மட்டும் நில்லாது எண்ணங்களுக்கும் சேர்த்தே இறைவன் கூறியுள்ளான். அதனாலேயே ஆண் பெண் என இரு பாலருக்கும் ஹிஜாபை கட்டாயப்படுத்தியுள்ளான். அத்தகைய கட்டுப்பாடான மனம் உள்ளவரை, ஷரீஅத்தை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை இல்லாதவரை வேலை செய்ய தடையில்லை என்பதையே அந்த ஃபத்வாவும் கூறுகின்றது.


எனவே ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதே தவறு என்று ஃபத்வா கொடுத்திருப்பதாய் எண்ணவேண்டாம். மீண்டும் அந்த செய்தியைப் படித்துப் பார்த்தால் தலைப்பை எவ்வளவு யோசித்து வில்லங்கமாய் தந்திருக்கின்றார்கள் என புரியும். என்னால் இயன்ற அளவு பதில் சொல்வதில் தெளிவாய் இருக்க முயற்சித்து உள்ளேன். தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும்.

பி.கு. சில காலங்களுக்கு முன் பெங்களூருவில் Oracle Inc - Software Engineer பணியில் இருந்தவள்தான் நானும். என்னுடைய வேலை இரண்டாம் மாடியில், சிற்றுண்டி சாப்பிட மேலே டெர்ர்ஸ்சிற்கு செல்ல வேண்டும். டெர்ரஸ்சில்தான் மது அருந்தும் இடமும் உள்ளது. தனியே இடங்களில்லை. நான் வேலை பார்த்த இடத்தில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எவ்வித கட்டுப்பாடும் இல்லை. ஆசை ஆசையாக விடாமல் முயற்சி செய்து வேலை வாங்கிய கம்பெனி அது. எனினும் மனதுக்கு ஒட்டாத சூழ்நிலை, பாதுகாப்பில்லாத உணர்வு. நானே வலிய வந்து ஐந்தே மாதத்தில் வேலையை விட்டுவிட்டேன். இப்போது அதே வேலை, வீட்டில் என் குட்டிப் பையனுடன் லூட்டி அடித்துக் கொண்டே Internet-Freelancing மூலமாக சம்பாதிக்கின்றேன். காலத்திற்கேட்ப நாம்தான் பத்திரமாக இருக்க வேணும் என்ன நான் சொல்வது?

ps2:-