தந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்

Tuesday, September 08, 2015 Anisha Yunus 0 Comments


.
தந்தையே
என் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை
நான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இலை

.
தந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றன்ர்
கல் எறிகின்றனர்
தூஷிக்கின்றனர்
நான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்
அதனால் வஞ்சப்புகழ்ச்சி செய்கின்றனர்
என்முன் உமது கதவை மூடுகின்றனர்
உமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்
என் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்
.
தந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்?
என்னால் அவர்கள் எதை இழந்தனர்?
.
நான் என்ன தவறு செய்தேன்
தந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்?
.
நான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது
யாருக்கும் தவறிழைத்தேனா?
நான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்
சூரியனும் சந்திரனும்
என்முன் முழந்தாளிட்டனவே
.
.
| மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்
‪#‎மஹ்மூத்_‬ தர்வீஷ்
‪#‎அடையாளம்_பதிப்பகம்‬

0 comments:

உங்கள் கருத்துக்கள்...