Showing posts with label உண்மை. Show all posts

ஒரு கொலைகாரனின் பேட்டி - 4 (இறுதி) (உண்மைச் சம்பவம்)

இந்த பேட்டியை அப்துல்லாஹ் அவர்களின் குரலிலேயே (ஹிந்தியில்) கேட்க:
முன் பகுதிகளைப் படிக்க:
===================================================

"... அந்த நாளிலிருந்து என் அண்ணன் நோய்வாய்ப் பட்டார். மனதின் நோய் உடலைத் தாக்கியது. என் அண்ணனின் நிலை கண்டும் ஹீறாவின் இறுதியை எண்ணியும் நான் உடைந்து போனேன். ஹீராவின் மரணம் என் அண்ணனை முழுதும் மாற்றியது. சில நாட்களிலேயே படுத்த படுக்கை ஆனார். மரணத்திற்கு இரு நாட்கள் முன்னர் என்னை அழைத்து, "இது வரை செய்த எந்தப் பாவத்தையும் திருப்ப முடியாது. ஆனால் என் மரணம் ஹீராவின் மார்க்கத்தில் அமைய வேண்டும். எனக்கு முஸ்லிமாக மரணிக்க மண் கொடுத்து விடு என்றார். அண்ணனின் உடல்நிலை கண்டு ஒடுங்கிப் போயிருந்த நானும், எனக்கு மிக கஷ்டமான பணியாயினும் அவரின் இறுதி முடிவை மாற்ற விரும்பாமல் சரி என்று சொல்லி யாரும் அறியா வண்ணம் எங்கள் ஊரின் மசூதி இமாமை அழைத்து வந்தேன். அவர் அண்ணனுக்கு கலிமா சொல்லக் சொல்லி 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் வைத்தார். அண்ணன் முஸ்லிம் மார்க்கத்தின் படியே இறப்பேன் என்றதும் எனக்கு சுமை அதிகமாயிற்று. என்ன செய்வது என்றெண்ணி அவரை தில்லிக்கு இட்டு சென்றேன். அங்கே உள்ள ஹாஸ்பிட்டலில் அவரை சேர்த்தேன்.

இரண்டாவது நாள் அவர் இறந்து விட்டார். என் அண்ணன் மிக நிறைந்த மனதுடன் இறந்தார். அங்குள்ள 'ஹம்தர்த் தவாகஹானா'வில் இருந்த ஒரு டாக்டரிடம் சொல்லி அண்ணனை, சங்கம் விஹாரில் இருந்த சில முஸ்லிம் சகோதரர்களோடு சேர்ந்து இஸ்லாமியர்களின் கல்லறையில் புதைத்து விட்டு வந்தேன். "

"...நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தது எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே?"

"...ஆம்....ஆம்.... சொல்கிறேன்..."

"...இந்த சம்பவங்களால் இஸ்லாம் மீதிருந்த கோபம் எனக்குள் குறைந்திருந்தாலும் என் அண்ணன் முஸ்லிமாய் இறந்தது என்னை அதிக வருத்ததுக்குள்ளாக்கியது. என் அண்ணியும் முஸ்லிமாகத்தான் இறந்திருப்பார்கள் என்று என் மனதில் பட்டது. இதனால் யாரோ ஒரு முஸ்லிம்தான் எங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டார்கள் என்று
நம்பினேன். அதனால்தான் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாத்திற்கு வந்து பின் இறந்து விடுகிறார்கள் போல என்றெண்ணி ஒரு தாந்த்ரிக்கை பார்த்து பரிகாரம் எதுவும் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

தாந்த்ரிக்கை பார்ப்பதற்காக ஒரு நாள் 'ஓன்' என்னும் ஊருக்கு செல்ல முடிவெடுத்து பஸ்ஸில் அமர்ந்தேன். அந்த பஸ் டிரைவர் ஒரு முஸ்லிம். அவர் பஸ்ஸில் கவ்வாலி பாடல் ஒன்றை போட்டார். அந்தப் பாடலில் முஹம்மது நபியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கவ்வாலியாக பாடியிருந்தார்கள். அதில் ஒரு மூதாட்டி என்னதான் முஹம்மது நபியவர்களை இழித்தாலும் அவருடைய நற்செயல்களைப் பார்த்து அவரும் இஸ்லாத்திற்கு வந்துவிடுவார். அந்த பாடலைக் கேட்ட பின் என் மனதில் இந்த கதையில் வரும் நபிதான் முஹம்மது என்றால் அவர் உண்மையில் நல்லவராகவே இருப்பார் , பொய்யராக இருக்க மாட்டார் என்றொரு எண்ணம் விழுந்தது. 

ஸ்பீக்கர் என் தலைக்கு மேலே இருந்தது. பஸ் ஜுஞ்சானாவில் நின்றதும், ஓன் செல்வதற்கு பதில் நான் அங்கேயே இறங்கிவிட்டேன். என் மனதில் இஸ்லாம் குறித்து படிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. பின் ஷாம்லி செல்லும் பஸ்ஸில் ஏறினேன். அதிலும் டேப் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பாகிஸ்தானி காரி.ஹனீஃப் சாஹெபின் உரை ஓடிக் கொண்டிருந்தது. அந்த உரையில் அவர் ‘ மரணமும் மரணத்தின் பின் மனிதனின் நிலையும்’ என்பதைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். எனக்கு ஷாம்லியில் இறங்க வேண்டியிருந்தது. ஷாம்லி வந்தும் உரை முடியவில்லை. பஸ்ஸை  அமர்த்திய டிரைவர் டேப்பையும் அமர்த்தி விட்டு இறங்கிவிட்டார். நான் அந்த உரையை கேட்பதற்காகவே அதே பஸ்ஸில் மீண்டும் முஜாஃபர் நகர் வரை டிக்கெட் வாங்கினேன். அந்த உரை பாக்றா(மற்றொரு கிராமம்) வந்து முடிவடைந்தது. அந்த உரை இஸ்லாம் பற்றிய என் எண்ங்களை வெகுவாக மாற்றியிருந்தது. பின் நான் புதானா செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். என்னருகில் வந்தமர்ந்தது, ஒரு மௌலவி.

நான் அவரிடம், எனக்கு இஸ்லாத்தைப் பற்றி படிக்க வேண்டும். அதைப் பற்றி அறிய வேண்டும். எனவே எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன். அவர் என்னை ஃபுலாட் போய் அங்கே மௌலானா கலீம் சித்திகீ சாஹெபை சென்று பார்க்க சொன்னார். அவரை விட தகுந்த ஆள் வேறெவரும் இந்தப் பகுதியில் இல்லை என்று கூறினார். நான் ஃபுலாட்டில் இடம், விவரம் தெரிந்து கொண்டு ஃபுலாட் சென்றடைந்தேன். வீட்டிற்கு செல்வதற்கு பதில் நான் ஃபுலாட் சென்றடைந்தேன். அங்கே சென்றால் மௌலானா கலீம் சித்திகீ சாஹெப் அன்று வெளியூர் போயிருந்தார். அடுத்த நாளே வருவார் என்று சொன்னார்கள்.

நான் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டேன். இரவில் நான் படிப்பதற்காக அங்கிருந்த ஒரு ஆசிரியர் மௌலானா கலீம் சித்திகி அவர்கள் எழுதிய  ‘ஆப்கி அமானத் ஆப்கி சேவா மேன்’ (உங்களின் பெரும்சொத்து உங்களின் சேவையில்) என்னும் புத்தகத்தை தந்தார்கள். அதில் எழுதியிருந்த எழுத்தும், எண்ணங்களும் என் மனதையும் எண்ணங்களையும் முழுவதுமாக ஸ்வீகாரம் செய்து கொண்டது. கலீம் சித்திகீ சாஹெப் அவர்கள் அடுத்த நாள் காலை வருவதற்கு பதில் மாலை வந்து சேர்ந்தார்கள். நான் மஃரிப் தொழுகைக்கு  பின் (சூரியன் மறைந்ததும் தொழுவது) மௌலானாவிடம் முஸ்லிம் ஆகும் ஆசையை வெளிப் படுத்தினேன். நான் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவே இங்கே வந்தேன். ஆனால் உங்களின் பெரும்சொத்து (புத்தகம்) என்னை தன்வசம் ஸ்வீகாரம் செய்து கொண்டது என்றேன். மௌலவி கலீம் சித்தீக் சாஹெப் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள், எனக்கு ஜனவரி 31, 2000இல் கலிமா சொல்லித தந்து என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

அன்றைய இரவு நான் அங்கேயே தங்கினேன். இரவு தொழுகை முடிந்ததும் மௌலவி சாஹெபிடம் நான் ஒரு மணி நேர அனுமதி கேட்டு, நான் செய்த தவறுகள், கொலைகள் அக்கிரமங்களைப் பற்றி கூறினேன். என் சொந்த அண்ணனின் மகளான் ஹீறாவை நானே குழியில் தள்ளி, அவள் மீது தீ வைத்ததையும் கூறினேன். மௌலவி சாஹெப் அவர்கள் நிறைய நேரம் அழுது கொண்டிருந்தார்கள். அழுதபின் அவர்கள் கூறினார்கள், ஹீறா எங்களுடந்தான் இருந்தாள். சில நாட்கள் என் தங்கையோடு தில்லியிலும் இருந்தாள் என கூறினார்கள். ‘இஸ்லாம் அதன் (இஸ்லாத்தில் சேரும் முன்) முந்தைய பாவங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது’ என்று கூறினார்கள். ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை, நான் செய்த பாவங்கள என் மனதை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தன. என் பாவங்களுக்கு என்ன பரிகாரம் என திரும்ப திரும்ப மௌலவி சாஹெபிடம் கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் இஸ்லாத்தின் முன் முஸ்லிம்களை கொன்று கொண்டிருந்தீர்கள். இஸ்லாத்தில் இணைந்த பின்னர் அதை இறைவன் கணக்கிலிருந்து அழித்து விட்டான். ஆனால் உங்கள் மனநிம்மதிக்காக நீங்கள் இனிமேல் முஸ்லிம்களை பாதுகாத்து நன்மையை நாடுங்கள், நன்மை செய்வதும் முன்னர் செய்த தீமையை அழிக்கும் என்று கூறினார். எனக்கும் அதுவே சரியெனப் பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை நான் இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன். எங்கேயும், ஒரு முஸ்லிமின் உயிருக்கு ஆபத்து என்றால் ஓடிப்போய் காப்பாற்ற முயல்கிறேன். நான் யாரையும் காப்பாற்றுவதில்லை, காப்பாற்றுவது இறைவனே, நான் ஒரு கருவியே என்றும் எனக்கு தெரிகின்றது, இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்கிறேன். குஜராத் கலவரத்தின் போது நான் இங்கிருந்து அங்கே சென்று காப்பாற்ற விழைந்தேன். என் இறைவனின் கருணையையும் என்னவென்பேன், எனக்கு அதிகமான வாய்ப்புகளை கொடுத்தான் முஸ்லிம்கள் கொல்லப்படுவதிலிருந்தும் அவர்களை காக்க. 

ஒரு ஹிந்துவாக சென்று ஹிந்துக்களின் கூட்டத்தில் பங்கு பெற்று அவர்களின் திட்டத்தை அறிவேன், பின் அவர்கள் அங்கு செல்லும் முன் எப்படியாவது நான் அவர்களுக்கு முன் சென்று அங்கிருக்கும் முஸ்லிம்களை காப்பாற்றினேன். அங்கிருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைததேன். ஒரு சில கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை அந்த கிராமத்தை விட்டே வெளியேற்றியும் பாதுகாத்துள்ளேன்.

இன்னுமொரு காரியத்தைப் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். அல்லாஹ் அதன் மூலம் என் மனதில் நிம்மதியை நீக்கமற நிறைத்து விட்டான். நீங்கள கேள்விப்பட்டிருப்பீர்கள் குஜராத் கலவரத்தின் போது பாவ்நகரில் உள்ள மதரஸாவின் 400 பிள்ளைகளையும் அதனுள்ளேயே வைத்து எரிக்க திட்டமிட்டதை. நான் முதலில் அந்த பகுதியின் இன்ஸ்பெக்டர் ஷர்மாவிற்கு தகவல் தந்து முதலில் அவரை தயார் நிலையில் இருக்க சொன்னேன். பின்னர் மதரஸாவின் பின் சுவற்றை என் கையால் இடித்து வழி ஏற்படுத்தி அந்த குழந்தைகளை தப்பிக்க வைத்தேன். அந்த 400 குழந்தைகளை காப்பாற்ற அல்லாஹ் என்னை பயன்படுத்தினான் என்பதே எனக்கு இன்று வரை நிம்மதி தரும் விஷயம். அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே.)

மூன்று மாதம் வரையிலும் குஜராத்தில் இதற்காகவே தங்கியிருந்தேன். இருந்தாலும் இஸ்லாத்திற்கு முன்னர் நான் செய்த அக்கிரமங்கள்  எண்ணிக்கையிலடங்காதது. இதை எப்பொழுது மௌலானால்விடம் கூறினாலும் அவர் கூறுவது ஒன்றே ஒன்றுதான். எந்த அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி இன்று முஸ்லிமாக்கி இவ்வளவு நன்மைகளை  செய்ய வைத்திருக்கிறானோ அவனின் கருணையிலும், மன்னிப்பிலும் இன்னும் நம்பிக்கை வையுங்கள் என்பதே.

அதன் பின் இஸ்லாத்தை கற்பதற்காக நேரம் ஒதுக்கி ஜமா’அத்தில் செல்ல மௌலானா சாஹெப் பணித்தார்கள். நான் இரண்டு மாதங்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி புதானாவிற்கு சென்று என்னுடைய நிலங்கள், மாடு, வீடு எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு தில்லி சென்று ஒரு வீட்டை வாங்கினேன். என் மனைவி, ஹீறாவின் தம்பிகள், ஒரு தங்கை அனைவரிடமும் இஸ்லாத்தைப் பற்றி  எடுத்து சொல்லி அவர்கள் அனைவரையும் ஃபுலாட்டிற்கு அழைத்து வந்து இஸ்லாத்தில் இணைய வைத்தேன். அதில் எனக்கு இரண்டு மாதங்களுக்கு பதில் ஒரு வருடம் ஆகிவிட்டது. பின்னர் ஜமா’அத்தில் சேர்ந்து அதில் என் நேரத்தை பயனுள்ளதாக்கினேன். 

இருந்தாலும் என் மனதில் ஒரு கேள்வி நீங்காமல் உள்ளது, இத்தனை மனிதர்களையும், பூ போன்ற குழந்தை ஹீறாவையும் கொன்ற எனக்கு எப்படி அல்லாஹ் மன்னிப்பு தருவான் என்று. இதை மீண்டும் மௌலானாவிடம் கூறியதும் திருக்குர்’ஆனை அதிகமதிகம் படிக்குமாறும் முக்கியமாக சூறா புரூஜ்(அத்தியாயம் 85 - பால்வீதி மண்டலங்கள்) அதிகமாக வாசிக்கவும் கூறினார். அதன்படி செய்ததில் இன்று அந்த அத்தியாயம் எனக்கு மனனம் ஆகி விட்டது. 1400 வருடம் முன்னர் இறக்கப்பட்ட அந்த அத்தியாயத்தை படிக்கும்போதெல்லாம் எனக்கு, என் இறைவன் என்னைப் பற்றி அறிந்தே அதை எனக்காக இறக்கியுள்ளான் என்றிருக்கும். 

சூரா 85 : பால்வீதி மண்டலங்கள்
(அல்-புரூஜ்)


( அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன் )
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:18. ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

" மக்களே... திருக் குர்'ஆனின் அந்த அத்தியாயத்தை படியுங்கள். மற்றும் என் ஹீறாவின் இறுதி சொற்களை நினைவில் வையுங்கள்:

“யா அல்லாஹ்... நீ என்னை பார்க்கிறாய் அல்லவா? யா அல்லாஹ் என்னை நீ பொருந்திக் கொண்டாய் அல்லவா.. பாறையினுள் இருக்கும் வைரத்திற்கும் செவி சாய்ப்பவனே... குழியில் நெருப்பில் கரியும் இந்த ஹீறாவின் வார்த்தையையும் கேட்கிறாய் அல்லவா... என்னைப் பொருந்திக் கொண்டாய் அல்லவா..சித்தப்பா இஸ்லாத்தின்பால் வந்து விடுங்கள். அப்பா...இஸ்லாத்தில் இணைந்து விடுங்கள்...”



.

ஒரு கொலைகாரனின் பேட்டி - 3 (உண்மைச் சம்பவம்)

”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???

(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)

" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."

(மீண்டும் அழுகிறார்...)

“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????

அஹ்மது பாய்....சகோதரரே... நான் செய்த அந்த மாபாதக செயலைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும்...
...உங்களுக்கு தெரிந்ததுதான். உங்கள் தந்தை, மௌலானா சாஹேப் ஹீறாவை தில்லியில் உள்ள அவரின் தங்கையின் வீட்டிற்கு சில காலம் அனுப்பி வைத்தார். அங்கே தாயின் அன்பிற்கு சிறிதும் குறைவில்லாமல் அவளை நல் முறையில் கவனித்துக் கொண்டனர் உங்கள் அத்தையும், நாநியும் (அம்மாவின் அம்மா). ஆனால் ஒரு இரவில் ஹீறாவிற்கு அவளின் தாய் இறந்து விட்டதாக கனவு வந்தது. அவளின் தாய் மிகுந்த நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்ததாலும், ஹீறா தன் தாயின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததாலும் அவளால் அந்த கனவு கண்ட பின் அங்கே இருக்க முடியவில்லை. தன் தாயை காணும் ஆவல் அதிகமானதால் காலையில் மௌலானாவிடம் அழுது தன் தாயை சந்திக்க அனுமதி கேட்டாள். ஆனால் மௌலானவும் உங்கள் அத்தையும், அவள் திரும்பி சென்றால் அவளின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று அந்த யோசனையை ஏற்கவில்லை. ஆனால் அவளின் அழுகையுடன் கடந்த நாட்களையும் தாயையே எண்ணி கலங்கிய விழிகளையும் கண்டு அவளை திரும்ப புதானாவிற்கு அனுப்ப சம்மதித்தனர். மௌலானா சாஹேப் அவர்கள், ஹீறாவை அழைத்து தன் குடும்பத்தினரை ‘தாவாஹ்’ (இஸ்லாத்தின் பால் அழைத்தல்) செய்ய மட்டும், அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் அவள் அங்கு செல்லலாம் என்றும், அப்படி செல்வதற்கு முன் இரண்டு ரக்-அத் தொழுகையை தொழுது, அல்லாஹ்விடம் இறைஞ்சிய பின் கிளம்புமாறு கூறிவிட்டார். தன் வீட்டினர் எப்பொழுதும் இஸ்லாத்தை ஏற்கவே மாட்டார்கள், இஸ்லாத்தை அவர்கள் மிகவும் வெறுக்கிறார்கள் என்றதும், அவளின் ‘தாவாஹ்’வில் வெற்றி பெறவும் இரண்டு ரக்-அத் தொழுதிட சொன்னார்கள். அதோடு நிக்காமல் மௌலானா சாஹேப் ஹீறாவிடம் பொறுமையுடன் செயல்படும்படியும், அவளின் உயிர் இதில் போனாலும் அது அவளுக்கு ‘ஷஹீத்’ (இஸ்லாத்திற்காக தன் உயிரை விட்டவர்களை  - வீரமரணம் எய்தியவர் என்ற பெயர்) அந்தஸ்து கிட்டும் என்று கூறி அவளை புதானாவிற்கு அனுப்பி வைத்தார். இதெல்லாம் அவள் வீட்டிற்கு வந்த பின் எங்களிடம் கூறியது.

ஹீறா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். நான் அவளை கண்டதும், அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்து, அவளை வீட்டை விட்டு போகும்படி சொல்லி விட்டேன். ஹீறா சற்றும் தளராமல், தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், ஒரு முஸ்லிமாக அவள் வாழ்வதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறினாள். அவளின் தாய்ப்பாசத்திற்காகவும், சிறிது நாட்களில் அவள் மனதை குடும்பத்தினர் மாற்றி விடலாம் என்ற யோசனையாலும் அவளை வீட்டினுள் மீண்டும் அனுமதித்தோம். இரண்டே மாதத்தில் அவள் தாய் இறந்துவிட்டார். இறுதி சடங்குகளை ஹீறா மிகவும் எதிர்த்தாள். தன் தாய் தன் முன் ‘கலிமா’ {அல்லாஹ் மட்டுமே இறைவன், முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்பதை உறுதி கூறுவது} சொல்லிவிட்டார் என்றும் கூறி, அவரை புதைக்கத்தான் வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினாள். நான் ஒரு அரக்கன், அதை மறுத்து என் அண்ணனின் மனைவியின் சடலத்தை எரித்தோம்..எங்களாலும் என்ன செய்திருக்க முடியும், அவரை புதைப்பது என்பது நடவாத காரியம், அப்போது...”

(மீண்டும் அழுகிறார்)

“அதன் பின்னும் வீட்டில் தன் மற்ற சகோதரர்களையும், சகோதரிகளையும் சில சமயங்களில் அவளின் தந்தையையும் இஸ்லாத்திற்கு மாற சொல்லி சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவளின் தொல்லை தாங்க இயலாமல் மீரட்டிலிருக்கும் அவளின் அத்தை வீட்டிற்கு சிறிது நாளுக்காக அனுப்பி வைத்தோம். அங்கேயிருந்தும் சிறிது நாட்களில் அவளின் மாமா எங்களை கூப்பிட்டனுப்பி, ‘இந்த அதர்மத்தை இங்கேயிருந்து கொண்டு செல்லுங்கள், தினம் தினம் கொடுமையாய் இருக்கிறது’ என்ற காரணம் கூறி, இனியும் வீட்டில் இந்த பெண்ணை வைத்திருக்க முடியாது என்றனுப்பி விட்டனர். நாங்களும் எங்களால் இயன்ற வரை அவளை இந்த பிடியிலிருந்து கொண்டு வர முயன்றோம். முடியாமல் போனதில், என்னுடைய பஜ்ரங்தள் கூட்டாளிகளிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் இது இன்னும் மற்றவர்களிடம் பரவாமல் இருக்க, அவளை கொன்று விட கூறினர். அவளை திரும்ப புதானாவிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு ஒரு நாள் சென்று புதானாவில் உள்ள ஒரு நதியின் அருகில் 5 அடி உயரமுள்ள ஒரு குழியை தயார் செய்து விட்டு வந்தேன்....”

(குரல் நடுங்குகிறது)

“... நானும் என் அண்ணனும், அதாவது ஹீறாவின் தந்தையும் அவளை ஊருக்கு, அவளின் பெரியம்மா வீட்டிற்கு செல்லலாம் வா என்று கூறினோம். அவளுக்கு ஒரு வேளை கனவில் நடக்கப்போகின்றத் தெரிந்துவிட்டதா என்னவென்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுங்கள் சித்தப்பா.. நான் என் கடைசி தொழுகையை தொழுதுவிட்டு வருகிறேன் என்று கூறினாள்....”

(மீண்டும் விசும்புகிறார்)

”...கடைசி தொழுகையாவது படிக்க விடுங்கள் என்றாள்..நாங்களும் பல்லைக் கடித்துக் கொண்டு அனுமதி தந்தோம். உடனே குளித்து, தொழுது, அழகிய உடைகளை அணிந்து கொண்டு, நகைகளையும் அணிந்து மணப்பெண்ணைப்போல அவள் தயாரானாள். நாங்கள் அவளைக் கூட்டிக்கொண்டு நடந்த போது, வழியில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அப்பொழுதும் அவள், பெரியம்மா வீட்டு பாதை இதுவல்லவே என்று எங்களைக் கேட்கவேயில்லை, சந்தோஷமாக எங்களுடன் வந்தாள். நதிக்கருகில் சென்ற பின், சிரித்தவாறே சென்று என் அண்ணனிடம், “அப்பா... என்னை பூவா (பெரியம்மா) வீட்டிற்கு கூட்டிப் போகிறேன் என்றுதானே கூறினீர்கள். பூவா வீட்டிற்கா அல்லது ’பிஹா’ வீட்டிற்கா (பிஹா - மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைப்பது)” என்று சிரித்தவாறே கேட்டாள்..."

(அழுகிறார்... தண்ணீர் கொடுக்கப்படுகிறது...)
  


“ஹ்ம்ம்...பூர்த்தி செய்யுங்கள் அப்துல்லாஹ் பாய், அதன் பின் என்ன நடந்தது..?"

( அப்துல்லாஹ் விசும்புகிறார் ...)

"எப்படி முடிப்பேன் இந்த கதையை.... முடித்துத் தானே ஆக வேண்டும்? ..."
...
...
"சிரித்துக் கொண்டே நின்றிருந்தவளை நான் அந்த குழியில் தள்ளி விட்டேன். என் அண்ணன் அழுதுகொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். அரக்கனை விடவும் கொடியவனான இந்த சித்தப்பா, பூவிலும் மென்மையான அந்தப் பெண்ணை குழியில், இதே கைகளால் தள்ளினேன்...."

(மீண்டும்  அழும் ஓசை கேட்கிறது)
"... நான் வைத்திருந்த பையில் ஐந்து லிட்டர் பெட்ரோல் இருந்தது. அதை அவள் மேல் ஊற்றினேன். தீப் பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசினேன். .."

(அழுகிறார்)

"...எங்களை நரகத்திலிருந்து காப்பது இருக்கட்டும். முதலில் நரகத்தின் தீயை நீ சுவைத்துப் பார் என்றவாறே அந்த பிஞ்சின் மேல் தீக் குச்சியை வீசினேன். புதிய ஆடை அவள் அணிந்திருந்ததால்  அதில் தீ எளிதில் பற்றிக் கொண்டது.தீ பற்றியவுடன் கீழே விழுந்திருந்த அவள் எழுந்து நின்று விட்டாள்...."
...
...
...
"... எழுந்து நின்று வானை நோக்கி கைகளை உயர்த்தி "யா அல்லாஹ் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்தானே.. இந்த ஹீராவை காண்கிறாய்தானே ... யா அல்லாஹ் பாறைக்குள்ளிருக்கும் வைரத்தையே காண்பவன் இந்த ஹீராவை பார்க்கிறாய்தானே ? யா அல்லாஹ் நீ என்னை மன்னிப்பாயா... என்னை ஏற்றுக் கொள்வாயா? ....என்று கேட்க ஆரம்பித்தாள்"

(அடக்க முடியாமல் அழுகை தொடர்கிறது )


“...சித்தப்பா இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள்... அப்பா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் "என்று உயர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே இருந்தாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அண்ணனோ அழுது கொண்டே என்னிடம், "இன்னும் ஒரு முறை அவளிடம் பேசிப் பார்த்திருக்கலாமே... நாம் நல்லபடி சொல்லியிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பாளே" என்றார்.   எனக்கு இம்முறை அவரின் மேல் கோபம் வந்தது. விடுவிடுவென்று அவரை இழுத்துக் கொண்டு நடந்தேன். குழியிலிருந்து 'லா இலாஹா இல்லல்லாஹ் ' கேட்டுக் கொண்டே இருந்தது...."

(அவரின் அழுகை நிற்கும் வரை பொறுத்திருந்து தண்ணீர் மீண்டும் தரப் படுகிறது)

"... அந்த நாளிலிருந்து என் அண்ணன் நோய்வாய்ப் பட்டார். மனதின் நோய் உடலைத் தாக்கியது. என் அண்ணனின் நிலை கண்டும் ஹீறாவின் இறுதியை எண்ணியும் நான் உடைந்து போனேன். ஹீராவின் மரணம் என் அண்ணனை முழுதும் மாற்றியது. சில நாட்களிலேயே படுத்த படுக்கை ஆனார். மரணத்திற்கு இரு நாட்கள் முன்னர் என்னை அழைத்து, "இது வரை செய்த எந்தப் பாவத்தையும் திருப்ப முடியாது. ஆனால் என் மரணம் ஹீராவின் மார்க்கத்தில் அமைய வேண்டும். எனக்கு முஸ்லிமாக மரணிக்க மண் கொடுத்து விடு என்றார். அண்ணனின் உடல்நிலை கண்டு ஒடுங்கிப் போயிருந்த நானும், எனக்கு மிக கஷ்டமான பணியாயினும் அவரின் இறுதி முடிவை மாற்ற விரும்பாமல் சரி என்று சொல்லி யாரும் அறியா வண்ணம் எங்கள் ஊரின் மசூதி இமாமை அழைத்து வந்தேன். அவர் அண்ணனுக்கு கலிமா சொல்லக் சொல்லி 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் மாற்றி விட்டார். அண்ணன் முஸ்லிம் மார்க்கத்தின் படியே இறப்பேன் என்றதும் எனக்கு சுமை அதிகமாயிற்று. என்ன செய்வது என்றெண்ணி அவரை தில்லிக்கு இட்டு சென்றேன். அங்கே உள்ள ஹாஸ்பிட்டலில் அவரை சேர்த்தேன். இரண்டாவது நாள் அவர் இறந்து விட்டார். என் அண்ணன் மிக நிறைந்த மனதுடன் இறந்தார். அங்குள்ள 'ஹம்தர்த் தவாக்ஹானா'வில் இருந்த ஒரு டாக்டரிடம் சொல்லி அண்ணனை, சங்கம் விஹாரில் இருந்த சில முஸ்லிம் சகோதரர்களோடு சேர்ந்து இஸ்லாமிய கல்லறையில் புதைத்து விட்டு வந்தேன். "

"...நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தது எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே?"

"...ஆம்....ஆம்.... சொல்கிறேன்..."


(பகுதி -4)
.

ஒரு கொலைகாரனின் பேட்டி - 2 (உண்மைச் சம்பவம்)

“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.

“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”

...

...

“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்... 
...எனக்கு ஒரு அண்ணன் இருந்தார். நானும் என் அண்ணனும் சிறு வயது முதல் மிகுந்த அன்புடன் வாழ்ந்து வந்தோம். இருவரும் சேர்ந்தே அத்தனை மாபாதகங்களையும் செய்வோம் என்றாலும் எங்களின் பாசப்பிணைப்புக்கு இணையே இல்லாமல் வாழ்ந்திருந்தோம். இருவருக்கும் திருமணம் ஆகியது. எனக்கு இன்று வரை குழந்தை இல்லை. ஆனால் என் அண்ணனுக்கோ இரண்டு மகள்களும் இரு மகன்களுமுண்டு. அவரின் மூத்த பெண்ணின் பெயரே ஹீறா (வைரம்).

ஹீறா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாய் இருந்தாள். எவ்வளவு சீக்கிரம் யாரையும் நேசிக்க ஆரம்பிப்பாளோ அதே நேரம் சில மணித்துளிகளில் எதையும் விட்டுவிடவும் தயங்கமாட்டாள். அவளின் இத்தகைய குணத்தால் நாங்கள் கலவரப்பட்டு அவளை மனோதத்துவ டாக்டர்களிடமும், மாந்திரீகவாதிகளிடமும் கொண்டு செல்லாத நாட்களில்லை. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டோம் என தெரிந்திருந்தும் அவள் 8வது முடித்ததும் மீண்டும் அதற்கு மேல் படிக்க பள்ளியில் விண்ணப்பம் தந்து வந்து விட்டாள். நாங்களெல்லாம் மிகவும் கோபம் செய்ததும், எங்களின் வயலில் வேலை செய்து படிப்பு செலவை சமாளிப்பேன் என கூறிவிட்டாள்.

பள்ளி ஆரம்பமானதும் அருகிலுள்ள ஒரு அக்ரஹாரத்தில் தெரிந்த ஒரு பிராமணர் வீட்டில் அவர் மகளிடம் டியூஷன் படிக்க ஆரம்பித்தாள். அந்த பிராமணரின் மகன் ஒரு கொடியவன். அவன் அவளின் மனதை மயக்கி வீட்டை விட்டு ஓடி வரச்செய்து பரோட்டுக்கு அருகிலுள்ள காட்டில் கொண்டு சென்று விட்டான். அங்கே அவனின் கூட்டாளிகளும் இருந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகள். அங்கே போன பின் ஹீறாவுக்கு தான் தவறு செய்தது புரிந்தது. குடும்பத்தின் மானத்தை கெடுத்து விட்டோமே என்று பரிதவித்தாள். தன் கற்பை காத்துக் கொள்ளவும் சிரத்தையுடன் இருந்தாள். இதன் காரணமாக சதா அழுதுகொண்டிருந்தாள். அந்த குழுவில் இத்ரீஸ்பூரிலிருந்து ஒரு முஸ்லிம் பையனும் இருந்தான். அவளின் அழுகையைக் கண்ட அவன், காரணத்தை கேட்டறிந்தான். அவனிடம் அனைத்து உண்மையையும் அவள் கூறினாள். அவளின் இடைவிடா அழுகையை கண்ட அவனும், தானொரு முஸ்லிமாதலால், ஹீறாவை தங்கையாக ஏற்று அவளையும் அவளின் கற்பையும் காப்பாற்றுவதாக வாக்களித்தான். அவளை அந்த கும்பலிலிருந்து காப்பாற்றுவதாகவும் உறுதி கூறினான்.

பின் அந்த குழுவினரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவன், ஹீறா நிறைய அறிவுடையவள் என்றும் அவளை ஆண்களின் உடையை அணிய வைத்து அவளுக்கும் பயிற்சி தரவேண்டும் என்று கூறினான். பகலில் ஆண் போல முழுக்கை சட்டையும் பேண்ட்டும் அணிந்ததால் பாதுகாப்பாகவும் இருந்தது. இரவினில் அவள் தூங்குமிடத்திற்கு யாரும் வராமலும் பார்த்துக் கொண்டான். சிறிது நாட்களிலேயே குழுவில் அவளின் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் போனது. இரண்டொரு நாட்களில் அவன் குழுவினரிடம் ஹீறாவை இத்ரீஸ்பூரிலிருந்து சில தகவல்கள் பெறவும், சில பொருட்களுக்காகவும் அனுப்பி வைக்கலாம் என்று கூறி திட்டமிட்டு அவளை தன் தம்பியுடன் அனுப்பி வைத்தான். போகும் முன் தன் தம்பியை அழைத்து ஹீறாவை போலீஸிடம் தனியே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டு, பின் திரும்பி வந்து குழுவினரிடம், ஹீறாவின் நடத்தையில் சந்தேகம் வந்து கிராம மக்கள் அவளை போலீஸிடம் தந்துவிட்டதாக கூற சொன்னான். அவனின் தம்பியும் அவ்வாறே செய்தான். ஹீறாவைப் பற்றி ஏற்கனவே எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு எஃப்.ஐ.ஆர் இருந்ததால் ஹீறாவை ஒரு பெண் போலீஸுடன் புதானாவிலுள்ள எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எங்கள் வீட்டிற்கு அவள் வந்துவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிப்போனவளை எப்படி வீட்டினுள் சேர்ப்பது, அவள் சோடை போயிருப்பாளே என்றே தவித்துக் கொண்டிருந்தோம். ஹீறா இதை அறிந்து கொண்டவளாய் எங்களிடம் வந்து, தான் வீட்டை விட்டு ஓடிப்போனது உண்மைதான் எனினும் தன் கற்பு பறி போகவில்லை என்றே சாதித்தாள். மேற்படிப்பு படித்திருந்த எங்களுடைய உறவினர் ஒருவர், அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க யோசனை கூறினார். போகும்போதே, இவள் தூய்மையானவள் என்று தெரிந்தால் வீட்டிற்கு கூட்டி வரலாமென்றும், இல்லையென்றால் எங்கேயாவது வெட்டி வீசிவிட்டு வந்து விடலாம் என்றும் நானும் என் அண்ணனும் முடிவெடுத்துக் கொண்டோம். டாக்டர் அவளை தூய்மையான பெண் என்று கூறியதும் அவளை மீண்டும் வீட்டிற்கே கூட்டி வந்தோம்.

வீட்டிற்கு வந்த பின் தினம் தினம் அவள் அந்த முஸ்லிம் பையனைப்பற்றி பேசுவதும், முஸ்லிம்களை போற்றுவதுமாக இருந்த அவளின் குணம் எங்கள் எல்லோருக்கும் கோபத்தை வரவழைத்தது. அடியும், மிதியுமாக நாட்கள் சென்றது. ஒரு நாள் எங்கள் தெருவினருகில் குடியிருந்த சில முஸ்லிம்களின் புத்தகங்கள் எங்கள் வீட்டினில் இருக்கக்கண்டு எனக்கு ஆத்திரம் பன் மடங்காக உயர்ந்தது. அவளை என் பலம் கொண்ட மட்டும் அடித்து உதைத்து, இனிமேல் இத்தகைய புத்தகங்களை கண்டால் அவளை உயிரோடேயே விட்டு வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் நாங்களறியா வண்ணம் அவளோ முஸ்லிம்களின் புத்தகத்தை படிப்பதையும், அதை ஆராய்வதுமாக இருந்துள்ளாள். நாங்களெல்லாம் அவளுக்கு யாரோ மாந்திரீகம் செய்து விட்டதாகவே எண்ணியிருந்தோம். அவளோ தன்னுடைய பள்ளிக்கூட ஸ்னேகிதியின் மூலம் எங்கள் கிராம மௌலானாவிடம் (மசூதியின் இமாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் இல்லாத நேரம் வீட்டினில் தொழுகையும் செய்து வந்துள்ளாள். அதன்பின் அவளின் செய்கைகளில் நிறைய மாற்றம் வந்துவிட்டிருந்தது. சோகமே வடிவாக சில நாட்கள் இருந்தவள், பின் யாரிடமும் சொல்லாமல் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஃபுலாட்டிலுள்ள ஒரு மௌலானா வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கே சில காலம் இருந்தவள் பின் அஹம்து பாய், பின் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள்
.”

”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???

(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)

" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."

(மீண்டும் அழுகிறார்...)

“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????

அஹ்மது பாய்....

ஒரு கொலைகாரனின் பேட்டி - 1 (உண்மைச் சம்பவம்)

”டொக்”
டேப் ஆன் செய்யப்பட்டது. ரிக்கார்டு பட்டன் அழுத்தப்படுகிறது.

“அஸ் ஸலாமு அலைக்கும் றஹ்மஹ்த்துல்லாஹி வ பரக்காத்துஹூ”
“வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ”

“அப்துல்லாஹ் பாய், உங்களுக்கு தெரிந்திருக்கும். ஃபுலாட்டிலிருந்து ‘அர்முகான்’ என்னும் இதழ் வெளியாகிறது. அதில் உங்களைப்பற்றி எழுத உள்ளோம். உங்களைப்பற்றி எங்கள் ’அர்முகான்’ நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்”
“அஹ்மது பாய்...”

(கண்களிலிருந்து வழியும் நீரை துடைக்கிறார். விசும்பும் ஒலி கேட்கிறது)

“என்னைப்பற்றி கேட்டு உங்கள் நேயர்களை ஏன் நோகடிக்க விரும்புகிறீர்கள்??, என்னைப்போல ஒரு பாதகனை, கொடியவனைப் பற்றி சொல்லி என்னவாகப்போகிறது??”

(விசும்பும் ஒலி கேட்கிறது)

“அழாதீர்கள். ப்ளீஸ். உங்களைப்பற்றி என் தந்தை மௌலானா கலீம் சித்திகி அவர்கள் ’இறைவனின் அதிசயம்’ என கூறிய பின்பே தங்களைப்பற்றி பேட்டி எடுக்கும் ஆவல் வந்தது. சொல்லுங்கள்...”
உங்கள் தந்தைக்கு இறைவன் நிறைய ஆயுள் தந்து அருள் புரியட்டும். என் எஜமானனைப் போன்று அவர். அவரின் விருப்பம் இது என்றால் நான் தடை செய்யவில்லை...கேளுங்கள், என்ன கேட்க விரும்புகிறீர்கள்??

“உங்களைப் பற்றி சொல்லுங்கள்...”
இந்த உலகம் ஆரம்பித்தது முதல் ஒரு கொடிய, மிருகத்தனமான, இரக்கமற்ற, அரக்க குணமுள்ள மனிதன் ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் அது நானே. அதுதான் என்னைப்பற்றிய முன்னுரை..

“நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுகிறீர்கள். சரி உங்களின் பிறப்பு, குடும்பம் பற்றி கூறுங்கள்..”
நான் 42 அல்லது 43 வருடங்களுக்கு முன் முஜாஃபர் நகர் என்னும் மாவட்டத்தில் (உத்தரப்பிரதேசம்) மாடு மேய்க்கும் 'ஆஹிர்’ ஜாதியில் பிறந்தேன். புதானா என்பது என் ஊரின் பெயர். அங்கே முஸ்லிம் ராஜ்புத்கள் அதிகம். என் குடும்பமோ மிக மிக ஆச்சாரமான ஹிந்து குடும்பம். சிறிது கிரிமினல் பேக்கிரவுண்டும் உண்டு. கொலை செய்வது, கொடுமை செய்வது, அதிகாரம் செய்வது என்பதெல்லாம் என் தொட்டில் பழக்கம் எனலாம். அப்படிப்பட்டது, நான் வளர்ந்த சூழ்நிலை. என் பெரியப்பாவும், தந்தையும் இம்மாதிரியான் ஒரு கும்பலுக்கு தலைவர்கள்.

1987இல், மீரட்டில் வசிக்கும்போது அந்த நேரம் கலவரம் நடந்து கொண்டிருந்தது. என் தந்தையும், நானும் எங்கள் உறவினர்களுக்கு பாதுகாப்பாளர்களாய் இருந்தோம். அந்நாட்களில் கிட்டத்தட்ட 25 முஸ்லிம்களையாவது நாங்கள் கொன்றிருப்போம். அதன் பின் நான் பஜ்ரங்தள்லிலும் சேர்ந்தேன், முஸ்லிம் எதிர்ப்பு அலையை வளர்க்கவே சேர்ந்தேன். 1990இல் ஷாம்லியில் வசிக்கும்போது இன்னும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தேன். அப்பொழுது பாபரி மஸ்ஜித்தின் பிரச்சினையும் நடந்து கொண்டிருந்தது எனக்கு வசதியாய் போனது. மீண்டும் 1992இல் நான் புதானாவிற்கே வந்தேன். அங்கேயும் முஸ்லிம்களை கண்டால் கொல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரிலேயே ஒரு முஸ்லிம் இளைஞன் இருந்தான். அவனின் ஐவேளை தொழுகையும், நேர்மையும், பணிவான முகமும் எங்களாட்களுக்கு பயம் தர ஆரம்பித்தது. நானும் என் நண்பர்களும் குழு அமைத்து, கூட்டாக அவனை சுட்டுக் கொன்றோம். இந்தளவு முஸ்லிம்களைக் கண்டால் வரும் எரிச்சலானது, இறுதியில் என்னை ஒரு கொடியதிலும் கொடிய குற்றத்தை செய்ய வைத்தது...

(அழும் சப்தம் கேட்கிறது)

என்னைப்போல ஒரு மிருகம், அரக்கன் இந்த வானத்தின் கீழ் வாழ்ந்திருக்கவும் மாட்டான், பிறந்திருக்கவும் மாட்டான்..."

(அழுகை அதிகமாகிறது)

“சரி, இஸ்லாத்திற்கு எப்படி வந்தீர்கள் என்பதை சொல்லுங்கள்”
திருக்குர்’ஆனில் 30வது அத்தியாயத்தில் அல்லாஹ் நெருப்பின் குழியில் விழும் மனிதர்களைப் பற்றி பேசுகிறான் அல்லவா?? அது என்னைப் பற்றியே... அங்கே மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் வினோதம், ஏனேனில் நான் ஒருவனே அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுபவன் போலுள்ளவன், நீங்கள் வேண்டுமானால் அந்த ஆயத்தை ஓதிப் பாருங்கள்.

 “நீங்களே ஓதுங்கள்”

"قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ"

இப்ப, அரபியில் நாம் ‘நெருப்பில் விழுந்த மனிதர்களின் மேல் இறைவன் தன் கருணையை இறக்கினான்’ என்று எப்படி சொல்வோம்??

“ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து..”
ஆம். ஆனால், அந்த வசனம் என்னை குறிப்பிடுவதாக இருந்தால் நான்தான் அந்த ‘ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து’..

“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.

“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”

...

...

“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்...”

==================================================================
என்ன இது, இப்படி ஒரு பதிவு என்று எல்லோரும் நினைக்கக்கூடும். இது ஒரு உண்மையான பதிவு. பதிவு முழுதும் உண்மையான நகரங்கள், இடங்கள், குறிப்பிடப்படுபவைகளுக்கு லின்க் தரப்படும். இந்த பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள மௌலானாவையும் ஃபேஸ்புக்கின் லின்க்கோடு இணைத்துள்ளேன். இப்படி ஒரு பேட்டி வந்ததாக எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லையே என்போருக்கு, இந்த பேட்டி ஒரு புத்தக தொகுப்பாகவும் வந்துள்ளது. இப்படிப்பட்ட மனிதர் கைதாகவில்லையா என்றால்.... இது நடந்தது, இது போல நடப்பதும் இந்தியாவில் சில காலமாய் சகஜமாகி விட்டது. :(

இந்த பேட்டியை கேட்கும்போது இருந்த அதிர்ச்சி, முடிக்கும்போது வெடித்த அழுகையாய் மாறியது. பேட்டியின் முடிவில் ஒலி வடிவ லின்க்கும் தருகிறேன், இன்ஷா அல்லாஹ். இதை கேட்டவுடன் மனதில், இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோணியதால் மட்டுமே பகிர்கிறேன். ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் தமிழுக்கு வருவதால் சில வார்த்தைகள் மாறியிருக்கலாம். முடிந்தவரை சரியாக தர முயல்கிறேன்.

புத்தக தொகுப்பு (ஹிந்தியில்) கிடைக்குமிடம்:
Naseem e hidaayat ke jhonke part 1
English Name : Breeze of the Guidance
Compiler : Mohammed Yusuf Usman Nadvi
Pages : 260
Year of  Publication : 2010
Price Rs 100/- (One Hundred Rupees only)
Name of Book Suppliers:- 
  1. Jamia-Tul-Imam Wali-ullah Al-Islamia, Phulat, Distt. Muzaffar Nagar. 
  2. Dar-E-Arqam, Batla House, Okhla Head, New Delhi-110025. 
  3. Maktaba Shah Wali-ullah, Batla House, Okhla Head, New Delhi-110025.
    .

    என்ன சொல்ல

    போன பதிவில் குறிப்பிட்டிருந்த தாயும் பெண்ணும் திங்கட்கிழமையே என் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறியிருந்தார்கள். எனினும் பல அலுவல்கள் காரணமாக இன்று மாலைதான் வந்திருந்தார்கள். என்ன சொல்ல...

    வழக்கமான சம்பிரதாய பேச்சுக்களை முடியமட்டும் வளர்த்தோம். அவரின் குழந்தைகளோடு விளையாட்டும் சிரிப்புமாக சிறிது நேரம் சென்றது. பின்னர் அவரிடம் வழக்கு எப்படி போயிக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதன் பின் அவராகவே நெடு நேரம் பேசினார். அந்த தாய் மிகவும் பற்றுடன் இஸ்லாத்திற்கு வந்தவர், அது போலவே வாழ்பவர் என்று தெரியும்.அங்குதான் சிக்கலே எழுந்துள்ளது. அந்த ஆண் இஸ்லாத்தில் தான் இணைந்து விட்டதாக கூறினாலும், தொழுகை, இஸ்லாம் கூறும் நல்லொழுக்கம் இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வாழ்ந்திருக்கிறான். மனைவியும் முடிந்த வரை திருத்தவே முயன்றிருக்கிறாள். இஸ்லாத்திற்கு வந்த பின் தன் வாழ்வும், தன் குழந்தைகளின் வாழ்வும் அந்த வழியிலேயே மேம்பட வேண்டும் என்றே கஷ்டப்பட்டாள். ஆனால் அந்த மிருகமோ அடிக்கடி சொன்ன சொல்லிலிருந்து தவறுவதும், பின் இது போல் இனி செய்ய மாட்டேன் என வாதிப்பதும், மன்னிப்பு கேட்பதுவுமாகவே நாட்கள் நகர்ந்திருக்கின்றன. மற்ற பெண்களுடன் தொடர்பிருப்பதாக தெரிந்த போதும் வலுவான ஆதாரம் இல்லாது போனதால் அந்த மனைவி வேறு வழியின்றி குழந்தைகளுக்காக அந்த வாழ்வை நீட்டித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

    இந்த சண்டை சச்சரவுகள் நீண்டு நீண்டு கடந்த மாதத்தின் ஓர் நாள் அந்த ஆண், மனைவிக்கு தலாக் கூறிவிட்டு நீ வீட்டை விட்டு வெளியேறிவிடு என்று கூறிவிட்டான். நல்லதை செய், நல்லவனாக இரு என்று சொன்னதற்கு வந்த வினை. அதிலும் ஒரு நல்லது நடந்தது.

    தனது தாய் வீட்டில் தங்கி, மாலை தன் பெரிய பெண்ணை ஸ்கூலிலிருந்து காரில் கூட்டி வரும்போது, தலாக் ஆனதைப் பற்றியும், அவர்கள் இனி அந்த வீட்டில் தங்கப் போவதில்லை என்பதையும் கூறியிருக்கிறார். இதை கேட்டதும்தான் தாமதம் அந்த சிறுமி, காரில், 2, 3 வருடமாக அந்த அரக்கன் தன்னை எப்படியெல்லாம் சீரழித்தான் என்பதை கூறியிருக்கிறாள். சுப்ஹானல்லாஹ். அல்லாஹ் அந்த வேளையிலாவது அந்த சிறுமிக்கு மன தைரியத்தை கொடுத்தானே. சொல்லி முடித்த பின்னும் அவளின் உடம்பு தொடர்ந்து நடுங்கியும், வேர்ப்பதுவுமாக இருந்ததால் துரிதமாக ஒரு தோழியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்திருக்கின்றனர். பின் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு இரவினில் போலீஸை தொடர்பு கொண்டு எல்லா விஷயங்களையும் கூறியுள்ளனர். போலீஸும் அதிகாலை 3 - 4 மணிக்குள் அவனை கைது செய்து விட்டது. நல்ல வேளை இரவினிலேயே கூறியிருந்தார்கள். பகல் வரை காத்திருந்தால் அந்த கொடியவன் ஏதோ விஷயமாக வெளியூர் சென்றிருப்பான். பின்னர் இன்னும் சிக்கலாகியிருக்கும்.

    இத்தனை வருடமும் அந்த பெண்ணை சித்திரவதை செய்ததோடல்லாமல் தாயிடம் சொன்னால் தாய் உன்னைத்தான் தண்டிப்பாள், தன்னையல்ல என்றும், வெளியே தெரிந்தால் தாய் அவளை வீட்டைவிட்டே அனுப்பிவிடுவாள் என்றுமே மிரட்டியிருந்திருக்கின்றான். ச்ச... என்ன ஜென்மங்களோ.. என்னால் அந்த தாய் பேசும்போது எதுவுமே பேச இயலவில்லை. மௌனமாய் கேட்க மட்டுமே முடிந்தது. இந்த பேச்சு நடக்கும்போது அந்த சிறுமி தன் தங்கை தம்பியுடன் விளையாடிக் கொண்டிருந்தவள் பின் அமைதியாய் படுத்திருந்தாள். சகோதரி அவர்கள், இந்த பேச்சை தொடர் வேண்டாமா என்றதும், வேண்டாம் என்று தலையாட்டினாள். நானும் ஆதரவாய் அவள் கால்களை நீவிவிட்டு, இறைவன் காப்பாற்றினான், இன்னும் காப்பாற்றுவான் என்று கூறி இந்த பேச்சை முடித்தோம்.

    பாடங்கள்:
    • உங்கள் குழந்தைகளுடன் நல்லதொரு தொடர்பை வையுங்கள். 2,3 வருடமாய் இது நடந்தும், தாய் தன்னை அடிப்பாளோ, வீட்டை விட்டு வெளியேற்றி விடுவாளோ என்று பயந்தே அந்த சிறுமி பலாத்காரத்திற்கு உடன்பட்டிருக்கிறாள். தாயைப் பற்றிய சரியான புரிதல் தரவேண்டியது நம் கடமைதானே?
    • தன்னுடைய வகுப்பு தோழியுடன் பகிர்ந்த இந்த விஷயத்தை தாயுடன் பகிர முடியவில்லை எனில் நம்பிக்கை எங்கே வீழ்ந்திருக்கிறது, அதை எப்படி அந்த அயோக்கியன் சரியாக பயன்படுத்தியிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
    • இந்த தாய் அந்த ஆணை முதன்முதலில் பார்த்ததற்கும் மணமுடித்தலுக்கும் இடையே வெறும் 3 வாரமே!! எந்த நாட்டினராய் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. தயவு செய்து தீர விசாரித்து, தனிமையிலும் வெளியிலும் ஒரே சுபாவம் கொண்டவனா/கொண்டவளா என்று உறுதி செய்த பிறகே திருமணம் செய்யுங்கள். மறுமணம், அதுவும் குழந்தைகள்/ சொத்துக்கள் அதிகம் உள்ளவர்கள் இன்னும் காலம் எடுத்து சரிவர விசாரித்து, உற்று கவனித்து பின் மணம் புரியுங்கள்.
    • குழந்தைகளை பேச விடுங்கள். அவர்கள் என்ன பேசினாலும் கவனியுங்கள். அவர்களை தடை போடாதீர்கள். அவர்கள் அனுபவித்த எதையும் கஷ்டமோ, இன்பமோ அவர்கள் வாயாலேயே தெரிவிக்க செய்யுங்கள். உங்களைப்பற்றி புகார் செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தாய்/தந்தை என்னும் ஈகோவினை கொண்டு வராதீர்கள்.
    • இன்ஷா அல்லாஹ், பாதுகாப்புடன் இருங்கள். குழந்தைகள், அது நாம் பெற்றதோ, பக்கத்து வீட்டினருடையதோ, உற்ற பாதுகாப்பு கொடுங்கள்.
     

    பிகு: குழந்தைகள் பத்திரம் தொடர் இன்னும் முடியவில்லை. பலவித வேலைகளில் என்னால் அதை மொழிபெயர்க்க நேரம் கிடைக்கவில்லை. மீண்டும் தொடருகிறேன் சீக்கிரமே!! 


    .

    எதுக்கு மகளிர் தினம் கொண்டாடனும்?

    ஒரு சிறிய டூர் போயிருந்தோம். அட்லாண்ட்டா வரை. அதனால் கொஞ்சம் தாமதமாகி விட்டது எழுத. திங்கள் அன்று திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாலும் அடுத்த நாள் கிடைத்த ஒரு செய்தி என்னால் எழுத முடியாத / யாரிடமும் பேசமுடியாத அளவிற்கு மனக் கஷ்டத்தை தந்து விட்டது. ப்ச்...

    நாங்கள் இருக்கும் ஊரில் ஆப்பிரிக்க இனத்தவர்கள் ஜாஸ்தி. சோமாலியாவினரும், சூடான், எத்தியோப்பியா நாட்டுக்காரரும் அதிகம். அவர்களில்லாமல், பரம்பரை பரம்பரையாய் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரோ-அமெரிக்கரும் ஜாஸ்தி. எங்கள் வீடு அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அதிகம்.

    அப்படித்தான் எனக்கு அவர்களை தெரியும். ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கணவன், அமெரிக்க மனைவி, இரண்டு பெண்கள், ஒரு கடைக்குட்டி பையன். மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம், மணமுறிவுக்கு வழி விட, இருந்த ஒரு பையன் தந்தையுடனும், பெண் தாயுடனும் கோர்ட்டு மூலம் பிரிந்தனர். அப்படி பிரிந்த பின் இப்பொழுது இன்னொரு கறுப்பினத்தவரையே திருமணம் செய்து இன்னும் ஒரு பெண்(10% மனனிலை பாதிக்கப்பட்ட பெண்), பையன் என சந்தோஷமாய்தான் இருந்தனர். அல்லது, அப்படி நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.

    இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன், அந்த ஆணை போலீஸ் ஜெயிலில் வைத்திருக்கின்றதென்று. எங்களுக்கு என்ன விவரம் என்று தெரியாததால் குடும்ப சண்டை பெரிதாகி ஆண், அந்த பெண்ணை அடித்திருப்பான் அதனால் அவள் 911க்கு அழைத்திருப்பாள் என ஊகித்துக் கொண்டோம். பின் இரண்டு நாளில் என் கணவர் சொன்னார், ஏதோ பெரிதாய் நடந்துள்ளது போல, அந்த ஆளுக்கு $50,000 பெயிலில் உள்ளேயே இருக்கிறார். ஹோல்சேலாய் மாமிசம் வாங்கி அதை குடும்பங்களுக்கும், இங்கிருக்கும் கடைகளுக்கும் பிரித்துக் கொடுப்பவர், எனவே அவரிடம் இந்தளவு பணமில்லை, ஏன் இபப்டி ஆயிற்று. அந்த ஆள் முன்கோபி, பண விஷயத்தில் நம்ப முடியாது என்றுவரைதான் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன விஷயத்தில் அவர் உள்ளே தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை. அதன் பின் நாங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதிலும், வந்த களைப்பிலும் அதைப்பற்றி சுத்தமாக மறந்து போனோம்.

    பின் மற்றொரு நாள் இரவு தொழுகைக்கு சென்று வந்த என் கணவர், பள்ளியில் சந்தித்த இன்னொரு நண்பர் கூறிய விஷயத்தை என்னிடம் கூறினார். இரவு உறக்கம் தொலைத்து, மனம் வெதும்பி அழ வைத்த விஷயம் அது. அந்த ஆள், மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த பெண்ணிடம் தகாத உறவை கொண்டிருக்கிறான். உறவல்ல, வன்முறை, குழந்தைவதை., பலாத்காரம், கற்பழிப்பு. இப்படி எந்த வித பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ச்சீ...மனித மிருகம்.

    அந்த சிறு பெண்ணை மசூதிக்கு போகும் வேளைகளில் பார்த்துள்ளேன், தானுண்டு, தன் தம்பி தங்கையருண்டு என அமைதியாய் இருக்கும் பெண். அமெரிக்க குழந்தைகளுக்கே உரிய ஆட்டம், பாட்டம், 12 வயது பெண்பிள்ளைகளுக்குரிய வெட்கம், குறுகுறுப்பு எதுவுமில்லாமல் அமைதியான் ஒரு பெண். நேற்று வரை அந்த பெண் மனனில 10% பிறழ்ந்தவள் என்று கூட எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன்.... மனிதனா இவன்? மிருகம் கூட இப்படி செய்யாதே??? அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும்? ஆறுதல் சொல்கிறார்களா இல்லை அவல் மெல்கிறார்களா என எண்ண வைத்து விடும். என்னால் ஆற்றாமையை தாங்க இயலவில்லை. ச்சீ...ச்சீ...ச்சீ.... அந்த ஆள் எங்கள் வீட்டீற்கு வந்த நாட்களை எல்லாம் எண்ணுகிறேன், சேற்றில் காலை வைத்தது போலிருக்கிறது. அதிகமாக நாங்கள் பழகியதில்லை. ஏற்கனவே அந்த ஆளிடம் சூதானமாய் இருக்க சொல்லி சில பேர் சொன்னதால் நாங்கள் சிறிது தள்ளியே இருந்தோம். ஆனால் அவன் இப்படிப்பட்ட கொடிய நஞ்சுடைய நெஞ்சானவனாய் இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தன் வீட்டில், தன்னை தந்தையாய் நினைத்து வளைய வரும் பெண்ணிடம் இப்படி செய்ய தோன்றும்?

    நான் அந்த தாயின் இடத்தில் இருந்தால் எனன் செய்வேன் என யோசித்துப் பார்த்தேன், வாயில் வருவது போல, வெட்டிப் போட்டிருப்பேன் என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அதன் பின் குழந்தைகளை யார் பாதுகாப்பது? அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு?? இப்படி பல கேள்விகள் முன்னாலிருக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யட்டும் என விட்டுவிடுவோம். இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா என எனக்கு தெரியாது. கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். கூனிக் குறுக வைக்கும் கேள்வியாளார்கள், வக்கீல்கள் என்னும் போர்வையில் இங்கில்லை என்பதே சந்தோஷம். ஹ்ம்ம்... பெருமூச்சு முட்டுகிறது எழுதுவதற்கே... பாதிக்கப்பட்ட சிறுமியையும் அதன் தாயையும் எண்ணிப்பார்க்கிறேன்.

    அதிகாலையிலேயே அந்த தாய்க்கு ஃபோன் செய்தேன். பேச்சு வர வில்லை. இரண்டு பக்கமும் அழுகையே முட்டி நின்றது. இனி எதற்காகவும், எந்த நேரம் வேண்டுமானாலும் உன் குழந்தைகள் மூன்றையுமே வேண்டுமானாலும் என்னிடத்தில் விட்டுவிட்டுப்போ, இரவு நேரமானாலும் என்னிடம் விடு, இது பாதுகாப்பான இடம் உன் குழந்தைகளுக்கு என்று மட்டுமே கூற முடிந்தது.

    இப்படி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத வாழ்வு, எல்லா சமூகத்திலும் இருக்கும்போது எதற்காக மகளிர் தினம் என்று கொண்டாடப்படவேண்டும்? ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா?? அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா? யார் காப்பார் இவர்களை? இப்பொழுது நான் பாதுகாப்ப?ளிக்கிறேன், என கூறிவிட்டேன். நடந்து முடிந்ததின் வடுவிலிருந்து யார் காப்பார்? பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது???? இதை விட கொடுமை, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே?????

    சுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது? என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்?? இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும் காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே????  வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே??? என்னுடைய இயலாமையை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இங்கே பதிவிட்டு பாதி மனச்சுமையை இறக்குகிறேன்.

    பிகு. இந்த விஷயத்தை என் கணவரிடம் சொன்ன அந்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால், அவரின் பிள்ளைகள் அந்த ஆள் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொலி யாரோ முன்பே கூறியிருந்தனராம். யப்பா... நீங்க நல்லா இருப்பீங்க, இந்த மாதிரி ஆட்களை ரகசியமா வெக்காதீங்க. தயவு செஞ்சு பப்ளிக்கா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க தப்பினா போதும், மத்தவங்க பத்தி கவலையில்லாம இருக்கலாம்னு நினைக்காதீங்க. நான் பெக்கலைன்னாலும் அந்த பொண்ணு மேல நான் அன்பு காட்டாம இருக்க முடியுமா? அவ வீட்டிலேயே அவளுக்கு நரகம் இருக்குன்னு நான் எப்படியாவது சொல்லியிருப்பேனே????

    இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??

    //கோபிண்ணா, கார்த்தின்ணா... கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க தொடர் பதிவு எழுத. இந்த மனநிலைல முடியல.//



    .

    விடை காண்போமா?

    மருதன் சாரின் வலைப்பக்கத்தில் இந்த பதிவை படித்ததும் நெஞ்சை சுட்டது. அதை விட அதிகமான தாக்கத்துடன் ஒரு கேள்வி பிறந்தது. நாம் எந்த மொழியை பேசுபவர்களாக இருந்தாலும், எந்த மதத்தை பின்பற்றுபவர்களாக இருந்தாலும், எந்த கொள்கையை கொண்டவர்களாக இருந்தாலும் பசி என்று வரும்போது எல்லாரும் ஒரே நிலைக்கு வந்து விடுகின்றோம். நம்மில் பாதி பேர் மண்டை நிறைய வேலை இருந்தாலும் வலைப்பூக்களை தவறாது பார்வையிடுகிறோம், வேடிக்கையையும் வேதனையயும் பகிர்ந்து கொள்கிறோம். ஏன் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு குழு ஏற்படுத்தி நம்மால் இயன்ற அளவு பசியை அணைக்க முயற்சிக்கக் கூடாது. ஆசை வேர் விட்டுக்கொண்டதே ஒழிய இன்னும் செயல்முறை திட்டங்கள் என்னிடம் இல்லை. விருப்பமிருப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள், இறைவன் நாடினால் ஒரு மாற்றத்தை கொண்டு வர முயல்வோம். அள்வில் கடுகே ஆனாலும் சரி. மருதன் சாரின் பதிவை இங்கு மீள் பதிவிட்டிருக்கின்றேன். பதிலுக்கு காத்திருக்கின்றேன்.

    ---------------------------------------------------------------------------------------------------------------

    உணவு தயார். கொண்டு வந்து வீட்டுக்கு நடுவில் வைத்தாகிவிட்டது. ஆனால், வீட்டில் உள்ள எல்லோருக்கும் அதைப் பரிமாற முடியாது. எனவே, சில முடிவுகள் எடுக்கவேண்டும். குழந்தைகளுக்கு குறைவான அளவு போதும். தின்றுவிட்டு சுருண்டு படுத்து உறங்கிவிடுவார்கள். அல்லது, வெளியில் நண்பர்களுடன் ஓடிவிடுவார்கள். அவர்களுக்கு உணவு அளவு தெரியாது. பசி தெரியாது. பாதகமில்லை. வயதானவர்களுக்கு அதிக உணவு தேவைப்படாது. அவர்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. மெலிந்து, வாடி, வதங்கியிருக்கும் தேகம். கூடுதல் உணவு கொடுத்தாலும் பலனிருக்கப்போவதில்லை. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு உணவு தேவை. சமைப்பதும், துவைப்பதும், சுத்தப்படுத்துவதும் அவள்தான். எல்லோரும் உண்டபிறகு எஞ்சியிருக்கும் உணவில் ஒரு பகுதி அவளுக்கு. கடினமான வேலைதான் என்றாலும், வீட்டில்தான் கிடக்கப்போகிறாள். ஆண்களைக் காட்டிலும் இரு மடங்கு அதிக வேலைப்பளு இருந்தாலும், அவளால் பணம் திரட்டமுடியாது. ஆனால், வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அதிக உணவு கொடுத்தாகவேண்டும். காய், கறி, சோறு என்ன செய்தாலும் அவர்களுக்கு முதல் பங்கு. பெரிய பங்கு.

    பசி என்பது உணவு குறித்து சிரமமான முடிவுகள் எடுப்பது.
    தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (NREGA) அதிகாரிகளை எப்போதும் அவர்கள் ஈக்களைப் போல் மொய்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலருக்கு அறுபது வயதுக்கு மேலாகிறது. சிலருக்கு எழுபதுக்கும் மேல். ஒருமுறை, இருமுறை கேட்டால் கிடைத்துவிடாது என்பதால் அதிகாரிகளைக் கிட்டத்தட்ட துரத்துவார்கள். கெஞ்சுவார்கள். சூரியன் உச்சியில் கொளுத்திக்கொண்டிருக்கும் ஆந்திரா மாநிலம். ஐந்து, ஆறு கிலோ மீட்டர் நடந்துதான் வரவேண்டும். காலில் செருப்பில்லை. மேலுக்கு ஒரு துண்டு. தலையில் ஒரு கந்தல் துணி. 'ஐயா, எங்களுக்கும் வேலை கொடுங்கள்!' உன்னால செய்யமுடியுமா? இப்பவே இப்படி தள்ளாடுறியே? 'முடியும் ஐயா. என்னை நம்பி கொடுங்கள். பாறையைப் பிளந்த கைகள்.' கைகளை நீட்டி காண்பிக்கிறார். சில சமயம் நிலத்தில் நீர் பாய்ச்சுவது போன்ற பணிகள் கிடைக்கின்றன. அல்லது, மற்றவர்களுக்குக் கிடைக்கும் அதே கடினமான பணிகள். காட்டைத் திருத்துவது, மரம் பிளப்பது, சாலையமைப்பது, இன்னபிற. நடுங்கும் கை நடுங்கியபடி கிடக்கும். மூச்சு வாங்கும். உடல் தளர்ச்சியடைந்து துவளும். நிறுத்தாமல் பணியாற்றவேண்டும். நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படலாம். மறுநாள் வேலை கிடைக்காமல் போகலாம். வீட்டுக்குப் போகும்போது, கையில் 70, 80 ரூபாய் கிடைக்கும் என்னும் கனவு அவர்களை மயக்கத்தில் இருந்தும் நடு்க்கத்தில் இருந்தும் மீட்டெடுக்கும்.

    பசி என்பது நடுக்கத்தை மறைத்துக்கொண்டு உழைப்பது.
    அந்த மகாராஷ்டிர ஆதிவாசி குடும்பத்தின் வீட்டில் எட்டு பேர். சமைக்கப்பட்ட உணவை அந்த எட்டு பேருக்கும் சமமாகப் பிரித்துக்கொடுத்தால், ஒருவருக்கும் வயிறு நிரம்பாது. எனவே, அவர்கள் ஓர் உபாயத்தைக் கண்டறிந்தார்கள். இருவருக்கு மட்டு்ம் வயிறு முட்டும் அளவுக்கு உணவு பரிமாறப்படும். மற்ற ஆறு பேர் வீட்டில் படுத்துக்கொள்வார்கள். அந்த இரண்டு பேரும் வெளியில் சென்று உற்சாகத்துடன் பணியாற்றி இரவு பணத்துடன் வருவார்கள். அடுத்த நாள் இன்னும் இரண்டு பேருக்குச் சாப்பாடு. அவர்கள் பணியாற்றவேண்டும். நேற்று வயிறு முழுக்கச் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் வேலைக்குப் போகவேண்டியிருக்காது என்பதால் அவர்கள் பட்டினி கிடப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

    பசி என்பது சுழற்சி முறையில் உண்பது.
    ராயல்சீமாவில் வீட்டுப் பெண்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்கள் கோரிக்கை, மாணவர்களுக்கான பள்ளி உணவு திங்களன்று அளவில் இரட்டிப்பாக இருக்கவேண்டும் என்பதே. ஏன் என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள். 'வெள்ளிக்கிழமைக்குப் பிறகு, சனி, ஞாயிறு இரு தினங்களும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. திங்கள் மதியம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால்தான் அவர்களால் தாக்குப்பிடிக்கமுடியும்.' இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். 'எங்களால் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கமுடியவில்லை. நாங்கள் என்ன கத்தினாலும் அவர்களுக்கு எதுவும் ஏறப்போவதில்லை. பாதி மயக்கத்தில் இருக்கும் அந்தக் குழந்தைகளை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது? திங்களன்னு கூடுதல் உணவு கொடுத்தால்தான், மதியத்துக்குப் பிறகாவது வகுப்பைத் தொடரமுடியும்.'

    பசி என்பது ஏக்கத்துடன் காத்திருப்பது.
    பேண்ட், சட்டை அணிந்து யார் வந்தாலும் மக்கள் அவர்களைச் சூழ்ந்துகொள்கிறார்கள். அவர் யார் எங்கிருந்து வருகிறார் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. அடுக்கடுக்காகக் கேள்விகளால் துளைத்துவிடுவார்கள். எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? எங்களுக்கு உணவு கிடைக்குமா? எங்களுக்குக் கடன் தருவீர்களா? மேலதிகாரிகளிடம் சொல்லி சிபாரிசு செய்வீர்களா? எங்களுக்கு ஏதாவது சலுகைகள் அளித்திருக்கிறார்களா? எங்களுக்குக் கொடுக்க ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?

    பசி் என்பது அர்த்தத்தை இழப்பது.
    'முன்பு, அரிசி, கோதுமை என்று தானியங்கள் பயிரிட்டுக்கொண்டிருந்தோம். எப்படியாவது கஷ்டப்பட்டு விற்றுவிடுவோம். ஒருவேளை விற்க முடியாவிட்டால், பஞ்சம் வந்தால், நாங்கள் பயிரிட்டதை நாங்களே சாப்பிட்டுவிடுவோம். இப்போது நிலைமை மாறிவிட்டது. நாங்கள் என்ன பயிரிடவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வதில்லை. என்ன விலையில் விற்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவுசெய்வதில்லை. எங்கே, எப்படிச் சந்தைப்படுத்தவேண்டும் என்பதை நாங்கள் நிர்ணயிப்பதில்லை. என்ன பூ்ச்சிமரு்ந்து பயன்படுத்தவேண்டும், எந்த அளவில் என்பதையெல்லாம் நாங்கள் யோசிப்பதில்லை. தரகர்கள் வருகிறார்கள். மிரட்டுகிறார்கள். கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களே விதை தருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கிறோம். அதிகாரிகளுக்குக் கீழ்படிகிறோம். பிரச்னை என்னவென்றால், நாங்கள் உற்பத்தி செய்வதை அவர்கள் கொள்முதல் செய்யத் தவறும்போது, நாங்கள் நடுங்கிப்போகிறோம். தானியங்களாக இருந்தால் உண்டுவிடலாம். பஞ்சை உண்ணமுடியுமா? அது செரிக்குமா?' எனவே, அவர்கள் பூச்சிமருந்து உட்கொள்கிறார்கள்.

    பசி் என்பது தவறான உணவை உட்கொள்வது. பசி என்பது இறந்துபோவது.
    இந்தியாவில், ஒரு மணி நேரத்தில் இரு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் 17 குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி இறந்துபோகின்றன. அரசாங்கம், ஒவ்வொரு மணி நேரமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தவேண்டிய 57 கோடி ரூபாய் வரியைத் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறது.

    பசி் என்பது அரசாங்கத்தால் வஞ்சிக்கப்படுவது.
    மும்பையில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் சேரிப்பகுதிகளில் வாழ்கிறார்கள். வீடு என்று அழைக்கப்படும் நிலையான இருப்பிடத்தில் வாழ்பவர்கள் 71 சதவீதம் பேர். ஒரே ஒரு அறை மட்டுமே கொண்ட இந்த வீடுகளில்தான் குடும்பத்தினர் மொத்தமாக வசிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் முதியோர்களும் குழந்தைகளும். மும்பையின் தற்போதைய சுற்றுலா கவர்ச்சி, 2 பில்லியன் டாலரில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாளிகை. முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் வசிப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடு இது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகின் நம்பர் 1 பணக்காரராக முகேஷ் அம்பானி திகழ்வார் என்று ஊடகங்கள் ஆருடம் சொல்கின்றன.

    பசி என்பது ஏற்றத்தாழ்வுகளை ஜீரணம் செய்துகொள்வது.
    தனித்தனியே நியமிக்கப்பட்ட மூன்று அதிகாரபூர்மான குழுக்கள் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்ளும் உண்மை இது. 'ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 836 மில்லியன் பேர். தலித் மற்றும் பழங்குடியின மக்களில் 86 சதவீதம் பேர் ஏழைகள். 85 சதவீத முஸ்லிம்கள் ஏழைகள். உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உணவு கிடைக்கவில்லை. ஒரு விவசாயக் குடும்பத்தின் மாதாந்திர சம்பாத்தியம் 503 ரூபாய். இதில் 60 சதவீதம் உணவுக்காக செலவழிக்கப்படுகிறது.'

    பசி என்பது உண்மை அறிவது.
    பிரச்னையின் ஆணிவேர், விவசாயிகள் தற்கொலை அல்ல. விவசாயிகள் தற்கொலை என்பது பிரச்னையின் விளைவு. நிஜமான பிரச்னை, விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்றிக்கொண்டது.


    பசி் என்பது உண்மை அறிந்தும், செயலற்று இருப்பது.
    Slumdogs Vs Millionaires: Farm Crisis and food crisis in the age of inequality என்றும் தலைப்பில் பி. சாய்நாத் நேற்று ஜெர்மன் ஹாலில் ஆற்றிய உரையின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை. இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் இது.

    Slumdog Vs Millionaires : பி. சாய்நாத்தின் உரை
    Globalizing Inequality : பி. சாய்நாத்தின் உரை
    பி. சாய்நாத்தின் பங்களிப்பை அறிந்துகொள்ள இந்தக் கட்டுரை உதவும். விக்கிப்பீடியா பக்கம் இங்கே.

    தி ஹிந்து, ஃப்ரண்ட்லைன் ஆகிய இதழ்களில் சாய்நாத் எழுதும் கட்டுரைகள், இங்கே தொகுக்கப்படுகின்றன.

    பி. சாய்நாத்தின் எழுத்துகளையும் பேச்சுகளையும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லவேண்டியது நம் கடமை.
     
    நன்றி மருதன் சார்.

    உண்மை நிலவரம்.

    விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் ரகசிய ஆவணங்களிலிருந்து ஓர் படம். Self Explainable. ஆஃப்கானிலும் பாகிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கும் உண்மை நிலவரம்.




    மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.



    .