கொடுமையிலும் கொடுமை...

Thursday, September 10, 2015 Anisha Yunus 0 Comments

Indian Express News Link -- http://www.newindianexpress.com/cities/chennai/A-Peek-Into-the-Houses-of-Horror/2015/09/10/article3019230.ece#

===================================================
 காலையில் ஒரு முறை வாசித்து முடித்ததில் இருந்து மீண்டும் மீண்டும் அந்தப் பேப்பரை திருப்பி வாசிக்கின்றேன்... சரியாகத்தான் படித்திருக்கிறேனா என.... இன்னும் கசப்பு அடங்கியபாடில்லை....

யாருக்காக இந்த அரசு, ஆட்சியெல்லாம்...??
யாரின் நலனுக்காக???

• ஆதி திராவிடர்களுக்கான ஹாஸ்டல் என்பதாலேயே இந்தளவு சிறப்புக்கவனிப்பும், சலுகைகளுமா அம்மா.... ?????????

• இரவில் திறந்த வெளியில் 2 மணிக்கெல்லாம் குளிக்க வேண்டிய நிலையில் பெண் மக்கள்....

• 20 அடி ஆழக்கிணற்றில் இறங்கி குடிநீர் தேடும் அவல நிலையில் பள்ளி / கல்லூரி மாணவர்கள்....

• கழிவறையிலிருந்து வெளியேறும் நீர், தளங்களிலும் சுவர்களிலும் வாடையுடன் ஊறும் அவலம்,

• 6 மணிக்குள் ஹாஸ்டலுக்குள் இல்லாவிட்டால் இரவு உணவும் இல்லாமல் போகும் கொடுமை...

• தரப்படும் உணவும் ஊசிப்போன தரத்துடன்...

• வாரக்கணக்காய் துப்புரவு செய்யப்படாத உணவுக்கழிவுகள் கொட்டப்படும் இடம்....

அப்பப்பா... ஃபோட்டோ பார்த்ததிலிருந்து குமட்டலாகவே இருக்கின்றது....

இதெல்லாம் கண்ணில் படுவதே இல்லையா ’அம்மாவின் உண்மையான பக்தன்களுக்கெல்லாம்’????

இதுதான் ஆளும் லட்சணமா????

இதுக்கெல்லாம் பதிலா பேக்வார்ட் க்ளாஸ்ல இருந்து படிக்க வரும் பசங்க பொண்ணுங்களை எல்லாம் நிக்க வெச்சு சுட்டுக் கொன்னுடுங்க....


‪#‎சென்னை‬ ‪#‎ஆதிதிராவிடர்நலன்‬ ‪#‎இந்தியன்எக்ஸ்பிரஸ்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...