பாவத்துணிகள்...

Saturday, September 05, 2015 Anisha Yunus 0 Comments


இயேசுவை அறைந்தவர்கள்..
ஏதோ ஒரு ஆணியில்
அறைந்திருக்கலாம்
என்னையும்,
அத்தனை பேரின்
பாவத்திற்காகவும்
மரித்த நீ, கொஞ்சமாய்
மரித்திருக்கலாம்
என் முட்டாள்தனங்களுக்காகவும்..
குருடரையெல்லாம்
காண வைத்தாயாம்..
முடவரை
நடக்கவைத்தாயாமே..
இதயம் இறந்தவர்களை
என்ன செய்திருப்பாய்
நீ..?
அகிலத்திற்கே
அப்பத்தை பகிர்ந்தளித்த
உனக்குமே
போர்த்தக்கிடைத்தது
அத்துணை பேரின்
பாவத்துணிகள் தான்..
பாவம் செய்தவள் மீது
கல்லெறிய
பாவமே செய்யாதவர்களை
அழைத்தாயாமே..
இன்றைக்கு
இருந்திருந்தால்
கற்களிலும்
பெருந்தொடக்கில்லாதவற்றைத்
தேடியிருப்பாய் நீ..
தேவனே..
தேவனே..
ஏன் எனைக் கை விட்டீர்
என்றா கதறுகிறாய்..
உனக்குமே தெரியவில்லை
போ....!
அற்பர்கள் மட்டுமின்றி
ஆலயங்களும்
பிசுபிசுப்பில்
மிதந்து கொண்டிருக்கிறதென..
‪#‎Deepதீ

0 comments:

உங்கள் கருத்துக்கள்...