Showing posts with label சமூக சேவை. Show all posts

சிம்பிள் பச்சைப்பயறு குழம்பு :))

அன்பின் சகோஸ்,

இது எனதருமை அண்ணன் ஹைதர் அலி பாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்னுமொரு எளிமையான, சத்தான, சுலப முறை சமையற் குறிப்பு (என் அம்மாவிடமிருந்து :)). முந்தைய தக்காளி சட்னி குறிப்பு போலவே மிக எளிமையானதும் கூட. :))


இனி...
தேவை:
பச்சைப்பயிறு -- 1/2 கப்
பெரிய / சிறிய வெங்காயம் -- 1/4 கப் நறுக்கியது
தக்காளி -- 1 சிறியது (1/4 கப் நறுக்கியது)
மஞ்சள் பொடி -- கால் டீஸ்பூன் (ஹப்பாடா சரியா எழுதிட்டேன் :))
உப்பு -- தேவைக்கேற்ப


தாளிக்க:
எண்ணெய் -- 2 டீஸ்பூன்
கருவேப்பிலை -- 1/2 ஆர்க்கு 
வர மிளகாய் -- 2 (இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்)
கடுகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
தனியா விதை (இது கட்டாயமில்லை, தேவையெனில் சுவைக்காக ) -- 1/2 டீஸ்பூன்


செய்முறை:
1. ( முக்கியம்:: ஒரே கப்பை, ஒரே டீஸ்பூனை பயன்படுத்தவும். ) அரை கப் பச்சைப்பயறை எடுத்து கல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.

2.ஈரமில்லாத ஒரு சட்டி / வாணலியை எடுத்து மித சூட்டில் வைத்து, பச்சைப்பயறை அதிலிட்டு வாசம் வரும் வரை வெறுமனே வறுக்கவும். (சிறிது பச்சையும் சாம்பலும் கலந்த நிறம் வரும் வரை.) கருக விட வேண்டாம்.


3. பச்சைப்பயறை அளந்த அதே கப்பில் 1:4 விகிதத்தில் தண்ணீர் அளந்து ஒரு குக்கரில் ஊற்றவும். (அதாவது ஒரு கப் பயறு : நான்கு கப் தண்ணீர்)

4. கால் டீஸ்பூன் மஞ்சள் பொடியும் சிறிது உப்பும் (தேவைக்கேற்ப) போட்டு குக்கரை நன்கு மூடி விடவும். ஆவி வெளியேற ஆரம்பித்ததும் குக்கர் விசில் / வெயிட்டை பொருத்தவும். மிதமான சூட்டிலேயே விடவும். 


5. ஐந்து தடவை விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஆவி அடங்கும் வரை பொறுக்கவும். ஆவி அடங்கிய பின்  குக்கரை திறந்தால் பயறு நன்கு வெந்து மசிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மீண்டும் மூடிவிட்டு இரண்டு விசில் விடவும். பயறு நன்கு வெந்திருந்தால், ஆறவிட்டு, ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி மத்தில் நன்கு கடைந்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். (தண்ணீரை கொட்டி விட வேண்டாம். இறுதியில் தாளித்த பின் சேர்த்துக் கொள்ளவும்.)

6. இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து ஈரம் காய்ந்ததும் எண்ணையை விட்டு காய விடவும்.

7. எண்ணெய் காய்ந்ததும் கடுகை இட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் சீரகம் இட்டு பொரிய விடவும். அதன் பின் வர மிளகாய், கருவேப்பிலை, தேவையெனில் தனியா விதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும். 

8. நறுக்கிய வெங்காயத்தை விட்டு கண்ணாடி போல் ஆகும் வரை வனக்கவும். பின் நறுக்கிய தக்காளியையும் வனக்கவும். 

தக்காளி சிறிது வனங்கியதும் கடைந்து வைத்துள்ள பச்சைப்பயறையும் அதை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து தாளித்த பொருட்களுடன் கலக்கவும். நுரைத்து வரும்வரை மூடி விடவும்.

9. இதுக்கப்புறம் என்ன, சாதம் / சப்பாத்தி / தோசை எதாவது வெச்சு என்சாய் செய்ங்க :)). ரமதான் மாத சஹர் நேரத்திலும் இஃப்தாரிலும் விரைவில் செய்யக்கூடிய சத்தான குறிப்பு இது. ரெம்ப டேஸ்டியும் கூட. :)) இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் இன்னும் சில சிம்பிள் குறிப்புக்களை போட முயல்கிறேன் :))



10. இந்த ஸ்டெப்தான் மிக மிக முக்கியம். மறக்காம இந்த எளிய, இனிய குறிப்பு கொடுத்த எங்கம்மாவுக்காக து’ஆ செய்ங்க :))))))))))))






# ஒரு கப் என்பது, பொதுவாக நாம் தேனீர் அருந்தும் டம்ளர் அளவு. 250 மிலி வரை பிடிக்கும். 


சகோ.ஷர்மீ.... லேபிள்களைப் பார்த்து டென்ஷனாகாதீங்க. ஹி ஹி ஹி.... எவ்ளோஓஓஓஓ பேருக்கு யூஸாகுதோ என்னமோ...... ஹி ஹி  :))


.

சிம்பிள் தக்காளி சட்னி

மக்களே.... பொறுத்துக்குங்க.... இந்த பதிவு ஸ்பெஷலாக என் தம்பிக்காக. பதிய சொன்னது என் அம்மா. அதனால் செய்முறையை விட விதிமுறைகள் அதிகமாக இருக்கும். அட்ஜஸ்ட் ப்ளீஸ்....ஆனா நல்ல ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. ஹி ஹி ஹி


--: தக்காளி சட்னி :--
1. மூன்று நடுத்தர அளவு தக்காளி, 3 அல்லது 4 சின்ன வெங்காயம் (அல்லது ஒரு பெரிய வெங்காயம்), ஒரு நடுத்தர அளவு பச்சை மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய், 4 -5 கருவேப்பிலை.

2. முதலில் வெங்காயத்தை உரிக்கவும். உரித்த வெங்காயத்துடன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.

4. அடுப்பை ஆன் செய்து, தண்ணீரில்லாமல் துடைத்த கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.

5. எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்..

6. தீயை கம்மியில் வைத்து வெங்காயத்தை போட்டு கிளறி விடவும்.

7. நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.

8. பின்னர் (1/4 மஞ்சள்பொடி தேவைப்பட்டால் சேர்த்தவும்). கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.

9. கம கம தக்காளி சட்டினி ரெடி.

10. தோசை அல்லது இட்லியுடன் சாப்பிடவும். சாப்பிட்ட பின் மீதியை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஹை.... மாமா எனக்கு??????

மீதி ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. ஹி ஹி ஹி..... செய்துட்டு சொல்லுங்க :)

.

வலை டீவியில் அன்னுவின் பேட்டி....

(இது சுய விளம்பரமில்லை. இந்த நிகழ்ச்சியை வலையுலகினருக்கு அளிப்பது, அன்னு அண்டு கம்பெனி.... ஹி ஹி)


நிருபர்: ஹெலோ மேம்.
அன்னு: யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............... ப்ரொசீட்...

நிருபர்: எப்ப வலைல திரும்ப எழுதப்போறீங்க??
அன்னு: அவ்ளோ பேர் எனக்காக வெயிட்டீஸா?? யூ நோ... நான் இப்ப கூட எழுதலாம்... ஆனா இப்பதான் வேலைல சேர்ந்தேனா... அதுல கம்பெனி மெயிலுக்கு பதில் சொல்லவே நேரம் சரியா போகுது... சோ அதெல்லாம் முடிச்சிட்டு, அடுத்த வாரம் முதல் ரம்ஜானும் வருதே... அதையும் முடிச்சிட்டு எழுதறேன்... அது வரை வெயிட் பண்ணுங்க நேயர்களே...

நிருபர்: அதை நாங்க சொல்லிக்குவோம்... தொடரெல்லாம் எப்ப முடியும்??
அன்னு: இல்லை, தொடரை முடிக்காம இருந்தாத்தான் ‘கெத்’துன்னு...

நிருபர்: என்னது .. ??????
அன்னு:... இல்லை... நினைச்சேன்னு சொல்ல வந்தேன்...

நிருபர்: அடுத்த ரம்ஜான் வரை பதிவே எழுதலைன்னாலும் பதிவுலகம் சந்தோஷமா...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்... அதை நாங்க மக்களுக்கு சொல்லத்தான் இந்த பேட்டி...
அன்னு: GRRRRRrrrrrrrrrrrrrrrrrrrr...........................






===========================================================================
சகோதர சகோதரிகள் அனைவருக்கும், நெருங்கிக் கொண்டிருக்கும், இனிய ரமதான் மாத நல்வாழ்த்துக்கள். :)
ரமதான் மாதம் முழுதும்--இங்கே பயன் பெறவும்...இன்ஷா அல்லாஹ்

.

.

சி.என்.என்னின் பத்து ஹீரோக்கள்


ஒரு நல்லதை செய்யும் முன் ஆயிரம் விளம்பரங்கள் செய்யும் அரசியவாதிகளின் முன், செய்ததை மேடை போட்டு சொல்லி, அந்த உதவிகளைப் பெற்றவர்களை ஃப்ளாஷ் மழையில் வெட்கப்பட வைத்து ஆளுயர மாலைகள் போட்டுக்கொள்ளும் தலைவர்கள் முன், சிறு சிறு பொறிகளால் உந்தப்பட்டு, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நாலு பேருக்கு பயன் பட்டதாய் வாழும் ஒவ்வொருவரும் ஹீரோக்களே!! (ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் சேர்த்து!!)

ஊடகங்களை பெரும்பாலும் நான் மெச்சுவதோ, போற்றிப்புகழுவதோ கிடையாது எனினும், சி.என்.என்னின் இந்த பரிசளிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அரசியல், மதம், நிறம் போன்ற பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு உலகின் நிஜ ஹீரோக்களை உலகின் முன் கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவ்வாறே இந்த ஆண்டும் 10 சிறந்த ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரை முதன்மையாக்குவது.... நம் ஓட்டுக்கள். (கள்ள ஓட்டு போடற பார்ட்டிங்கெல்லாம் கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க...)

இனி இந்த 10 பேரை பற்றி கொஞ்சம் கதைக்கலாம்...

1. நாராயணன் கிருஷ்ணன்
நாராயணன் கிருஷ்ணன் ஒரு காலத்தில் ஸ்டார் ஹோட்டல் ஷெஃப். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவை பார்த்த அந்த சம்பவம், அவரின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், மனம் பிறழ்ந்த நிலையில் தன்னுடைய மலத்தையே தின்னும் அவலம். அன்று ஆரம்பித்த பொறி இன்று, வேராகி விருட்சமாகி, அக்ஷயா என்னும் டிரஸ்ட் மூலமாக ஒரு நாளைக்கு நானூரு பேருக்கு சாப்பாடு தருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்களுக்கு அன்னதானம் செய்துள்ள புண்ணிய ஆத்மா.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


2. சூஸன் பர்டன்
தானே ஒரு டிரக் அடிக்டாய் இருந்த காலத்தை மறந்து, தன்னைப்போன்றே இருட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெண்களை மீட்டு வெளிச்சப்பகலில் வாழ்க்கையை நடத்த கற்றுத் தருவதே இவரது இப்போதைய தொழில், மூச்சு, கடமை...எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது வரை 400 பெண்களுக்கும் மேலானவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
இவரின் வலை:


3. டே ல வேகா (ஃபர்ஸ்ட் நேம் எல்லாம் வாயிலயும் வரலை, டைப்படிக்கவும் வரலை)
நம் திரு நாடான இந்தியாவை போன்றதே மெக்ஸிகோவும். கொலை, கொள்ளை, வன்முறை, வெடிகுண்டு என்பது வாழ்க்கையில் காத்தாடி மாதிரி மிக பொதுவான பொருட்கள் ஆகி விட்டன. ஆனாலும், இப்படி ஒரு ஊரிலும் மக்களுக்கு முதலுதவி தரவும், நோயிலிருந்து மீட்டெடுக்கவும் ஒரு மருத்துவமனையை பல போராட்டங்களுக்கு பின் தொடங்கி, இன்னும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதை நடத்திக் கொண்டும் இருக்கிறார் இப்பெண்.  சேவை என்றொரு எண்ணம் தோன்றி விட்டால் தடை போட வயது ஏது? இவரின் வயதோ 74!!
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


4. லிண்டா ஃபோன்ட்றென்
தோசையும், மசால்வடையும், பதினோரு மணிக்கு டீயும் இல்லாமல் நாட்களை நகர்த்த முடியாத நம் போன்ற மக்களின் மத்தியில், சதை பெருத்து மலையானால் வரும் அபாயத்தை உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தி வரும் ஒரு பெண்.  இவர் வாழும் ஊரின் மூன்றில் ஒரு பகுதியினர் உடல்பளுவினால் ஆபத்திலுள்ள மக்கள்.  17 வாரங்கள், இவரை நம்பி ஒப்ப்டைத்ததில் கிட்டத்தட்ட 15,000 பவுண்டுகள் (ஒரே ஆளெல்லாம் இல்ல) குறைத்துள்ளனர். நல்ல விஷயம்தான்...ஃப்ரீயா யாராவது எங்க ஊர்லயும் செஞ்சா பரவாலல்லயே...
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


5. ஹார்மன் பார்க்கர்
1989ல் மத போதகராக கென்யாவில் அடியெடுத்து வைத்த பார்க்கரின் கண்களில் விழுந்த உமுதல் காட்சியே கடும் வெள்ளமும் அதை உபயோகித்து மக்களை வேட்டையாடும் (நான் அரசியல்வாதிங்களை சொல்லலை...இருந்தாலும், அவங்களையும் சேத்துக்குங்க..) பெரிய முதலைகளும் இன்னும் பல மலைவாழ் விலங்ககுகளுமே. அந்த சம்பவமே பார்க்கரின் வாழ்வை மாற்றியமைத்தது. ஒரு பாலம் மக்களின் வாழ்வையும் அவர்களின் சமூகத்தையும் மாற்றியமைக்கும் என்பதை புரிந்து கொண்ட பார்க்கர் இன்று வரை கிட்டத்தட்ட 45 பாலங்கள், கட்டி முடித்துள்ளார்...இன்னும் பல இருக்கின்றன இவரின் கை பட. இவரின் பாலங்களால், வெள்ளம் வந்தாலும் பாலத்தை கடந்து அத்தியாவசிய பொருட்களைப் பெற அந்த மக்களால் முடிகிறதென்பதே பெரிய சாதனை.
இவரின் வலை:

6. எவான்ஸ் வடொங்கொ
இருப்பதிலேயெ சிறிய வயதுடையவர் இவர்தான் போல. சிறிய வேலைதான் செய்வதும், ஆனால் அதன் தாக்கம் மிக மிக பெரிது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல. 23 வயதாகும் இவர் தயாரிப்பது சூரிய ஒளியில் செயல்படும் விளக்கு. விலை ஜீரோ. இதுவரை 10,000 விளக்குகளை இப்படி ஏழைகளுக்கு தந்துள்ளார். இதனால் என்ன பெரிய பயன் என்பவர்களுக்கு கிரசினும் அதன் புகையால் எழும் பாதகங்களையும் படிக்க ஆணையிடுகிறேன்...:)
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

7. அனுராதா கொய்ராலா (மனீஷாவோட அத்தையெல்லாம் இல்ல!!)
மைதி நேபாள் என்னும் அமைப்பின் நிறுவனர். இதற்கு முன் ஒரு சாதாரண ஆங்கில வாத்தியார்.   குழந்தைகள் பத்திரம் என்று ஒரு கட்டுரை ஓடுகிறதே அந்த கட்டுரையில் வரும் பெண்களைப்போல இளம் வயதிலேயே அந்த தாக்குதல்களுக்கு உள்ளான சிறுமிகளையும், உள்ளாக இருக்கும் சிறுமிகளையும் காப்பதே இவரின் தலையாய கடமையாய் உணர்கிறார், செயல்படுத்தியும் வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 12,000 பெண் பிள்ளைகளை கரை சேர்த்த புண்ணியம் இவரையே சாரும். இந்திய வரலாற்றில் இடம் பெற வேண்டிய பெண்.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

8. மேக்னஸ் மேக்ஃபேர்லேன் பேர்ரோ
இவரும் நாராயணனைப் போலவே. ஒரு நாளைக்கு இவரின் டிரஸ்ட்டால் கிட்டத்தட்ட 400,000 குழந்தைகளுக்கு (உலகம் முழுவதும்) சாப்பாடு அளிக்கப்படுகிறது. இதன் ஐடியா வந்த பிண்ணனி சுவாரசியமானாது. எப்பொழுது போல தண்ணியடிக்க ஒரு பாருக்கு சென்ற மேக்னஸ்ஸுக்கு, தண்ணியடித்த பின் ஒரு குரல் கேட்கிறது, இப்படி தண்ணியடித்துக் கொண்டிருந்தால் போஸ்னியாவின் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்? தண்ணியால் வந்த தெளிவு...வேலையை விட்டுவிட்டு முழு நேர தொழிலாய் மக்களுக்கு உதவ முன் வந்தார்,  மேரி'ஸ் மீல்ஸ் என்னும் இவரின் டிரஸ்ட் பள்ளி செல்லும் குழந்தைகளின் வயிற்றுப் பசியை போக்குகிறது.
இவரின் வலை:

9. அகி ரா
தான் விளைத்த கண்ணி வெடியை தன் கையை கொண்டே அகற்றுவது. சிறிய எண்ணம்தான்...சவால் பெரிது.  சாதனையும் பெரிது. இது வரை 50,000 கண்ணிவெடியை பூமியிலிருந்து அகற்றி, மக்களை உயிர் தப்ப வைத்திருக்கிறார்.  இவரைப் பற்றி யாராவது அமெரிக்கப் படைகளுக்கு வகுப்பெடுத்தால் நல்லது.!!  கம்போடியாவில் சிறு வயதில் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். ஒரு கத்தி, ஒரு லெதர்மேன், ஒரு குச்சி...இவற்றை கொண்டே முக்கால்வாசி குண்டுகளை பூமியிலிருந்து அகற்றியிருக்கிறார் என்றால்? வெல்டன்!
இவரைப் பற்றிய பேட்டி:

10.டேன் வால்ரத்
காயப்பட்ட போர் வீரர்களுக்கு பைசா செலவில்லாமல்(Only Mortgagae Free!!)  வீடுகள் (அமெரிக்காவில்0 கட்டித் தருவதே இவரின் வேலை. அதுவே இவரின் சாதனை. அதுவும், உடலின் ஊனத்தை பொறுத்து அதன்படி சொகுசா ப்ளான் அமைத்து தருகிறார். (வீல்சேரின் தேவைகள் போன்று) இதுவரை ஒன்பது வீரர்களுக்கு இத்தகைய பரிசு கிட்டியுள்ளது, இன்னும் 10 வீடுகள் ரெடியாகிக் கொண்டே உள்ளன. அமெரிக்காவில் வீடு இப்படி கட்டி தருவது உண்மையில் பெரிய விஷயம்தான்.
இவரின் பேட்டி:

  • இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க (கள்ள ஓட்டெல்லாம் வேண்டாம். ஒருவருக்கு மேலேயும் தேர்ந்தெடுக்கலாம்.
  •  சனி ஞாயிறு வேறென்ன வேலை, யாரை தேர்ந்தெடுக்கறதுன்னு கவனமா படிச்சு ஓட்டு போடுங்க.  
  • அதுவரை, டின் டின்டிடின் (பிரிட்டானியா பிரேக்)


.